Monday, January 2, 2017

பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 வரை மாற்றிக் கொள்ளலாம்: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பு


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வரும் ஜூன் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித் திருக்கிறது. டிசம்பர் 30-க்குள் மாற்றிக்கொள்ளாத இந்தியர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்தியர்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டு களை மாற்றிக்கொள்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடை யாது. ஆனால் ஃபெமா விதிமுறை களின்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.

ஆதாரம் முக்கியம்

இந்தியாவில் வசிப்பவர்கள் முறையான அடையாள சான்று களை கொடுத்து பழைய நோட்டு களை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் வெளிநாட்டில் இருந்த வர்கள் இந்த இடைப்பட்ட காலத் தில் வெளிநாட்டில் இருந்ததற்கான ஆதாரமும், இதுவரை எந்த தொகையும் மாற்றிக் கொள்ள வில்லை என்பதற்கான ஆதாரமும் கொடுக்க வேண்டும். சம்பந்தப் பட்ட நபரைத் தவிர மூன்றாம் நபர் மூலமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியாது.

இந்த வசதி மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் நாக்பூர் ஆகிய நகரங் களில் இருக்கும் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயத்தில் நேபாளம், பூடான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியாது.

குறள் இனிது: இதனை.. இதனால்.. இவன்...

சோம.வீரப்பன்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (குறள்: 517)

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் திவ்யதரிசன டிக்கெட் பெற, ஆதார் அட்டை கட்டாயம் என அறிவித்துள்ளதைப் பார்த்தீர்களா? விமான நிலையத்தில் நுழைவுச்சீட்டு பெறவும் ஜனவரி 1 முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது! ஆமாங்க, இனி இந்த ஆதார்கார்டு தானுங்க எல்லாவற்றிற்குமே ஆதாரம் ஆகப் போகுது!

ஆதாரில் பான்கார்டு, வங்கிக்கணக்கு, ஓட்டுநர் உரிமம் போன்றவை இணைக்கப்பட்டு வருகின்றன. எனவே உங்களது 12 இலக்க ஆதார் எண்ணைச் சொன்னால் உங்கள் சரித்திரம் என்ன, பூகோளமும் கூடத்தெரிந்து விடும்! 10 கைவிரல்களின் ரேகை அமைப்பு, கருவிழிகளின் தன்மை எனும் உயிரியளவுகளால் எவரையும் சந்தேகத்திற்கு இடமின்றி அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பது இன்றையத் தொழில்நுட்பம். இனி நான் அவனில்லையென்று யாரும் ஏமாற்ற முடியாது!

2009-ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு குடிமக்களுக்குத் தனித்தனி அடையாள எண் வழங்கி நாடு தழுவிய தரவுத்தளத்தை உருவாக்க முடிவு செய்தது.அதற்காக UIDAI (Unique Identification Authority of India) எனும் அமைப்பை உருவாக்கியது. இவ்வளவு பெரிய பொறுப்பை யாரிடம் கொடுத்தார்கள்? எப்படி முடிவு செய்திருப்பார்கள்?

சுமார் 120 கோடிக்கும் அதிகமானவர்களை அடையாளம் காண வேண்டும், பின்னர் அவர்களது விபரங்களைப் பதிவிட வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டைகள் கொடுக்க வேண்டுமென்றால், அதுகணினிகளையும் அவற்றுக்கேற்ற மென்பொருட்களையும் நன்கு அறிந்தவரால்தானே முடியும்?

அரசின் சுமார் 600 அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் பக்குவம் வேண்டும்.பல ஆயிரம் கோடி செலவாகும் திட்டத்தில் தவறுகள் நடக்கக் கூடாது. யாரும் சந்தேகம் கொள்ளவோ புகார் சொல்லவோ இடம் கொடுக்கக் கூடாது. அதாவது எல்லோராலும் இவர் வல்லவர், நல்லவர் என்று ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவராக இருக்க வேண்டும்!

