Sunday, January 15, 2017

மழை, வெள்ளத்தால் அமெரிக்காவில் மூன்று மாகாணங்கள் பாதிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா, நவேடா, ஓரேகான் மாகாணங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கன மழையோடு, தொடர்ந்து பெய்த பனியும் சேர்ந்து கொண்டால், அந்த மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிபோய் உள்ளது.

சாலைகளில் தண்ணீர் பெருகியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆற்றங்கரையோரம் வசித்த 5000 பேரை கலிபோர்னியா மாகாண அரசு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளது.
முக்கியமாக, ஓரேகான் மாகாணத்தில் 60 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Dailyhunt

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....