Tuesday, February 7, 2017


நேற்று பரபரப்பு..! இன்று களையிழந்தது..! வெறிச்சோடியது சென்னை பல்கலை. வளாகம்



அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதை ஊதர்ஜிதப்படுத்தும் விதமாக சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நேற்று பிற்பகலில் இருந்தே வேலைகள் ஆரம்பித்தன. இதையடுத்து, அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

சசிகலாவை, வரவேற்க சாலையின் இருஓரங்களிலும் தடுப்புவேலி அமைக்கப்பட்டது. மேலும், சாலையில் உள்ள மின்கம்பங்களில் புதிதாக விளக்குகள் பொருத்தப்பட்டன. இதனால் சென்னைப் பல்கலைக்கழகம் மின்விளக்குகளால் ஜொலித்தது. இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், முதலமைச்சராக சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிப்போனது.



பரபரப்புடன் காணப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக வளாகம் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கம் மூடப்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் வெறும் தடுப்புவேலிகள் மட்டுமே காவல் காக்கின்றன. மூடப்பட்ட பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தைப் படம்பிடிப்பதற்குப் பத்துக்கும் மேற்பட்ட ஊடகங்களின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

- ஆ.முத்துக்குமார்

நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? - என்ன சொல்கிறார்கள் மாணவ மாணவிகள்?





மருத்துவப் படிப்பில் மாணவர்கள் நுழைவதற்கு தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் நீட் தகுதித் தேர்வு வேண்டுமா, வேண்டாமா; கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்களே என்பது போன்ற கேள்விகள், சர்ச்சைகள் எழுவது தமிழகத்துக்குப் புதிதில்லை. கடந்த ஆண்டு வரை, அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு பதிலாக மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டனர்.

இந்தாண்டும் தமிழகத்தில் நீட் தேர்வு சர்ச்சை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இந்தக் கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே நடத்தப்பட்டன. தனியார் பள்ளிகள் நீட் நுழைவுத் தேர்வுகளில் உங்கள் குழந்தைகள் வெற்றி பெற கூடுதல் பயிற்சி அளிக்கிறோம் என்பதையே மார்க்கெட்டிங் டெக்னிக்காகப் பயன்படுத்தியுள்ளன. இதற்கெனக் கூடுதல் கட்டணமும் மாணவர்களிடம் பெற்றுள்ளன. நீட் தேர்வு என்பது நடப்புக் கல்வியாண்டில் நன்றாகவே வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் குறைந்தளவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு நன்மை செய்யுமா என்றால் அது கேள்விக்குறியே... தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்கள் படிப்பது என்னவோ தமிழ்நாடு பாடல்நூல் கழகத்தால் தயாரிக்கப்படும் பாடங்கள். ஏணிவைத்தாலும் எட்ட முடியாத ’கல்வி பயிலும்’ வித்தியாசங்களை வைத்துகொண்டு அதுவும் ஒரு மாத கால இடைவெளியில் மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது அபத்தம்.

தமிழக அளவில் இது குறித்து தெளிவான முடிவுகள் எட்டப்படாத நிலையில் மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து வருகிறது. தமிழக அளவில் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வரைவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்டமாக பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

நீட் தேர்வுக்கு வரும் மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ. அழைப்பு விடுத்துள்ளது. தமிழக அளவில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 4ம் தேதி துவங்க உள்ளது. இத்தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்வு முடிந்து நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக 35 நாள் அவகாசம் மட்டுமே உள்ளது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில் தமிழக பிளஸ் 2 மாணவர்கள் ஒப்புக்காவது நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வைக்கலாமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி மாணவ மாணவிகள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடமே கேட்டோம்.

காமினி, புதுச்சாம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேட்டூர்:


‘‘மத்திய கல்வித் திட்ட பாடங்கள்னு சொல்லப்படுற சி.பி.எஸ்.இ திட்டத்துல இருந்துதான் கேள்விகள் கேட்குறாங்க. நீட் எல்லாரும் எழுதணும்னு சொல்ற மாதிரி, அதுக்கான பாடத்திட்டத்தை பிளஸ் ஒன்ல இருந்து அத்தனை பேரும் படிக்கணும்னு சொன்னா நியாயம். அதைப் பாடத்திட்டமா கொண்டு வந்துட்டா நாங்களும் படிச்சுப்போம். ஆனா அப்படியெல்லாம் இல்லாம எந்தப் பயிற்சியுமே கொடுக்காம திடீர்னு நீட் எழுதுன்னா எப்படிக்கா எழுதுறது? நாங்க படிக்கிறதுக்கு ரெடி. ஆனா எங்களுக்கு வாய்ப்பே கொடுக்காம ஜெயிக்கணும்னா என்ன அர்த்தம், சொல்லுங்க? எங்க டாக்டர் கனவே காணாமப்போயிடுற மாதிரி இருக்குது".

