Wednesday, February 1, 2017

ரூ.2.5 - 5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5% வரி குறைப்பு: வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

இணையதளச் செய்திப்பிரிவு

தனி நபர் வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10%-ஆக இருந்த வருமானவரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது என்று பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய சூழலில் மாத வருமானம் பெறுபவர்கள் மீது அதிக வரிச்சுமை இருந்து வருகிறது. எனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தப் பிரிவினர் தங்கள் வரிச்சுமையைக் குறைக்க எதிர்பார்க்கின்றனர். 

எனவே தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு இதுவரை 10% வரி விதிக்கப்பட்டு வந்தது, இது இனி 5% ஆக குறைக்கப்படுகிறது. இதனால் வரி செலுத்தும் பிரிவுக்குள் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.12,500 பயன் கிடைக்கும்.

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டிவருபவர்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. 80சி பிரிவின் கீழ் விலக்குகள் அதிகரிக்கப்படவில்லை, எனவே வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. ரூ.1 கோடிக்கும் மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோருக்கான 15% கூடுதல் வரி தொடர்கிறது. 

வரிவருவாயைக் கண்காணிக்க அரசு தரவு பகுப்பாய்வு முறையை பயன்படுத்துகிறது. நேரடி வரி வருவாயில் நிகர இழப்பு ரூ.20,000 கோடி, மறைமுக வரியில் இழப்புகள் எதுவும் இல்லை

Chennai cops stop students' protest against jallikattu violence at Madras University


CHENNAI: A day-long sit-in protest planned by 20 students on the premises of Madras University against the alleged atrocities on pro-jallikattu protesters and fishermen, was stopped by police after it went on for some time on Tuesday.
The demonstration was held for nearly two hours, a participant said.
The students started the protest at 10:30 am. They wanted to continue till the evening, but police intervention prevented them from doing so.
According to students, police stopped the protest citing a prohibitory order under section 144 CrPC in force.
“The protest lasted only for two hours. The police said section 144, which was implemented on Marina beach, was applicable on Madras University campus as well,” said S R Pearson, a protester.
The students continued arguing with the police for half an hour until the university Registrar convinced them that their demands will be forwarded to the Chief Minister. “We expected around 100 students to turn up for the protest, but only a very few came because of police presence,” he said.
“We cannot protest on our own campus. Police officials say the prohibitory order implies even on the campus,” said another student, requesting anonymity.
The demonstrators said students who took part in the pro-jallikattu protest and were arrested should be released. The government should provide compensation to them immediately. “Through this protest, we are also showing our support to fishermen and Dalits, who were attacked during the protest. The government should set up a  judicial committee to go into the atrocities by  police and suspend the Chennai Police Commissioner and the officials who were involved in this brutality,” the protesters said.
“We are neither anti-social nor anti-national,” said  a student. He said the Registrar, P David Jawahar, intervened and requested police to leave.

Supreme Court refuses to stay Tamil Nadu's Jallikattu ordinance


By Express News Service  |   Published: 31st January 2017 05:54 PM

NEW DELHI: In a major relief to the thousands of protestors favouring the bull taming sport Jallikattu in the Southern state of Tamil Nadu, the Supreme court on Tuesday refused to stay the ordinance passed by the state assembly for now.
A bench of Justices Dipak Misra and Rohinton Nariman though refused to stay the ordinance but agreed to hear the pleas filed by animal rights groups and issued a notice after six weeks.
During an hour-long hearing, the bench pulled up the state government for its new law and asked: “ What is the necessity for Tamil Nadu government to bring an Act allowing jallikattu?"
The court also rapped up Tamil Nadu for hurriedly passing a law following large-scale protests in the state, saying, “If Tamil Nadu government brought new legislature allowing jallikattu due to the protests, then how could it have criticised Karnataka in the Cauvery case?”
The bench also expressed concern over the violent protests due to which law and order in the state was not maintained and remarked, "SC says that protesting is different, but coming on the street and openly defying the SC order is intolerable."
Centre represented by attorney general Mukul Rohatgi said, "Our constitution allows preservation of culture and animal breeds.Jallikattu would conserve bull breeds."
AG also added law permits killing animals for consumption but at the same time prohibits cruelty towards them.
The court also allowed centre's plea for withdrawal of its notification that exempted jallikattu from the list of prohibited animal sports under law.
The apex court was hearing the petitions filed by the Animal Welfare Board of India and other groups, which challenged Tamil Nadu’s jallikattu legislation. The animal welfare groups contended that the hastily passed law was against the Supreme Court’s order that had held jallikattu inherently cruel to animals.