அதனால் தான் நம்ம இன்போசிஸின் நந்தன் நிலகேணியை அழைத்து அந்தப் பொறுப்பைக் கொடுத்திருப்பார்கள்! இன்போஸின் விற்பனையை 5 ஆண்டுகளில் 6 மடங்கு ஆக்கியதுடன் அதன் மதிப்பையும் உயர்த்திய செயல்வீரர் அல்லவா அவர்!

இன்றைக்கு 104 கோடி ஆதார்அட்டைகள் கொடுக்கப்பட்டு விட்டன! ஏப்ரல் மாத நிலவரப்படியே 31 கோடி வாக்காளர் அட்டைகளும், 25.3 கோடி வங்கிக் கணக்குகளும், 12 கோடி எரிவாயு இணைப்புகளும், 11.2 கோடி குடும்ப அட்டைகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன! இனி வயலுக்குப் பாய்வது வாய்க்காலில் வீணாகாது!

அன்று காங்கிரஸ் ஆட்சி நிலகேணியை ஆதாருக்கு தேர்ந்தெடுத்தது. இன்று மோடி அரசும் அவரையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் குழுவின் தலைவராக்கியிருப்பது எதைக் காட்டுகிறது என்று நான் சொல்லணுமா என்ன? காரியம் சிறிதோ, பெரிதோ..., சரியான ஆள் பார்த்து கொடுத்துவிட்டால் நல்லா முடிஞ்சிடுங்க!

இந்தச் செயலை இன்ன காரணங்களால் இவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்து அச்செயலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர்!

- somaiah.veerappan@gmail.com

ஜெயலலிதா மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர் ஒட்டிய தீபா பேரவையினர்: அதிமுகவினர் கிழித்ததால் பரபரப்பு

கி.மகாராஜன்

ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நன்றி தெரிவித்து மதுரை முழுவதும் தீபா பேரவையினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். பல இடங்களில் இந்த போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தனர்.

தமிழக முன்னாள் முதல் வர் ஜெயலலிதா, டிச.5-ல் மரணம் அடைந்தார். திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட ஜெய லலிதா, உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகமும், அதிமுக நிர்வாகிகளும் மீண்டும் மீண்டும் கூறிவந்தனர். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்தது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமூக வலைதளங்கள் மூலமாக ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பரப்பப் படுகின்றன. நடிகர்கள் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பகிரங்கமாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் அதிமுக உறுப்பினர் ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அமர்வு, ஜெயலலிதா மரணத்தில் தனிப் பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை நானே விசாரிப்பதாக இருந்தால் ஜெயலலிதாவின் சடலத்தை வெளியில் எடுத்து பிரேதப் பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடுவேன் என்றார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர் பாக விடை தெரியாமல், அவரது நினைப்பில் இருந்துவரும் அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் சிலர் நீதிபதியின் கருத்தை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலரும், மதிமுக பொதுச் செயலர் வைகோவும் நீதிபதியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜெ.தீபா அம்மா சமூக சேவை பேரவை சார்பில் மதுரை நகர் முழுவதும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போஸ்டர்களை பல இடங்களில் அதிமுகவினர் கிழித்தனர்.

இது தொடர்பாக தீபா பேரவை நிறுவனர் சந்தன முருகேசன் கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். பல இடங்களில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் போஸ்டர்களை கிழிக்க மாட்டார்கள் என்றார்.

அதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி 1987-ல் தீக்குளித்தவர் சந்தன முருகேசன்.

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம்

THE HINDU TAMIL

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன்.

பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது பெற்றவர்.

தமிழகத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தடயவியல் துறையை தனியாகப் பிரித்து சுதந்திரமாக இயங்க வழிவகுத்து, அதன் தலைவராகப் பணியாற்றினார். ஜெய்ப்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய ‘உலகின் முதல் மனித வெடிகுண்டு’ நூல், பல்வேறு நாடுகளில் காவல்துறையினரின் பாடப் புத்தகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தடயவியல் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்ட அவர், ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து எழும் சந்தேகங்கள் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

*

ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறதே..

‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது’ என்று அவரது நெருங்கிய உறவினர்கள் ஆதாரத் துடன் புகார் செய்தால் மட்டுமே, இது சம்பந்தமாக மாஜிஸ்திரேட் உத்தரவிட முடியும். நீதிமன்ற ஆணையின் மீதும் இதைச் செய்யலாம். ஆனால், இது அவசியமா என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய இயலாது. இது தேவையில்லை என்பதே என் கருத்து.

*

ஒருவேளை, அதுபோல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டால் என்ன நடக்கும்?

முறையாகச் செய்யவேண்டும் என்றால், வெளி மாநில தடயவியல் நிபுணர் தலைமையில் 2 மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்வார்கள். அதன்மூலம், மரணம் எப்படி ஏற்பட்டது என்பதை துல்லியமாக கூறமுடியும். மண்டை ஓட்டை ஆராய்ந்தால், தலையில் ஏதாவது பலத்த காயம் ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க முடியும். உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்து, பிறகு மீண்டும் உடலை அடக்கம் செய்துவிடுவார்கள்.

*

அவர் இறந்து சுமார் ஒரு மாதம் ஆகும் நிலையில், உடல் எந்த நிலையில் இருக்கும்?

சதை அழுகிப் போயிருக்கலாம். உடல் வற்றிப் போயிருக்கக்கூடும். ஆனால், சந்தனப்பேழையில் இருப்பதால் உடல் அதிக அளவு அரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. உடலை மிகவும் கவனமாக வெளியே எடுக்க வேண் டும். திறமை வாய்ந்தவர்கள்தான் இதைக் கையாள வேண்டும். பின்னர் பரி சோதனை நடத்தினால், இறந்த தேதியைக்கூட துல்லியமாக கண்டு பிடித்துவிட முடியும்.

*

உடலைப் பதப்படுத்தும் ‘எம்பாமிங்’ செய்யப்பட்டதால், அவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறதே?

‘எம்பாமிங்’ என்பது மேலை நாடுகளில் சர்வ சாதாரணமான நிகழ்வு. பொது இடத்தில் மக்கள் பார்வைக்காக வைக் கப்பட வேண்டியிருப்பதால், எம்பாமிங் அவசியம். எதையோ மறைக்கத்தான் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது அர்த்தமற்ற வாதம்.

*

அவரது கால்கள் நீக்கப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுவது பற்றி..

ஜெயலலிதா பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் முற்றி சிகிச்சை பெற்று வந்தார் என்பதை அறிவோம். இந்த நோய் முற்றினால் ‘கேங்கரின்’ எனும் நிலை ஏற்பட்டு, கால்களின் ஒரு பகுதியை அகற்ற நேரிடலாம். அப்படி எடுக்கவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் முடிவு செய்திருக்கலாம். இதுவரை வெளியாகியுள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தெல்லாம் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தால், எந்தவொரு மருத்துவமனை யும் கிளினிக்கல் போஸ்ட் மார்ட்டம் என்ற பிரேதப் பரிசோதனை செய்தே, நோயாளி இறந்துவிட்டார் என்று இறப்புச் சான்றிதழ் வழங்குவார்கள். இதை ஒப் பிட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியும்.

*

ஒரு நோயாளி இறந்து ஒரு மாதம் வரையில் உயிருடன் இருப்பதாக ‘செட்டப்’ செய்து, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்க இயலுமா?

இது ஒரு கற்பனை. மைனஸ் 4 டிகிரி குளிரூட்டப்பட்ட இடத்தில் உடல் இருந்தால்தான் கெடாமல் வைத்திருக்க முடியும். அவசர சிகிச்சைப் பிரிவில் அதுபோன்ற கோல்டு ஸ்டோரேஜ் (Cold Storage) வசதியை எப்படி செய்ய முடியும்? பல்வேறு மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட ஒரு மருத்துவமனையில் இவை எல்லாம் ரகசியமாக நடக்க சாத்தியம் இல்லை. அப்படி இருந்தால், எரியூட்டும்போதோ, புதைக்கும்போதோ அந்த தடயங்களை மக்கள் கண்டுபிடித்துவிட முடியும். சினிமாவில்தான், உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெறும். அதன் பின்விளைவுகள் அதிகம் என்பதால், மருத்துவர்கள் பயப்படுவார்கள்.

