Monday, January 16, 2017

பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் 'ஸ்வைப்' இயந்திரங்கள் பயன்பாட்டால் தீ விபத்து ஏற்படும் அபாயம்: எச்சரிக்கையை கண்டுகொள்ளுமா மத்திய அரசு?

க.சக்திவேல்

பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், அதன் மூலம் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தெளிவான வழிகாட்டுதல்களை எண்ணெய் நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து டெபிட், கிரெடிட் கார்டுகள், மொபைல் வாலட், இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, தற்போது பெரும்பாலான பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) அனுப்பிய கடிதத்தில், “பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடத்துக்கு அருகில் மொபைல் வாலட் பயன்படுத்தினால் அல்லது கார்டு ஸ்வைப் இயந்திரம் செய்தால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, அபாயகரமான பகுதியை குறிப்பிட்டு ஸ்வைப் மெஷின்களை பாதுகாப்பாக பயன்படுத்த விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கமும், தென்மண்டல தலைமை வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், “எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய விற்பனையாளர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டி அபாயகரமான பகுதி குறித்து தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தது.

விபத்து அபாயம்:

ஆனால், இதுவரை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் இடத்துக்கு அருகிலேயே தற்போது வரை ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச்செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களும், தமிழகத்தில் 4,570 பெட்ரோல் நிலையங்களும் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவற்றில் மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பயன்பாடு அதிகரிப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ஸ்வைப் இயந்திரங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்புவோரின் எண்ணிக்கை 35 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலிய விதிகள் 2002-ன்படி பெட்ரோல், டீசல் விநியோகிக்கும் இடத்துக்கு அருகில் அபாயகரமான பகுதிகளை குறிப்பிட்டு, அந்த பகுதியில் செல்போன், ஸ்வைப் இயந்திரம் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இந்த அளவீடுகள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.

விழிப்புணர்வு வேண்டும்

மேலும், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசலை டீலர்கள் விற்பனை செய்தாலும், வெடிபொருள் பாதுகாப்பு உரிமத்தை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) எண்ணெய் நிறுவனங்களுக்குத்தான் வழங்குகிறது. எனவே, அதைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே, ஸ்வைப் மெஷினை எவ்வளவு தூரத்தில், எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெறும் உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உருவெடுத்தது செயற்கையானது அல்ல. அமெரிக்காவைத் தாண்டியும் நேசிக்கப்பட்ட அதிபர் அவர். சவடால்களுக்காக அல்லாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக உலகின் கவனத்தை ஈர்த்த அதிபர் அவர்.

தன்னுடைய உரையில், தனது அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளைப் பட்டியலிட்டார். அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வைப் பற்றி எச்சரித்தார். இனரீதியான பிரிவினைகளைப் பற்றி நிதானமாக மக்களிடம் பேசினார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அவரது ஜனநாயகக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அவர் பதவியிலிருந்து இறங்குகிற இந்தச் சூழலில் குலைந்து கிடக்கிறது கட்சி. அரசியலில் தாக்கம் செலுத்துகிற பணத்தின் திருவிளையாடல்களைக் குறைப்பதன் மூலம் ஜனநாயக அமைப்புகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது கடைசி உரையில் கேட்டுக்கொண்டார். பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் அமெரிக்க நாடாளுமன்றம் திணறுவதைச் சமூகத்தின் அடித்தளத்தில் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் சரிசெய்ய வேண்டும் என்றார். தனது கொள்கைகளுக்கு முரணாக, அமெரிக்காவின் தேர்வாளர் சபையில் இனரீதியான பிளவுகள் அதிகரித்துவிட்டன என்பதை அவர் அறிவார். அவர் மனதுக்கு மிக நெருக்கமான, துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை அவரால், பெரிய அளவில் முன்னெடுத்தச் செல்ல முடியவில்லை. அதேசமயம், அவரைச் சங்கடத்தில் ஆழ்த்தினாலும், பொதுமக்களை அதிகமாகக் கொல்லக்கூடிய ஆள் இல்லாத விமானங்கள் போன்ற ட்ரோன் போர்க் கருவிகளைப் பயன்படுத்த அனுமதி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. அமைப்புக்குள் தன்னால அளவில் அவர் போராடினார் என்று சொல்லலாம். உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளில் மனதில் நிற்கக்கூடிய ஒரு தாக்கத்தை அவர் உருவாக்கினார்.

