Thursday, October 20, 2016

Conviction of man for murdering woman set aside


The Madras High Court Bench here has set aside the conviction and life sentence imposed on an individual hailing from Kundrakudi in Sivaganga district for hacking a woman to death since she resisted his attempt to sexually assault her in the village.

Allowing a criminal appeal preferred by M. Silamban, Justices M.V. Muralidaran and B. Gokuldas set aside the conviction and sentences imposed by a sessions court on April 26, 2013 on the ground that the latter had not exhaustively analysed materials available on record to arrive at a proper and definite conclusion.

The judges said the trial court had convicted the appellant not only under Section 302 (murder) but also under Section 376 (rape) of the Indian Penal Code, and punished him to life imprisonment and 10 years of rigorous imprisonment for the crimes respectively, though it was nobody’s case that the alleged offender had raped the woman before murdering her.


They also said the evidence adduced by the victim’s mother did not inspire the confidence of the court since it contradicted with the evidence adduced by other witnesses.

“Also the trial court has given a shallow finding that if the murder was for gain, the jewels worn by the deceased would have been removed from her.

“In the absence of any independent discussion in the light of oral or documentary evidence that the gold jewels worn by the deceased have not been removed or the same would have been entrusted to her family members after her death, the said finding has to be simply brushed aside,” the Division Bench said.

IRCTC offers festival season package


Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has launched a special Bharat Darshan tour package for the forthcoming Deepavali season, giving pilgrims and tourists an opportunity to visit sites of religious importance.

The ‘Diwali Ganga Snan Special’ special tourist train will leave Madurai on October 25 and cover Varanasi, Gaya, Mathura, Agra, New Delhi and Allahabad. The train from Madurai will travel via Erode, Salem, Chennai and Vijayawada.

According to IRCTC officials, the cost of the package is Rs. 10,035 per passenger for sleeper class (budget) and Rs. 13,940 for 3rd AC. The package includes accommodation in non-AC halls and dormitories, non-AC road transfers from the spots to the rooms, all-inclusive south Indian vegetarian food and a tour escort and security for the compartments. The itinerary includes night halts at Varanasi, Gaya, Agra and New Delhi. The 12-day tour will conclude on November 5. For details, call: 044-6459 4959 or 90031 40681 and 90031 40673.




The train will leave Madurai on October 25 and cover Gaya Varanasi, Agra, Delhi Allahabad and Mathura

HC for adding two more coaches to train


THE HINDU

: The Madras High Court Bench here has asked counsel for Southern Railways to persuade the authorities concerned to add two more unreserved coaches for women and the physically challenged to Pandian Expess, a superfast overnight express train operated between Madurai and Chennai, if there were no technical hurdles in doing so.

A Division Bench of Justices S. Nagamuthu and M.V. Muralidaran directed the advocate to ascertain the views of the railway authorities and inform the court by Friday as to whether there were any issues such as insufficiency of the length of the platforms or any other technical problem in attaching two more coaches to the existing strength of 22 coaches.

The direction was issued during the hearing of a public interest litigation filed by R. Rajaselvam of Dindigul claiming that the train was being operated with 24 coaches until August.

He said that the strength was reduced by two coaches after the introduction of Linke Hofmann Busch (LHB) coaches, designed on German technology, for the Express train.

With this, the practice of allotting unreserved general coaches for the exclusive use of women and physically challenged passengers had been done away with, the petitioner said and sought a direction to restore those two coaches.

Railways’ objection


Opposing the petitioner’s plea, the counsel for Southern Railways contended that no one had the right to file a public interest litigation petition and seek a direction to either add or reduce the number of compartments in a train since it was the prerogative of the railways to do so considering various factors such as passenger demand and technical feasibility.

He also cited a Supreme Court judgement to substantiate his argument that no such direction could be issued by the High Court on a public interest litigation petition.

After perusing the judgement, Mr. Justice Nagamuthu told the counsel that it was an order passed in a different context and it had nothing to do with the facts of the present case.

“We are only concerned with the technical hurdles, if any, in annexing two more coaches to the train. If there are no technical problems, then we can always consider issuing a direction,” the judge said.
நன்றி குங்குமம் டாக்டர்

எனக்கு பொண்ணுங்களையே பிடிக்காது!