*

பிரபல தலைவர்களின் உடலைத் தோண்டி எடுத்து, இறப்பின் காரணம் கணிக்கப்பட்டதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா?

மாமன்னன் நெப்போலியன் உடல் புதைக்கப்பட்ட பிறகு, அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அறிஞர்கள் விவாதித்தார்கள். செயின்ட் ஹெலனா எனும் தீவில்தான் நெப் போலியன் சிறைவைக்கப்பட்டிருந்தார். அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது, முதலில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 மி.மீ. நீளம் உள்ள அவரது தலைமுடியை ஆராய்ந்தபோது, அதில் ஆர்சனிக் என்னும் கொடிய விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நிபுணர்கள் சிறைக்குச் சென்று சோதனையிட்டபோது, அவர் சங்கி லியால் கட்டப்பட்டு சுவர் ஓரமாக நாற்காலியில் உட்கார வைக்கப் பட்டிருந்தார் என்று தெரியவந்தது. சுவரில் அவர் தலையைச் சாய்க்கும் இடத்தில் ஒரு காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அது கொடிய விஷம் தடவப்பட்ட காகிதம். சுவரில் அவர் தலையைச் சாய்க்கும் போது, அந்த விஷம் சிறிது சிறிதாக அவரது தலைமுடியில் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் அறிவியல் ரீதியான சோதனையில் இதைக் கண்டுபிடித்தனர்.

என் அனுபவத்தில், கடலூரில் விருப்பலிங்கம் என்பவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்தான் இறந்தாரா என்று சந்தேகம் எழுந்தபோது, அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. என் தலைமையில் 2 மருத்துவர்கள் மறு உடல்கூறு ஆய்வு செய்து, பல உண்மைகளைக் கண்டறிந்தோம்.

இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.

- பிரகாஷ் எம்.ஸ்வாமி, மூத்த பத்திரிகையாளர்

Madras HC upholds order on dismissal of bank employee

By PTI  |   Published: 31st December 2016 01:43 PM

CHENNAI: The Madras High Court has upheld a single judge order justifying the action of a nationalised bank which dismissed an employee from service for suppressing facts about his educational qualification while applying for the post of part-time house keeper.
   
A division bench comprising Justices Huluvadi G Ramesh and S Vaidyanathan had recently dismissed the appeal filed by one P Sudalaimuthu challenging the single judge order passed in 2014.
   
Referring to various judgments, the bench observed that when a company or an industry prescribes a specific qualification for appointment to a specific post, the candidate who applies for the called-for post must strictly adhere to the conditions.
   
"The appellant herein, knowing very well that the post of part-time House Keeper, at the most requires an VIII standard fail, concealed his VIII standard pass and applied for the said post that he had passed only Vth standard and also produced his Transfer Certificate to that effect," it said.
     
Holding that the suppression of fact was a gross misconduct, more particularly in service matters, the court said, "We confirm the order of the single judge, holding that the act of the bank is perfectly justified."
   
The petitioner submitted that Union Bank of India had invited applications for the post of part-time House Keeper, by an advertisement in 2008.
   
The minimum educational qualification for the post of a House Keeper was a second standard pass or eighth standard fail.
   
The petitioner, belonging to scheduled caste, submitted that he had applied for the post by mentioning that he had passed only fifth standard.
   
Subsequently, after selection process, the petitioner was shortlisted and appointed on August 20, 2008 for the post of part-time House Keeper.
     
The same year, when the bank had called for applications from prospective candidates for the post of Peon, the petitioner had applied for the post by declaring that he had passed eighth standard.
   
The bank, which found the discrepancy, issued a charge memo to the petitioner in 2010 and sought an explanation for concealment of material information.
   
