Thursday, March 17, 2016

எம்ஜிஆர் 100 | 23 - மல்லிகையைப் பிய்த்து தின்ற மக்கள் திலகம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

the hindu tamil
M.G.R. தனது படங்களில் காட்சி அமைப்பு அவருக்கு திருப்தி ஏற்படும் வரையில் விடமாட்டார். அதே நேரத்தில் மற்றவர்களின் கருத்து என்ன? குறிப்பிட்ட காட்சியை யூனிட்டில் உள்ளவர்கள் எப்படி ரசிக்கிறார்கள்? என்பதையும் அறிந்து கொள்வார். மற்றவர்களின் கருத்துக்கள் நியாயமாக இருந்தால் அதற்கேற்ப காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்வார்.

‘புரட்சிப்பித்தன்’... இந்தப் பெயரைப் பார்த் ததுமே எம்.ஜி.ஆர். படத் தலைப்பு என்பது புரியும். இந்தப் படத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் என்.எஸ். திரவியமும் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.ராமண்ணாவும் தயாரிப்பதாக இருந்து சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு கன்னடப் படத்தின் கதை. பாடல்களுடன் திரைக்கதை, வசனமும் வாலி எழுதுவதாக இருந்தது. 1975-ம் ஆண்டு ‘தீபாவளி வெளியீடு’ என்று பத்திரிகைகளில் விளம்பரமும் வந்தது. ஆனால், அரசியலில் எம்.ஜி.ஆர். ‘பிஸி’யாகி, தேர்தல் வந்து ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிட்டதால் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த படத்தின் காட்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவையான சம்பவம்.

கதைப்படி எம்.ஜி.ஆர். ஒரு விஷயத்துக்காக வேண்டுமென்றே மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல நடிப்பார். ஒரு நாள் படப்பிடிப்புக்கு முன்ன தாக இயக்குநர் ராமண்ணாவின் ஆலோசனைப் படி, அன்று எடுக்க இருக்கும் காட்சி பற்றி ஒப்பனை அறையில் இருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று விளக்கினார் வாலி. அதைக் கேட்டுக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

அன்று எடுக்க வேண்டிய காட்சியின்படி கோயிலுக்கு காரில் வந்து இறங்கும் கதாநாயகி, சாமி கும்பிடுகிறார். அவர் கண்களை மூடி வணங்கும்போது, பின்னால் வரும் மனநிலை சரியில்லாதவர் போல நடிக்கும் எம்.ஜி.ஆர். நாயகியின் தலையில் சூடி இருக்கும் மல்லிகைப் பூவை பிய்த்து தின்ன வேண்டும். அதன்படியே, எம்.ஜி.ஆர். மல்லிகைப் பூவை பிய்த்து தின்றார். எல்லோருக்கும் திருப்தி; காட்சி ஓ.கே.

ஆனால், வாலி மட்டும் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் நின்றார். எல்லோரையும் நோட்டமிட்ட எம்.ஜி.ஆர். அதை கவனித்து விட்டார். ‘‘என்ன ஆண்டவனே... காட்சி உங்களுக்கு திருப்தி இல்லையா?’’ என்று வாலியிடம் கேட்டார்.

‘‘ஆமாண்ணே, நாயகியின் தலையில் உள்ள பூவை நீங்க இன்னும் நிறைய பிச்சு எடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு உள்ள வேகத்தோடு தின்னுருக்கணும்’’ என்ற வாலியின் பதிலால் கோபமடைந்தார் எம்.ஜி.ஆர்.

‘‘அது எனக்கும் தெரியும். ஆனா எப்படிய்யா வேகமா திங்கிறது? மல்லிகைப் பூவை கடிச்சுப் பாரும். எட்டிக் காயா கசக்கும்’’ என்று வாலியைப் பார்த்து கோபமாக சொல்லிவிட்டு ஒப்பனை அறைக்கு விறுவிறுவென எம்.ஜி.ஆர்.சென்று விட்டார்.

படப்பிடிப்பு குழுவினர் வாலியை விரோதியைப் போல பார்த்தனர். எம்.ஜி.ஆரை சமாதானம் செய்வதற்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறைக்கு வாலியே சென்றார். வழக்கமாக ஒப்பனை அறை யின் முன் நிற்கும் எம்.ஜி.ஆரின் காரைக் காணோம். ‘ஒருவேளை வீட்டுக்கே எம்.ஜி.ஆர். புறப்பட்டு போய்விட்டாரோ?’ என்று குழம்பியபடி நின்ற வாலி யின் சிந்தனையைக் கலைத்தது எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் குரல்.

‘‘என்னண்ணே, இங்கேயே நிக்கிறீங்க. சின்னவர் (எம்.ஜி.ஆர்.) உள்ளேதான் இருக் காரு... வாங்க’’ என்று வாலியின் வயிற்றில் பால் வார்த்தார் பீதாம்பரம்.

