Saturday, October 17, 2015

சிரிப்பு தேவதை By பா. தீனதயாளன் First Published : 15 October 2015 01:07 PM IST

கலைஞர்களின் கலைஞரான இந்த நடிப்புக் கருவூலம் பற்றி எந்த வார்த்தைகளில் எழுதினாலும் சொற்கள் கர்வப்பட்டுக் கொள்ளும். மனோரமா என்று உச்சரிக்கும்போதே ரணப்பட்டுப் போன பாமர மனசு பூரித்து நிற்கும். நோயாளியின் முகமும் பரவசமாகும். மவுனமாக உடலில் புது ரத்தம் ஓடும்.
மனோரமா வெறும் நடிகை மாத்திரம் அல்ல. மன நலம் காக்கும் மருத்துவரும் கூட.
அன்றாடம் பணம் கொட்டும் ஏடிஎம் மெஷினாக எண்ணித் துரத்தும் உறவுகளுக்கு மத்தியில், வாழப் பிடிக்காமல் உயிரை விடத் துடிக்கும் நடிகைகள் வாழும் நாடு இது. மனோரமாவின் மடியில் விழுந்து ஆறுதல் தேடியவர்கள் அதிகம். 
காண்போரையெல்லாம் கவர்ந்த அந்த கலைத்தாய்க்கு ஈடாக(அதிக பட்ச வார்த்தை என்று எண்ணி விடாதீர்! காலம் காட்டும் உண்மை!) வேறு யாரைச் சொல்ல முடியும்!
உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் அறியாத நடிப்பின் ஜீவநதி மனோரமா! நூற்றுக்கணக்கான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனித்து நகைச்சுவைக்கென்றே உதித்து நாளடைவில் காவியத்தலைவி ஆனவர்.
மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!
நடிப்பவர்களுக்கான முதல் அருகதை அவர்களது வசீகர வதனமும், கடல் போன்ற கண்களும். இரண்டுமே மனோரமாவுக்கு மைனஸ்.
சராசரிக்கும் குறைவான முகம். சின்னக் கண்கள். அவை மனோரமாவுக்கு உதவியது போல் வேறு யாருக்காவது உபயோகம் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே.அவருக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய வரம் குரல்! அந்தக் குரலில் மனோரமா வெளிப்படுத்திய நவரச பாவங்கள், வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏராளம்... ஏராளம்.
எடுத்துக்காட்டுக்கு ‘கம்னு கட’ ஒன்று போதாதா!
காமெடி நடிகை என்பதால் மனோரமாவுக்கு நடிப்பில் எந்தத் தடைகளும் இல்லை. எப்படி வேண்டுமானால் நடிக்கலாம். எவ்வித இலக்கணங்களும் கிடையாது. சினிமாவில் காபரேவும் ஆடியிருக்கிறார். வில்லியாகவும் வலம் வந்திருக்கிறார்.
நினைத்த மாத்திரத்தில் கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் முழுமையாக கை வரப் பெற்றவர் மனோரமா.
ஆயிரத்து முன்னூறு படங்களில் எத்தனை எத்தனை வேடங்கள்...! அன்றாட வாழ்க்கையில் தினம்தோறும் நாம் காணும் சக மனுஷிகளை செல்லுலாயிடில் செதுக்கியவர் மனோரமா.
விளைவு, கின்னஸில் இடம் பிடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமையைப் பெற்றார். ‘உன்னால் முடியும் தம்பி’படத்துக்குப் பிறகு அடுத்த ஆண்டே அபூர்வ சகோதரர்களும் புதிய பாதையும் சேர்ந்து மனோரமாவை முகம் மலர வைத்தன. தேசிய விருது முதல் முறையாக மனோரமாவைத் தேடி வந்தது.
மனோரமாவுக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் ஸ்டார் ஷெர்லிமேக்ளின்.
மனோரமாவின் கால் தடம் பதிந்த முதல் படப்பிடிப்பு நிலையம் எது தெரியுமா?
‘நான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஷூட்டிங் பார்க்க ஆசைப்பட்டேன். ஒரு நாள் எங்க குரூப்புடன் நியூடோன் ஸ்டூடியோவில் நுழைந்தேன். அன்று என்.எஸ். கிருஷ்ணனும் டி.ஏ. மதுரமும் நடித்த ராஜா ராணி படப்பிடிப்பு. அதுதான் நான் பார்த்த முதல் சினிமா ஷூட்டிங்.’- மனோரமா.
‘காக்கா’ ராதாகிருஷ்ணனில் ஆரம்பித்து ‘மயில்’ சாமியையும் கடந்து அவருடன் காமெடியில் கலக்கியவர்கள் எல்லோரும் ஜாம்பவான்கள். அநிருத் போன்ற சமீபத்திய பிரபலங்கள் நீங்கலாக எம்.எஸ். விஸ்வநாதன், வி.குமார், குன்னக்குடி வைத்தியநாதன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், ஏ.ஆர். ரஹ்மான்... என இவர்கள் எல்லோரும் மனோரமாவை சொந்தக்குரலில் பாட வைத்த முன்னணி இசை அமைப்பாளர்கள்.
பொம்மலாட்டம் ‘வா வாத்யாரே ஊட்டான்டே’ மனோரமாவின் சிறப்பைப் பாட்டிலும் எதிரொலித்து இன்றும் பரவசப்படுத்துகிறது.
பேசும் படம் இதழ், ஒவ்வொரு இதழிலும் ‘இம்மாத நட்சத்திரம்’ என்று அம்மாதத்தில் வெளியான படங்களில் சிறப்பாக நடித்த நாயகன்-நாயகிகளைப் பாராட்டி மிக நீண்ட காலமாக எழுதி வந்தது.
கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம், பொம்மலாட்டம் இரண்டும் ஒரே நாளில் 1968 மே 31ல் வெளிவந்தன. சரோஜாதேவி, கே. பாலசந்தரின் இயக்கத்தில் நடித்த ஒரே படம் அது. மிக அற்புதமாக கமலா எனும் கேரக்டரில் நடித்திருப்பார்.
சரோஜாதேவியை விட்டு விட்டு, அவ்வரிசையில் பொம்மலாட்டத்தில் சிறப்பாக நடித்ததற்காக மனோரமாவைத் தேர்வு செய்தது பேசும் படம். அனைவருக்கும் ஆச்சர்யம்!
பேசும் படத்துக்கு சோ உடனே ஒரு கடிதம் எழுதினார். ‘மனோரமா இம்மாத நட்சத்திரம் மாத்திரம் அல்ல. அவர் இந்தத் தலைமுறையின் நட்சத்திரம்!’ என்று.
அந்நாளில் சினிமா விமரிசனங்களில் மனோரமா குறித்துப் பெரிதாக எதுவும் எழுத மாட்டார்கள். சோ எழுதிய பதில் மீடியாவைத் திகைப்பில் ஆழ்த்தியது.
மனோரமாவின் திறமையை முழுதாக உணர்ந்தவர் சோ. பார் மகளே பார் படத்தில் சோ அறிமுகமானார். சோவின் முதல் ஜோடியாக மனோரமா நடித்தார்.
சோ இயக்கிய முதல் படம் முகமது பின் துக்ளக். அதில் மனோரமாவுக்கு இந்திரா காந்தி போல் ஒரு வேடத்தைக் கொடுத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் கலக்கினார். மத்திய மாநில அரசுகளின் கெடுபிடிகளைக் கடந்து துக்ளக் திரைக்கு வந்தது தனி வரலாறு. அடுத்து சோ - மனோரமா பங்கேற்ற அரசியல் நையாண்டி, தங்கப்பதக்கம் படத்தின் வசூலுக்கு உரமாக இருந்தது.
எம்.ஆர். ஆர். வாசு விவித் பாரதி சிறப்புத் தேன்கிண்ணத்தில் மனோரமாவை ‘திரையுலகில் என் ரவுடி தங்கச்சி!’ என்று பாராட்டி ‘வா வாத்யாரே வூட்டாண்டே’ பாடலை ஒலிபரப்பினார். எம்.ஆர்.ஆர். வாசு – மனோரமா கூட்டணியில் வெளிவந்த ‘பாரத விலாஸ்’ சிகரம்.
ரவிச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு ‘மஞ்சள் குங்குமம். அதில் தேங்காய் -மனோரமா ஜோடி பாடி நடித்த தெலுங்குப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.
‘ரா ரா பாவா ரா... ராங்கான பாதையில போத்தாவா அக்கட இக்கட சூஸ்தாவா அசடு போல பேஸ்தாவா’ என்று தொடங்கும் அந்தப் பாடலை எழுதியவர் கதாசிரியர் ‘தேவர் பிலிம்ஸ்’ மாரா. மனோரமாவுடன் பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பேசிப் பேசி சிரிக்க வைக்கும் மனோரமா ஊமையாக ‘வாழ நினைத்தால் வாழலாம்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு கதை சொல்லும் கட்டம் அட்டகாசம்! அதில் மவுன மொழியிலேயே ‘கானாங்குருவிக்கு கல்யாணமாம்’ என்று பாடல் வேறு. ஊமை பாடுவதா? அது மனோரமாவால் மட்டுமே முடியும்.
முதல்முதலாக ‘அபலை அஞ்சுகம்’ படத்தில் மெட்ராஸ் பாஷையில் வெளுத்துக் கட்டத் தொடங்கிய மனோரமா தொடர்ந்து அனாயசமாகப் பேசிய வட்டார மொழிகள் ஆய்வுக்குரிய வரலாறு. சின்னக் கவுண்டரில் எடுப்பான பல் அழகியாக கொங்குத்தமிழில் பேசி நெஞ்சம் கலந்தவர்.
 ‘சூரிய காந்தி’ யில் ‘தெரியாதா நோக்கு...’ என்று பாடி ஆடும் மடிசார் மாமிக்கும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ ‘நூன் ஷோ’ மாமிக்கும் நடிப்பில் எத்தனை வித்தியாசம்! முக்தா சீனிவாசனின் படங்களில் மனோரமாவின் பங்களிப்பை அத்தனைச் சீக்கிரத்தில் யாரால் மறக்க முடியும். மனோரமா மறைவுக்கு முக்தா சீனிவாசன் கதறி அழுத காட்சி இயல்பான தோழமை உணர்வின் வெளிப்பாடு.
தீபாவை கமல் ஜோடியாகத் தனது ’அந்தரங்கம்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் முக்தா. அதில் தேங்காய், சோ, மனோரமா மூவரும் தஞ்சாவூர் பாஷை பெரிதா, கோவை, மதுரை ஸ்லேங் பெரிதா என்று மோதுவார்கள்.
‘பாஷையெல்லாம் மாத்தி மாத்திப் பேசறதுக்கு மனோரமாவை விட்டா வேற யாரு இருக்காங்க இப்ப’ ன்னு சிவாஜி என்னைப் பாராட்டிப் பேசினார். எனக்கு வானத்துல இறக்கை இல்லாமப் பறக்கற மாதிரி இருந்தது. அதுதான் முதலும் கடைசியுமா சிவாஜி என்னை நேருக்கு நேர் பாராட்டின ஒரே சந்தர்ப்பம். அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துக்கெல்லாம் அவர் இல்ல.’ - மனோரமா.
அதே மனோரமாதான் முகச்சவரம் செய்யும் குமரிமுத்துவின் மனைவியாக கே.பாக்யராஜின் பாமரத் தாயாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜொலி ஜொலித்தது!
மைக்கேல் மதன காமராஜனில் ரூபிணியுடன் சேர்ந்து ‘சிவராத்திரி... தூக்கம் ஏது ஹோ...! என்று இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆடிப் பாடியபடி வெளிப்படுத்திய சிருங்கார பாவங்கள் மனோரமாவைத் தவிர வேறு யாருக்கு வரும்?
பாரதிராஜா, மணி ரத்னம் என மிகச் சிலரைத் தவிர மனோரமாவுடன் சேர்ந்து பணியாற்றி, ரெடி டேக் ஆக்ஷன் சொல்லாத இயக்குநர்கள் யார்?
அவருடன் பணியாற்றிய இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தாலே தமிழ் சினிமாவின் வரலாறும் அதன் அத்தனைப் பரிமாணங்களும் புரியுமே!
இயக்குநர்களில் விசு விசேஷமானவர். ஒரு வாரம் மட்டும் மனோரமாவை நடிக்க வைத்து, முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் 25 வார விழாவைக் கொண்டாடியவர். முதல்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு தங்கத்தாமரை என்கிற இமாலயப் பரிசை ‘சம்சாரம் அது மின்சாரம்’ வெள்ளிவிழாப் படம் மூலம் அளித்தவர்.