யாது ஊர்? யாவர் கேளிர்?

By ஆசிரியர்  |   Published on : 01st February 2017 03:00 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்திருக்கும் நிர்வாக முடிவால் உலகமே கொந்தளித்துப் போயிருக்கிறது. ஈரான், இராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய ஏழு முஸ்லிம் நாட்டுப் பயணிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு, அதிபர் டிரம்பின் அரசு நிர்வாக தடையாணை பிறப்பித்திருக்கிறது. எகிப்து, சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய இஸ்லாமிய நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெறாததற்கு, ஒருவேளை, அந்த நாடுகளுடனான பொருளாதார நெருக்கமும், வேறு சில கட்டாயங்களும் காரணமாக இருக்கலாம்.
அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாகவோ என்னவோ, இத்தனை நாளும் இல்லாமல் பாகிஸ்தான் பயந்து போய் மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான முக்கியக் குற்றவாளி ஹபீஸ் சையதையும் அவரது நான்கு கூட்டாளிகளையும் காலவரையின்றித் தடுப்புக் காவலில் வைத்திருக்கிறது. எத்தனையோ அழுத்தங்களுக்கு செவிசாய்க்காத பாகிஸ்தான் இப்போது விரைந்து செயல்பட்டிருப்பதிலிருந்து, அடுத்து தானும் அதிபர் டிரம்பின் வெறுப்புப் பட்டியலில் இடம் பெற்றுவிடக் கூடாது என்கிற அச்சம் மட்டுமே காரணமாக இருக்கக்கூடும்.
அடுத்த 120 நாள்களுக்கு, அதாவது நான்கு மாதங்களுக்கு, அகதிகள் அமெரிக்காவில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, சிரியா அகதிகளுக்கான எல்லா திட்டங்களும் முடக்கப்படுகின்றன. அதிபர் டிரம்பின் உத்தரவு வெளிநாட்டில் மட்டுமல்லாமல், அமெரிக்காவிலேயே மிகுந்த புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்த முடிவுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க தகவல் தொலைத்தொடர்பு, திரைப்படம், கல்வி, மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் தொழிலதிபர்களும் இந்தத் தடைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்கா எப்படி உருவானது என்கிற சரித்திரம், அந்த நாட்டின் அதிபரான டொனால்ட் டிரம்புக்குத் தெரியாமல் இருக்காது. இப்போது குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் மூதாதையரே ஒரு காலத்தில் அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான். 1540 முதல் 1924 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் பூர்வ குடியினரான செவ்விந்தியர்களைத் திட்டமிட்டுக் கொன்று குவித்து, ஐரோப்பாவிலிருந்து குடியேறிய வெள்ளையர்கள் அமெரிக்காவைத் தங்களது நாடாக மாற்றிக் கொண்டார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.
பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களில் கணிசமானவர்கள், அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் என்பதுதான் அதைவிட விசித்திரம். இணையத்தில் காணப்படும் சாண்ட் க்ரீக் மாசக்கர் உள்ளிட்ட அமெரிக்க இந்தியப் போர்கள் பற்றிய தகவல்களைப் படித்துப் பார்த்தால், அமெரிக்கப் பூர்வ குடியினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான இனப் படுகொலை குறித்துத் திடுக்கிடும் தகவல்கள் தெரியும்.
அதிபர் டிரம்புக்குத் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொழிலாளர்களும், நடுத்தர, அடித்தட்டு அமெரிக்கர்களும் அவரது அதிரடி முடிவை உணர்ச்சி மிகுதியால் வரவேற்கலாம். ஆனால் இந்த முடிவு அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைக்கக் கூடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்துமே குடியேறியவர்களின் அறிவாலும், திறமையாலும், உழைப்பாலும்தான் அமெரிக்காவை உலக வல்லரசாக வைத்திருக்கின்றன.
கடந்த எட்டு ஆண்டுகளில், அமெரிக்காவில் எந்தவொரு பெரிய தீவிரவாதத் தாக்குதலும் நடைபெறாத நிலையில் அதிபர் டிரம்ப் எடுத்திருக்கும் முடிவு, தீவிரவாதிகளை அமெரிக்காவைக் குறிவைக்கத் தூண்டும் என்பதுடன், அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையிலுள்ள இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மூளைச் சலவை செய்து அணி சேர்க்கவும் உதவக்கூடும். இஸ்லாமியத் தீவிரவாதத்தின் பிடியில் ஒரு சில நாடுகள் சிக்கிக் கொண்டிருப்பதால், அந்த நாட்டிலுள்ள அத்தனை பேருமே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது அமெரிக்கா போன்ற ஒரு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது.
அதிபர் டிரம்பின் முடிவு, அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றுகூடத் தோன்றுகிறது. 1965-இல் இதேபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டபோது, எவர் ஒருவருக்கும் இடம், பால், குடியுரிமை, பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நுழைவு அனுமதி மறுக்கப்பட முடியாது என்று நீதிமன்றத்தால் அமெரிக்க அதிபரின் ஆணை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நியூயார்க், வர்ஜீனியா, மஸாஸýசெட்ஸ் ஆகிய மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்கள், விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கி இருக்கின்றன.
அதிபர் டிரம்பின் முடிவால் பிற தரப்பினரைவிட அதிகமாக பாதிக்கப்படப் போவது அமெரிக்காவாகத்தான் இருக்கும். அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிபர் டிரம்பிடம் காணப்படும் மனநிலை காணப்படுகிறது என்பதுதான் வேதனை. சிறுபான்மையினரின் அச்சம் என்பது போய், பெரும்பான்மை மக்கள், குடியேற்றத்தின் காரணமாகத் தங்களது பெரும்பான்மை போய்விடுமோ, கலாசாரப் பண்பாடுகளும், மதமும் பாதிக்கப்படுமோ என்று அச்சப்படுவதன் விளைவுதான் இந்த மனநிலை.
இனத்தையும் மதத்தையும், மொழியையும் மீறி, சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனார் கூறியதுபோல, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்கிற மனநிலை ஏற்பட்டாலொழிய இந்த நோய்க்கு மருந்து இருப்பதாகத் தெரியவில்லை!