உள்ளே சென்ற வாலி, எம்.ஜி.ஆரைப் பார்த்து பவ்யமாக, ‘‘அண்ணே, என்னை மன்னிக்கணும். மனதில் பட்டதைச் சொன்னேன். நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது’’ என்றார். எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடி,

‘நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு’

என்ற திருக்குறளை சொல்லி, ‘‘நீங்கதான் உண்மையான நண்பர். உங்களை எதுக்கு மன் னிக்கணும்? அதே காட்சியை மறுபடி எடுக்கலாம். ராமண்ணாகிட்ட சொல்லுங்க’’ என்றார்.

இங்கே ஒரு விஷயம். நியாயமான கருத்தை சுட்டிக் காட்டி குறை சொன்ன வாலியை, உண்மையான நண்பர் என்று பாராட்டியதோடு, ஒருவரோடு நட்புகொள்வது சிரித்து மகிழ மட்டுமல்ல; தவறை இடித்துரைத்து திருத்துவதற்கும் என்று பொருள்படுகிற அதிகம் புழக்கத்தில் இல்லாத பொருத்தமான குறளையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.

மறுபடி அதே காட்சியை எடுக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், சிறிய மாற்றம். வாலி கூறியபடி பூவை நிறைய பிய்த்து வேகமாக தின்ன வசதியாக நாயகி தலையில் இருக்க வேண்டிய மல்லிகைப் பூ, ரோஜாப் பூவாக மாறியது; அதுவும் எம்.ஜி.ஆர். செலவிலேயே. வாலி பார்த்தபோது, எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறைக்கு முன் வழக்கமாக நின்றிருக்கும் கார் திடீரென காணாமல் போனதன் ரகசியமும் சிறிது நேரத்தில் தெரிய வந்தது. அந்தக் காரில்தான் ஒரு கூடை ரோஜாப்பூ வந்தது.

வாலியின் கருத்துக்கும் மதிப்பளித்து அதே நேரம் காட்சி சிறப்பாக வர, சாதுர்யமாக மல்லிகைப் பூவை ரோஜாப் பூவாக மாற்றி விட்டார் எம்.ஜி.ஆர்.

மீண்டும் அந்தக் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கும் முன், ‘‘அண்ணே நீங்க ரோஜாப் பூவை தின்னா எப்படி இருக்கும் தெரியுமா?’’ எம்.ஜி.ஆரை பார்த்து கேட்டார் வாலி.

‘இதென்ன மறுபடியும்?’ என்று புரியாமல் எல்லோரும் பதைபதைப்புடன் பார்க்க, வாலி சொன்னார்...

‘‘ரோஜாப் பூவே ரோஜாப் பூவை திங்கிற மாதிரி இருக்கும்’’

எம்.ஜி.ஆரின் முகம் ரோஜாவாய் மலர்ந்தது.

- தொடரும்...

‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘தம்பி, நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..’ என்ற பிரபலமான பாடல் இடம்பெறும். பாடலுக்கு முன் இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும் ஒரு புத்தகத்தை பார்த்தபடி ‘பாட்டை எழுதியவர் வாலி’ என்று எம்.ஜி.ஆர். சொல்வார். இது வாலியின் திறமைக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த அங்கீகாரம்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது வாலியை இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியில் நியமித்தார். அதற்கு முன் கவுரவப் பதவியாக இருந்த அதன் பதவிக் காலத்தை மூன்று ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டித்து ஊதியமாக மாதம் ரூ.3,000 வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
Keywords: எம்ஜிஆர். தொடர், எம்.ஜி.ஆர் தொடர், எம்.ஜி.ஆர் வாழ்க்கை, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்ஜிஆர் கதை, மனிதநேயம்

எம்ஜிஆர் 100 | 22 - மதியூகத்தின் மறுபெயர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. படங்களில் பாடல் காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகளில் அமைக்கப்படும் அரங்குகள் பிரம்மாண்டமாக இருக்கும். மக்களின் வரவேற்பையும் பெறும். படத்தில் இடம்பெற வேண்டிய காட்சிகள் தன் மனதில் எப்படி விரிகிறதோ அதை கலை இயக்குநரிடம் எம்.ஜி.ஆர். விவரிப்பார். அதை கலை இயக்குநர்கள் கண்முன் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி எம்.ஜி.ஆர். மனதில் உள்ளதை காட்சியாக கொண்டு வருபவர்களில் முக்கியமானவர் அவரது படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆரின் லட்சியப் படம் மட்டுமல்ல; அவரது ரசிகர்களால் மறக்க முடியாத பிரம்மாண்ட படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அதுவரை தமிழில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து அபார வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வசூல் சாதனை முறி யடிக்கப்படவில்லை. இந்தப் படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையே தனியாக ஒரு புத்தகமாக எழுதலாம். படம் முழுவதுமே பிரம்மாண்டம் என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே நடக்கும் புத்தர் கோயில் சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்.