மனோரமா நடிகர் திலகத்துடன் நடித்து வெளிவந்த முதல் படம் ’வடிவுக்கு வளைகாப்பு’. சிவாஜி பட டைட்டில் கார்டுகளில் மனோரமாவின் பெயர் முப்பது ஆண்டுகளைக் கடந்து கடைசி வரை தொடர்ந்தது. சிவாஜி-மனோரமாவுக்கு இடையேயான பந்தம் மிக அபூர்வமானது.
சிவாஜி ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஏக்கம் மனோரமாவுக்கு இருந்தது. அதுவும் ஞானப்பறவை படத்தில் தீர்ந்தது. மனோரமாவின் ஆசையை நிறைவேற்றியவர் வியட்நாம் வீடு சுந்தரம்.
1958-ல் கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை மூலம் அறிமுகமான மனோரமா அடுத்துப் புகழ் பெற்றது அபலை அஞ்சுகம் படத்தில். 1962-ல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நாகேஷ் கம்பவுண்டராகவும் மனோரமா நோயாளி நவநீதமாகவும் நடித்தார்கள்.
‘நவநீதம்... நவநீதம்...’ என்று காட்சிக்குக் காட்சி வித்தியாசமாக பேசி நாகேஷ் பிரபலமானார். அதற்குப் பிறகு மனோரமாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நாகேஷ் ஹீரோவாக அறிமுகமான சர்வர் சுந்தரம் படத்தில் அவருடன் சினிமா நடிகையாக சில நிமிடங்களுக்கு கவுரவத் தோற்றத்தில் வருவார் மனோரமா. எஸ். வி. ரங்காராவ் இயக்குநர்.அந்தக் காட்சியில் மனோரமா சரோஜாதேவியை ஞாபகப்படுத்துவது மாதிரி கொஞ்சும் தமிழில் பேசி நாகேஷை மிரள வைப்பது அபாரம்.
பொதுவாக எம்.ஜி.ஆரின் சினிமாவில் நாயகன், நாயகியைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் டூயட் இருக்காது. மனோரமா மட்டும் விதிவிலக்கு!
‘வேட்டைக்காரன்’ படத்தில் முதல்முதலாக நாகேஷ் - மனோரமா இருவரும் ஆடிப்பாடிய ‘சீட்டுக்கட்டு ராஜா’ என்கிற டூயட் அதில் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் தேவர் பிலிம்ஸ் படங்களில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுடன் நாகேஷ்-மனோரமா ஜோடியும் சேர்ந்து கொண்டது.
தில்லானா மோகனாம்பாளில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்ததில் மனோரமா புகழின் உச்சிக்குச் சென்றார். கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மனோரமாவை சிறந்த துணை நடிகையாக கவுரவித்து விருது வழங்கியது.
 மனோரமா ‘ரமாமணியாக’ மாறிய விதம் குறித்து என்னிடம் கூறியவை :
‘பாலையா அண்ணனைப் பார்த்து சிவாஜி சாரே பயப்படுவாங்க. அப்படிப்பட்ட மகா நடிகர் அவர். பாலையா அண்ணன், சிவாஜி, சாரங்கபாணி இவங்க கூடத்தான் எனக்கு முதல் ஷாட்.
‘என்ன சிக்கலாரே சவுக்கியமான்னு...’ விசாரிக்கிற சீன். அப்ப பாலையா அண்ணன் சொல்லுவாங்க. ‘இவங்க ஆட்டத்துல பேர் போனவங்கன்னு…’
அவங்களுக்கு முன்னால எனக்கு நடிக்கவே முடியல. பயமா இருக்கு. அழுகையா வருது. நான் தான் தொடர்ந்து வசனம் பேசணும். சிவாஜிக்கு என்னைக் கவனிக்கிற ஷாட் மட்டுமே. நான் ஏபிஎன். சாரைப் பார்க்கறேன். நடிப்பு வரல. அவர் என்னைக் கூப்பிட்டார்.
‘இந்த சீன்ல நீதான் பெரிய ஆள். அவங்கள மறந்துடுன்னு’ தைரியம் சொன்னாரு. அப்புறம் படபடன்னு பேசி நடிச்சேன்.
இப்பவும் நீங்க படத்தைப் பாத்தீங்கன்னா அந்த சீன்ல சிவாஜி வசனம் எதுவும் இல்லாம, ‘பரவாயில்ல போலிருக்கு. சின்னப் பெண்ணா இருந்தாலும் நல்லா ஆக்ட் பண்றே’னு என் நடிப்பையே ரசிக்கிறது தெரியும்.’ என்றார் மனோரமா.
ஏ.பி. நாகராஜனின் சின்ன பட்ஜெட் படங்களான திருமலை தென் குமரி, கண் காட்சி ஆகிய படங்கள் மனோரமாவுக்கு கை கொடுத்தது. இரண்டிலும் அவருக்கு அமைந்த புதிய ஜோடி சுருளிராஜன். ‘திருமலை தென்குமரி’ நூறு நாள்கள் ஓடியது. ’இந்தப் படம் ஓட வேண்டும் என்று நான் வேண்டாத தெய்வமே இல்லை’ என்று மனோரமா அதன் வெற்றி விழாவில் பேசினார்.
தமிழில் 150 படங்கள் பூர்த்தியான நிலையில் மனோரமாவுக்குத் தெலுங்கில் வாய்ப்புகள் வந்தன. அவர் நடித்த முதல் தெலுங்கு படம் ‘எதிர் நீச்சல்’ ரீமேக்.
1969 முதல் 1971 வரையில் சினிமாவில் மிகப் பெரிய வெற்றிடம். கடுமையாகப் போராடினார் மனோரமா. கோடம்பாக்கம் கை விட்டவுடன் சித்ராலயா கோபுவின் நாடகக் குழுவில் முழு மூச்சாக நடித்தார்.அங்கு உருவான ‘காசேதான் கடவுளடா’ நாடகம் சினிமாவானது. ஏவிஎம் தயாரிப்பில் நூறு நாள்கள் ஓடியது.
ஹீரோ முத்துராமனை விட மனோரமாவுக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் மிகப் பெரிய திருப்புமுனை அந்தப் படம். மனோரமா செகண்ட் இன்னிங்ஸ்ஸில் கொடி கட்டிப் பறந்தார்.
ஜெய் சங்கர்-ஜெய்சித்ரா நடித்த ‘உங்கள் விருப்பம்’ படத்தில் தேங்காய் சீனிவாசன் - மனோரமா பாடி நடித்து, பிரபலமான ஒரு டூயட் - ‘மஞ்சள் பூசி மஞ்சம் வந்த ராதா ராதா.’ அன்றைய வானொலி நேயர்களுக்கு மிகவும் பிடித்தமானது. தேங்காய் சீனிவாசனுடன் மனோரமா நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
