Friday, December 9, 2016

No need to submit original documents during admission, says UGC

Logo

For the upcoming academic year, students will no longer have to submit their original certificates with the university or college for admission. The move is likely to help lakhs of students who are unable to withdraw admission from the institute for better prospects.

Not only this, educational institutions cannot make it mandatory for students to purchase a prospectus; they will have to offer them a full refund if admission is cancelled by the student within 15 days.

Also, institutions can charge fee in advance only for the semester or year in which a student is to engage in academic activities.

The University Grants Commission (UGC) has brought out an elaborate sets of rules to put to an end “coercive and profiteering” practices followed by educational institutions in issues related to verifying certificates at the time of admission, remittance of fees and refunds among others.

These rules are part of the notification issued by UGC called ‘Remittance and Refund of Fees and other student centric Issues”. “Taking the certificates and testimonials into institutional custody under any circumstances or pretexts is strictly prohibited for it is a coercive tactic, which can be misused for blackmailing students who wish to withdraw admission from the institute for better prospects or other compulsions,” reads the notification.

According to officials, UGC had formed a committee for this purpose too after getting a number of complaints from students and parents regarding non-refund of fees and retention of original certificates by higher educational institutions and other related issues.

The notification covers all undergraduate, postgraduate and research programmes run by all universities recognised by the UGC and all colleges under their affiliating domain and deemed universities. The rules will come into force immediately.

They can charge fees in advance only for the semester/year in which a student to engage in academic activities. “This enabling provision is in line with the UGC guidelines on Choice-Based Credit System (CBCS) and Model Curricula which are geared towards promoting a student’s inter-institutional mobility,” it said.

Wednesday, December 7, 2016

எதைக் கண்டும் அஞ்சாதவர் 'சோ'- மோடி புகழஞ்சலி

சோ | மோடி

'சோ' ராமசாமி எதைக் கண்டும் அஞ்சாத உறுதி படைத்தவர் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ''சோ சிறந்த தேசியவாதி, அறிவுக்கூர்மை வாய்ந்தவர், பன்முகத்தன்மை கொண்டவர். அச்சமில்லாமல் பேசும் உறுதி படைத்தவர். வெளிப்படையான தன்மை கொண்ட புத்திசாலி.

இவை அனைத்துக்கும் மேலாக அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.

சோ ராமசாமியின் குடும்பத்துக்கும், அவருடைய துக்ளக் பத்திரிகை வாசகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்திய அரசியலில் உன்னத தலைவி: மாநில முதல்வர்கள் இரங்கல்

ஜெயலலிதா | கோப்புப் படம்

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நாடு முழுவதும் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்திய அரசியலில் மிக உன்னதமான தலைவி என, ஜெயலலிதாவை புகழ்ந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி:

தங்களின் பாசத்துக்குரிய அம்மாவை இழந்து வாடும் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் துயரத்தில் காங்கிரஸ் கட்சியும், என் குடும்பமும், நான் தனிப்பட்ட முறையிலும் பங் கெடுத்துக்கொள்கிறேன்.

அரசியல் வாழ்வில் பல ஏற்ற இறக் கங்களை சந்தித்த ஜெயலலிதா திட மான மன உறுதியுடன், தனது மிகச் சிறந்த நிர்வாகத் திறமையின் மூலம் தேசிய அரசியலில் உன்னத தலை வராக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் வீழ்த்த முடியாத வீரத்துடன் சவால்களை கடைசி காலத் திலும் அதே போராட்டத்தை முன்னெடுத் தார்.

காங். துணைத் தலைவர் ராகுல் காந்தி:

மிகப் பெரும் தலைவரை நாம் இழந்துவிட்டோம். பெண்கள், விவ சாயிகள், மீனவர்கள், நலிந்த பிரிவினர் அவரின் கண்களின் மூலமாக கனவு கண்டனர்.

காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி:

மக்களுக்காக போராடிய மக்கள் தலைவர் ஜெயலலிதா. நாட்டில் படித்த, அறிவார்ந்த அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி:

தமிழ் சினிமாவின் ராணியாக இருந்து, தனது அளப்பரிய தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியால் அரசியலில் தனக் கென தனி பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர் ஜெயலலிதா.

டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்:

நிகரில்லாத நிர்வாகத் திறமை களைக் கொண்ட, தனித்துவமிக்க அரசி யல்வாதியான ஜெயலலிதா, சமகால இந்தியாவில் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் தலைவராக திகழ்ந்தவர்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்:

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வர் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் மதிப்புக்குரிய தலைவர். பெண்கள் முன்னேற்றத்தின் அடை யாளமாக அவர் திகழ்ந்தார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ்:

கவர்ந்திழுக்கும் தலைமைப் பண்பு கொண்ட ஜெயலலிதா தமிழ கத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத் துச் சென்றவர். மக்களுடன் அவர் கொண்டிருந்த உறவு மிகவும் வலு வானது. அவருக்கு மாற்று வேறு யாருமில்லை.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்:

ஜெயலலிதாவின் மறைவு, தமிழ் சமூகத்துக்கு பெரும் இழப்பு. நடிகை யாக இருந்து, எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக உருவெடுத்த ஜெயலலிதா வின் வாழ்க்கை மற்றவர்களுக்கு உத் வேகம் அளிக்கக்கூடியது. பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அரிதாக இருந்த காலத்தில், அரசியலுக்குள் பிர வேசித்து, சவால்களை எதிர்கொண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் மாறி, புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்:

ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. புகழ் பெற்ற மிகப் பெரிய தலைவரான அவரின் மறை வுக்கு கோவா மாநிலம் சார்பில் இரங்கல் தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

அருணாச்சல் பிரதேச முதல்வர் பேமா காண்டு:

அனைவரையும் கவரும் வகையில், மிக செல்வாக்கான, அர்ப் பணிப்புணர்வுடன் கூடிய தலைவர்களில் ஒருவராக ஜெயலலிதா திகழ்ந்தார். பூத உடலின் இறப்பால் அவரின் புகழும், ஏழைகள் மீது அவர் வைத்த அன்பும் என்றும் அழியாது என நம்புகிறேன்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி:

தென்னிந்தியாவின் ஒவ்வொரு குடி மகனின் இதயத்திலும் ஜெயலலிதாவுக்கு தனி இடம் உண்டு. அவரின் இழப்பு, அதிமுகவுக்கு மட்டுமின்றி, அனைத்து தமிழக மக்களுக்கும் வேதனை அளிப்பதாக இருக்கும்.

புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்து வந்த பாதை

ஓ.பன்னீர்செல்வம் | கோப்பு படம்

தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் கடந்து வந்த அரசியல் பாதை:

பள்ளிப் படிப்பை தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா அரசு நினைவுப் பள்ளியில் படித்தார். பியுசி மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும், பி.ஏ பட்டப் படிப்பை உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லுரியிலும் முடித்தார்.

அதன் பின்னர் பெரியகுளத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தபோது அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டு அதிமுகவில் உறுப்பினர் ஆனார். எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் கட்சி இரண்டாக உடைந்தபோது கடந்த 1989-ம் ஆண்டு (அதிமுக) ஜானகி அணியில் பெரியகுளம் நகர செயலாளராக இருந்தார். 91-ம் ஆண்டு பெரியகுளம் நகர செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998-ம் ஆண்டு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராகவும், 1999-ம் ஆண்டு தேனி மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

இதற்கிடையில் 1991-ம் ஆண்டு பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கியில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்தார். 2001-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்ஏல்ஏவாகி மே மாதம் முதல் 2001-ம் ஆண்டு செப்டம்பர் வரை வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார். டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது இவர் 2001-ம் ஆண்டு செப், 21-ம் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி வரை முதலமைச்சராக இருந்தார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 2002-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் 2006-ம் ஆண்டு டிசம்பர் வரை பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2011-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார். 2011-ம் ஆண்டு போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி அமைச்சரானார்.

பின்னர் 2014-ம் ஆண்டு செப். 29-ம் தேதி முதல் 2015 மே 22-ம் தேதி வரை 2-வது முறையாக முதலமைச்சராக இருந்துள்ளார். 2016-ம் ஆண்டு மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட்டு நிதி அமைச்சரானார். முதலமைச்சர் ஜெய லலிதா உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து கடந்த அக்டோபர் 11-ம் தேதி முதல மைச்சர் ஜெயலலிதா கவனித்து வந்த இலாக்காக்கள் இவரிடம் ஒப்படைக் கப் பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 3-வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

விமர்சித்துவிட்டும் நட்பை தொடர்பவர் 'சோ'- சிவகுமார் புகழஞ்சலி



இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேருடைய நன்மதிப்பையும் பெற்றவர் சோ என்று சிவகுமார் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நடிகர் சிவகுமார். அவருடன் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகுமார், "அரசியலிலோ, ஆட்சி அதிகாரத்திலோ எந்த ஒரு பதவியும் வகிக்காமல் 50 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேருடைய நன்மதிப்பையும் பெற்றவர் சோ. பாராட்டு, புகழுரை, பொன்னாடை என்றால் ஒடி ஒளிந்து கொள்வார்.

தனக்கு சரி என்று தோன்றினால், எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் கவலைப்படாமல் துணிந்துச் சொல்லக்கூடிய ஒரு மனிதர். இவர் கடுமையாக யாரை எல்லாம் விமர்சித்தாரோ, அவர்கள் அனைவரும் கடைசி மூச்சு வரைக்கும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

பலர் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைத்த போது, முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்கான பொறுமை எனக்கு இல்லை என்று ஒதுங்கிவிட்டார். சோ உணர்ச்சிவசப்பட மாட்டார். கண்ணீர் விடமாட்டார்" என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.

'சோ'வின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை: ராமதாஸ் புகழஞ்சலி

இடது: சோ ராமசாமி, வலது: ராமதாஸ் | கோப்புப் படம்.