சில்வியா, மெட்ரிக் கல்வித் திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவி:




''மனப்பாடத்தை நம்பிப் படிச்சவங்க மட்டும்தான் நீட் எக்ஸாமைப் பார்த்து பயப்படணும். பிளஸ் 1, பிளஸ் 2 சப்ஜக்ட்ஸை முழுமையா புரிஞ்சு படிச்சவங்களுக்கு நீட் தேர்வு ஈஸிதான்னு எனக்குத் தோணுது. நம்ம தமிழ்நாட்டுல பிளஸ்டூ மார்க்ஸ் அடிப்படையில மெடிக்கலுக்குப் போறவங்க எல்லாம் எப்படியாவது மெடிக்கல் காலேஜ் போயிடணும்னு அதிக மெனக்கெட்டு மனப்பாடம் பண்றாங்க. மார்க்ஸ் அடிப்படையில மெடிக்கல் காலேஜ் டிரை பண்றப்ப மெடிக்கலே ரொம்ப சுமையாகிப்போயிடும்."


சி.பி.எஸ்.இ. மாணவன் இமித்தியாஸ்:


''மார்க்ஸை மட்டுமே நம்பிட்டு இருந்தா தமிழ்நாட்டு அளவுல இருக்கிற மெடிக்கல் காலேஜ்ல மட்டும்தான் படிக்க முடியும். ஆனா ஆல் இந்தியா அளவுல உள்ள கல்லூரிகள்ல படிக்க நீட் அவசியம். நினைச்சுப் பாருங்க, மற்ற மாநிலத்தில் போய்ப் படிக்கிறப்ப அதிகமான ஸ்கோப், கற்றல் பலன், மதிப்பு எல்லாம் கிடைக்கும். மொத்தத்துல அதிக பணம் கொடுத்துப் படிக்க வைக்கிற கஷ்டம் நம்ம அப்பா அம்மாக்களுக்கு இல்லாமப்போகும். அதைவிட வேற ஒரு நிம்மதி இருக்கா என்ன?"

பிரியதர்ஷுகா, மருத்துவக் கல்லூரி, சென்னை: (முதலாம் ஆண்டு)

‘‘பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில படிக்கிறப்ப, பிளஸ் 1 பாடத்தை அப்படியே ஸ்கிப் பண்ணிடுறாங்க. அதனால மனப்பாடம் பண்ணி படிச்சுட்டு வர்றவங்க மெடிக்கல் காலேஜ்ல நடத்தப்படுற முதல் செமஸ்டர்லேயே அரியர்ஸ் வைச்சு, அதனால ஏற்படுற மன அழுத்தம் அவங்களை துவண்டுபோக வைச்சிடும். ஒருதடவை மெடிக்கல் காலேஜ் உள்ள நுழைஞ்சுட்டா அங்க மனப்பாடம் எல்லாம் வேலைக்காகாது. ஆனா, நாம புரிஞ்சு படிச்சு அகில இந்திய அளவுல இருக்கிற அத்தனை காலேஜுக்கும் போற வாய்ப்பைப் பயன்படுத்திக்கிடலாம்.'’

யாழ் ஶ்ரீதேவி

ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா...?' பி.எச். பாண்டியன் VS பண்ருட்டி ராமச்சந்திரன்!

vikatan.com

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போது முதல்வராக பதவியேற்க தமிழக கவர்னரின் வருகைக்காக காத்திருக்கிறார் சசிகலா. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானதே செல்லாது, அப்புறம் எப்படி அவர் முதல்வராக முடியும் என்று கேள்வி எழுப்பி, சட்டப் போராட்டத்திற்கு தயராகி வருகிறார் அ.தி.மு,க முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகருமான பி.ஹெச்.பாண்டியன். அவருடைய மகனும், முன்னாள் எம்.பி-யுமான மனோஜ் பாண்டியனும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நாள்தோறும் அப்போலோவிற்கு விசிட் செய்து வந்தவர் பி.ஹெச். பாண்டியன். ஜெயலலிதா மரணம் அடைந்து, இறுதிச்சடங்கு நடைபெற்றபோது பி.ஹெச். பாண்டியன் அங்கு இருந்தார். ஆனால், அதன் பிறகு தொடர்ந்து அமைதிகாத்து வந்தார். குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யபட்டதும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், முக்கியப் பிரமுகர்களும் சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போதிலும் இவர் அமைதியாகவே இருந்து வந்தார். சசிகலாவிற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போர்க்கொடி உயர்த்தி வருவதன் பின்னணியில் பி.ஹெச்.பாண்டியன் இருந்து வருவதாகக் கூறப்பட்டது.