ஏன் இந்த எண்ணம்?

‘எனக்கு பொண்ணுங்களையே பிடிக்காது’ திரைப்பட வசனம் மூலமாக நமக்கு பரிச்சயமான வார்த்தைகள் இவை. சிலபல திரைப்படங்கள் போலியான சித்தரிப்புகள் வாயிலாக தவறான சித்திரங்களை உருவாக்கியிருக்கின்றன. பெண்களைப் பற்றிய சித்தரிப்புகள் அவற்றில் முக்கியமானவை. பெண்
களைக் கிண்டலடித்தும் திட்டியும் பாடும் டாஸ்மாக் பாடல்கள் ஒரு கலாசாரமாகவே திரைப்படங்களில் நீடித்து வருகிறது. அது ஒரு புறமென்றால், நம் குடும்பம் மற்றும் சமூக புறச்சூழல்கள் காரணமாக ஒருவருக்கு பெண் பாலினத்தையே பிடிக்காமல் போகலாம் என்கிறது உளவியல் மருத்துவம். இப்பிரச்னையை
‘I hate girl syndrome’ என்று குறிப்பிடுகின்றனர். எப்படியான சூழல்கள் ஒருவரை இப்பிரச்னைக்கு ஆட்படுத்துகின்றன? உளவியல் மருத்துவர் ராமனிடம் கேட்டோம்...

‘‘நமது குடும்பச் சூழலைப் பொறுத்துதான் நமது குணமும் ஆளுமையும் தீர்மானிக்கப்படுகிறது. எப்படிப்பட்ட சூழலில் வளர்கிறோமோ, அச்சூழல் நமது குணநலன்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்த பெண்களின் வடிவாக தன் தாயைப் பார்க்கிறான் ஆண். தன் தாயின் வாயிலாகவே பெண் உலகத்தைத் தெரிந்து கொள்கிறான். ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையோ, தன் தந்தை தாயிடம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தே முடிவு செய்கிறான்.

தாய்தந்தை உறவில் சிக்கல் இருந்தாலோ, தாயின் மன வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் நிலை சிறுவயதில் ஏற்பட்டாலோ, குடும்பச் சூழ்நிலையில் தன் தந்தை தாயை மோசமாக நடத்தும் விதம், பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் அனுபவம், சமூகத்தில் உள்ள பெண்களைப் பற்றிய பிம்பம் இவை அனைத்தும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்மறையான எண்ணங்களுக்குள் (Ambivalent thoughts) இட்டுச்செல்லும். குழந்தைகளை வளர்க்கிற பொறுப்பை பெரும்பாலும் பெண்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். அம்மா குழந்தைகளைக் கண்டிப்பதாக அளவுக்கு அதிக வன்முறையைச் செலுத்துகிறார் என்றாலும், பள்ளியில் ஆசிரியை வன்முறையைக் கையாள்வதும் பெண்கள் மீதான பயத்தை ஏற்படுத்தலாம்.

சிறு வயதிலிருந்து தான் பார்க்கிற எல்லா பெண்களும் ஓர் ஆணின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்களாகவே இருப்பார்கள் எனில், பெண் பாலினத்தின் மீதான அச்சமும் சந்தேகமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்துப் பெண்களையும் கேள்வியுடனும் சந்தேகத்துடனுமே அவர்கள் அணுகலாம். இப்படியான கருத்துக்குள் அவர்கள் சென்று விட்டால், அதிலிருந்து விடுபட வாழ்வு அனுபவம் தேவை. தான் உருவகப்படுத்தியிருக்கும் பெண் மீதான பிம்பம் பொய்யானது என்பதை உணர்த்தும் படியாக ஒரு பெண்ணுடனான நட்பு தேவைப்படும். அந்த நட்பிலும் சரியான புரிதல் ஏற்படாமல், பெண்கள் எல்லோருமே நமது பிரச்னை என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் என்றால், அவர்களுக்கு உளவியல் மருத்துவ உதவி அவசியம்.