மனோரமா சுயம்பு. விழுந்த சுவடே தெரியாமல் விரைவாக விஸ்வரூபம் எடுத்து நின்றவர். எம்.ஜி.ஆர். அரசியலில் முமு மூச்சாக ஈடுபட, மனோரமாவை மேலும் கை தூக்கி விட்டவர் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர். (‘ராமன் தேடிய சீதை’ எம்.ஜி.ஆருடன் மனோரமா பங்கேற்ற கடைசி படம்.)
தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ் போன்று கே.பாலாஜியின் தயாரிப்புகளில் மனோரமாவுக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு.
நீதி படத்தில் மனோரமாவுக்காகவே டிராக்டர் ஓட்டும் கிராமத்து பொன்னம்மா கேரக்டரை கே.பாலாஜி உருவாக்கினார். சிவாஜியை ஒரு தலையாகக் காதலிக்கும் வேடம். விசிலுக்குக் கேட்க வேண்டுமா..? மீண்டும் வசந்தம்!
 1981-ல் பாலாஜியின் படமான ‘சவால்’ மனோரமாவுக்கு பெரிய பிரேக். அதில் கமலுடன் பிக் பாக்கெட் அடிக்கும் ‘பர்மா பாப்பா’ வாக மனோரமா தூள் கலக்கி இருப்பார். ‘பந்தம்’ படத்தில் பேபி ஷாலினியுடன் செவிட்டுப் பெண்ணாக நடித்து குழந்தைகளைச் சிரிக்க வைப்பார்.
சினிமாவில் சிரிக்க சிரிக்கப் பேசி ஹாஸ்யங்கள் புரிந்த மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் சோகத்தின் சுவடுகளே அதிகம்.
அம்மாவை தெய்வமாக மதித்தவர். தாய் சொல்லைத் தட்டாதவர். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொன்ன கணவரை, அன்னையின் ஆணைக்கேற்ப விட்டுப் பிரிந்தார். அம்மாவின் கனவை நிறைவேற்ற கலையுலகில் மாபெரும் சாதனையாளராக உயர்ந்தவர்.
‘கண் திறந்தது’ படம் மூலம் பிரபலம் ஆன ராமநாதன், மனோரமாவின் கணவர். மனோரமாவுடனான திருமண வாழ்க்கை முறிந்ததும் அவர் மறு விவாகம் செய்து கொண்டார். ஆனால் வாரிசுகள் இல்லை. 1992-ல் அவர் மறைந்தபோது தன் கணவருக்குக்குக் கொள்ளி வைக்க மகன் பூபதியுடன் சென்ற பெருந்தன்மைக்குரியவர் மனோரமா.
வெவ்வேறு திசைகளில் தமிழ் சினிமா பயணித்தாலும் மனோரமா தன் இடத்தை சாமர்த்தியமாகத் தக்க வைத்துக்கொண்டார்.
முப்பது ஆண்டுகளாக நகைச்சுவைக்கு ஒரே சிறந்த நடிகையாக ஆண்டு தோறும் விருதுகளைக் குவித்தவர் மனோரமா. சிவாஜியை மட்டும் அல்ல. எம்.ஜி.ஆருக்கு நிகரான பானுமதியையும் வியக்க வைத்தவர் அவர்.
 ‘பத்து மாத பந்தம்’ படத்தில் ‘தெய்வமகன்’ சிவாஜியைப் போல் அம்மாவாகவும் இரண்டு மகள்களாகவும் தினுசு தினுசாகப் புதுப்புது வடிவங்களில் மக்களை மகிழச் செய்தார்.
‘மொத்தம் மூன்று மனோரமாக்களைச் சந்திக்கிறோம். ஹைஸ்கூலில் காதலித்துக் கல்லூரியில் கல்யாணம் செய்துகொண்டு வாயும் வயிறுமாக ஹாஸ்யம் படைக்க வருகிறார் முதலில். அவர் தன் வயிற்றை மறந்து உற்சாகமாகக் குதி போடத் தொடங்குவதும் பிறகு ‘ஆ’வென்று வயிற்றைப் பிடித்தவாறு சோர்ந்து போவதும் வேதனையான வேடிக்கை. அவருடைய இரட்டைப் பெண்களாக மழலைக் கொஞ்சல் மனோரமாக்கள் வேறு. அமர்க்களம் போங்கள்!’ என்றது எவரையும் எளிதாகப் பாராட்டி விடாத குமுதம்.
பத்து மாத பந்தம் லேசான படமல்ல. கிருஷ்ணன்- பஞ்சு இயக்கியது. 1974 தைத் திருநாள் வெளியீடு.
பி. பானுமதி, சரோஜாதேவி, எம்.என். ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, ஏவிஎம். ராஜன், முத்துராமன், ரவிச்சந்திரன், அசோகன்... என நட்சத்திரப் பட்டியல் நிறைந்தது. அத்தனை பேருக்கும் நடுவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பானுமதியோடு ஒரு வண்ணப் படத்தில் அவரையும் மீறி ஒருவர் பெயர் பெறுவது சாத்தியமே அல்ல.
சகலகலாவல்லியான பானுமதியுடன் சேர்ந்து அவரது இயக்கத்தில் ‘இப்படியும் ஒரு பெண்’ (1975 மே 1 ரிலீஸ்) படத்தில் ஜெயில் காட்சியில் பாடி நடித்திருக்கிறார் மனோரமா. ‘அகப்பட்ட வரையில் சுருட்டிட்ட யாரும் சுகப்பட்டதில்ல’ என்று அதன் பல்லவி ஆரம்பமாகும்.
1989-ல் ஏவிஎம்.மின் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ அவரது ஹாஸ்ய நடிப்பின் நிறைவான கட்டமாக இருந்தது. அதில் கம்புச் சண்டையும் போட்டு சிறுவர் சிறுமியரைத் தன் வசப்படுத்தினார். சந்திரபோஸ் இசையில் அவர் பாடிய டைட்டில் சாங் ஒலிக்காத ஊரே இல்லை. அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் வெள்ளி விழா நடந்தது. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தைத் தெலுங்கிலும் ஏவிஎம் தயாரித்தது. அதில் மனோரமாவின் வேடம் பானுமதிக்கு.
‘மனோரமா இந்த ரோலை கிரியேட் பண்ணிட்டாங்க. நான் அந்த ரோலில் ஆக்ட் பண்றேன். அவ்வளவுதான். ஐ டு நாட் நோ ஹவ் ஃபார் ஐ வில் ரீச் மனோரமா’ என்றார் பானுமதி.வசிஷ்டை வாயால் பிரம்ம ரிஷி பட்டம் யாருக்குக் கிடைக்கும்? ஆந்திரத்து ஆஸ்கார் அல்லவா அது!
மூப்பு வந்ததும் வயதுக்கேற்ப மெல்ல குணச்சித்திர நடிப்பில் ஆர்வம் காட்டினார். கமல்- ஷங்கர் இணைந்த ஒரே படமான ‘இந்தியனில்’ மனோரமா ஏழைக் கிழவியாக உருக வைத்ததை யாரால் மறக்க முடியும்! அதற்குக் கிடைத்த பலன் - 1996ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக மனோரமாவை கவுரவித்தது பேசும் படம் இதழ்.