கதைப்படி, ஜப்பானில் புத்தபிட்சுவின் வீட்டில் அணுகுண்டு ஃபார்முலா ரகசியம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். புத்த பிட்சுவின் வீடே சின்னச் சின்ன புத்தர் உருவங்களாலும் நடுவில் பெரிய புத்தர் சிலையுடனும் புத்த விஹார் போல இருக்கும். அணுகுண்டு ரகசியத்தை மீட்பதற்காக அங்கு எம்.ஜி.ஆர். செல்வார். அதற்கு முன்பே நம்பியார் அங்கு சென்று புத்த பிட்சுவைப் போல மாறு வேடத்தில் இருப்பார். அப்போது, இருவருக்கும் நடக்கும் சண்டை, ரசிகர்களுக்கு விருந்து.

அன்பையும் அகிம்சையையும் வலியுறுத்திய புத்தரின் கோயில் என்பதால் கோயிலுக்குள் நம்பியாரை எம்.ஜி.ஆர். அடிக்க மாட்டார். நம்பியாரின் அடிகளை வாங்கிக் கொண்டே கோயிலை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரு சான்ஸ் கொடேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறும்போது ரசிகர்களின் உற்சாக வெறிக் கூச்சலால் தியேட்டர் அதிரும்.

அந்தக் காட்சியில் புத்தர் கோயிலை கலை இயக்குநர் அங்கமுத்து கண்முன் நிறுத்தியிருப்பார். க்ளைமாக்ஸில் ஸ்கேட்டிங் சண்டைக்காக எம்.ஜி.ஆர். தனது தோட்டத்தில் மாடியிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிக்கான செட்டும் அங்கமுத்துவின் கைவண்ணம்தான்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ அமைப்பதில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணியில் முழு கவனத்துடன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தென்றலாய் காற்றுபட்டது. அதை உணர்ந்தாலும் காரியத்திலேயே கண்ணாக பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார் அங்கமுத்து. சிறிது நேரம் கழித்து வேலை முடிந்ததும் கைதட்டல் ஒலி. திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார். பணியில் தீவிரமாக இருந்த அங்கமுத்துவுக்கு வியர்ப்பதை பார்த்ததும் அவருக்கு காற்று வரும்படி ஃபேனை அவர் பக்கமாக எம்.ஜி.ஆர்.தான் திருப்பி வைத்திருக் கிறார். தொழிலாளர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுபவர் எம்.ஜி.ஆர்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட போது, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர். புதிய கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கும் முன்பே, ஆர்வ மிகுதியால் முதன் முத லாக மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தாமரைப் பூ உருவம் பொறித்த கொடியை ஏற்றினர். மேலும் சில இடங்களிலும் தாமரைப் பூ கொடி ஏற்றப்பட் டது. ஒரு சில இடங்களில் கொடிகளை மாற்றுக் கட்சியினர் கிழிப்பதாகவும் கொடிக்கம்பங்களை வெட்டுவதாகவும் செய்திகள் வெளியாயின.

பின்னர், அதிமுக கட்சி தொடங்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தவுடன் இதுபற்றி அவரிடம் கேட்கப் பட்டது. ‘‘எங்கள் புதிய கட்சியின் கொடியை யாரும் இனிமேல் கிழிக்க மாட்டார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அவர் அவ்வளவு நம்பிக்கையோடும் உறுதியாகவும் கூறியதற்கான காரணம் கட்சிக் கொடி அறிமுகமானபோதுதான் எல்லாருக்கும் தெரிந்தது. அதிமுக கொடியில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் யோசனைப்படி அந்தக் கொடியை வடிவமைத்தவர் கலை இயக்குநர் அங்கமுத்து.

எம்.ஜி.ஆர். நடித்த ‘மீனவ நண்பன்’படத்தில்

‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்...’

பாடல் காட்சியின் படப் பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலில்

‘தனி ஒரு மனிதனுக்கு உண வில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்; என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்’

என்ற வரிகள் இடம்பெறும்.

அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம் பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை. படத்தின் இயக்குநர் தரோ கண்டிப்பாக பாரதியார் படம் வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம் வாங்கி வரலாம், அதுவரை வேறு காட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்தபோது, அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச் சுக்கிட்டு நெய்க்கு அலையறே. உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார் ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. ‘மீனவ நண்பன்’ படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அங்கமுத்து வரைந்த அந்த பாரதியார் படம்தான் இடம் பெற்றிருக்கும்.

ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன் னார். ‘‘தமிழன் எங்கே இருக்கிறானோ, அங்கே நிச்சயம் பாரதியார் இருப்பார். இந்த சின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே?’’

மதியூகத்தின் மறுபெயர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

- தொடரும்...