கவுன்சலிங் மூலம் இப்பிரச்னையை குணப்படுத்தலாம். இப்பிரச்னை உள்ளவர்களுக்கு பெண்களுடனான உறவு சிக்கல் நிறைந்ததாக இருக்கக்கூடும். நண்பர்களுடன் ஆன நெருக்கம், திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை கையாளும் திறன் பிறரைக் காட்டிலும் குறைந்தே காணப்படும் அவர்களது விருப்பத்தை மீறியும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் தன் துணையின் மீது வன்முறையைக் கையாள்வார்கள்.

ஏன் இந்த சிக்கல்?

கூட்டுக்குடும்ப அமைப்பு முறையில் இது போன்ற பிரச்னைகள் இருந்ததில்லை. குடும்பத்தை வழிநடத்துவதற்கு அனுபவத்தில் முதிர்ந்த பெரியவர்கள் இருந்தார்கள். உறவின் மீதான புரிதலை அவர்கள் ஏற்படுத்தினார்கள். இதன் வாயிலாக உறவுகளுக்குள்ளான அன்பும் பலப்பட்டிருந்தது. இன்றைக்கோ பொருள் மட்டுமே முதன்மையானதாக மாறிவிட்ட நமது வாழ்வியல் சூழல் உறவுகளுக்குள் மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விடுகின்றன. நிறைய தற்கொலைகளுக்கும் இதுதான் காரணம். நகரமயமாதலின் காரணமாக கிராமிய வாழ்வை நாம் இழந்து விட்டோம். அது சார்ந்த கூட்டுக்குடும்ப அமைப்பு முறை பல ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுத்தது. எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நாமும் தொலைந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைக்கு திருமணம் என்கிற உறவின் மீதான புரிதலே தவறாக இருக்கிறது.

திருமணம் என்றாலே அது ஒரு கமிட்மென்ட் என்றாகி விட்டது. பொருளாதாரத்தில் தற்சார்பை அடைந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சிலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கின்றனர். ஆண்பெண் இருபாலினருமே திருமணம் என்பதை தங்களது சுதந்திரத்தைப் பறிக்கும் நிகழ்வாகப் பார்க்கிறார்கள். பாரம்பரிய மதிப்பீடுகளை நாம் இழந்து நமது கலாசாரத்திலிருந்து அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான் இது.

ஆண் பாலினத்தின் மீது பெண்களுக்கும் வெறுப்பு வருமா?

பெண்களுக்கு ஆண்கள் மீதான நம்பிக்கை, எதிர்பார்ப்பு இவற்றை கற்றுக் கொடுப்பதே சமூகம் மற்றும் குடும்ப சூழல்தான். முன் மாதிரியான தந்தை, அண்ணன் அல்லது தம்பி, ஆண் நண்பர்களின் ஆதரவு மற்றும் அணைப்பு பெண்களிடம் ஆணைப் பற்றிய நல்ல எண்ணங்களை கொடுக்கும். அதுவே, இளம் பருவத்தில் ஆணாதிக்கத்தின் விளைவால் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்படுவோர் அல்லது பாதிக்கப்படும் தன் தாயின் நிலையை காணும் போதும், சமூகத்தில் உள்ள ஆண்களை பற்றிய எண்ணங்களை தவறாகப் புரிந்து கொள்ளும் போதும், பெண்ணும் தன் எதிர் பாலினத்தை வெறுக்க வாய்ப்புண்டு.

தீர்வு?

தனி மனித ஒழுக்கம், குழந்தையை வளர்ப்பது தொடங்கி இளம் வயதில் அவர்களின் பிரச்னைகளை களைவதில் பெற்றோரின் பங்களிப்பு, சமூகம் சார்ந்த பொறுப்பு என மூன்று நிலைகளில் ஏற்படும் மாற்றமே தீர்வாக இருக்க முடியும். குடும்பம் மற்றும் சமூக சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் தீர்வாக இருக்க முடியுமோ தவிர, மருந்து, மாத்திரைகளால் இதனைக் களைய முடியாது. கல்வி முறையிலிருந்தே இம்மாற்றத்துக்கான தொடக்கத்தை உருவாக்க வேண்டும். கல்விக்கூடங்களில் பாலின சமத்துவம் குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட்டு அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். Value education class என்று சொல்லக்கூடிய மதிப்பீடுகள் சார்ந்த பயிற்சி வகுப்புகளைக் கொண்டு வரலாம்.

