Saturday, January 14, 2017

சேலத்தில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி



சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு முன்பு சிறு கன்றுகுட்டியை கிராம மக்கள் நேர்ந்து விட்டனர். இந்த கன்று வளர்ந்து காளையானதும் ஊர்மக்கள் நன்கு உபசரித்து வந்தனர். தங்களது வீட்டில் ஒரு உறுப்பினர் போலவே கோயில் காளையை நடத்தினர். கடந்த 17 ஆண்டுகளாக பொதுமக்களுடன் இணக்கமாக பழகி வந்த இந்த காளை நேற்று வயோதிகம் காரணமாக உயிரிழந்தது. இதனைக்கண்டு கொண்டயம்பள்ளி கிராம மக்கள் கண்ணீர் வடித்தனர்.

கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். அதன்படி, ஊரில் யாரும் வேலைக்கு செல்லாமல் துக்கம் அனுசரித்தனர். தொடர்ந்து மாட்டை குளிப்பாட்டி உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசினர்.
மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கொம்பு பகுதியில் வெள்ளிக்கொடிகளை கட்டி அலங்கரித்தனர். அதன் பிறகு, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றி கொண்டையம்பள்ளி ஏரிக்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்குள்ள மதுரகாளியம்மன் கோயில் வளாகத்தில் கோயில் காளை அடக்கம் செய்யப்பட்டது.

Dailyhunt

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....