Saturday, January 14, 2017

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சீனிவாசு தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிலம்பாட்டம், கோலாட்டம், உறியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். மாணவிகள் பொங்கல் வைத்துகொண்டாடினர்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் குளோபல் பள்ளியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள் விகாஷ் சுரானா, சுரேஷ்கன்காரியா, அஸ்திமல் சுரானா, பி.ஜி.ஆச்சாரியா, முதல்வர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணையக் குழுச் செயலாளர் நீதிபதி எஸ்.கிரி கலந்து கொண்டு பேசினார்.

விழாவை, பள்ளி மாணவர்கள் பொங்கல் வைத்தும், நாற்று நட்டும் கொண்டாடினர்.

இதேபோல, செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிறுவனரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வீ.தமிழ்மணி தலைமை வகித்தார். முதல்வர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை, கல்வி மருத்துவ பண்பாட்டு அறநிலையத் துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். தாளாளரும், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவருமான கோ.ப.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
இதேபோல, மதுராந்தகம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை, பள்ளித் தாளாளர் டி.லோகராஜ் தலைமையில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

உத்தரமேரூரில்...

உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பென்னலூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை, தூய்மை பாரத இயக்கம் சார்பில் சுகாதார பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவானந்தம், ஊராட்சிச் செயலாளர் ராஜி, அரசினர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.
Dailyhunt

காலங்கள் மாறினாலும், பழமைகள் மாறலாமா?

 

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நாம் இன்றாவது விறகு அடுப்பில் மண் பானைகள் வைத்து பொங்கலை கொண்டாடி மகிழ முன்வர வேண்டும்.
இயற்கைக்கும், நமது வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நமது நன்றியை தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருநாள் பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது.

இதற்காக சூரியனுடைய சக்தியால் விளைந்த அரிசி, மண்ணால் செய்த அடுப்பு, பானை ஆகியவற்றை வைத்து பொங்கலிட்டு, இனிக்கும் கரும்பையும், மங்களப் பொருளான மஞ்சளையும் வைத்து பொங்கலோ பொங்கல் என்று கூறி வழிபாடு செய்வது வழக்கம். அதோடு இயற்கை ஆதாரமாக உள்ள உழவுத் தொழிலையும் போற்றும் விதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் இயற்கை மூலம் விளைவித்த பொருள்களையே வைத்து கொண்டாடப்படுகிறது.

மண் அடுப்பில் விறகிட்டு, நெருப்பு மூட்டி, மண் பானை வைத்து பொங்கலிடப்படுகிறது. இது தான் வழக்கமாக இருந்து வருகிறது.
இதன்படி, நமது முன்னோர் இயற்கையில் விளைந்த காய்கறிகள், கிழங்கு வகைகள், நவ தானியங்கள், உள்ளிட்டவற்றை ஒன்றாக கலந்து சமைத்து காய்கறியை சூரியனுக்கு படைத்து வருகின்றனர்.

பொதுவாக மண் பானையில் சமைக்கப்படும் உணவுகள் ருசியாகவும், உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கக் கூடிய உணவாகவும் கருதப்படுகிறது.
கிராமங்களில் விறகு அடுப்பில் மண் பானையில் தான் முன்பெல்லாம் சமையல் செய்து வந்தனர். தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாகவும், கால மாற்றத்துக்கு ஏற்பவும் பழைய வழக்கம் மாறி வருகிறது.
நகர்ப்புறங்களில் தான் அறிவியல் வளர்ச்சி காரணமாக நவீன உபகரணங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்பானை கலாசாரம் கூட தற்போது மாறிவிட்டது. நகர்புறத்துக்கு இணையாக கிராமங்களிலும் சமையல் எரிவாயு அடுப்பு, மின்சார அடுப்பு என நவீன அடுப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதோடு மண் பானைக்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்கள், குக்கர்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதனால் இயற்கையான உணவு தயாரிக்கும் முறை மாறிப் போயுள்ளது. அதனால் உடல் நலத்திலும் குறைபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டு தேவையென தற்போது போராடி வருகிறோம். அதேபோல நமது உடல்நலத்திற்கு நன்மை தரக்கூடிய இயற்கையாக சமையல் செய்யும் முறையையும் நாம் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
எரிவாயு அடுப்பில் குக்கர் வைத்து பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடும் கலாசாரம்தான் தற்போது நடைமுறையில் உள்ளது. நாம் இயற்கை முறையை கைவிட்டு விட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் பண்டிகையின் போதாவது மண் அடுப்பில் மண் பானை வைத்து சமைத்து இறைவனுக்கு படைக்க அனைவரும் முன்வர வேண்டும்.
இயற்கை முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும்போது நமது உடல் நலத்துக்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல் மண் பானை, மண் அடுப்பு ஆகியவற்றை தயாரிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு அதன் மூலம் வருவாயும் கிடைக்கும்.