Life skill education பள்ளியில் கொண்டு வரப்பட வேண்டும். கல்வி முறையில் இந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தினால் 18 வயதில் தீர்மானிக்கப்படும் ஒருவரது ஆளுமை வெகு சிறப்பானதாக இருக்கும். குழந்தைகள் ஆரோக்கியமான சூழலில் வளர்வதற்கும் அவர்களது குணநலன் மற்றும் ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் உவப்பான சூழல் பள்ளியில்தான் இருக்கிறது. குடும்ப அளவில் பெற்றோரும் பள்ளி அளவில் ஆசிரியர்களும் முறையான புரிதலோடு குழந்தைகளை அணுகுவதும், அவர்களுக்கு உறவு குறித்த பார்வையை ஏற்படுத்துவதும் அவசியம். பொருள் தேவையை மையப்படுத்திய குடும்ப அமைப்பிலும், மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையிலும் இது சாத்தியமா எனத் தெரியவில்லை’’ என்கிறார் ராமன்.

கி.ச.திலீபன்
நன்றி குங்குமம் டாக்டர்

அவசரம் அவசியம்

நடராஜா சர்வீஸ் ப்ளீஸ்!


தொடர்ந்து பல மணிநேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய சிக்கல்கள் பற்றி சில ஆண்டுகளாக மிக அதிகமாகவே பேசிக்கொண்டிருக்கிறோம். உட்கார்ந்த இடத்திலேயே நீண்ட நேரம் வேலை செய்வதே, பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு மூல
காரணம் என்று கேள்விப்படுகிறோம்... அதற்கான மாற்று வழிகளாக அலுவலகத்திலேயே 1 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடப்பது, லிஃப்ட், எஸ்கலேட்டர்களை பயன்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறுவது, அலுவலகத்திலேயே மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சிகள் என ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால்...

உடல் உழைப்பில்லாதவர்களால், சுகாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பாக ஆண்டுதோறும் உலக பொருளாதாரத்தில் 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாகக் கணித்துள்ளனர். இவர்களின் உடல் உழைப்பின்மையால் ஏற்படும் நோய்க்கான செலவினங்கள் அரசாங்கத்துக்கு சுமையாகவும் மாறியிருக்கிறது. ‘அலுவலக டென்ஷனில் இதையெல்லாம் எங்க செய்றது’ என்று நொந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையே தவிர்ப்பவர்களும், கொறித்துக் கொண்டே டி.வி. முன் மணிக் கணக்கில் பொழுதைக் கழிப்பவர்கள் ஒரு புறம்... சில ஆயிரங்கள் கொடுத்து ஜிம்மில் சேர்ந்து, அதற்கான ஷூ, ஷார்ட்ஸ் எல்லாம் வாங்கி, ஒழுங்காக ஒருவாரம் கூட போகாமல் பாதியில் நிறுத்துபவர்கள் இன்னொரு புறம்.

இதுபோன்ற 'உடல் சார்ந்த செயல்பாடு இல்லாதவர்கள் தங்கள் பணத்தை வீணாக்குவதுடன் அரசு சுகாதார அமைப்புகளின் பொருளாதார நெருக்கடிக்கும்
காரணமாகிறார்கள்’ என நார்வே விளையாட்டு அறிவியல் பள்ளியின் ஆராய்ச்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆய்வாளரான எகுலுன்ட் கூறுகிறார்.
இவர்களுக்காக 30 நிமிட உடற்பயிற்சியை இதற்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இப்போதைய ஆய்வின்படி உடல் உழைப்பில்லாத வேலையில் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஈடாக, குறைந்தபட்சம் 60 75 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கின்றனர்.

ஜிம் போக வேண்டாம், கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம். 1 மணி நேரம் முதல் ஒன்றேகால் மணிநேர வேகமான நடைப்பயிற்சி செய்தாலே போதும். என்ன? ரெடியா? உங்கள் பாக்கெட்டையும், அரசாங்கத்தின் பொருளாதாரத்தையும் காப்பாற்ற சாக்குப்போக்கு சொல்லாமல் காலையில் எழுந்து
நடக்க ஆரம்பியுங்கள்!

