Saturday, January 14, 2017

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சீனிவாசு தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிலம்பாட்டம், கோலாட்டம், உறியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். மாணவிகள் பொங்கல் வைத்துகொண்டாடினர்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் குளோபல் பள்ளியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள் விகாஷ் சுரானா, சுரேஷ்கன்காரியா, அஸ்திமல் சுரானா, பி.ஜி.ஆச்சாரியா, முதல்வர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணையக் குழுச் செயலாளர் நீதிபதி எஸ்.கிரி கலந்து கொண்டு பேசினார்.

விழாவை, பள்ளி மாணவர்கள் பொங்கல் வைத்தும், நாற்று நட்டும் கொண்டாடினர்.

இதேபோல, செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிறுவனரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வீ.தமிழ்மணி தலைமை வகித்தார். முதல்வர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை, கல்வி மருத்துவ பண்பாட்டு அறநிலையத் துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். தாளாளரும், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவருமான கோ.ப.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
இதேபோல, மதுராந்தகம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை, பள்ளித் தாளாளர் டி.லோகராஜ் தலைமையில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

உத்தரமேரூரில்...

உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பென்னலூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை, தூய்மை பாரத இயக்கம் சார்பில் சுகாதார பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவானந்தம், ஊராட்சிச் செயலாளர் ராஜி, அரசினர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.
Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...