All eyes on the Centre as TN brings bills to sidestep NEET

By Ram M Sundaram  |  Express News Service  |   Published: 01st February 2017 05:25 AM

CHENNAI: Close on the heels of amending a Central Act to enable the conduct of jallikattu, Tamil Nadu government on Tuesday introduced two bills in the Assembly to exempt medical aspirants in the State from appearing for the National Eligibility cum Entrance Test (NEET), made mandatory by the Supreme Court, for both graduate and postgraduate courses.
According to the bill, students would be selected for MBBS and BDS on the basis of Plus Two marks while for the PG courses, besides an entrance examination work experience of candidates would be taken into account as was the case before the apex court ruling.
However, unlike in the case of jallikattu where the Centre and State moved in tandem, there are uncertainties over these bills getting clearance.
“The Supreme Court had ruled against providing exceptions to any state. So we have to look closely at the bill that the Tamil Nadu government introduced in the Assembly before clearing it,” Union Health secretary CK Mishra told Express.
The Tamil Nadu Admission to MBBS and BDS Courses Act, 2017, proposes to fill 85 per cent of seats based on Class XII scores through a single-window counselling. The scores of students from other boards would be normalised. The remaining 15 percent would continue to be filled based on All India Pre Medical/Dental Test (APIMT) results.
Under the Tamil Nadu Admission to Post Graduate Courses in Medicine and Dentistry Act, 2017, admissions would be based on the candidates’ scores in State-level entrance test and work experience.
While self-financing colleges have to surrender half the seats to the government, it is 65 per cent for non-minority institutions. There would be no change in reservation policy.
Introducing the bills in the Assembly, Health Minister C Vijayabaskar noted that the policy decision was arrived at to protect the interest of students from poor and rural background, who have little or no access to coaching classes to crack the national common test.
In Tamil Nadu, majority of students study in State syllabus whereas the NEET is mostly based on CBSE content. This, the government argued, was disadvantageous to majority students in Tamil Nadu. On the other hand, he added, Class XII exam itself was a serious examination of merit, which obviated the need for NEET that might create additional stress.
Last April, in an attempt to bring in uniformity in medical admissions, the Supreme Court had made common national level test mandatory. Tamil Nadu among other states opposed it and government-run institutions here were exempted from uniform entrance test for a year.