ஆனால், கடந்த இரண்டு மாதமாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் ஒதுங்கி இருந்தவர் திடீரென இன்றுகாலை சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் பி.ஹெச்.பாண்டியன். அவருடன் மகன் மனோஜ் பாண்டியனும் இருந்தார். முதலில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஹெச். பாண்டியன், “அ.தி.மு.க என்ற இயக்கம் ஆரம்பித்து, அதன் சட்ட திட்டங்களை வகுக்க அமைக்கபட்ட குழுவில் நானும் இருந்தேன். அதில் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து நாங்கள் ஆலோசனை செய்து ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்றும், இந்தச் சட்டத்தை மாற்றவோ, நீக்கவோ முடியாத வகையில்தான் சட்ட விதிகளை இயற்றினோம்.



ஆனால், இப்போது சசிகலா அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வாகியிருப்பது தவறு. சட்டம் தெரியாமல் அவர்கள் உள்ளார்கள். அப்போலோவில் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, சசிகலா ஒருசொட்டு கண்ணீர்கூட விடவில்லை. ஜேம்ஸ்பாண்ட் கோட்டை போட்டுக்கொண்டு அங்கும், இங்கும் நடந்து கொண்டுதான் இருந்தார். ஜெயலலிதா வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

மனோஜ் பாண்டியன் பேசும்போது, "2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போயஸ்கார்டனில் ஜெயலலிதா என்னிடம் அவரைக் கொல்ல ஒரு கும்பல் பெங்களூருவில் சதி செய்கிறது. அவர்களை நான் கட்சியை விட்டே நீக்கப் போகிறேன்" என்றார். அதன் பிறகுதான் சசிகலா உட்பட அவருடைய குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதன் பிறகு சில மாதங்களில் மீண்டும் சசிகலா கார்டனுக்குள் வந்தார். அதன் பிறகு என்னிடமும், மறைந்த பத்திரிகையாளர் சோ-விடமும் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது 'எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு பாய்சன் வைத்துக் கொன்று விடுவார்களோ என்ற பயம் உள்ளது' என்று தெரிவித்தார்” என்றார் அதிரடியாக.

பி.ஹெச். பாண்டியனின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை கூட்டி எதிர்வினை செய்து விட்டார்கள். அ.தி.மு.க தலைமைக்கழகத்திற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டார்கள், அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்று பி.ஹெச்.பாண்டியனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார்கள்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், "பொதுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவைத் தேர்வு செய்துள்ளார்கள். இனி, அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் அவர் தேர்வு செய்யப்படுவார். இப்போது தேர்வு செய்யப்பட்டிருப்பது இடைக்கால ஏற்பாடுதான். இப்படி செய்யக்கூடாது என்று கட்சியின் சட்ட திட்ட விதிகளில் சொல்லப்படவில்லை. பொதுச் செயலாளர் பதவிக்கு முறையான தேர்தல் நடக்கும்வரை சசிகலா நியமனம் செல்லும். எம்.ஜி.ஆருடன் இருந்தவன் நான். கட்சியின் சட்ட திட்ட விதிகள் பற்றி பி. ஹெச். பாண்டியனை விட எனக்கு நன்றாகத் தெரியும். துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு அபாண்டமாக பழி சுமத்துகிறார். கட்சி, ஆட்சி நிர்வாகம் ஆகிய இரண்டும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அதுதான் நல்லது. யாரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது கட்சியின் நிர்வாகிகளாகிய எங்கள் உரிமை. எங்களுக்குள் யாரை மாற்றிக் கொள்கிறோம் என்பது எங்கள் உரிமை. அதன் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேட மத்திய அரசு, முயற்சி செய்யவில்லை. பி.ஜே.பி மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எந்தக் குழப்பத்தையும் மத்திய அரசு ஏற்படுத்தவில்லை. சசிகலாவுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக நாங்கள் கருதவில்லை. அ.தி.மு.க ஒற்றுமையுடன் இருக்கிறது" என்றார்.