வந்தார்கள்... பார்த்தார்கள்... சென்றார்கள்... மல்லையா கோவா வில்லா ஏல முயற்சி தோல்வி


மும்பை: மல்லையாவின் கோவா வில்லாவை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், ஏல முயற்சி தோல்வியில் முடிந்தது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. ஆனால், மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். வழக்கிற்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இவரிடம் இருந்து கடனை வசூலிக்க, கோவா கண்டோலிம் கடற்கரையில் உள்ள அவரது பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி கடந்த மே மாதம் பறிமுதல் செய்தது. இதில் மூன்று பெரிய பெட்ரூம், பிரமாண்ட ஹால், கைவேலைப்பாடுகள் நிறைந்த தேக்கு மரத்தில் கடைந்து உருவாக்கிய பர்னிச்சர்கள், சுற்றிலும் 20 பெராரி சொகுசு கார்கள், நீச்சல் குளம், பிரமாண்ட திரையரங்கு இந்த வில்லாவில் உள்ளன. மல்லையாவின் ஆடம்பர சொத்துக்களின் ஒன்றான இந்த வில்லாவில் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் தனது 60வது பிறந்தநாளை மல்லையா கொண்டாடினார். அதன்பிறகு 5 மாதம் கழித்து இந்த வில்லா பறிமுதல் செய்யப்பட்டது. 12,350 சதுர அடியில் உள்ள இந்த வில்லா நேற்று ஏலம் விடப்படுவதாக இருந்தது. ஆரம்ப விலையாக 85.29 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. முன்னதாக ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இந்த வில்லாவை பார்வையிட செப்டம்பர் 26, 27 தேதிகளும், அக்டோபர் 5,6 தேதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. சுமார் 6 பேர் இதை வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆனால் ஏலம் எடுக்க மட்டும் யாரும் முன்வராததால், ஏல முயற்சி தோல்வியில் முடிந்தது.
6.5 லட்சம் ஏ.டி.எம்., கார்டுகளுக்கு தடை :
மோசடியை தடுக்க எஸ்.பி.ஐ., அதிரடி


மோசடியை தடுத்து நிறுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள, 6.5 லட்சம் வாடிக்கையாளர் களின், 'டெபிட் கார்டு' எனும் வங்கி பரிவர்த் தனை அட்டைகளை, பாரத ஸ்டேட் வங்கி தடை செய்துள்ளது.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வங்கி வட்டாரம் கூறியதாவது: சமீபத்தில், ருமானியா நாட்டை  சேர்ந்த சிலர், இங்குள்ள ஏ.டி.எம்., மையங்களில் இருந்து,பணத்தை திருடினர்.கேரளாவில், பெண் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயை, வெளிநாட்டில் இருந்த படி  யாரோ எடுத்துள்ளனர். இது போன்ற மோசடிகள் தொடர்கின்றன. மோசடி நபர்கள், நுாதன மென் பொருளை பயன்படுத்து கின்றனர்; ரகசிய எண்ணை பிரதி எடுக்கும் வகையிலான, கண்ணுக்கு தெரியாத, 'ஸ்டிக்கரை' ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஒட்டி, மோசடி செய்கின்றனர்.

எனவே, மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட காலமாக, ரகசிய எண்ணை மாற்றாமல் இருக்கும், 6.5 லட்சம் பேரின் டெபிட் கார்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அதுபற்றி அவர்களுக்கும், அவர்களது கிளைகளுக் கும் கடிதம்எழுதப் பட்டுள் ளன; அவர்களுக்கு, புதிய கார்டு விரைவில் வழங்கப்படும். எனவே, இதுவரை ரகசிய எண்ணை மாற்றாதவர்கள்,உடனடியாக மாற்ற வேண்டும். இவ்வாறு வங்கி வட்டாரம் தெரிவித்தது.

எச்சரிக்கை! :

டெபிட் கார்டு ரகசிய எண்களை மாற்றும்படி,

பெரும்பாலான தேசிய வங்கிகள், வாடிக்கை யாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளன. ஏ.டி.எம்., மையங்களிலேயே, டெபிட் கார்டு
ரகசிய எண்ணை எளிதாக மாற்றலாம் என, அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வதில்லை.
- நமது நிருபர் -

NEWS TODAY 21.12.2025