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மேல் சபை உறுப்பினராக அங்கமுத்து நியமிக்கப்பட்டார். பின்னர், குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் ஆனார் அங்கமுத்து. அந்தப் பதவியில் அவரது பணிகளை பாராட்டி ஓராண்டே நிர்ணயிக்கப்பட்டிருந்த குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை மூன்று ஆண்டுகளாக நீட்டித்தார் எம்.ஜி.ஆர்.

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
Keywords: எம்ஜிஆர். தொடர், எம்.ஜி.ஆர் தொடர், எம்.ஜி.ஆர் வாழ்க்கை, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்ஜிஆர் கதை, மனிதநேயம்

சொல் வேந்தர் சுகி சிவம்

சொல் வேந்தர் சுகி சிவம்

ஜாலியாகக் கஷ்டப்படுங்கள்!

நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் மகன் பி.காம். படித்துக் கொண்டிருக்கும் மாணவன்தான். ""மேலே என்ன படிக்கப் போகிறாய்? சிஏ. படிக்கும் எண்ணம் உண்டா?'' என்றேன். "இல்லை' என்று ஒரு வரி பதிலை உதிர்த்துவிட்டு ரிமோட் கண்ட்ரோலை எடுத்து டி.வி.யில் சேனல் விளையாட்டைத் துவக்கிவிட்டான். நான் விடுவதாக இல்லை. ""ஏன்... சி.ஏ. படிக்கலாமே... என்ன கஷ்டம்?'' என்றேன். ""சி.ஏ. பாஸ் பண்ணனும்னா நிறைய நேரம் படிக்கணுமாம். பதினெட்டு மணி நேரம் படிக்கணும்னு ஒரு ஆடிட்டர் சொன்னாரு. நான் ஆடிட்டேன். பதினெட்டு மணி நேரம் யார் படிக்கிறது? போரு... ரொம்ப கஷ்டம்'' என்றான். படிக்கும் வயதில் படிக்கக் கஷ்டப்படுபவர்கள் பிற்காலத்தில் ரொம்பவும் கஷ்டப்படுவார்கள் என்பதை அவனுக்குப் புரியவைக்க நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.

இன்னொரு மாணவர் கதை.

அவர் வீட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவில் ஒரு கல்லூரி. அதற்காக மோட்டார்பைக் வாங்கிக் கொடுத்துள்ளார் அசட்டு அப்பா. ஆனால் மாணவர் மோட்டார் பைக்கில் கிண்டி ஸ்டேஷனுக்கு வருவார். அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறி மாம்பலம் வருவார். அங்கு தி. நகர் பஸ் டெர்மினஸில் தன் பெண் நண்பியுடன் பஸ்ஸில் அமர்ந்து கலகலப்பாய்க் கலந்துரையாடியபடி கிண்டி தாண்டி வந்து கல்லூரியில் இறங்குவார். மாலை மறுபடியும் அதேபோல் தி. நகரில் அவரைப் பாதுகாப்பாக விட்டுவிட்டு ரயில் பிடித்து கிண்டி வந்து பைக்குடன் வீடு திரும்ப மணி ஏழரை ஆகிவிடும். காதல் சரிதான். அதற்காகக் காலத்தைத் தொலைக்கிறார். நிகழ்காலத்தை மட்டுமல்ல, தன் எதிர்காலத்தையும் தொலைக்கிறார். இது இந்தியாவின் போதாத காலம். இது நியாயமா? கஷ்டப்பட வேண்டிய இளம் பருவத்தில் ஜாலியாக இருக்கவே அவர் ஆசைப்படுகிறார்.

ஆசை ஆசையாய்த் தன் மகளை வளர்த்த அம்மா ஒருத்திக்குத் திடீர் என்று பி.பி., சர்க்கரை... எல்லாக் கஷ்டமும். காரணம் என்ன தெரியுமா? ரொம்ப சிறிது. மகளை எப்படியாவது எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க வேண்டும் என்பது அன்னையின் ஆசை. மகளோ சிரமப்பட்டு யார் படிப்பது என்ற ஒரே காரணத்துக்காக மறுத்துவிட்டாள். தாயின் கனவு அறுந்தது. பி.பி. பிறந்தது. படிக்க வேண்டிய காலத்தில் படிப்பதற்குக் கஷ்டப்பட்டால் எதிர்காலம் என்னவாகும்? யோசிக்க வேண்டாமா?

ஈரோட்டில் சி.கே.கே. அறக்கட்டளை என்கிற தரமான இலக்கிய அமைப்பு நடத்திய விழாவில் நண்பர் லேனா தமிழ்வாணன் ஒரு நல்ல கருத்தைச் சொன்னார். காசு கொடுத்து அவர் வாங்கிய புத்தகத்தில் ஒரு வரிக்கு - அந்தப் புத்தகத்தின் விலை முழுவதும் கொடுக்கலாம் என்றார். அது என்ன வரி? "கஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள்' என்பதே.