அமெரிக்காவைக் கடுமையான பொருளாதார மந்தம் தந்த அழுத்தத்தின் மத்தியில் அவர் வழிநடத்தினார். முதல் நான்கு ஆண்டுகளில் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர பணியாற்றினார். அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான நிறையச் சட்டங்களை அவர் உருவாக்கினார். அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியதுபோல, வேலையில்லாத் திண்டாட்டம் இன்றைய அமெரிக்காவில் பத்தாண்டு காலத்துக்கு முந்திய நிலைக்குக் குறைந்துள்ளது. மீண்டும் வளர்கிறது அமெரிக்கப் பொருளாதாரம்! வெளியுறவுக் கொள்கையில் ஈரான் அணு ஒப்பந்தம் தொடர்பில் அவர் பெருமைப்பட்டுக்கொள்வதில் நியாயம் உண்டு. அவர் கியூபாவைக் கெடுபிடி காலக் கட்டத்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஒசாமா பின்லேடன் மரணம் மூலம் அவர் நிறைவுரை எழுதினார். பகைமை நாடுகளான ரஷ்யா, சீனாவை எதிர்கொள்வதில் அவர் குறைவான திறன்கொண்டிருந்தார். அவரது மென்மையான அணுகுமுறையால் அந்த நாடுகள் பல விவகாரங்களில் அமெரிக்காவுக்குச் சவால் விடுத்துவிட்டுத் தப்பித்தன.

ஒபாவின் சாதனைகள், தோல்விகளுக்கான பெறுமதியை அவர் பெறாவிட்டாலும் ஒரு மனிதன் என்ற முறையில் அவரை மக்கள் எப்போதும் நினைவுகூர்வார்கள். ஆழமான சிந்தனையோடு செயல்பட்ட தலைமை அதிகாரியாக, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் நினைவுகூரப்படுவார். சமூக ஊடகங்களோடும் மக்களின் பண்பாட்டோடும் நல்ல உறவுகளைப் பேணிய 21 –ம் நூற்றாண்டு மனிதராக அவர் இருந்தார். துப்பாக்கிக் கலாச்சாரத்தாலும், இன வெறுப்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்தவராக அவர் இருந்தார். மக்களின் நினைவில் எப்போதும் அவர் இருப்பார்!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு: நிரந்தரமாக விலக்கு பெற புதிய சட்டம்; தமிழக அரசு தீவிர முயற்சி

சி.கண்ணன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தரமாக விலக்கு பெறும் வகையில் புதிய சட்டம் இயற்றும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த கல்வியாண்டில் (2016-17) தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் நிரப்பப்பட்டது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் மாநில அரசுக்கான 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளின் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலமாகவும், அரசு கல்லூரிகளில் தேசிய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் நுழைவுத்தேர்வு மூலமாகவும் நிரப்பப்பட்டன.

இந்த கல்வி ஆண்டுக்கான (2017-18) நீட் தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வர உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவது சம்பந்தமாக சட்ட நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்து அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவந்த பிறகுதான் நீட் தேர்வை நடத்த வேண்டும். இப்போது நீட் தேர்வு நடத்தினால் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ளதால், சென்னை போன்ற பெருநகரங்களில் பயிற்சி மையங்கள் அதிகரித்து வருகின்றன. வசதியான மாணவர்கள் அதில் சேர்ந்து வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழுக்குப் பெருமை!

By ஆசிரியர்  |   Published on : 16th January 2017 01:59 AM

இன்றைய உலகமய, தொழில்நுட்ப சூழலில், தமிழ்வழிக் கல்வி என்பது வருங்காலத்துக்கு உதவாது என்கிற கருத்தைப் பொய்யாக்கியிருக்கிறார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பதவி ஏற்க இருக்கும் நடராஜன் சந்திரசேகரன். தமிழகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகரனின் நியமனம் டாடா சன்ஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய திருப்பம். டாடா சன்ஸ் என்கிற 10,300 கோடி டாலர் (ரூபாய் சுமார் 7 லட்சம் கோடி) வர்த்தகக் குழுமத்தின் தலைவராக, பார்ஸி இனத்துக்கு வெளியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

டாடா சன்ஸ் என்பது இந்தியாவிலேயே மிகவும் பழைமையான, சர்வதேச அளவில் அறியப்படும் வணிகக் கூட்டாண்மை நிறு
வனம். இந்தக் குழுமத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் செயல்படுகின்றன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தக் குழுமத்தின் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்படுகிறார் என்றால் அது தமிழகத்திற்குப் பெருமை.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியிலும், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திலும் படித்து பொறியியல் பட்டமும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் முது   நிலைப் பட்டமும் பெற்றவர். 1987-இல் டாடா சன்ஸ் குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீஸில் சேர்ந்த சந்திரசேகரன், 2009-இல் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவராக உயர்ந்தவர். ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து டாடா நிறுவனத்திலேயே இருந்து வந்த அவருக்கு, இப்போது கிடைத்திருக்கும் தலைமைப் பதவி திறமைக்காக மட்டுமல்ல, விசுவாசத்திற்காகவும்கூட.

அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற சந்திரசேகரன் மட்டுமல்ல, அவரது இரண்டு சகோதரர்களும் இன்று மிகப்பெரிய நிர்வாகிகளாக வலம் வருகிறார்கள். அவரது மூத்த சகோதரர் சீனி
வாசன், முருகப்பா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவர். இன்னொரு சகோதரர் டாடா கன்சல்டன்சி சர்வீஸின் தலைமை செயல் அதிகாரி. இந்த மூன்று திறமைசாலிகளின் தந்தை எஸ். நடராஜன், வழக்குரைஞர் தொழிலிலிருந்து ஓய்வுபெற்று மோகனூரில் விவ
சாயத்தில் ஈடுபட்டவர். 85 வயது நடராஜனுக்கும், 82 வயதான மீனாட்சிக்கும் தமிழகமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

சர்வதேச வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்ததற்கும், புதிய சந்தைகளைத் தனது நிறுவனத்திற்குத் தேடித் தந்ததற்கும் அவரது நிறுவனத்தால் பாராட்டப்படுபவர் சந்திரசேகரன். தனது நிறுவனத்திற்கு வெளியே இருந்து ஒருவரைத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுப்பதைவிட, ஊழியர்களில் ஒருவரையே டாடா சன்ஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்கு, அந்த நிறுவனத்தின் கொள்கைகள், அடிப்படை குணாதிசயங்கள், மக்கள் மத்தியில் அந்த நிறுவனத்தின் பொருள்களுக்கு இருக்கும் மரியாதை ஆகியவற்றை நன்கு உணர்ந்த, நிறுவனத்தின் மீது விசுவாசமுள்ள ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்பதுதான் காரணம். இதற்கு முன் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சைரஸ் மிஸ்திரியிடம் இவை காணப்படவில்லை என்பதுதான் அவர்மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு.
கடந்த சில ஆண்டுகளாக, டாடா நிறுவனம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமைந்த நீரா ராடியா விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போது சைரஸ் மிஸ்திரியின் நீக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை, அந்தக் குழுமத்தை நீதிமன்றத்திற்கும், நிறுவன சட்ட ஆணையத்திற்கும் இழுத்திருக்கிறது.

வியாபார ரீதியாகப் பார்த்தால், சர்வதேச இரும்பு உருக்கு நிறு
வனமான கோரûஸ வாங்கியதால் ஏற்பட்ட பேரிழப்பும், ஜப்பானிய நிறுவனமான டொக்கோமோவுடனான பிரச்னையும் புதிய தலைவரை எதிர்கொள்கின்றன. டாடா நிறுவனத்தின் ஹோட்டல், மோட்டார் வாகனம், விமானப் போக்குவரத்து போன்றவற்றின் செயல்
பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தி, அந்தத் துறைகளில் முன்னணி நிலையை அடைந்தாக வேண்டும். முதலீட்டாளர்கள், பங்குதாரர்
களின் நம்பிக்கையைப் பெறுவது என்பது இன்னொரு சவால்.
நிர்வாக செயல்பாடுகள் மூலம்தான் இழந்த நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க முடியும்.

சைரஸ் மிஸ்திரியின் மிகப்பெரிய குற்றச்சாட்டே, தன்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்பதுதான். நிச்சயமாக ரத்தன் டாடாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா சன்ஸின் இயக்குநர் குழுவின் தலையீடுகளை சந்திரசேகரன் ஆரம்ப கட்டங்களில் சகித்துக் கொண்டாக வேண்டும். இந்த நிறுவனத்தின் அடிமட்டத்
திலிருந்து உயர்ந்திருப்பவர் என்பதால் அது சந்திரசேகரனுக்கு சிரமமானதாக இருக்காது. சைரஸ் மிஸ்திரிபோல இவர் "உங்களுக்கு மேலே' என்கிற மனப்போக்கில் செயல்பட மாட்டார் என்பது
நிச்சயம்.

சந்திரசேகரன் ஒரு புகைப்படக் கலைஞரும், சங்கீத ரசிகரும் மட்டுமல்லாமல் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியவரும்கூட. ஆம்ஸ்டர்டாம், பாஸ்டன், சிகாகோ, பெர்லின், மும்பை, நியூயார்க், டோக்கியோ ஆகிய நகரங்களில் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருப்பவர்.

அவற்றையெல்லாம்விடப் பெரிய, சிரமமான மாரத்தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவி. திருக்குறள் கற்று வளர்ந்த இந்தத் தமிழருக்கு "ஞாலம் கருதினும் கைகூடும்' என்பது தெரியும். அவருக்கு "தினமணி'யின் வாழ்த்துகள்!

Sunday, January 15, 2017

ஊழலற்ற அரசியல் கொள்கைக்காக போராடியவர் சோ: மோடி புகழாராம்

சென்னை: 'நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காக போராடியவர் சோ' என்று பிரதமர் மோடி புகழாராம் சூட்டினார்.துக்ளக் இதழின் 47 வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை ஆற்றினார்.
 
