Wednesday, January 18, 2017


#Jallikattu- பிரதமரை நாளை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பி.க்கள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், அ.தி.மு.க எம்.பி-க்கள் நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.

நாளை காலை 10 மணிக்கு, பிரதமரை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் சென்று ஜல்லிக்கட்டு மீதுள்ள தடையை நீக்கக் கோருவதே இந்த சந்திப்பின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றக்கோரி கடந்த வாரம் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் பிரதமரை சந்திக்கச் சென்றனர். அப்போது, பிரதமரை சந்திக்க முடியவில்லை.
இதனால், பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அதிமுக எம்பிக்கள் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...