ஆகவே பொங்கல் பண்டிகையின்போது இயற்கையான முறையில் மண் அடுப்பு மற்றும் மண்பானை வைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்.
Dailyhunt
 விஜய்-யின் பைரவா: சினிமா விமரிசனம்

ஒரு வழக்கமான வெகுஜன மசாலா திரைப்படம் இது. விஜய் போன்ற மக்கள் திரளின் பெரும் அபிமானம் பெற்ற நடிகர்கள், தங்களின் பாதுகாப்பான பாதையிலிருந்து விலகவே விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் இன்னொரு சலிப்பான படைப்பு. சமகால சமூகப் பிரச்னைகளை ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு அதன்மூலம் தன்னை அவதார நாயகனாக முன்நிறுத்திக் கொள்ளும் எம்.ஜி.ஆர் காலத்து ஃபார்முலாவை 'பைரவா'வும் சலிக்க சலிக்கப் பின்பற்றியிருக்கிறது. 'கத்தி' திரைப்படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவதாக அமைந்த பாவனை, இத்திரைப்படத்தில், ரவுடிகளாக இருந்தவர்கள் கல்வித் தந்தைகளாக மாறியிருக்கிற ஆபத்தைப் பற்றியதாக மாறியிருக்கிறது.
அவ்வளவே. மற்றபடி வெகுஜன திரைப்படத்தின் அதே வழக்கமான விஷயங்கள். 
 ***
நாயகன் (விஜய்) சென்னையில் கலெக்ஷன் ஏஜெண்ட்டாகப் பணிபுரிபவன். பெரும் நிதியைக் கடனாக வாங்கிவிட்டு பிறகு வங்கி அதிகாரியை மிரட்டி ஏமாற்ற முயலும் ரவுடிக்கும்பலை அடித்து உதைத்து பணத்தை மீட்கும் சாகசங்களோடு படம் தொடங்குகிறது. அதிகாரியின் மகளுடைய திருமணத்துக்குச் செல்லும்போது நாயகியிடம் (கீர்த்தி சுரேஷ்) வழக்கம்போல் முதல் சந்திப்பிலேயே காதலில் விழுகிறான். அவளுக்குப் பின்னால் சில ஆபத்துகள் ஒளிந்திருப்பதை அறிகிறான். என்னவென்று விசாரிக்கிறான். நாயகி படிக்கும் மருத்துவக் கல்லூரி தொடர்பான மோசடிகளை அறிகிறான். கசாப்புக் கடை வைத்திருந்த ரவுடியொருவன் தனது பலத்தின் மூலமும் அரசியல் தொடர்பின் மூலமும் கட்டியிருக்கும் வணிக சாம்ராஜ்யத்தை நாயகன் வீழ்த்தும் காட்சிகளோடு படம் நிறைகிறது. முதல் பாதி சென்னையிலும் பிற்பாதி நெல்லையிலும் நிகழுமாறு காட்சிகள் அமைகின்றன.