ஆம். வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்பட்டால் என்ன?

அது மட்டுமல்ல. இனம் புரியாத எதிர்பாராத கஷ்டங்கள் வராமல் இருக்கத் திட்டமிட்ட கஷ்டங்கள் படலாமே. காலை நான்கு மணிக்கே எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்கப் படுக்கையை விட்டு நான்கு மணிக்கே எழலாமே. உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்ற ஒழுங்கான கஷ்டம் படலாமே. பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்கச் சமையல் என்கிற கஷ்டம் படலாமே. ஒழுங்கற்ற எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க, திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.

எனவே கஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள் என்ற வாக்கியம் ஒரு வாழ்க்கைச் சூத்திரம்.

பிள்ளைப் பேறுகூட ஒரு கஷ்டம்தான். தாய் அதைப் படாமல் இருந்தால் நாம் வந்தே இருக்க முடியாது. ஆனால் இளைய தலமுறை ஜாலியாக இருக்க விரும்புகிறது. கஷ்டமே இருக்கக் கூடாது என்று கனவு காணுகிறது.

ஆப்ரஹாம் லிங்கன் சின்ன வயதில் கஷ்டப்பட்டார். ஜனாதிபதியாக உயர்ந்து நின்றார். வயலில் கஷ்டப்பட உழவன் தயாராக இல்லை என்றால் எவனுக்காவது சோறு கிடைக்குமா?

"நீ சேற்றில் கால்வைப்பதால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்கிறோம்' என்று உழவனுக்குப் புதுக்கவிஞன் நன்றி கூறுகிறான். உழவு என்ற சொல்லே சிரமத்தைப் புலப்படுத்தும் சொல்தான்.

பள்ளிக்கு நடக்க, புத்தகம் திறக்க, பாடம் படிக்க, துணிமணிகளை அடுக்க, அம்மா அப்பாவுக்கு உதவியாக உழைக்க இளம்பிள்ளைகள் மறுதலிக்கிறார்கள். இது சோம்பல். மனநோய். நாளைய பெரும் துயருக்கான வித்து. சோக கீதத்தின் பல்லவி. வெற்றியாளனை விளக்கிய தமிழ்மறை, "மெய்வருத்தம் பாரார், கண்துஞ்சார்' என்று உழைப்பைத்தான் உயர்த்திப் பேசியது. இன்று கொஞ்சமாகக் கஷ்டப்படாதவர்கள் நாளை நிறையவே கஷ்டப்படப் போகிறார்கள் என்று எச்சரிக்கிறேன்.

சின்ன வண்டு ஒன்று கூட்டில் இருந்து வெளியேறும் போது அவஸ்தையுடன்தான் பயணத்தை ஆரம்பிக்கிறது. இதை மாணவருக்கு உணர்த்த ஆசிரியர் ஒரு வழி செய்தார். கூட்டில் இருந்து அது வெளியேறும் துயரத்தைப் பார்க்கட்டும் என்று மாணவர் மத்தியில் விட்டுவிட்டு வெளியே போனார். அது கூட்டில் இருந்து வரும் வேதனையைக் கண்ட மாணவன் அதற்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு அது வெளியேறும் ஓட்டையைப் பெரிதுபடுத்தினான். அது சுலபமாக வெளி வந்துவிட்டது. மாணவன் மகிழ்ந்தான். ஆனால் வண்டு மகிழவில்லை.

வெளியே வந்தும் அதனால் பறக்க முடியவில்லை. ஏன்..? அதன் சிறகுகளை அசைக்கக்கூட முடியவில்லை. செய்தி அறிந்த ஆசிரியர் காரணம் கண்டுபிடித்தார். கூட்டில் இருந்து சிறிய துளைவழி வெளியேறச் சிரமப்படும்போதுதான் அது தன் சிறகுகளை அசைத்து அசைத்துப் பழகுகிறது. அதற்கு வாய்ப்பே இல்லாததால் இறகுகளை அசைக்க அதற்குத் தெரியவே இல்லை.

சிரமங்கள்தான் நம்மைப் பலப்படுத்துகின்றன. கஷ்டங்கள்தான் நம்மை வலுப்படுத்துகின்றன. துயரங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

எழுத படிக்க தெரியாத பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை கழகங்கள்

எழுத படிக்க தெரியாத பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை கழகங்கள்

தினமலர்

தமிழக பல்கலைகளில், தகுதியற்ற பட்டங்கள் வழங்கி, எழுத, படிக்க தெரியாத பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். தகுதியற்றவர்கள், துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் ஆகின்றனர். இதற்கு, ஊழல் மலிந்த உயர்கல்வித்துறையே காரணம்.

