Tuesday, February 7, 2017

போயஸ் தோட்டத்தில் சசிகலா- தம்பிதுரை ஆலோசனை!


அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி சென்னை போயஸ் தோட்டத்தில், சசிகலாவும், தம்பிதுரையும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

ஜெயலலிதா மறைந்த நிலையில், அதிமுக.,வின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், தற்போது சசிகலாவை, அடுத்த முதல்வராக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, ஆளுநரை சந்தித்து, சசிகலா ஆட்சியமைக்க அனுமதி கோர உள்ளார். ஆனால், ஆளுநர் தமிழகத்தில் இல்லை. டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். சசிகலா பதவியேற்கக் கூடாது என, அடுத்தடுத்து, பல வழிகளில் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என, மக்களவை துணைத் தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, போயஸ் தோட்டத்தில், சசிகலாவை சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தற்போதைக்கு, முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியை அதிமுக ஒத்திவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...