அவர் வயதான தாயாராக நடித்த சின்ன கவுண்டர், சின்ன தம்பி, நாட்டாமை போன்ற படங்கள் தாறுமாறாக ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. ஏராளமான வசூலைக் குவித்தன. தெலுங்கிலும் ஏராளமான கேரக்டர் ரோல்கள் மனோரமாவைத் தேடி வந்தன. தமிழைப் போலவே அற்புதமாக சுந்தரத் தெலுங்கிலும் மாட்லாடுவார் மனோரமா.
சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ சினிமாவாக வந்தது. நாட்டுப்புறப்பாடல் பாடும் கிழவியாக மனோரமா அநாயாசமாக நடித்திருப்பார். படம் ஓடவில்லை. அவ்வாறு மனோரமாவின் உழைப்பு தெரியாமல் போன படங்கள் எக்கச்சக்கம்.
ஐம்பது ஆண்டுகளைக் கடந்தாலும் ஜனங்களுக்கு மிகவும் பிடித்த ஜதை நாகேஷ் - மனோரமா. ஆறு ஆண்டுகளில் அலுப்பு சலிப்பில்லாமல் நூறு சினிமாக்களுக்கு மேல் நடித்த ஒரே காமெடி ஜோடி. அவை அத்தனையும் சிரஞ்சீவியான காட்சிப் பெட்டகம்!
கே.பாலசந்தரின் அனுபவி ராஜா அனுபவி படத்தில் வரும் ‘முத்துக் குளிக்க வாரீயளா...!’ பாடல் மனோரமாவின் இறுதி ஊர்வலத்திலும் இடம் பிடித்தது.
நவராத்திரி நேரத்தில் முப்பெரும் தேவியரோடு சேர்ந்து மனோரமாவும் சாமியாகி விட்டார்! என்றும் வாழும் அவர் புகழுக்கு அஞ்சலி எழுத வேண்டாம் என்று இருந்தேன். மனோரமாவை சிரிப்பு தேவதையாகப் பார்த்து பார்த்து ரசித்த பாழும் மனசு கேட்கவில்லை.
சிவாஜி, ஜெமினிக்கு செய்தது போல ஆச்சியின் தகனத்தையும் அரசு மரியாதைகளுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க நடத்தியிருக்கலாம்.