வெகுஜன மனநிலைக்கு இணக்கமான ஒரு திரைப்படத்தை உருவாக்குவது அத்தனை சுலபமான விஷயமில்லை. எந்த அடுக்கில் காட்சிகளை எப்படி அடுக்கினால் அவர்கள் ரசிப்பார்கள் என்பது தொடர்பான நுணுக்கங்கள் அத்துப்படியாக தெரிந்திருக்கவேண்டும். இயக்குநர் பரதனுக்கு இதில் அடிப்படையான திறமை வாய்த்திருக்கிறது. 'பைரவா'விலும் அப்படி ரசிக்கக்கூடிய சில காட்சிகள் இருக்கின்றன. இந்தக் கதை சொல்லும் திறமையை வைத்துக்கொண்டு ஒரு புதிய களத்தில், பாணியில் இறங்கி விளையாடினால் பார்வையாளர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். ஆனால் தேய்வழக்கான திரைக்கதை, காட்சிகளின் மிகையான வடிவமைப்பு போன்றவை சலிப்பூட்டுகின்றன.

விஜய்க்கு 42 வயதாகிறது. ஆனால் இன்னமும் தன் இளமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்பது ஆச்சர்யம். ஒரு காட்சியில் தன் சட்டையைக் கழற்றி விட்டு ஓடுகிறார். அவர் தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டிருக்கும் விதம் பாராட்ட வைக்கிறது. ஆனால் இளமை மாறாதிருப்பதைப் போலவே அவருடைய நடிப்பிலும் பல வருடங்களாக மாற்றமில்லை என்பதுதான் அதிகம் சோர்வூட்டக்கூடியது. 'பைரவா'வில் அவருடைய தலையில் 'விக்' சேர்ந்திருப்பதுதான் கவனிக்கத்தக்க மாற்றம்.
கீர்த்தி சுரேஷ் வழக்கமான நாயகி. சில கோணங்களில் அழகாகவே இருக்கிறார். ஜெகபதி பாபு வழக்கமான வில்லன். துணை வில்லனான டேனியல் பாலாஜி சிறிது வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் பாவம், அவரும்தான் என்ன செய்யமுடியும்?

Laughing gas துணை கொண்டு பாத்திரங்களைச் சிரிக்க வைப்பது போல சில காட்சிகள் வருகின்றன. சதீஷூம் தம்பி ராமையாவும் அவ்வாறே நம்மைச் செயற்கையாக சிரிக்க வைக்க முயல்கிறார்கள். ஒன்றும் தேறவில்லை. விஜயராகவன் போன்ற அற்புதமான மலையாள நடிகர்கள் எல்லாம் ஓரமாக வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
***
இதன் உருவாக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்களாக ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரையும் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் அனல் அரசுவையும் சொல்ல வேண்டும். இவர்களின் கூட்டணி ஒத்திசைவில் சண்டைக்காட்சிகள் மிகையாக இருந்தாலும் அனல் தெறிக்கிறது. ஆனால் இவர்கள் போன்றவர்களின் அசாதாரணமான உழைப்பு மோசமான திரைக்கதைகளுக்காக வீணாகிக்கொண்டிருக்கும் பரிதாபமும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிகழ்கிறது.

தாம் நிரம்பும் பாத்திரத்துக்கேற்ப நீர் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கேற்ப, சந்தோஷ் நாராயணன் போன்ற புதுமையான இசையமைப்பாளர்களும் வணிகப்படங்களுக்கேற்ப மாற வேண்டிய பரிதாபம். 'நில்லாயோ' பாடல் மட்டும் அருமை. 'காற்றின் உடலா, பெண்பால் வெயிலோ' என்று வசீகரிக்க முயன்றிருக்கிறார் வைரமுத்து. இதர பாடல்கள் சப்தங்களின் தொகுப்பு. 'வர்லாம் வா' பாடலும் அதன் இசையும் அவசியமான இடங்களில் படத்தின் விறுவிறுப்புக்கு நன்றாக உதவியிருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியில் வழக்கமான பின்னணி இசையாக அல்லாமல் மாறுதலான இசையை சந்தோஷ் முயன்றிருப்பது வரவேற்கத்தக்கது.