செங்கோட்டையன் கூறுகையில், “எம்.ஜி.ஆர் இறந்தபோதே கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் பி.ஹெச்.பாண்டியன். அம்மா மீது வழக்குத் தொடர இவர்தான் காரணமாக இருந்தார். கட்சியினால் இவரது குடும்பம் அனுபவித்தது ஏராளம். ஆனால், கட்சிக்காக இவர் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போட்டதில்லை. துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு கைக்கூலி வேலையை பார்க்கிறார். 'என் அம்மாவின் மறைவுக்குப் பின், எனக்கு அம்மாவாக இருப்பவர் சசிகலாதான்' என்று புரட்சித்தலைவி அம்மாவே சொல்லியிருக்கிறார். 'விஷம் கொடுத்தார்' என்று புழுகுகிறார்கள். சின்னம்மா குடும்பத்தினர் அதிகார மையமாக இருக்கிறார்கள் என்று குறைசொல்லி வரும் கூட்டத்திற்கு நான் பதில் சொல்லமுடியாது. சசிகலாவின் திறமையை நாங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். அ.தி.மு.க-வில் பிளவை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைப்பது ஒரு போதும் நடக்காது" என்றார்.

இந்த பேட்டிமுடிந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்தார். ''ஆரம்பத்தில் இருந்தே அத்தைக்கு அளித்த சிகிச்சை விவரங்களை நான் கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் சொல்லவில்லை. அத்தை ஜெயலலிதா மரணம் அடைந்து, 2 மாதம் கழித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதிலும் ஏராளமான குழப்பங்கள். மருத்துவர்கள் அளித்த விளக்கம் மேலும் மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. முதல்வராக சசிகலா தேர்வானதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன். அத்தையின் லட்சியத்தை வென்றெடுப்பேன். தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். ஒருவருடன் 33 வருடங்கள் இருந்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கான தகுதி ஆகி விடாது" என்று தீபா தெரிவித்தார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

Varsity forgets to present D.Litt to mantri

Seven years after announcing to honour Union minister of state for I&B Rajyavardhan Singh Rathore with D.Litt for his achievements in 2004 Athens Olympics, a university in MP is currently making arrangements to present the degree.

Vikram University in Ujjain declared to award D.Litt to Mr Rathore in 2010 as recognition of his rare achievement of winning silver in shooting in 2004 Athens Olympics, but conveniently forgot to bestow him with the honour during the period.

“He (Mr Rathore) could not attend the convocation of that year to receive the honorary D.Litt degree awarded to him by the university. The matter was then forgotten by the university authorities.

“I spotted the file in this regard in the university locker a week ago,” university vice-chancellor S.S.Pandey told this newspaper on Monday.

According to him, the university is making arrangements to find a suitable occasion to honour the Union minister by keeping in touch with his office.

“It is an honour for the university to present D.Litt to a Union minister,” he added.

புதிய மந்திரிகள் யார்..? புதிய முதல்வருக்கு ஆலோசகர் யார்..? #ADMKUpdates #VikatanExclusive


சாமி வரம் தந்தும் பூசாரி தடுத்து நிற்பதுபோல், எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதங்களை வாங்கிவைத்துக்கொண்டு வீட்டின் வாயிற்படியில் கவர்னர் வருகைக்காக காத்திருக்கிறது சசிகலா தரப்பு. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் பரபரப்பு சம்பவங்கள் என்னவாகயிருக்கும் என அலசுகிறது இந்த கட்டுரை...

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி?

தமிழக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அரசு நிர்வாகத்தை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை கவனிக்கும் என்றும் கவர்னர் கூறியுள்ளார். ஆக, தமிழகத்தில் தற்போது எழுதப்படாத கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதன்படி, தற்போதுள்ள 'காபந்து' அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் வெறும் பொம்மைகள்தான். ஆட்சி லகான் கவர்னரின் கைக்குப் போய்விட்டது. இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் அரசின் எந்தவொரு உத்தரவானாலும் கவர்னரின் ஒப்புதலுடன்தான் வெளியாகும். இந்த நிலையில், கவர்னர் தற்போது விடுமுறையில் டெல்லி சென்றிருக்கிறார்.

கவர்னர் சென்னை திரும்பியதும் முடிவு!

தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கும் நிலையில், அதுதொடர்பான தகவல்கள் கவர்னருக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இருப்பினும், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தனது பயணத்தில் இருக்கிறார் கவர்னர். முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட அவர், அடுத்தக்கட்டத்துக்குத் தயாராகி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று டெல்லியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர், சென்னை திரும்பாமல் நேராக மும்பைக்கு விமானம் ஏறினார். நேற்று அவர் விடுமுறையில் இருந்ததாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏர்போர்ட் வட்டாரத்தில் விசாரித்தபோது, 'இன்றும் கவர்னர் சென்னை வருவதற்கான எந்த முஸ்தீபுகளும் இல்லை' என்கின்றனர். மேலும், கவர்னர் எப்போது சென்னை திரும்புவார் என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அவர் சென்னை திரும்புவதைப் பொறுத்துதான், சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் வைபவம் நடக்கும் எனத் தெரிகிறது.



சென்னையில் முகாமிட்டுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள்!

இந்த பரபரப்புக்கு இடையே அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 135 பேரும் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களை வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று கட்சியின் தலைமைக்கழகத்தில் இருந்து உத்தரவு வரப்பெற்றுள்ளது. அதனால், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் விடுதி அறைகளில் அவர்கள் அனைவரும் தங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அ.தி.மு.க எம்.பி-க்கள் டெல்லிக்குக் கிளம்பினர். ஆனால், அவர்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்குமாறு உத்தரவிடப்பட்டது. டெல்லி செல்வதற்காக டிக்கெட் எடுத்து வி.ஐ.பி. லாஞ்சில் காத்திருந்த அன்வர் ராஜா உள்ளிட்ட எம்.பி-க்கள் உடனடியாக தங்களது டிக்கெட்டுகளை கேன்சல் செய்துவிட்டு திரும்பினர்.

சென்னையில் காக்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வட்டாரத்தில், “அம்மா போலவே சின்னம்மாவின் குணமும் உள்ளது. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஒவ்வொருத்தர்கிட்டயும் எந்த கஷ்டமானாலும் எங்கிட்ட சொல்லுங்க....வீட்டுப் பிரச்னையோட கட்சிவேலை பார்க்காதீங்க... உங்க பிரச்னை இனி என் பிரச்னை அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என 'ஆதரவாக' சசிகலா சொன்னதை 'உற்சாக' குரலில் சிலாகித்து பேசிக்கொள்கிறார்கள்.

புது மந்திரிகள் யார்..யார்?

தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்றால், அமைச்சரவை மாற்றப்படுமென தெரிகிறது. நேற்றிரவு எம்.எல்.ஏ-க்களுடனான சந்திப்பின்போது, சசிகலா இதுதொடர்பாக சில விஷயங்களை பூடகமாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது 'அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்காது. சிற்சில மாற்றங்கள் இருக்கும்' என்ற அவர், 'சபாநாயகர் தனபால் உள்ளிட்ட இருவருக்கு அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பு அளிக்கப்படும்' என தெரிவித்தாராம். சசிகலாவின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், புதிய அமைச்சர் யார் என்பதே அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. விசாரித்ததில், ஜெயலலிதா அனுதாபியாக இருந்து, சசிகலா பொதுச் செயலாளரானபோது பிரச்னை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டு, ஆனால் அப்படி எதுவும் சிக்கல் ஏற்படுத்தாத ஒருவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.




இதனிடையே, சசிகலா தலைமையில் புதிதாக அமையப்போகும் அமைச்சரவையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். அதன்படி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சட்டமன்ற சபாநாயகராக்கவும், சபாநாயகர் தனபாலை அமைச்சராக்கவும் திட்டம் உள்ளதாம். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு உயர்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு பள்ளிக் கல்வித்துறை, வணிக வரித்துறை அமைச்சர் வீரமணிக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு வணிகவரித்துறை என திட்டமிடப்பட்டுள்ளதாம்.

முதல்வரின் புது ஆலோசகர் யார்? கவர்னரின் புது ஆலோசகர் யார்?

தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன்...இருவரும் அவர்களின் பதவிக்காலம் முடிவதற்குள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். ஒருவேளை சசிகலா முதல்வரானால், ஆட்சி நிர்வாகத்துக்கு முற்றிலும் புதியவரான அவருக்கு உரிய ஆலோசனை வழங்க புது ஆலோசகர்கள் தேவை. அதிகாரம் மிக்க அந்தப் பதவியை பிடிக்க அதற்குள்ளாகவே அ.தி.மு.க ஆதரவு அதிகாரிகள் போயஸ்கார்டனில் முட்டி மோதி வருகிறார்கள். அவர்களில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பன்னீர்செல்வம், சோ. அய்யர்...இருவரது பெயர்கள் அடிபடுகின்றன. போலீஸ் துறைக்கு முன்பு ராமானுஜம் இருந்ததைப்போல, தற்போது முன்னாள் கூடுதல் டி.ஜி.பி-யான ராஜேந்திரன் பெயர் அடிபடுகிறது. இதேபோல் தமிழக ஆட்சியை தற்போது கவனிக்கும் கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிரா மாநில கவர்னராகவும் இருப்பதால், இருமாநிலங்களிலும் அவரால் அடிக்கடி போக முடியாது. அதனால், தமிழகத்தில் கவர்னருக்கென ஆலோசகர்கள் புதிதாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்காக ராஜ்பவனில் தனி அறை ஒன்று ரெடியாகி வருவதாக அதிகாரிகள் தரப்பில் பேசிக்கொள்கிறார்கள். பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆசி பெற்ற ஒருவர், விரைவில் தமிழக கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. பிரமுகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
எல்லாம் தயார், இனி கவர்னர் விமானம் பிடிக்க வேண்டியதுதான் குறை!

- ஆர்.பி.

நெருக்கடியைக் கொடுக்க தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவா?


தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஜனாதிபதி ஆட்சி வரலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் இன்னும் மர்மம் விலகவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. சசிகலா முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் சாவில் இருக்கும் மர்மத்தை நீக்கும் வகையில் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று அரசு சார்பில் செய்யப்பட்ட செய்தியாளர்கள் பேட்டியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.




ஆனால், இவர்களது விளக்கத்தில் தமிழக மக்கள் இன்னும் திருப்தி அடையவில்லை. ஜெயலலிதா இறந்த 20 நாளில் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. மேலும், இரண்டே மாதத்தில் முதல்வராக முயற்சித்தார். இது சமூக வலைதளங்களில் மற்றும் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. சசிகலாவின் கணவரும் எங்களது குடும்பம்தான் ஜெயலலிதாவின் அருகில் இருந்து அவருக்கு உதவி வந்தோம், இக்கட்டான சூழலில் காப்பாற்றினோம். ஆதலால், எங்களது குடும்பம் ஆட்சியில் மூக்கை நுழைக்கும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா?

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு வேளை சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் அன்று திமுக எம்.எல்.ஏ.,க்கள் 89 பேரும் ராஜினாமா செய்யலாம்.

234 பேரில் மூன்றில் ஒரு பகுதி எம்.எல்.ஏ.,க்கள் இல்லாமல் ஆட்சியை தொடரமுடியாது. 78 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தால் போதும் இடைத்தேர்தல் வைக்க வாய்ப்பு இல்லை. 355 சட்டத்தின் படி ஆட்சியை முடக்கி வைக்கலாம். கவர்னர் 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்க அதிகாரம் உள்ளது.

இப்படி திமுக செய்தால் வரவேற்போம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இதற்காகக் கூட எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆதலால்தான் சட்டப்பேரவையிலும், ''முதல்வராக பன்னீர் நீடித்தால் நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்'' என்று சூசகமாக துரைமுருகன் கூறினாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ​ விரைவில் தமிழத்தில் அரசியம் மாற்றம் வரும், எங்களது கட்சி ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலினும் கூறி வந்தார்.

போயஸ் தோட்டத்தில் சசிகலா- தம்பிதுரை ஆலோசனை!


அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி சென்னை போயஸ் தோட்டத்தில், சசிகலாவும், தம்பிதுரையும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

ஜெயலலிதா மறைந்த நிலையில், அதிமுக.,வின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், தற்போது சசிகலாவை, அடுத்த முதல்வராக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, ஆளுநரை சந்தித்து, சசிகலா ஆட்சியமைக்க அனுமதி கோர உள்ளார். ஆனால், ஆளுநர் தமிழகத்தில் இல்லை. டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். சசிகலா பதவியேற்கக் கூடாது என, அடுத்தடுத்து, பல வழிகளில் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என, மக்களவை துணைத் தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, போயஸ் தோட்டத்தில், சசிகலாவை சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தற்போதைக்கு, முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியை அதிமுக ஒத்திவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...