பல்கலைகளும், கல்லுாரிகளும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளின் படியே செயல்பட்டு, பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக,

யு.ஜி.சி., விதிகளை துச்சம் என துாக்கி வீசி விட்டு, பல்கலைகளும், கல்லுாரிகளும் செயல்படுகின்றன.

பேராசிரியரில் துவங்கி, துணைவேந்தர் நியமனம் வரை, தகுதியற்றவர்களே பெரும்பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியராக, 10 ஆண்டு அனுபவம் பெற்றவரையே, துணைவேந்தராக்க வேண்டும். ஆனால், இணை பேராசிரியரும், அனுபவம் இல்லாத பேராசிரியர் பலரும் துணைவேந்தராகி உள்ளனர். இதற்கு அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுமே காரணம்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரிய மான, டி.ஆர்.பி., மூலம், 1,000 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில், உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்கவில்லை. யு.ஜி.சி.,யின், 2009 மற்றும், 2010 நெறிமுறைகளை, தமிழக பல்கலைகளில், ஆறு ஆண்டுகளாகியும் அமல்படுத்தவில்லை.

அதனால், பல பல்கலைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி நிறுத்தப்பட்டு, பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், நிதி நெருக்கடி உள்ளது. மதுரை தியாகராஜா கல்லுாரியில் மட்டும், 20 பேருக்கு பல மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை.

மதுரை காமராஜர் பல்கலையில், எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு, கடலியல் படித்தவரும், இளைஞர் நலன் துறைக்கு, நிர்வாகவியல் படித்தவர்களும் பேராசிரியராகியுள்ளனர். 'திருவள்ளூர் பல்கலையில், பெரும்பாலான பேராசிரியர்களுக்கு தகுதியே இல்லை' என, நீதிமன்றத்தில், யு.ஜி.சி., கூறியுள்ளது.

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் பேராசிரியர்களை நியமிக்கவும், முறைகேடுகள் நடக்கின்றன. முறைகேட்டுக்கு துணை போகாத கல்லுாரிகளுக்கு, ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்க வில்லை. அதனால், 4,000 பணியிடங்களில் ஆசிரியர்கள் இல்லை. பல பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாமல், பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

பேராசிரியர் நியமனத்திற்கு போட்டித் தேர்வு வைத்து தகுதி பார்க்க வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யில் மறைமுக சிபாரிசுப்படி நியமனம் நடந்துள்ளதால், பல கல்லுாரி ஆசிரியர்கள் பள்ளிப் படிப்பை கூட கற்பிக்க முடியாதவர்களாக உள்ளனர்.பல்கலைகள், 'ரெகுலர்' வகுப்புகளையும், தொலைதுார வகுப்புகளையும் நடத்த, பல விதிமுறைகள் உள்ளன. 'தொலைதுார கல்வியில் தனியார் ஏஜன்சிகள் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது' என, கட்டுப்பாடு உள்ளது.

ஆனால், பல பல்கலைகள் பெட்டிக் கடை போல், தனியார் ஏஜன்சிகள் மூலம், வகுப்புகளை நடத்துகின்றன. பல்கலை மற்றும் கல்லுாரிகளில் தங்கள் விருப்பத்துக்கு, கல்வி கட்டணத்தை உயர்த்துகின்றனர்.

உதாரணமாக, கோவையில் உள்ள பாரதியார் பல்கலை, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனம் மூலம், 'ரெகுலர்' கல்லுாரியை நடத்துகிறது. ஆனால், தொலைதுார கல்வி போல், வார விடுமுறை நாட்களில் தான் பாடம் நடத்துகின்றனர். இதுபோன்ற கல்லுாரிகளின் பட்டங்கள் செல்லாது என, மாணவர்களுக்கு தெரியாது. அவர்கள் அரசு பணிகளில் சேரும் போதோ, அல்லது சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு செய்யும் போதோ தான், உண்மை தெரியும்.

தரமான பேராசிரியர்கள் மூலம் கற்பித்து பட்டம் வழங்குவதற்கு பதில், மாநிலத்தின் உயர்கல்வி சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில், உயர்கல்வி செயல்படுவதால், எழுத, படிக்க

தெரியாத பட்டதாரிகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளனர். ஆனால், இவற்றின் பெயரில் கல்லுாரி கல்வி இயக்ககம் மூலம், பண ஒதுக்கீடு, 'பில்' மட்டும், 'பாஸ்' ஆகுது. பி.எட்., தனியார் கல்லுாரிகளில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு பெறவும், மாணவர் சேர்க்கை அனுமதி பெறவும், பல லட்சம் ரூபாய் வாங்கியதாக, கல்லுாரி முதல்வர்களே சமீபத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இப்படி, ஆயிரக்கணக்கில் முறைகேடுகளும், விதிமீறல்களும் உள்ளதால், லஞ்ச ஒழிப்பு துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், சுதந்திரமான விசாரணை நடத்தி, விதி மீறியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேராசிரியர் ஏ.ஆர்.நாகராஜன்