Unable to accept the explanation offered by the petitioner, the Disciplinary authority ordered an inquiry, which revealed that he had knowingly concealed the information about his educational qualification, and it concluded that the charges were proved beyond doubt.
   
The petitioner was later dismissed from service.

No relief for man who hid over-qualification


By Siva Sekaran | Express News Service | Published: 01st January 2017 01:17 AM |

CHENNAI: Suppressing the fact of possessing more qualification than required, will also render a person jobless.For instance, take the case of P Sudalaimuthu.

The Union Bank of India invited applications for the post of part-time House Keeper. The qualification required was a pass in second standard and fail in eighth standard, whereas Sudalaimuthu was eighth pass.
Suppressing this fact, he applied for the post, stating that he was fifth pass. And he was appointed in August 2008.


Later, the bank called for applications for the post of peon/hamal. Sudalaimuthu applied for the same stating that he had passed eighth standard. The bank noticed the discrepancy and issued a charge-memo. Not satisfied with his explanation, the bank dismissed him from service.

Challenging this, he moved the High Court and a single judge on June 4, 2014 dismissed his writ petition. Hence, the present appeal.

A division bench of Justices Huluvadi G Ramesh and S Vaidyanathan dismissed the writ appeal, too. Be it a bank or an industry or company, each firm has got its own rules and regulations for appointment of candidates. When the company prescribes a specific qualification for appointment to a specific post, the candidate, who applies for the same, must strictly adhere to the conditions.

The appellant herein, knowing fully well that the post of part-time House Keeper, at the most requires only an eighth standard fail, concealed his eighth standard pass qualification and applied for the said post stating that he had passed only fifth standard and also produced his transfer certificate to that effect, the bench pointed out.

Granting any benefit to the appellant would be violative of the doctrine of equality, the bench added and confirmed the order of a single judge and dismissed the appeal.

    ஜியோ 4 ஜியை  இனி 3ஜி , 2 ஜி போன்களிலும் பயன்படுத்தலாம்.....! எப்படி ...?

    ஜியோ 4 ஜியை  இனி 3ஜி , 2 ஜி போன்களிலும் பயன்படுத்தலாம்.....! எப்படி ...?
    ஜியோ  வழங்கிய  சலுகையை  தற்போது  பெரும்பாலோனோர்  பயன்படுத்தி  வருகின்றனர். ஜியோ  வெல்கம் ஆபர் அறிமுகம் செய்யும்  போது,  மக்களிடயே  பெரும்  ஆச்சர்யத்தை  ஏற்படுத்தும் வகையில்  அன்லிமிடட்  சலுகையை  வழங்கியது.
    தற்போது அந்த சலுகையை , மேலும் 3 மாதங்களுக்கு   நீட்டித்து,  நியூ இயர்   ஆபராக  அறிவித்தது.
    ஜியோவின்  சலுகையை  4 ஜி  சேவை  பயன்படுத்தும்  மொபைலில்  மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
    இந்நிலையில் 2 ஜி மற்றும்  3 ஜி  மொபைல்  போன்களிலும்  ஜியோ  சேவையை  பெறலாம்.
    எப்படி ..?
    ஜியோ பை வாங்கும் போது,  அதனுடன்  கொடுக்கப்படும்  ஜியோ  சிம்  கார்டை  ஆக்டிவேட்
    செய்யுங்கள்.
    பின்னர், ப்ளே  ஸ்டோரில்  இருந்து,  ஜியோ 4 ஜி  வாய்ஸ்  ஆப்ஸ்  டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்
    பின்னர்  ஜியோ  பை  நெட்வொர்க்  ஆன்  செய்யுங்க . அதன்  பின்னர் , உங்கள்  மொபைலில். ஜியோ  4  ஜி  என்பதை  டீபால்ட் காலிங்  ஆப்ஷனாக   ஓகே  பண்ணுங்க ....
    இப்ப பாருங்க , உங்க  மொபைல  3 ஜி /  2  ஜி  சேவையை  பெற  முடியும்.....

    NEWS TODAY 31.01.2026