Friday, October 16, 2015

DONT DELAY AWARD OF CERTIFICATES NO LONGER..AU TELLS ALL COLLEGES

CHENNAI: Days after a successful MCA student committed suicide by setting himself ablaze in front of his college campus because of the delay in getting his certificates, Anna University directed all institutions not to delay issuing certificates to successful students.
The university has also issued a notice to the particular engineering college on OMR for an explanation. It also advised students to approach the university directly if their colleges refused to hand over their certificates.
Madhu Kumar (24), of Arupukottai, Virudhunagar district, set himself on fire in front of the college campus, minutes after he stepped out after a tiff with college officials over undue delay in giving him his certificates.
In his dying declaration to a judicial magistrate, Madhu Kumar had said that a particular faculty member had sexually harassed and targetted him.
The dead student’s brother Veera Kumar said Madhu Kumar, who completed the MCA course in 2013, cleared all the arrears a few months ago and had been trying to get his certificates.
He was unable to take up a job because of the delay by the college in handing over his degree certificates.
On October 7, Madhu Kumar had reportedly met the head of his department and had a heated argument with the faculty. Police said he set himself on fire soon after he stepped out of the campus.
Express learnt that Anna University sent a notice to the college asking for an explanation why the college management hesitated to issue the certificates to the student.
Also a circular was sent to all affiliated technical institutes not to delay issuing certificates just because of delays in paying the fees.
A top university official said Madhu Kumar could have approached the university before taking such an extreme step.

WAITLISTED SOUTHERN RAILWAY PASSENGERS WILL NOT GET TO SWITCH TRAINS

Waitlisted Southern Railway Passengers Will Not Get to Switch Trains
Published: 16th October 2015 05:09 AM

Last Updated: 16th October 2015 05:14 AM
CHENNAI: The new Alternate Train Accommodation System (ATAS) called Vikalp, through which waitlisted passengers of one train would get reserved tickets on another train, will be run as a pilot project for six months from November 1 only on the Delhi-Lucknow and Delhi-Jammu sectors.
No trains on Southern Railway or in any other part of the country would be eligible for this facility now, railway officials said.
Indian Railways recently announced this scheme which seeks to optimise the use of seats and berths on trains. Passengers with waitlisted tickets on one train, if they opt for ATAS, will be offered seats on another train leaving from a nearby station within 12 hours from the scheduled departure of the original train.
No additional charges will be collected for this switch, but it would be subject to seat availability in the substitute train, a policy document detailing this scheme indicated.
Railway officials said the scheme would be useful for passengers travelling by trains on busy routes where some trains were full always, but special trains ran empty.

மீத்தேன் வாயு திட்டத்துக்கு தடை!

logo

காவிரி டெல்டா பிரதேசத்தில் விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்துக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள உத்தரவால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. இந்தப்பகுதியில், மீத்தேன் வாயு எடுக்க மத்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு அசைக்கமுடியாத ஒரு முட்டுக்கட்டையை தமிழக அரசு போட்டுவிட்டது. இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்த மகாத்மா காந்தி, பூமியை ஒரு தாய் என்றுதான் வர்ணித்தார். பூமித்தாயால் நமது தேவைகளை பூர்த்தி செய்யமுடியும். ஆனால், பேராசைகளை பூர்த்தி செய்யமுடியாது என்றார். பூமித்தாய் நமக்கு பால் ஊட்டத்தான் முடியும். அவளது உதிரத்தை எடுத்து குடிக்க நினைத்தால், அவள் உயிர் போய்விடும் நிலை ஏற்படும். அந்தவகையில் வேளாண் நிலங்களில் விவசாயம் செய்யதான் நினைக்க வேண்டும். வேறு பணிகளை செய்ய நினைக்கக்கூடாது.

இந்த நிலையில், கடந்த 2010–ம் ஆண்டு மத்திய அரசாங்கம் காவிரி டெல்டா பகுதியில் பழுப்பு நிலக்கரியும், அதோடு சேர்ந்து மீத்தேன் எரிவாயும் இருப்பதை கண்டறிந்தது. மீத்தேன் எரிவாயுவை எடுக்க திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் தாலுகாக்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் 691 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் இந்த மீத்தேன் வாயு எடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த மீத்தேன் வாயுவுக்காக வெகு ஆழத்திற்கு துளையிடுவதன் மூலம் நெல்சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்ற கருத்தில் தொடக்ககாலத்தில் இருந்தே விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மீத்தேன் எரிவாயு தொழில்கள் வளர்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றாலும், விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும். வளம் கொழிக்கும் காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாகிவிடும். விவசாயத்தை இழந்து, அப்படியொரு தொழில் வளர்ச்சி தேவையா? என்பதுதான் வேளாண் பெருங்குடி மக்களின் பெரிய கவலையாகும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் 2011–ல் விவசாயிகளின் இந்த பிரச்சினையை கையில் எடுத்து தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். உத்தேசிக்கப்பட்ட மீத்தேன் எரிவாயு திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்நீர் உட்புகுதல், வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் விளைவு மற்றும் மாசற்ற எரிசக்தி வளங்களை மேம்படுத்தலின் தேவை ஆகியவை குறித்து ஆராய ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைத்து அறிக்கைதர உத்தரவிட்டார்.

தற்போது, இந்த வல்லுநர் குழு இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, 15 அம்சங்களில் விளக்கங்களை தெளிவாக அளித்துள்ளது. இந்த அறிக்கையை பரிசீலித்து இந்த திட்டத்துக்கு தமிழக அரசால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனப்பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கோ, மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கோ செய்யப்படும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசாங்கம் கைவிடவேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுதொடர்பான எந்த முயற்சிகளையும் தொடங்குவதற்கு முன்னால் தமிழக அரசை கலந்தாலோசிக்கவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வை காத்த அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியது. அதேநேரத்தில், தொழில் வளர்ச்சிக்காக மீத்தேன் எரிவாயுவை எடுத்திட விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் மாற்றுவழிகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராய்வதற்கும் மத்திய அரசாங்கம் முயற்சி எடுக்கலாம்.