விறுவிறுப்பான காட்சியோடு தொடங்கும் திரைப்படம், கீர்த்தி சுரேஷ் தன் ஃபிளாஷ்பேக்கை விவரிக்கும் நீளமான பின்னணிக் காட்சிகளால் சுவாரசியத்தை இழந்துவிடுகிறது. பிறகு நாயகன் வில்லனை வெற்றி கொள்ளும் காட்சிகள். அத்தனை பலம் பொருந்திய வில்லனை ஒற்றை ஆளாக நாயகன் எதிர்கொள்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. எதிலுமே புதுமையோ, வித்தியாசமோ இல்லை. நாயகனின் உடலில் எரிபொருளை வீசி தீப்பற்ற வைக்கும் காட்சி சற்று ஆர்வத்தை தூண்டி, பிறகு எதுவுமே இல்லாமல் அணைந்து போகிறது. போலவே இதன் கிளைமாக்ஸ். இப்படியொரு உச்சக்காட்சியை சிந்திப்பதற்கெல்லாம் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் மூளையமைப்பும் துணிச்சலும் வேண்டும். திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நாயகியின் தந்தையே அங்குள்ள கல்லூரி மோசடிகளை அறியாத அப்பாவியாக இருக்கிறார் என்பது போன்று பல தர்க்கப் பிசிறுகள்.

சமூகப் பிரச்னைகளைத் தங்களின் வணிகத்துக்காகத் தந்திரமாகப் பயன்படுத்தும் இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய சோகங்களுள் ஒன்று.
Dailyhunt

பொங்கல் பண்டிகையைத் தவிர்க்கும் சிங்கிலிப்பட்டி கிராம மக்கள்: அசம்பாவிதம் நேர்வதைத் தவிர்க்க விநோதப் பழக்கம்

நாய் பொங்கலை சாப்பிட்டதால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக கடந்த 3 தலைமுறையாக பொங்கல் பண்டிகையைத் தவிர்த்து வரும் சிங்கிலிப்பட்டி கிராம மக்கள், நிகழாண்டும் பண்டிகை கொண்டாட்டத்தை வழக்கம் போல் தவிர்த்துள்ளனர். அதனால் பண்டிகைக்கு உரிய எவ்வித ஆரவாரமும் இன்றி சிங்கிலிப்பட்டி கிராமம் காட்சியளிக்கிறது.

நாமக்கல் அருகே சிங்கிலிப்பட்டி கிராமத்தில் கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் பண்டிகை கொண்டாடத்தை தவிர்த்து வருகின்றனர். அதுபோல, இந்தாண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் வழக்கம் போல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கூறியது: பொங்கல் பண்டிகை மற்ற கிராமங்களைப் போல் இக்கிராமத்திலும் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த மூன்று தலைமுறைகளாக பண்டிகை கொண்டாடுவது தவிர்க்கப்படுகிறது. மூன்று தலைமுறைக்கு முன்பு பொங்கல் பண்டிகை சமயத்தில் சுவாமிக்கு படைப்பதற்காக பானையில் பொங்கல் வைக்கப்பட்டிருந்தது. அந்த பொங்கலை ஏதேச்சையாக நாய் சாப்பிட்டது. அதையடுத்து, அதை அப்புறப்படுத்திவிட்டு மாற்றுப் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைக்கப்பட்டது. அச்சமயத்தில் கிராமத்தில் நன்றாக இருந்த பசு மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதன்காரணமாக அந்தாண்டு பொங்கல் பண்டிகை கைவிடப்பட்டது. எனினும், அதற்கடுத்தடுத்த ஆண்டுகளிலும் பொங்கல் பண்டிகை சமயங்களில் அசம்பாவம் ஏற்படுவது தொடர் கதையாகியது.

அதனால் கிராம மக்கள் முடிவு செய்து பண்டிகை கொண்டாட்டத்தை கடந்த 3 தலைமுறையாகத் தவிர்த்து வருகிறோம். கிராம மக்களின் பயத்தைப் போக்க அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். அப்போது அவரது வீட்டில் இருந்த பசு இறந்தது. அதனால் பண்டிகை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டோம். நாங்கள் மட்டுமின்றி கிராமத்தில் இருந்து வெளியேறியவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை என்றனர்.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் இளங்கோ கூறியது: மக்கள் மத்தியில் நிலவும் பயத்தைப் போக்க பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினேன். அப்போது மாடு இறந்தது. மாட்டின் வயிற்றில் இரும்புக் கம்பி சிக்கியதால் மாடு இறந்தது. பொங்கல் கொண்டாட்டத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இந்தாண்டு 15ஆம் தேதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த உள்ளேன் என்றார்.