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: பன்முகத் தன்மை கொண்டவர் துக்ளக் ஆசிரியராக இருந்த சோவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்கும் சோவுக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் பல ஆண்டுகள் நட்பு உண்டு. என் வாழ்வில் நான் சந்தித்த பன்முகத் தன்மை கொண்ட சிலரில் சோவும் ஒருவர். பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர், கதாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகள் கொண்டவர். பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் துக்ளக் ஆசிரியர் என்ற பொறுப்பு அவருக்கான மணி மகுடமாகும். ஊழலற்ற அரசியலுக்காக போராடியவர் நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் விமர்ச்சித்தவர். விமர்ச்சிக்க கடினமான விசயங்களையும் ஒரே வரி, கருத்து சித்திரம் மூலம் எளிதாக புரிய வைத்தவர். விமர்ச்சிக்கப்பட்டவர்கள் கூட விரும்பும் தன்மை கொண்டவர்.

சோவின் விமர்சனத்தை தவிர்த்துவிட்டு இந்திய அரசியல் வரலாற்றை எழுத முடியாது. நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காகவே போராடியவர். சோவின் மறைவு துக்ளக் பத்திரிக்கைக்கு மிகப்பெரும் இழப்பு. சோ காட்டிய பாதையில் துக்ளக் ஆசிரியராக குருமூர்த்தி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

குருமூர்த்திக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தன் உரையை துவக்கினார்.
Dailyhunt

குடும்ப அரசியலை பார்த்துக் கொண்டு துக்ளக் சும்மா இருக்காது - ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு

சென்னை: துக்ளக் இதழில் 47ஆவது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஆசிரியர் சோ. ராமசாமியின் மறைவிற்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தும் விழாவாகவே இது அமைந்தது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
இதில் துக்ளக் இதழில் புதிய ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசினார். அப்போது அவர் இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியல் திசை தவறி தறி கெட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

துக்ளக்கில் என்ன எழுத வேண்டும் என்பதை ஒரு குழுவாகவே முடிவு செய்கிறோம். தனி குரு மூர்த்தியின் சிந்தனை மட்டுமல்ல. இது குழுவின் முடிவு.

அவரவர் ஒரிஜினாலிட்டியை பயன்படுத்துகிறோம் என்றும் கூறினார். சோ அவர்கள் குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப அரசியலுக்குள் போய்க் கொண்டிருந்தது. இன்றைக்கு இன்னொரு கட்சியும் குடும்ப அரசியலுக்குள் போய்க்கொண்டிருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறினார்.

இதைப் பார்த்துக்கொண்டு துக்ளக் சும்மா இருக்காது என்று தெரிவித்த குருமூர்த்தி, எனக்கு ஏன் வம்பு என்று என்னிடம் வந்து சிலர் பேசுகின்றனர். அவர்களிடம் எல்லோரும் பயப்படுவதினால்தான் நான் எழுதுகிறேன் என்றார்.
பத்திரிகை உலகில் ஒருவித பயம் தெரிகிறது. எதிர்த்து பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. நம் நாட்டின் ஆன்மீக குணத்திற்கு நல்லதல்ல எந்த விதமான நல்ல குணத்திற்கும் நல்லதல்ல. இதற்கெல்லாம் மாற்று மருந்து இன்றைக்கு இருக்கிற துக்ளக்தான் என்றும் கூறி அமர்ந்தார் குருமூர்த்தி.
தை பொங்கல் நாளில் துக்ளக் ஆண்டுவிழாவில் சோ பேச்சில்தான் நக்கல், நையாண்டி, அரசியல் கலந்து அனல் பறக்கும். அவரது மறைவிற்குப் பிறகு நடக்கும் முதல் விழாவில் குருமூர்த்தி பேசியது பரபரப்பை பற்ற வைத்து விட்டது என்றே கூறலாம்.
source: oneindia.com
Dailyhunt

மழை, வெள்ளத்தால் அமெரிக்காவில் மூன்று மாகாணங்கள் பாதிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா, நவேடா, ஓரேகான் மாகாணங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கன மழையோடு, தொடர்ந்து பெய்த பனியும் சேர்ந்து கொண்டால், அந்த மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிபோய் உள்ளது.

சாலைகளில் தண்ணீர் பெருகியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆற்றங்கரையோரம் வசித்த 5000 பேரை கலிபோர்னியா மாகாண அரசு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளது.
முக்கியமாக, ஓரேகான் மாகாணத்தில் 60 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Dailyhunt

Endoscopic camera used to copy paper in sealed packet CM orders probe

Endoscopic camera used to copy paper in sealed packet CM orders probe 23.08.2026 Raipur: A tiny endoscopic camera was allegedly slipped thro...