அரசியல் அவசியம்தான்...

Dinamani


By ப. சங்கரலிங்கம்

First Published : 16 October 2015 01:42 AM IST


அரசியலா! அது நமக்கு சரிப்பட்டு வராது. ஆகவே ஆகாது. அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்ற மனநிலை பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது இன்று, நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாகவே உள்ளது.
அரசியலில் நேர்மை இல்லை. ஊழலும், அராஜகமும்தான் அரசியலை வழிநடத்தும் இருபெரும் தீயசக்திகள் என்று கூறுவதில் உண்மை இருந்தாலும், அதை ஏன் மாற்ற முடியாது? மனமிருந்தால் மார்க்கம் உண்டு. இதற்கு முதலில் அச்சத்தை ஒழிக்க வேண்டும்.
எந்த ஒரு காரியத்துக்கும் தைரியமே முதல் தகுதி. இது இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். தலைமுறை தலைமுறையாக நம் நாட்டு மக்கள் மனதில் கறையாகப் படிந்திருக்கும் அச்சமே அரசியலைப் பற்றிய அச்சத்துக்கு காரணம்.
சுதந்திரப் போராட்டத்தின்போது, "அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவணியிலே' என மகாகவி பாரதியார் மன வேதனையில் பாடியதே, அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததை எண்ணித்தான்.
அரசியல் என்றால் கட்சிகளின் செயல்பாடு சம்பந்தப்பட்டது. அதாவது கூட்டம் நடத்துவது, கொடி கட்டுவது, தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது, எதிர்க்கட்சியாக இருந்தால் அரசுக்கு, அதாவது ஆளும் கட்சிக்கு எதிராகப் போராட வேண்டும், வளர்ச்சிக்கான திட்டங்களை அரசு கொண்டுவந்தாலும், அதைத் திரித்து மக்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி சாலை மறியல், வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது, மக்கள் பிரச்னையை எடுத்துக் கூறி தீர்வு காண வேண்டிய அவையில், கட்சிகள் அராஜகத்துடன் நடந்துகொள்வது என்பதும், ஆளும் கட்சி என்றால் ஊழல் செய்வது, எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவது என்ற தற்போதைய அரசியல் துரதிர்ஷ்ட நிலையில் உள்ளது.
இதனால், அரசியல் அல்லது அரசியல்வாதி என்றாலே நாணயமற்றவர்கள் என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது.
ஊழல், பழிவாங்கும் எண்ணம், நம்பிக்கைத் துரோகம் போன்றவை தற்கால அரசியலில் தலைதூக்கியிருந்தாலும், நேர்மையான-திறமையான அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து நிர்வாகத் திறன், வெற்றி - தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம், சகிப்புத்தன்மை,பேச்சாற்றல், தியாகம், ஒழுக்கம், பெருந்தன்மை, தன்னம்பிக்கை, விடா முயற்சி போன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
அரசியல் வேறு, அரசு வேறு என்று கூறப்பட்டாலும் அரசின் அஸ்திவாரம் அரசியல்தான். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிறப்பு முதல் இறப்பு வரை அரசியலின் பங்கு முக்கியமானது என்றால் அது மிகையல்ல. குழந்தை பிறந்ததும், பிறப்புச் சான்றிதழ் பெறுவதுகூட அரசியல் சார்புடைய நடவடிக்கைதான். பிறப்பு சான்றிதழ் பெறுவதன் மூலம் நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கையில் அந்தக் குழந்தை சேர்க்கப்படுகிறது.
அதன்மூலம், அரசின் நலத் திட்டங்கள், வரவு - செலவு அறிக்கைத் தயாரித்தல் போன்றவற்றிற்கு மக்கள்தொகை புள்ளி விவரங்கள் உதவுகின்றன. அரசின் இந்த நடவடிக்கைகூட அரசியல் சார்புடையதுதான்.
தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலான காலத்திலும் அரசியல் கலந்திருக்கிறது. எப்படி என்றால் பாடத் திட்டம், இலவச கட்டாயக் கல்வி சட்டம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு இன்னும் பிற சலுகைகள் என அரசு நடைமுறைப்படுத்தும் எல்லாத் திட்டங்களும் அரசியல் தொடர்புடையதுதான்.
படித்து முடித்ததும் பணியில் சேர்வது, பின்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவது என அனைத்தும் அரசியல் தொடர்புடையதுதான். நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சிக்கானத் திட்டங்கள், அண்டை நாடுகளுடனான உறவு, வெளிநாடுகளுக்கு மத்தியில் நம் நாட்டின் மதிப்பு என அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அரசியல் உள்ளது.
இதனால், அரசியலைப் பற்றி குடிமக்கள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஆனால், நம்நாட்டில் பாமர மக்களிடம் இருக்கும் அரசியல் ஆர்வம்கூட படித்தவர்களில் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இது குற்றப் பின்னணி உள்ளவர்கள் எளிதாக அரசியலுக்கு வந்து கோலோச்ச வசதியாக அமைந்துவிடுகிறது.
இதனால், நமது நாடு இயற்கையாகவே பல்வேறு வளங்களை பெற்றிருந்தும், வளர்ச்சியடைவதில் பின்தங்கியே உள்ளது. இந்த நிலை மாற, படித்தவர்கள் ஆர்வமுடன் அரசியலுக்கு வரவேண்டும். நன்றாகப் படித்து முதலிடம் பிடிக்கும் மாணவரிடம்கூட அரசியல் பற்றிய புரிதல் இல்லாமல் உள்ளது.
இதற்கு நமது கல்வி முறை மட்டுமன்றி அந்த மாணவரின் பெற்றோரும் ஒரு காரணம். அரசியல் அறிவு தங்களது மகனை நல்வழிப்படுத்தாது, தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும் என்ற அச்சம் பெற்றோரிடம் உள்ளதால், அவர்கள் தங்கள் மகனோ, மகளோ அரசியல் பற்றி அறிந்துகொள்ள விரும்புவது இல்லை. இதன் காரணமாக, சிறு வயது முதலே அரசியல் பற்றிய தவறான எண்ணம் மனதில் பதிந்துவிடுகிறது.
இதனால், உயர் கல்லி கற்றவர்களில் பெரும்பாலானவர்களிடம் அரசியல் ஆர்வம் இல்லாமல் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரசியல் அறிவும் அவசியம்.
எனவே, கல்வித் திட்டத்தில் அரசியல் பாடத்தை கட்டாயமாக்கி, தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் அரசியல் பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும். மேலைநாடுகளில் படித்தவர்களே பெரும்பாலும் அரசியலில் உள்ளதுபோல் நம் நாட்டிலும் படித்தவர்கள் அதிக அளவில் அரசியலில் பங்கெடுத்தால்தான் மேலைநாடுகளைப்போல நம் நாடும் வேகமான வளர்ச்சி பெறும் என்பது திண்ணம்.

