Tuesday, December 6, 2016

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்: சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது



சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

திடீர் மாரடைப்பு

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்ததால் அவற்றை இயங்கச் செய்யும் வகையில் அவருக்கு ‘எக்மோ’ என்னும் அதிநவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது.

உயிரை காப்பாற்ற முயற்சி

இந்த நிலையில், நேற்று மதியம் 12.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாலை 4.40 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் டாக் டர்கள் குழுவினர் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மாலை 5.30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஜெயலலிதா மரணம்

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இரவு 11-30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் சில அறிவுறுத்தல்கள் உள்ளன.

இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், மாநில முதல்-அமைச்சர் இறந்தது உறுதியானவுடன், அந்த மாநில கவர்னரும் அதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அந்த தகவலை மத்திய உள்துறை மந்திரி, பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உறுதி செய்து கொண்ட பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு நள்ளிரவு அல்லது அதிகாலை கவர்னர் அல்லது தலைமைச் செயலாளர் முறையாக, முதல்-அமைச்சர் இறந்த தகவலை மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பார்.

இந்த வழிமுறையின்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தி நள்ளிரவு 12-15 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டது.

முன்னதாக நேற்று இரவு 11-30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதே சமயம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டன் வரை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் ஜெயலலிதா காலமானார் என்ற அறிவிப்பு வெளியானது.

தொண்டர்கள் கதறல்

அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். துக்கத்தை தாங்க முடியாமல் அவர்கள் முகத்திலும், தலையிலும் அடித்துக்கொண்டு ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுதார்கள். சில பெண்கள் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள்.

ஜெயலலிதா மரணம் அடைந்த தகவல் வெளியானதும் சென்னை நகரில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீரும், கம்பலையுமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியை நோக்கி கதறி அழுதபடி சாரை, சாரையாக வந்தனர். போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நோக்கியும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.

காட்டுத்தீ போல் பரவியது

ஜெயலலிதா இறந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், பெரும் சோகமும் அடைந்தனர். பலர் துக்கம் தாங்க முடியாமல் கதறி துடித்தனர். ஜெயலலிதாவின் புகைப்படங்களை தெருக்களில் ஆங்காங்கே அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்த தொடங்கினார்கள்.

மாநிலம் முழுவதும் போலீசார் ‘உஷார்’ படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

பஸ்கள் நிறுத்தம்

பதற்றம் ஏற்பட்டதால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, சேலம், ஈரோடு உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க.வினர் சென்னையை நோக்கி வரத்தொடங்கி உள்ளனர்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு



தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24-ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள்.

ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூரு மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 1/2 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்தார். படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12-வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது.

பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.

1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார்.

மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு திரை உலக பிரவேசம் நடந்தது. ஜெயலலிதாவின் சித்தி(தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார்.

ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.

தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகியாக நடித்து 1965-ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை" தான் அவரது முதல் தமிழ்ப்படம்.

வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த 'எபிசில்' (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்! என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.

முதல் படத்திலேயே கதாநாயகி ஆகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் 'வேதா')

ஜெயலலிதாவின் 100-வது படமான "திருமாங்கல்யம்" 1977-ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். 1980-ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.

ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்

சென்னை,



முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

இன்றிலிருந்து 7 நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும். தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் காலை 4.30 மணிக்கு ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன்பின் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இதனை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வெற்றி-தோல்வி


ஜெயலலிதா தமிழக சட்டசபை தேர்தலில் 8 தடவை போட்டியிட்டு, அதில் 7 முறை வெற்றி பெற்று உள்ளார். ஒரு தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தார். 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அவரால் போட்டியிட முடியவில்லை.

* ஜெயலலிதா முதன் முதலாக 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தி.மு.க.வை சேர்ந்த முத்து மனோகரன்.

* 1991-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பர்கூர், காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது பர்கூர் தொகுதியில் அவரை எதிர்த்து டி.எம்.கே. சார்பில் டி.ராஜேந்தரும், காங்கேயம் தொகுதியில் தி.மு.க. சார்பில் ராஜ்குமார் மன்றாடியாரும் போட்டியிட்டனர்.

* 1996-ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். அப்போது அந்த தொகுதியில் அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஈ.ஜி.சுகவனம்.

* 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இரு தொகுதிகளுக்கு மேல் ஒருவர் போட்டியிட முடியாது என்பதால் அப்போது அந்த 4 தொகுதிகளிலும் அவரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அந்த தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை.

* 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வைகை சேகர் (தி.மு.க.) தோல்வியை தழுவினார்.

* 2006-ம் ஆண்டு தேர்தலில் அதே ஆண்டிப்பட்டி தொகுதியில் தன்னை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சீமானை வென்றார்.

* 2011 சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தி.மு.க. வேட்பாளர் என்.ஆனந்தை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார்.

* 2015-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரை விட மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

* இந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்து சோழனை கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

* 1984 முதல் 1989 வரை அ.தி.மு.க. சார்பில் டெல்லி மேல்-சபை உறுப்பினராகவும் ஜெயலலிதா பதவி வகித்து உள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகை.

சென்னை,


பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது

முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.

ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்

* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகை.

* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அஞ்சலி

* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் பிரபு, விக்ரம் பிரபு அஞ்சலி செலுத்தினர்

அரசு அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை,


உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு(திங்கள் கிழமை) 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு பின்னர் மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.


ஜெயலலிதா காலமான செய்தி வெளியானவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியகள் வெளியாகியுள்ளன.

Sunday, December 4, 2016

Medicos urged to serve the impoverished


Need for quality healthcare and environment-friendly practices highlighted at college event
Delivery of quality healthcare to the poorer and economically deprived sections of society was the need of the hour, said Jagdish Prasad, Director General of Health Services, Ministry of Health and Family Welfare, on Saturday.
Dr. Prasad was delivering the convocation address of the Tamil Nadu Dr. MGR Medical University.
“It is frequently observed that patients from the poorest segments of our society have to spend large sums of money while undergoing treatment in healthcare institutions in the private sector. In the process, they incur tremendous financial and property losses,” he said, urging students to not shy away from serving the impoverished sections of the population.
Dr. Prasad also highlighted the growing levels of environmental pollution and the necessity for inculcation of environment-friendly practices and interventions for a pollution-free environment.
He stressed the need for adherence to medical ethics, the judicious use of clinical resources and the necessity of talent to join research and development organisations in the country to further national healthcare goals.
“The erstwhile trend of migration to the west for wider opportunities has now decelerated significantly. More and more young medical graduates should be able to pursue quality goals in their career while staying back in India,” he said.
A total of 20,489 candidates were awarded degrees and diplomas under the faculties of medical, dental, AYUSH and allied health sciences. Of these, 73 per cent were women.
Vice-Chancellor S. Geethalakshmi spoke of the university’s achievements, including its focus on research and plans to set up an anti microbial lab by the department of experimental medicine. Speaking on the sidelines of the event, Dr. Prasad praised the State for its record in organ transplantation.
State Health Minister C. Vijaya Baskar and Health Secretary J. Radhakrishnan also participated.

NEWS TODAY 31.01.2026