Tuesday, February 7, 2017

ஆளுநரின் வசதிக்கேற்ற நாளில் முதல்வராக சசியம்மா பதவியேற்பார்: பொன்னையன்


''ஆளுநரின் வசதிக்கேற்ற நாளில் முதல்வராக சசியம்மா பதவியேற்பார். இதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை'' என்று பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வராக சசிகலா பொறுப்பு ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியதாவது:




சிலர் அரசியல் ஆதாயத்திற்காக வதந்திகளை பரப்பி வருகின்றனர் . அதிமுக நலத்திட்டங்களுக்காகவே மக்கள் தேர்தலில் வாக்களித்தார்கள். ஒருமனதாகவே சசிகலா பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் ஆதாயத்திற்காக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். மத்திய அரசுக்கும், அதிமுக அரசுக்கும் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளை திறம்பட செயல்படுத்தக் கூடியவர் சசிகலா ஆளுநரின் வசதிக்கேற்ற நாளில் முதல்வராக சசியம்மா பதவியேற்பார்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பொன்னையனுக்கு எந்தப் பொறுப்பையும் சசிகலா கொடுக்கவில்லை அதனால், அவர் விரக்தியில் இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் பொன்னையன் இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...