ஆதாரம் இருக்கிறது!..dinamani



By ஆசிரியர்

First Published : 14 October 2015 01:44 AM IST


சமையல் எரிவாயு மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தத் தொடங்கிய பின்னர், கடந்த ஓராண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிவாயு மானியத்தில் ரூ.14,672 கோடி மிச்சமாகியிருக்கிறது என மத்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்த 30 லட்சம் பேரால் ஏற்பட்ட மிச்சத் தொகை அல்ல. முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள சேமிப்பு.
வீட்டுச் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் 18 கோடிக்கும் அதிகம். நேரடி மானியம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, 3.34 கோடி இணைப்புகள் போலியானவை அல்லது ஒரே நபர் இரண்டு இணைப்பு பெற்ற சம்பவங்கள் தெரிய வந்தது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட விநியோக நடைமுறைப்படி, ஓர் இணைப்புக்கு ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள்; ஓர் உருளைக்கு ரூ.336 மானியம். இந்த அடிப்படையில் கணக்கிட்டபோது, இதற்கு முந்தைய ஆண்டில் மானியமாக அளிக்கப்பட்ட தொகையில் ரூ.14,672 கோடி மிச்சமாகி இருக்கிறது.
இது மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போடும் திட்டத்தால் மட்டுமே ஏற்பட்டதல்ல. போலி இணைப்புகள் களையப்படக் காரணம் ஆதார் அட்டை என்பதுதான் உண்மை நேரடி மானியம் பெறுவதற்கு, எரிவாயு இணைப்பு உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வங்கிக் கணக்கு எண் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தால், இந்நேரம், இந்த போலியான 3.34 கோடி இணைப்பு பெற்றவர்களும் வங்கிக் கணக்கு எண் கொடுத்திருப்பார்கள். ஆனால், ஆதார் அடையாள அட்டை இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஒரே காரணத்தால், போலிகள் வேறு வழியில்லாமல் கழிந்துபோயின. ஆதார் அட்டைக்கு கைரேகை, கண்பாவை போன்ற உயிரி அடையாளங்கள் அவசியம் என்பதால், போலிகள் இதில் புக முடியவில்லை.
தற்போது கண்டறியப்பட்ட 3.34 கோடி எரிவாயு இணைப்புகளில் மிகச் சில நூறு இணைப்புகள் மட்டுமே ஒரு வீட்டில், ஒரே குடும்பத் தலைவர் இரு முறை பெற்ற இணைப்பாக இருக்கும். மற்ற அனைத்தும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களால் போலியாக சேர்க்கப்பட்டு, எண்ணெய் நிறுவனத்தின் அந்தந்தப் பகுதி மேலாளர் ஆசியுடன் நடத்தப்பட்ட முறைகேடாகவே இருக்கும் என்பது உறுதி. மானியத்துடன் வழங்கப்பட்ட வீட்டு விநியோக எரிவாயு உருளைகளை பொய்க்கணக்கில் ஏற்றி, வணிகப் பயன்பாட்டுக்கு அளித்து, ஆண்டுதோறும் ரூ.14,672 கோடி மக்கள் பணம் கொள்ளை போயிருக்கிறது என்றே இதற்குப் பொருள்.
இப்போது, சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு உருளைகளை வீட்டுக்கு கொண்டு தரும் ஊழியர்களுக்கு சம்பளமே தருவதில்லை என்றும், அவர்களுக்கு எண்ணெய் நிறுவனம் தரும் கமிஷன் நீங்கலாக, விநியோகக் கட்டணம் என்று ரூ.15 வரை நிர்ணயித்திருந்தாலும், அதை ஊழியர்களுக்கு கொடுப்பதே இல்லை என்றும் எரிவாயு உருளைகளை விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது. ஆகவேதான், நாங்கள் ரூ.50 வரை நுகர்வோரிடம் வசூலிக்கிறோம் என்றும் அப்பட்டமாக சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கை, இத்தகைய புகார் குறித்து நேரடியாக எண்ணெய் நிறுவனத்துக்குப் புகார் தெரிவிக்கலாம் என்பது மட்டுமே. ஆனால், இந்தப் புகாரைத் தந்த நுகர்வோருக்கு எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்கத் தயாராக இல்லை. ஆகவே, புகார்களும் வருவதே இல்லை. "அரசாங்கம் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.336 போடுகிறதல்லவா? எங்களுக்கு ரூ.40, 50 கொடுத்தால் என்ன?"" என்று எரிவாயு உருளையைக் கொண்டு தரும் ஊழியர்கள் உரிமையுடன் நுகர்வோரைக் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். மானியத்தை விட்டுக் கொடுத்தவர் என்பதை அவரிடம் நிரூபிக்க வேண்டுமா என்ன?
இந்த முறைகேட்டை தவிர்க்க வீட்டு சமையல் எரிவாயு விநியோகத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் எளிமைப் படுத்தலாம். தற்போது ஐந்து கிலோ எரிவாயு உருளைகள் பெருநகர்களில் பரவலாக விற்பனைக்கு வந்துள்ளன. புதிய உருளை கேட்டு செல்லிடப்பேசியில் பதிவு செய்தவுடன், பதிவு எண் குறுந்தகவலில் வருகிறது. இந்தப் பதிவு எண்ணைக் காட்டி, தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள முகவர்களிடம் இருந்து உருளையைத் தாங்களே எடுத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தினால், விருப்பமுள்ள நுகர்வோர் இத்தகைய எளிய நடைமுறைக்கு மாறுவர். இதனால், சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விநியோகத்துக்காக வழங்கும் கட்டணம் அரசுக்கு மிச்சப்படும்.
ஆதார் அட்டையின் அடிப்படைத் தகவல்கள், கிடைக்கக் கூடாதவர்களுக்கு கிடைத்துவிடும் என்பதும், இது தனிநபர் அந்தரங்கத் தகவல்களை மற்றவர்கள் அறிய வழியேற்படுத்தும் என்பதும்தான் தற்போது ஆதார் அட்டைக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்.
இருப்பினும், ஆதார் அட்டையின் ஒரேயொரு பயன்பாட்டில் மட்டுமே ரூ.14,672 கோடி மானியம் மிச்சப்படும் என்றால், உர மானியம், பொது விநியோகப் பொருள் மானியம் ஆகியவற்றுக்கும் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டால் நிச்சயமாக பெருமளவில் போலிகள் தவிர்க்கப்படுவர். ஆகவே, மானியம் பெறும் திட்டங்களுக்கு மட்டும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டால், மக்கள் பணம் முறைகேடுகளால் யாருக்கோ போய்ச் சேருவது தடுக்கப்படும்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட "ஆதார்' திட்டத்தை அப்போது எதிர்த்த பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தவுடன் அதைக் கைவிடவில்லை. மாறாக, அந்தத் திட்டத்தின் நன்மையை உணர்ந்து நரேந்திர மோடி அரசு அதை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டிருக்கிறது. இதற்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போடாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்.


