Wednesday, February 1, 2017

ரூ.2.5 - 5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5% வரி குறைப்பு: வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

இணையதளச் செய்திப்பிரிவு

தனி நபர் வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10%-ஆக இருந்த வருமானவரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது என்று பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய சூழலில் மாத வருமானம் பெறுபவர்கள் மீது அதிக வரிச்சுமை இருந்து வருகிறது. எனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தப் பிரிவினர் தங்கள் வரிச்சுமையைக் குறைக்க எதிர்பார்க்கின்றனர். 

எனவே தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு இதுவரை 10% வரி விதிக்கப்பட்டு வந்தது, இது இனி 5% ஆக குறைக்கப்படுகிறது. இதனால் வரி செலுத்தும் பிரிவுக்குள் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.12,500 பயன் கிடைக்கும்.

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டிவருபவர்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. 80சி பிரிவின் கீழ் விலக்குகள் அதிகரிக்கப்படவில்லை, எனவே வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. ரூ.1 கோடிக்கும் மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோருக்கான 15% கூடுதல் வரி தொடர்கிறது. 

வரிவருவாயைக் கண்காணிக்க அரசு தரவு பகுப்பாய்வு முறையை பயன்படுத்துகிறது. நேரடி வரி வருவாயில் நிகர இழப்பு ரூ.20,000 கோடி, மறைமுக வரியில் இழப்புகள் எதுவும் இல்லை

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...