தமிழர்தம் வீரச் செருக்கு

By நெல்லை சு. முத்து  |   Published on : 01st February 2017 03:02 AM 
மாணவர்கள் தன்னெழுச்சி என்று தொடங்கி, இளைஞர்கள் போராட்டம் என்று அதரவு பெருகி, சமூகவிரோத ஊடுருவல், ஆர்ப்பாட்டம் என்று கலைக்கப்பட்ட நிகழ்வு ஜல்லிக்கட்டு.
அதில் தங்களை ஐக்கியப்படுத்தி கொண்ட திரைத்துறையின் முன்னணி நாயகர்கள் முதல் பின்னணி இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் பலரும் போராட்டத்தை முடித்துவைத்து அறிவித்தனர். கட்சிக் கொடிகள், தலைவர்கள் இல்லை. ஆனாலும் ஒரு சாராரிடையே அரசியல் இல்லாமல் இல்லை. பிரதமர், முதல்வர், கட்சிப் புதுச்செயலாளர், ஆட்சியாளர் அனைவரும் விமர்சனத்திற்கு உள்ளாயினராம்.
விவசாயிகள் தற்கொலை பற்றி கவலைப்படுவோர், விவசாய நிலங்களைப் பட்டா போட்டு விற்றவர்களுக்கும் வலைவிரிக்க வேண்டுமே. கண்மாய்களின் கண்களை கிரானைட் கற்களால் அடைத்தவர்களை விட்டுவிட்டு, வேணான் மாடுகள் பற்றி வீரம் பேசுவானேன்? ஆற்றுமணலை ஆள்வைத்து அள்ளி வழங்கும் வள்ளல்களுக்கும் அணைநீர்த் தாகம் வாழ்வில் வரவே வராதா?
தேசியக் கொடியை அவமதிக்க எத்தனித்த விஷமிகளைத் தாங்களாகவே முன்வந்து சிலரேனும் அப்புறப்படுத்தி இருக்கலாம் அல்லவா?
1960-ஆம் ஆண்டுகளின் இறுதியில் திருநெல்வேலி சாப்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசான் அருணாசலம் ஐயா, மாணவர்களை "ஏய் மாடு' என்றுதான் திட்டுவார். கேட்டால், "மாடு என்றால் செல்வம் என்று பொருள்' என்பார்.
சங்கப் பாடல்களில் ஏறு தழுவுதல் என்பது கலித்தொகையில் காடு சார்ந்த முல்லைக் கலியின் மட்டுமே இடம்பெறுகிறது. மாட்டுச் சந்தையில் (மந்தையாகச் செல்பவை மந்திகள் மட்டும் அல்லவே!) தனியே வளர்க்கப்படும் காளைக்குப் போர்ப் பயிற்சி தரப்படும். இதனை அடக்கியவனுக்கே செல்வப் பெருமக்கள் தங்கள் பெண்மக்களை மணம் செய்விப்பது வழக்கம். இது சுயம்வரப் போட்டிக்கான விளையாட்டு.
பல்லுயிரிப் பெருக்கத்தின் ஆரம்ப அறிவியல் விளையாட்டு. சர் ராபர்ட் பேக்வெல் (1725 - 1795) என்பவர்தான் முதன்முதலில் விலங்குகளின் கலப்பின விருத்திக்கு நவீன அறிவியல் அங்கீகாரம் வழங்கியவர். தமிழர் அதனை ஏறு தழுவல் என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக நடத்தி வந்தனர்.
பின்னாளில் தமிழர் பண்டிகையான பொங்கல் திருவிழாவில் துணிப் பொதியில் கட்டப்பட்ட ஜல்லிக்காசுகளை எடுக்கவும் பொறுக்கவும் ஏறு தழுவினர். இது எருதுகட்டு என்றும் சுட்டப்பெறும். காளை விரட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு என்றும் பல பெயர்கள்.
இங்கு வீர்யம் என்ற சொல் அடிப்படையில் வீரம் பிறந்தது. அதன் உரிசொல் சார்ந்து, வைரம் பாய்ந்த மரம், நெஞ்சுரம் என்று எல்லாம் பேசினோம். ஆனால், தொல்காப்பியம் காட்டும் வீரம் பற்றியும் தமிழ் இளைஞர்கள் அறிந்து கொள்ளலாமே.