Dailyhunt

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் யார்? உச்ச நீதிமன்றம் விளக்கம்

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் தொடர்பான விவரத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பை பொங்கல் பண்டிக்கை கொண்டாடப்படவுள்ள சனிக்கிழமைக்கு (ஜனவரி 14) முன்பாக அளிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நிராகரித்தது. இந்த அமர்வில் நீதிபதி ஆர். பானுமதி இடம் பெற்றிருந்ததார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கு தமிழகத்தில் நடைபெற்ற போது அப்போட்டிக்கு தடை விதித்த நீதிபதி ஆர்.பானுமதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்விலும் இருப்பதால், ஜல்லிக்கட்டு தீர்ப்பு சாதகமாக கிடைக்க வாய்பிப்பில்லை என்பது போல சில ஊடகங்களில் ஒரு பிரிவு ஆர்வலர்கள் வியாழக்கிழமை பேட்டியளித்தனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை காலையில் வழக்குகளை விசாரிக்கும் முன்பு, ஜல்லிக்கட்டு தீர்ப்பு விவகாரத்தில் நீதிபதி ஆர். பானுமதியின் பெயரை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகளுக்காக தனது அதிருப்தியை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ள நீதிபதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றச் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் சர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி ஆண்டு 7-ஆம் தேதி வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா பிராணிகள் நல அமைப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு (ரிட் மனு 242016) தொடுத்தன.

இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வே தீர்ப்பளிக்கும். இந்த அமர்வில் நீதிபதி ஆர். பானுமதி இடம் பெறவில்லை என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா கோரிக்கை: இதனிடையே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வகையில் மத்திய அரசு ஏதேனும் அவசரச் சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது எனக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, வழக்கின் மனுதாரரான பிராணிகள் நல அமைப்பான பீட்டா கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தின் நகலை தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கும் பீட்டா அமைப்பு அனுப்பியுள்ளது.
Dailyhunt

சசிகலா சொன்னது என்னாச்சு?: பொருமும் அ.தி.மு.க., தலைகள்



சென்னை: ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்த அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவியை பிடிப்பதற்காக சசிகலா தீவிரமாக களம் இறங்கிய போது, கட்சியின் மூத்த தலைவர்களான, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள், சசிகலாவை கடுமையாக எதிர்த்தனர். வாக்குறுதி: அது, பொதுக்குழுவில் பிரச்னையாக வெடிக்கலாம் என கருதிய சசிகலா உறவினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்து சமாதானம் பேசினர்.

அப்போது, அவர்களுக்கு கட்சியிலும் ஆட்சி - அதிகாரத்திலும் முக்கியத்துவம் அளிப்பதாக உறுதிமொழி அளித்ததாகக் கூறப்படுகிறது. நினைத்த மாதிரி, சசிகலா, பொதுக் குழுவால் தேர்வாகி விட்டார். ஆனால், உறுதி மொழி அளித்தபடி, மூத்த தலைவர்கள் யாருக்கும் கட்சியிலும்; ஆட்சியிலும் எந்தப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை.இதற்கிடையில், சசிகலாவை கடுமையாக விமர்சித்ததோடு, அவர் தலைமையை ஏற்றெல்லாம் தன்னால் செயல்பட முடியாது என, அதிரடியாக பேசினார் கட்சியின் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்.
வான் கோழி மயிலாகாது என்றெல்லாம், சசிகலாவை தரைமட்டத்துக்கு கீழே இறக்கிப் பேசினார். உடனே அவரை அழைத்துப் பேசிய சசிகலா, அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்ததும், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், சசிகலா மீதும், உறுதி மொழி அளித்த அவரது உறவுகள் மீதும் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களோடு நெருக்கமாக இருக்கும் சிலர் கூறியதாவது: சசிகலாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த செங்கோட்டையனுக்கு, கட்சியில் பொருளாளர் பதவியும் மீண்டும் வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியும் தருவதாக கூறியுள்ளனர். முடிந்தால் சசிகலா அமைச்சரவையில் துணை முதல்வர் வாய்ப்பும் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லி சமாதானப்படுத்தியே, அம்மாவுக்குப் பின் சின்னம்மாதான் என்று சொல்ல வைத்துள்ளனர்.

