Tuesday, February 7, 2017

நெருக்கடியைக் கொடுக்க தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவா?


தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஜனாதிபதி ஆட்சி வரலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் இன்னும் மர்மம் விலகவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. சசிகலா முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் சாவில் இருக்கும் மர்மத்தை நீக்கும் வகையில் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று அரசு சார்பில் செய்யப்பட்ட செய்தியாளர்கள் பேட்டியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.




ஆனால், இவர்களது விளக்கத்தில் தமிழக மக்கள் இன்னும் திருப்தி அடையவில்லை. ஜெயலலிதா இறந்த 20 நாளில் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. மேலும், இரண்டே மாதத்தில் முதல்வராக முயற்சித்தார். இது சமூக வலைதளங்களில் மற்றும் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. சசிகலாவின் கணவரும் எங்களது குடும்பம்தான் ஜெயலலிதாவின் அருகில் இருந்து அவருக்கு உதவி வந்தோம், இக்கட்டான சூழலில் காப்பாற்றினோம். ஆதலால், எங்களது குடும்பம் ஆட்சியில் மூக்கை நுழைக்கும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா?

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு வேளை சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் அன்று திமுக எம்.எல்.ஏ.,க்கள் 89 பேரும் ராஜினாமா செய்யலாம்.

234 பேரில் மூன்றில் ஒரு பகுதி எம்.எல்.ஏ.,க்கள் இல்லாமல் ஆட்சியை தொடரமுடியாது. 78 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தால் போதும் இடைத்தேர்தல் வைக்க வாய்ப்பு இல்லை. 355 சட்டத்தின் படி ஆட்சியை முடக்கி வைக்கலாம். கவர்னர் 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்க அதிகாரம் உள்ளது.

இப்படி திமுக செய்தால் வரவேற்போம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இதற்காகக் கூட எதிர்க்கட்சித் தலைவர் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆதலால்தான் சட்டப்பேரவையிலும், ''முதல்வராக பன்னீர் நீடித்தால் நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்'' என்று சூசகமாக துரைமுருகன் கூறினாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ​ விரைவில் தமிழத்தில் அரசியம் மாற்றம் வரும், எங்களது கட்சி ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலினும் கூறி வந்தார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...