சோ ராமசாமியின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவு குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

1963-ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகம் ஆன சோ ராமசாமி, அதற்கு முன்பே நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தேன்மொழியாள் என்ற மேடை நாடகத்தில் சோ என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அவர் இந்த பெயராலேயே அழைக்கப்பட்டார்.

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இவரது அரசியல் நையாண்டி வசனங்கள் புகழ் பெற்றவை. 'முகமது பின் துக்ளக்' என்ற பெயரிலான இவரது திரைப்படம் இன்று வரை மக்களால் ரசிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் கோமாளித்தனமான முடிவுகளை எடுக்கும் போது அதை துக்ளக் ஆட்சியுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது வாடிக்கையாகிவிட்டது.

துக்ளக் இதழிலும், பிற இதழ்களிலும் சோ ராமசாமியின் அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தலைவர்கள் எவருமில்லை என்று கூறும் அளவுக்கு அனைவரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனாலும் அவரது விமர்சனங்கள் எல்லை மீறாமலும், கண்ணியத்துடனும் அமைந்திருக்கும்.

அனைத்து தலைவர்களையும் விமர்சித்த சோ ராமசாமி, 'மது விலக்கை பாமக மட்டுமே நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. மது மற்றும் புகைக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமே உண்மையாக போராடி வருகிறார்' என்று போற்றி பாராட்டியதை மறக்க முடியாது.

தனிப்பட்ட முறையிலும் அவர் எனக்கு சிறந்த நண்பராக விளங்கினார். எனது குடும்ப நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டவர். பாமகவின் செயல்பாடுகள் குறித்து என்னிடம் விவாதிப்பார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவரை அண்மையில் நான் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் உடல்நலம் தேறிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் மறைந்திருக்கிறார்.

தமிழக அரசியலிலும், திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சோ ராமசாமியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், துக்ளக் பணியாளர்கள் ஆகியோருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பல்துறை வித்தகர் 'சோ'- நாடகம் முதல் அரசியல் அரங்கு வரை


சோ ராமசாமி | கோப்புப் படங்கள்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான 'சோ' ராமசாமி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.

பல்துறை வித்தகரான சோ கடந்து வந்த பாதை

* சென்னை மயிலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்த ராமசாமி பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

* இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

வழக்கறிஞராக சோ

* சோ ராமசாமியின் தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ரூபூதம் உள்ளிட்டோர் வழக்கறிஞர்கள். எனவே இயற்கையாகவே சோ அதில் ஈர்க்கப்பட்டு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்

நாடக உலகில்...

* 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக 'கல்யாணி' என்ற நாடகத்தில் நடித்தார்.

* 'தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் 'சோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. அதன்பிறகு முழு நேர நாடகக் கலைஞராக பாதை மாற்றிக் கொண்டார்.

* சோவின் நாடகங்களில் அரசியல் நையாண்டியும், சமூக விமர்சனமும் கலந்திருக்கும். 1960-களில் அவரது சம்பவாமி யுகே யுகே என்கிற நாடகத்தை தணிக்கை செய்ய தமிழகத்தின் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வரான பக்தவத்சலம் முயற்சி செய்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது.

* சோவின் 'ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு', 'முகமது பின் துக்ளக்', 'சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.

* 20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது 'இந்து மகா சமுத்திரம்' நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது.

திரைப்பட உலகில்...

* திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

* பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 'யாருக் கும் வெட்கமில்லை', 'உண்மையே உன் விலை என்ன' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

* சோ எழுதிய பல நாடகங்கள், மேடையைத் தாண்டி திரைப்படங்களாகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவை குறித்தும், கலாச்சாரம், மதம் குறித்தும் நன்கு கற்றவர். அவை குறித்து விரிவாக எழுதியும் உள்ளார்.

* சோவின் முகமது பின் துக்ளக் நாடகம், திரைப்படமாக உருவாவதைத் தடுக்க அப்போதைய திமுக அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது.

* 'நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது' என்று பெருமையுடன் கூறுவார்.

பத்திரிகை உலகில்...

* தனது சொந்த உழைப்பில் 'துக்ளக்' என்ற வார இதழை 1970-ம் ஆண்டும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் ஆரம்பித்து பத்திரிகையாளராகவும் முத்திரை பதித்தார்.

* அவரது நையாண்டியும், துணிச்சலும் அவரது கட்டுரைகளிலும், கேலிச்சித்திரங்களிலும் பிரதிபலித்தது.

அரசியல் அரங்கில்...

* அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

* பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர் சோ. தனது துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது முதன் முதலில் மோடியை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து ஒருவகையில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே சோ எனக் கூறலாம்.

* வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர்

* தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

* சோ தான் பணியாற்றிய துறைகளில் பெற்ற வெற்றிகள் குறித்து பெரிதாக நினைத்துக் கொண்டதில்லை. நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றே கூறுவார். அதனால் தான் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியபோது அதற்கு 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' எனப் பெயர் வைத்தார்.

NEWS TODAY 31.01.2026