அதேபோன்ற உறுதி மொழிகளே கே.பி.முனுசாமிக்கும் அளிக்கபப்பட்டுள்ளது. கட்சியில் துணைப் பொதுச் செயலர் பதவியும் ஆட்சி - அதிகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இவர்களைப் போலவே, கட்சியில் அதிருப்தியுடன் இருந்து வரும் மூத்த தலைவர்கள் பலரையும் அழைத்து, சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்காக, நிறைய பேரிடம் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டது.

ஆனால், சொன்னபடி யாருக்கும் எதுவும் செய்யப்படவில்லை. அதேநேரம், சசிகலாவை கடுமையாக எதிர்த்தார்; விமர்சித்துப் பேசினார் என்பதற்காக, நாஞ்சில் சம்பத்தை அழைத்து பேசி, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளனர். அதையும் நினைத்து முத்த தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். இதனால், மீண்டும் சசிகலாவுக்கு எதிர்ப்பான நிலையை மேற்கொள்ளலாமா என, அவர்கள் ஆலோசிக்கத் துவங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரது அரசியல் எதிர்காலம் கடும் சிக்கலுக்குள்ளாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Dailyhunt

தீபாவுக்கு குவியும் கூட்டம்; குமையும் அமைச்சர்கள் 

DINAMALAR

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் குதிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், அவரது இல்லம் தேடி, தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சித் தொண்டர்களும், தீபாவின் பின்னால் அணி திரள தயாராகி விட்டனர். பல்வேறு இயக்கங்கள்: ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களும் தீபா பேரவை, அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா அ.தி.மு.க., என்று பல்வேறு பெயர்களில் இயக்கங்களை தன்னிச்சையாக துவங்கி உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள், தீபாவை தலைமையேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.தொண்டர்கள் இப்படி எல்லா எதிர்ப்புகளையும் மீறி, தீபா பின்னால் அணிவகுப்பது, தீபாவுக்கே ஆச்சரியமாக உள்ளது. அதனால், தீவிரமாக அரசியலில் ஈடுபடுவது குறித்து, அவர் ஆலோசித்து வருகிறார்.இந்நிலையில், கரூரிலும்; சென்னையிலும்; ஈரோட்டிலும் தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தைப் பார்த்து, ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் ஆடிப் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, அமைச்சரவை வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு செல்வாக்கை பெருக்க செய்ய வேண்டும் என, கட்சியினருக்கு, மேலிட உத்தரவாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து, கட்சிகளின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், சசிகலாவின் செல்வாக்கை பெருக்க நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், சசிகலாவின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக நிறைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர் 
ஆங்காங்கே உள்ள மாவட்ட அமைச்சர்கள்.தொண்டர்களை அழைத்தால், யாரும் வருவதில்லை. ஐநூறு ரூபாய் பணம்; அழைத்துச் சென்று, திரும்பி வந்து விடுவதற்கு வாகன வசதி; பிரியாணி பொட்டலம்; வாட்டர் பாட்டில் என, எல்லாவற்றையும் கொடுத்த பின்னரும், அமைச்சர்களால் பெரிய அளவில் கூட்டம் கூட்ட முடியவில்லையாம்.

தீபா ஆதரவாளர் கூட்டம்: சமீபத்தில் கரூரில், தீபா ஆதரவாளர்கள் கூட்டிய கூட்டத்திற்கு, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர், கைக் காசை செலவு செய்து, வந்தது, அரசியல் வட்டாரத்தை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. காலை நாலரை மணிக்கெல்லாம், தீபாவுக்காக போஸ்டர் ஒட்டி கேன்வாஷ் செய்யும் தன்னெழுச்சி தொண்டர்கள், அமைச்சர்களின் நிலைமையை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்கின்றனர்.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
Dailyhunt

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...