"தொல்காப்பியர் ஒவ்வொரு வீரமும் தோன்றுவதற்கு மூலமான பொருள்கள் நன்நான்கு கூறுகின்றார். அவர் வீரம் என்பதைப் பெருமிதம் எனும் சொல்லால் குறிக்கின்றார். யாவரொடும் ஒப்ப நில்லாது மேம்பட்டு நிற்றலின் பெருமிதம் என்னும் சொல்லால் வீரம் குறிக்கப்படுகின்றது.
கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கும் பற்றிப் பெருமிதம் பிறக்கும் என அவர் கூறியுள்ளார். எனவே போர்ச் செயலிற் காட்டும் ஆண்மையை மட்டுமே அவர் வீரம் எனக் கொண்டிலர் என்பது பெறப்படும்' - என்று நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் "வீரச்சுவை' பற்றி எழுதுகின்றார்.
அதிலும், "பேராண்மை என்ப தறுகண்' என்கிறார் வள்ளுவர். பகைவர்க்கு உதவுவதும் வீரம் தானாம். அவ்வாறே, வி-என்று சொன்னதும் பறந்து சென்று வரிசையில் நின்று விருது வாங்குவது வீரம் அல்ல. கொடுத்த விருதுக்கு தான் தகுதி உடையவர்தானா என்று பகுத்தறிந்து பார்த்து அதை மறுத்தலும் தமிழர்தம் வீரச்செருக்கு அல்லவா?
ஜல்லிக்கட்டு விளையாட்டினால் காளைகளின் ஆண்மையும் பெருகுமாம். நூற்றாண்டுக்கு முன்னர் நம் நாட்டில் 130 வகையான பசுக்கள் இருந்தனவாம். இன்றைக்கு வெறும் 37 தான் இருக்கின்றனவாம். சாகித்ய விருதாளர் கலைமாமணி ஆ. மாதவனின் "காளை' என்ற சிறுகதையினை இந்த வகையில் நினைத்துப் பார்க்கலாம்.
கேரளத்தில் ஆண்மை உடைய காளையை வளர்க்க இயலாது. அதனை அறிந்தால் அந்தக் காளைக்கு "காய் அடித்து' மலடு ஆக்கிவிடுவர். இதுதான் அமெரிக்கவாழ் இந்தியக் "காளை'களின் இன்றைய அவல நிலை.
ஜெர்சி முதுகில் இந்திய மாடுகளைப்போல் திமில் கிடையாது. நீண்ட உருளை போன்ற உடல், கழுத்தின் அடியில் தொங்கு சதையும் இல்லை. அமெரிக்காவின் ஜெர்சி கலப்பின மாடு குறுகிய காலத்திற்கு மட்டுமே நிறைய பால் தரும். தொடர்ந்து சில நூறு மாடுகளை உடனடியாக இறக்குமதி செய்ய நேரும். ஆக, அமெரிக்க வியாபாரம் இங்கே அமோகமாக நடக்கும்.
பொதுவாக, பாலில் ஆறு புரதச் சத்துகள் அடங்கி உள்ளன. அவற்றில் முக்கியமாக நான்கு காசீன் புரதங்களும், மோரில் இரண்டு புரதங்களும் அடக்கம். பாஸ்ஃபோ - புரதம் ஆகிய இந்தக் காசீன் புரதம் பசும்பாலில் 80%, தாய்ப்பாலில் 20-45% உள்ளது.
அதிலும் குறிப்பாக, "பீட்டா' காசீன் (இந்த பீட்டா கிரேக்க அகரமுதலியின் இரண்டாம் எழுத்து என்க) பாலில் ஏ1, ஏ2 என்று இரண்டு வகை பால் உண்டு. ஏ2 பால் உடலுக்கு நல்லது. அது 67% புரோலின் என்கிற அமினோ அமிலம் கொண்டது. அதற்குப் பதில் ஹிஸ்டாடின் என்ற அமினோ அமிலம் கொண்ட மனிதனுக்கு தீங்கு தரும் பால்தான் ஏ1 வகை பால்.