பருப்பு வளர்க்கும் வெறுப்பு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 16 October 2015 01:39 AM IST


வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ததுபோல, இப்போது பருப்பு விலையைக் கட்டுப்படுத்த பருப்புகளை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே 5,000 டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகங்களுக்கு வந்துள்ள நிலையில், மேலும் 2,000 டன் பருப்பு முன்னெச்சரிக்கையாக இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.85-ஆக இருந்தது. சில வாரங்களாக ரூ.130 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு, கடும் தட்டுப்பாடு காரணமாக தற்போது சந்தையில் ரூ.180 வரை விற்கப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால், இந்த விலை உயர்வின் பயனை அனுபவிப்பது இடைத்தரகர்களான பருப்பு வியாபாரிகளே தவிர, விவசாயிகள் அல்ல.
பருப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும் என மத்திய வேளாண் துறை கடந்த மே மாதத்திலேயே தோராய மதிப்பீடு செய்து அறிவித்தது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில்தான் இந்தியாவின் 60% பருப்பு சாகுபடி செய்யப்படுகிறது. பருவமழைப் பற்றாக்குறை, புயல் காரணமாக, பருப்பு சாகுபடி பாதிக்கும் என்றும், எதிர்பார்க்கப்பட்ட 180 லட்சம் டன் பருப்பு உற்பத்தி, குறைந்தபட்சம் 6% வீழ்ச்சி அடைவதால், 170 லட்சம் டன் பருப்பு உற்பத்திக்கே வாய்ப்பு உள்ளது என மத்திய வேளாண் துறை கணக்கிட்டு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வந்தபோதே மத்திய அரசு சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியாவில் சமையல் எண்ணெய், பருப்பு இவற்றுக்கான தேவை, உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி இருக்கிறது. சமையல் எண்ணெய், பருப்பு இரண்டையும் நாம் ஆண்டுதோறும் இறக்குமதி செய்துதான் தேவையை நிறைவு செய்கிறோம். இதில் உள்நாட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரத்துக் குறையும் என்றால் பற்றாக்குறையும் விலையேற்றமும் நடைபெறுவது இயல்பு.
எப்போதெல்லாம், மத்திய வேளாண் துறை விளைச்சல் குறையும் என்று கணித்துச் சொல்கிறதோ, அப்போதெல்லாம் பருப்பு வியாபாரிகள் உடனடியாகப் பதுக்கல் வேலைகளைத் தொடங்கி விடுகிறார்கள். ஏற்கெனவே உள்ள பற்றாக்குறையுடன் இந்தப் பதுக்கலும் சேர்ந்தால், தட்டுப்பாடு கடுமையாகி, விலையேற்றமும் அதிகரிக்கிறது. இது சாமானியனுக்குக்கூட தெரிந்த உண்மை.
மத்திய வேளாண் துறை உற்பத்திக் குறைவு பற்றி கணித்தபோதே, மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், இந்நேரம் சந்தையில் பருப்புத் தட்டுப்பாடு இருந்திருக்காது. மத்திய அரசு பருப்பு வகைகளை சந்தையில் சரியான நேரத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று தெரிந்தால், லாபம் இல்லாத பதுக்கலில் வியாபாரிகளும் ஈடுபட மாட்டார்கள்.
உள்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, வெளிநாடுகளில் பருப்பைத் தேடிப் போகும்போது அவர்களும் நமது இயலாமைப் புரிந்து கொண்டு விலையை ஏற்றிவிடுகிறார்கள். அதிக விலைக்கு வாங்கி வந்து, அதை இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பதால் அரசுக்கு ஒருபுறம் நஷ்டம். இதுதவிர, விலைக் கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.500 கோடியை ஒதுக்கி, பருப்புகளின் இறக்குமதிக் கட்டணம், பருப்பு உடைப்பு மற்றும் சுத்திகரிப்பு கட்டணம், லாரி வாடகை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு, சந்தையில் குறைந்த விலையில் பருப்பை விற்பனை செய்யும் கட்டாய நிலைமையும் ஏற்படுகிறது.
உணவுப் பொருள்கள் பற்றாக்குறை அல்லது சமையல் எண்ணெய்ப் பற்றாக்குறை என்பது பேரிடர் மேலாண்மை போன்றது அல்ல. வேளாண்மைத் துறை இவற்றின் உற்பத்தியைக் கணித்துச் சொல்லிவிடுகிறது. அப்போதே நாம் இறக்குமதியைச் செய்யத் தொடங்கினால், சந்தையில் விலையேற்றம் என்பது இயல்பாகவே கட்டுப்பாட்டில் இருக்கும். இது ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனது என்பதை நம்ப முடியவில்லை.
பருப்பு அழுகும் பொருள் அல்ல. சரியான முறையில் பாதுகாக்கப்பட்டால் ஓராண்டுக்கும் மேலாக இருப்பில் வைக்கக்கூடிய பொருள். பருப்புத் தேவையைப் பொருத்தவரையில், ஒவ்வோர் ஆண்டும், இந்தியா 40 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்துதான் தனது தேவையை நிறைவு செய்கிறது.
"எப்போதும் கூடுதலாகவே இறக்குமதி செய்து, பருப்புக்கு தனி சேமிப்பு கிடங்கு உருவாக்கப்படும்' என்று இப்போது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். இந்த நிலையைப் புரிந்துகொள்ள நிதி அமைச்சருக்கும், வர்த்தக அமைச்சருக்கும் வேளாண் அமைச்சருக்கும் இவ்வளவு நாள் தேவைப்படுகிறது என்றால், அவர்களது திறமையின்மையைத்தான் அது வெளிச்சம்போடுகிறது.
சேமிப்புக் கிடங்கில் போதுமான அளவு எப்போதும் இருப்பில் இருக்கவும், தேவைக்கு அதிகமாக பருப்பு, எண்ணெய் கையிருப்பில் மிகும்போது, அதை மட்டும் அவ்வப்போது பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யவுமான நடவடிக்கை, இவற்றின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பருப்பு விலை உயர்வு திறமையின்மையின் விளைவா? இல்லை ஆட்சியாளர்கள் தெரிந்தே செய்த தவறா?
உணவுப் பொருள்கள் விலைவாசி ஏற்றம் தொடருமேயானால் அதனால், பாதிக்கப்படப் போவது அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள்தான். ஐந்து ஆண்டுகள் என்னதான் நல்லாட்சி நடத்தினாலும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஏற்படுமேயானால், அந்த ஆட்சிகள் மக்களால் அகற்றப்பட்டிருப்பதுதான் சரித்திரம் காட்டும் உண்மை. அதனால்தான், மத்திய அரசு மெத்தனமாக இருந்துவிட்டதோ?

NEWS TODAY 28.01.2026