பொதுச் செயலர், 'நெட், ஸ்லெட்' அசோசியேஷன்

மாற்றம் தேடும் நம் கல்விமுறை

மாற்றம் தேடும் நம் கல்விமுறை

By ப. ஜஸ்டின் ஆன்றணி

First Published : 17 March 2016 01:19 AM IST
மனிதனை சிறந்த வழியை நோக்கி மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு என்பதை அகிலமே அறியும். இங்ஙனம் மாற்றத்தை உருவாக்கும் கல்வி முறையிலேயே மாற்றம் வரவேண்டும் என்னும் எண்ணம் உதிக்கும்போது விழிகள் ஆச்சரியத்தால் விரிகின்றன.
 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியுற்ற மாணவன் தற்கொலை, வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் சாவு, காதல் தோல்வியால் இளம்பெண் மரணம் போன்ற செய்திகளை அறியும்போது யாரை நிந்திப்பது? இவர்களையா, பெற்றோரையா, சமூகச் சூழலையா அல்லது நம்பிக்கையை வளர்க்க உதவாத இன்றைய கல்வி முறையையா?
 ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையான இந்த நம்பிக்கை என்னும் விதை விதைக்கப்பட்டால் வாழ்வு எனும் மரம் செழித்து வளரும் என்பதில் ஐயமில்லை.
 நம்பிக்கையை விதைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியருக்குப் பெற்றோராகத் திகழ வேண்டியவர்கள் ஆசிரியர்களே. வகுப்பறையில் பாடத்தை மட்டும் அன்றாடம் படிக்காமல், உலக விஷயங்களையும் மாணவன் புரிந்து கொள்வதை உறுதிப்படுத்துதல் நன்று.
 உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அவனி அறிந்ததே. ஆனால், பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று, பின்னர் தேர்ச்சி பெற்ற இந்த சச்சின், தனது சாதனைகளால் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அலங்கரிக்கப்படுகிறார்.
 தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் இன்று எத்தனை பள்ளிக்கூடங்களில் உள்ளன? எல்லா பள்ளிகளிலும் தரமான நூல்நிலையங்கள் உள்ளனவா? அப்படியிருந்தாலும் அவை மாணவரின் பயன்பாட்டுக்கு உள்ளனவா அல்லது பள்ளிக்கூட அனுமதிக்கான விதிகளில் இடம்பெறுவதற்கான ஓர்-அறை நூல்நிலையமா?
 பேருந்தில் நீண்டதூர பயணம் செய்துகொண்டிருந்தபோது அருகில் வந்தமர்ந்தார் நாகரீக உடையணிந்த ஒரு மாணவர். பள்ளிக்கூடத்தில் பாடங்கள் மட்டுமல்லாது என்னென்ன பயிற்றுவிக்கப்படுகிறதென கேட்டேன். தலையைச் சொறிந்தார். அவரிடம் 2 ஆங்கில தினசரிகளின் பெயர்களைச் சொல் என்றேன். முழித்தார். 2 தமிழ் தினசரிகளின் பெயர்களையாவது சொல்லச்சொன்னேன். அப்போதும் முழித்தார்.
 பள்ளியில் நூல்நிலையம் உள்ளதா என வினவினேன். நூல்நிலையம் உண்டு, ஆனால் அது எப்போதுமே பூட்டித்தானிருக்கும் என்றார். அப்போது புரிந்தது, தவறு மாணவர்களிடமில்லை. எய்தவனிருக்க அம்பை நோவானேன்? இன்று ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள நூல்நிலையங்கள் மாணவர்களுக்கு உதவுகின்றனவா என்பதை பள்ளி நிர்வாகம் சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
 அடுத்ததாக, ஆசிரியர்கள் பழகும் விதமும் மாணவ, மாணவியரின் ஆளுமையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இதுவும் கவனிக்கப்பட வேண்டும்.
 "போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீக்கம்' -இப்படி ஒரு செய்தி. ஓர் ஆசிரியரே மது அருந்திவிட்டு பாடம் நடத்த வகுப்பறைக்கு வருகிறாரென்றால், மாணவரிடையே இவரது மதிப்பு என்னவாக இருக்கும்? இவர் நடத்தும் பாடம் எத்தகைய தரத்துடன் காணப்படும்? எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
 "ஆசிரியரைக் கத்தியால் குத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவன்'.- இப்படியும் ஒரு செய்தி வந்தது. மாணவனது சிந்தனையும் சக்தியும் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம்; சந்தேகமே இல்லை.
 ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 அல்லது 15 வயது மாணவன் தாய்க்கு சமமாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியையே கத்தியால் குத்துகிறான் என்றால், நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் விதம், சக நண்பர்கள், சமூகம் மற்றும் கல்வி நிலையங்களின் கலாசார நிலை ஆகிய அனைத்துமே காரணிகளாகின்றன. மாணவ சமூகத்துக்கு ஆசிரிய, ஆசிரியைகளின் மீதுள்ள நம்பிக்கையும், ஆசிரியர்களுக்கு மாணவர் மீதுள்ள நம்பிக்கையும் கல்வி வளர்ச்சியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துபவை.
 "மாநில அறிவியல் கண்காட்சி. மார்த்தாண்டன்துறை பள்ளி மாணவி முதலிடம் (11.1.2013)'. இச்செய்தியை அறிந்தபோது, இந்த மாணவியின் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் எப்படிப்பட்ட உந்து சக்தியாக திகழ்ந்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.
 தரமான ஆசிரியர்களின் தகுதியான மாணவி என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேண்டுமோ? எங்கெங்கெல்லாம் தகுதியும் திறமையும் மேலோங்கி நிற்கின்றனவோ அங்கெல்லாம் சிறந்த ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளும் உருவாகிறார்கள். பிறந்தாயிற்று, வாழ்வோம் என வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், இப்படித்தான் வாழ வேண்டும் என்று சிறப்புடன் வாழ்ந்து காட்டுகிற ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர், மாணவ, மாணவியர் பாராட்டத் தகுந்தவர்களே. இவர்களோடு, நன்றாக செயல்படும் நிர்வாகம் மூலம் நம் கல்விமுறை சிறக்கும்.
 உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்வது, தன்னம்பிக்கையை வளர்க்கும் ஆளுமைப் பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட ஆற்றல் தரும் கல்வி மூலம் தற்கொலைகளையும், சாவுகளையும், மர்ம மரணங்களையும் தடுக்கும் மாற்றம் பிறக்கும்.