வெளிநாட்டு மாட்டுப் பாலில் ஏ1 வகை கூடுதலாக உள்ளது. இது, வயிற்றில் "பீட்டா காúஸாமார்ஃபின்7' (பி.சி.எம்.7) போன்ற பெப்டைடுகளாக உருமாறும். இந்த பி.சி.எம்.7 பிசாசுதான் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். நீரிழிவு நோய், இதயநோய், சிசோஃப்ரெனியா நோய் எனும் மனப்பிரமை (இது உள்ளவர்கள் காதில் இறந்தவர்களின் ஆவி பேசுவது, அவர்கள் கண்முன் பெட்டிகள் நகர்வதுபோல் எல்லாம் பிரமை உண்டாகும்) மற்றும் "ஆட்டிஸம்' என்கிற தன்மனன நோய் (தங்களுக்குள் சுய உலகில் சஞ்சரிக்கும் ஒருவகைப் பித்தம்) போன்ற பல தீமைகள் விளைய வாய்ப்பு உள்ளதாம். ஆனாலும் இத்துறையில் முழுமையான ஆய்வுகள் தேவை என்கின்றனர் உயிரி மருத்துவர்கள்.
இன்கிரீட் நியுகிர்க் என்ற பெண், தனது 31-ஆம் வயதில் ஸ்டீவ் நியுகிர்க் என்ற முதல் கணவனைக் கை விட்டார். அதே ஆண்டு தனக்கு இனி குழந்தைகளே வேண்டாம் என்று கருத்தடையும் செய்து கொண்டார்.
அன்று முதல் விலங்குகளைக் காதலித்தவர், 1980-ஆம் ஆண்டுவாக்கில் அலெக்ஸ் பாச்சியோ என்பவரைச் சந்தித்தார். அவர் "அலெக்ஸ் என்கிற அப்துல்' ஒரு தேவ
தூதன் என்கிறார். அலெக்ஸ், நண்டு தின்னிக் குரங்குகள் வளர்ப்பதில் அலாதி அக்கறை கொண்டவர்.
இருவரும் இணைந்து "பீட்டா' என்றஅமைப்புக்கு வித்திட்டனர். "பீப்பிள்
ஃபார் எத்திக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ்' - பீட்டா. அதாவது விலங்குகளை அறவழியில் கையாளும் மக்கள் இயக்கம்.
2016-ஆம் ஆண்டு பீட்டா அமைப்புத் தலைவருக்குச் சம்பளம் 40,320 டாலர். இந்த அமைப்பின் அசையாச் சொத்துகள் ஏறத்தாழ 100 கோடி ரூபாய். ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்.
"பீட்டா' என்ற அமைப்பு, 1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் நார்ஃபோர்க் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. "விலங்குகள் நாம் உண்பதற்கும், உடுத்துவதற்கும், பரிசோதனை செய்வதற்கும், கேளிக்கைக்கும் மட்டும் அல்ல. வேறு எந்த வகையில் துன்புறுத்தக் கூடாது' என்பது அதன் முத்திரை மொழி.
நல்லவேளை ரஷிய நாட்டு "லைக்கா' நாயும், அமெரிக்க "ஹாம்' மனிதக் குரங்கும் விண்வெளி சென்ற முதல் பிராணிகள் என்ற பெயரை அதற்கு முந்தியே தக்க வைத்துக்கொண்டன.
இன்கிரீட் நியுகிர்க் பெரிய விளம்பரப் பிரியராம். திடீர் கலகக் குரல் கொடுத்து மக்கள் கவனத்தைத் தன்பால் திருப்புவதில் பெயர் பெற்றவர். மாரிலாந்து மாகாணத்தில் ஒரு வினோதப் பரிசோதனை நடந்து வந்தது.
கண் மை, முகப்பூச்சு போன்ற அழகு சாதனப் பொருள்களை நம் பெண்மணிகள் பூசிக் கொண்டால் அரிப்போ, தடிப்போ வருமா என்று அறிவதற்கு குரங்குகள் மீது அந்த பொருள்களை முதலில் பயன்படுத்தி ஆராய்ந்தனர். அதனை எதிர்த்தார் இன்கிரீட்.
இவர் இங்கிலாந்தில் பிறந்து, 7-ஆம் வயதில் புதுதில்லியில் குடியேறியவர். தகப்பனார் அரசாங்கத்திலும், தாயார் அன்னை தெரசாவின் குஷ்டரோகிகள் குடியிருப்பிலும் பணியாற்றி வந்தனர். இமாலயத்தில் கிறித்தவப் பெண் துறவிகள் மடத்தில் தங்கி இருந்த ஒரே ஒரு வெள்ளைக்காரப் பெண் அவர் மட்டும் தானாம். சக துறவிகளால் கொடுமைகளுக்கு ஆளானாராம். அதற்காகவே இந்தியாவைப் பழிவாங்கு
