Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் குதித்த தமிழக அரசு ஊழியர்கள்.. நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைத்துறையினர், வழக்கறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி நாளை தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என் அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
source: oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...