High Court takes a year to reply to RTI application


High Court takes a year to reply to RTI application

HINDU

An applicant under the Right to Information (RTI) Act, 2005 here is shocked over the Registrar (Administration)-cum-Public Information Officer of the Madras High Court having taken nearly a year to reject an application made by him though the legislation imposes a statutory duty to reply within 30 days of receipt of the application.

M. Sivasankar, an advocate, had made the application on February 14 last year wanting to know the status of a complaint of corruption lodged by one K. Sakrapani of Madurai against a judicial officer in Erode district on September 10, 2014.

Replying to it on February 17 this year, PIO V. Devanathan conceded to have received the application on February 19 last.

Nevertheless, without giving any reason for taking so long, the PIO stated: “Since the information sought is in respect of a complaint made against the judicial officer and since you are a third party to the said complaint, the information could not be furnished.”

The reply also does not provide details of the appellate authority, to whom an appeal could be preferred, as required under Section 8(ii) and (iii) of the Act.

Wondering how could the PIO of a High Court give such a reply, the applicant feared that it might set a bad precedent to the PIOs of government departments. “At the first place, the information sought by me may not fall under ‘third party information’ since I did not seek personal details of the judicial officer such as his blood group or Income Tax returns. I only wanted to know status of a corruption complaint against him.

“Even if the PIO had concluded that the information sought was ‘third party information,’ then he should have rejected my request within 30 days of receiving the application or followed the procedures, prescribed under Section 11 of the Act, of issuing a notice to the judicial officer concerned and wanting to know if he had any objection to disclosing the information,” the applicant said.

He pointed out that the Act stipulated a specific time limit for every act done under it and, therefore, there could be no justification for the long delay of one year taken by the PIO to reject the RTI application.

High Court ruling on compassionate employment


17.3.2016

HINDU

The Madras High Court Bench here has directed Tamil Nadu Water Supply and Drainage (TWAD) Board to appoint on compassionate ground a person who was a minor at the time of his father’s death in harness in 2007 but still made an application for a job through his mother in order to comply with the condition of staking a claim for the benefit within three years of death.

Allowing a writ petition filed by M. Sugadev of Dindigul district, Justice Pushpa Sathyanarayana held that TWAD Board should not have “mechanically” rejected a second application made by the writ petitioner in 2014, after attaining majority, on the ground that compassionate employment could not be granted to a person below the age of 18 years as per a Government Order issued in 2010.

The judge quashed an order passed by the Managing Director of TWAD Board on June 15, 2015 rejecting the petitioner’s plea for compassionate employment and directed the official to consider the application within four weeks and “provide an appropriate appointment” because already eight years had passed since the demise of his father A. Muthusamy who served as an Assistant Executive Engineer.

She agreed with the petitioner’s counsel, R. Karunanithi, that the TWAD Board Managing Director ought not to have cited the petitioner’s age in 2007 as a reason for rejecting the second application made in 2014.

Stating that the petitioner was born in March 1993, the counsel said that the claimant was 15 years old at the time of his father’s death and 21 years old while making the second application.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...