கிறாரோ என்னவோ?
ஏதாயினும், வெர்ஜீனியா வேளாண்மை மற்றும் நுகர்வோர் சேவைகள் துறை
யினர், "பீட்டா' அமைப்பு குறித்து வழங்கிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவை.
1998 - 2015 காலகட்டத்தில் பூனை, நாய், கோழி, ஆடு, மாடு போன்ற 40,438 செல்லப் பிராணிகளை மிருகவதைத் தடுப்புப் பிரிவின்கீழ் காப்பாற்றியதாம் பீட்டா. அவற்றில் வளர்க்கப்பட்டவை 3,323. திரும்ப வழங்கப்பட்டவை 1,713. பீட்டாவினால் கொல்லப்பட்டவை 34,970.
அதாவது, தாம் வளர்த்த விலங்குகளைப்போல 10 மடங்கு விலங்குகளைக் கொன்ற அமைப்பு இது. தமிழரின் ஜல்லிக்கட்டு கொடுமையாம். பாருங்கள், இப்படி ஒரு கொலைகார அமைப்பின் சார்பில் வாதாட, டாலர் விசுவாசமான ஊழியர்கள் இந்தியாவிலும் இருப்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
அமெரிக்காவிலேயே சிகரெட்டினால் இறப்போர் 4,40,000 பேர். சாலை விபத்தில் மரிப்போர் 42,366 பேர். துப்பாக்கிக்கு இரையானோர் 29,338 பேர். காளையினால் இறந்தோர் 3 பேர். இவற்றில் எதற்கு விதிக்கவேண்டும் தடை?
அமெரிக்காவில் மட்டும் 1,600 கோடி செல்லப் பிராணிகள் கொல்லப்படுகின்றன. ஆக, அமெரிக்காவில் வேகாத பீட்டா பருப்பு, கடல் கடந்து இந்தியாவில் வந்து அலங்காநல்லூரில் சுடச்சுட வறுத்து எடுக்கிறது.
ஒருவேளை அந்த அமைப்பின் இந்திய விசுவாசிகளுக்கு அடுத்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை By DIN | Published on : 01st February 2017 02:01 AM


arrest
கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ஹரி நாராயண் ராய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
நாட்டிலேயே முதல்முறையாக கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மதுகோடா தலைமையிலான அரசின் ஆட்சிக் காலத்தில் மாநில சுற்றுலா, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வனத் துறை அமைச்சராக ஹரி நாராயண் ராய் பதவி வகித்தார்.
அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அவருக்கு எதிராக கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
அவர் சுமார் ரூ.3.72 கோடி கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கு விசாரணையின் முடிவில் ஹரி நாராயண் ராய் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
அப்போது, அவருக்கு 7 ஆண்டு கடுங்காவலும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கருப்புப் பண தடுப்புச் சட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ள முதல் நபர் இவர்தான். இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்' என்றார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...