Tuesday, April 25, 2017

Panel submit list of names for Vice-Chancellors of Anna University, Madras university


Expect an announcement over appointment of Vice-Chancellors for Anna University and University of Madras soon because the respective search committees submitted their final lists of shortlisted candidates to Governor Ch Vidyasagar Rao recently.
A highly placed source in the Department of Higher Education told Express, “Both the search panels have sought an appointment with the Governor, who is the also Chancellor of these state-funded universities, this week and a formal announcement can be expected anytime soon.”
Both the varsities have been functioning without a head since 2016.
Following R Thandavan’s exit in January 2016, the University of Madras administration has struggled to take key decisions in terms of fund utilisation, academic progress and sanctioning of grants to affiliated colleges. Reportedly, hundreds of Ph.D candidates were made to wait for their degrees despite completing their thesis as early as December 2015. Indeed, the 160-year-old University of Madras had to call off a special convocation for the first time in recent decades in the absence of a VC.
Without a degree certificate in hand, graduates from the 2015-16 batch had to postpone their plans to study abroad. Though the then Higher Education Secretary, A Karthick, stepped in to resolve the issue, controversies arose over its validity.
Absence of a full-time Higher Education Secretary for a short period of six months added more salt to the injuries of the students and staff whose promotions were due.
“Now the ball is in the Governor’s court and he has to take the final call,” government sources added.
However, there was no update on the search for a VC for the Madurai Kamaraj University, which was hit by a court case.
தலையங்கம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?ஏப்ரல் 25, 02:00 AM

மத்திய அரசாங்கத்தை யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்க பாராளுமன்ற தேர்தலும், மாநிலங்களில் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்க சட்டசபை தேர்தல்களும், பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. தேர்தல் நடக்கும்போது கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். தேர்தலில் யார் வெற்றிப்பெறப்போகிறார்கள்? என்பதை அந்த வேட்பாளரும், அவர் கட்சியும் அளிக்கும் வாக்குறுதிகள்தான் பெரும்பாலும் நிர்ணயிக்கும். பல நேரங்களில், தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப்போடும் மக்கள், அந்ததேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அதற்காக யாரிடம் போய்ச்சொல்ல என்று தெரியாமல் திகைக்கிறார்கள்.

இந்தநிலையில், சமீபத்தில் டெல்லியில், ‘‘தேர்தல் விவகாரங்கள் தொடர்பான பொருளாதார சீர்திருத்தங்கள்’’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி ஜே.எஸ்.கேஹர் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு கருத்தை குறிப்பிட்டார். ‘‘தேர்தலின்போது வாக்காளர்களிடம், தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு, அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பொறுப்பேற்கவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றவேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டும்’’ என்று அவர் கூறியிருக்கிறார். இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதத்துண்டுபோல் ஆகிவிட்டது. பொதுமக்களும் தங்களிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையே மறந்துவிடுகிறார்கள்.

பொதுவாக, மத்திய–மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் பல வாக்குறுதிகள் முதலில் சிலகாலம் ‘ஜெட்’ வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன. அதன்பின்பு, நத்தை வேகமாகி விடுகிறது. 2016–ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் முதல் நாளிலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்றினார். தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கச்சத்தீவை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்–டாப்புடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் வழங்கப்படும், பொங்கல் திருநாளுக்கு ரூ.500 மதிப்பில் கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறித்துணிகள் வாங்கிக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூப்பன் வழங்கப்படும். தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின்கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும், ஊழல் தடுப்பு அமைப்பான ‘லோக் ஆயுக்தா’ அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இன்னும் 4 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது என்று கூறலாம். ஆனால், இந்ததேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றும்வகையில், ஒரு வரைவு திட்டம் அரசு சார்பில் வகுக்கப்படவேண்டும். இதுபோல, 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், ‘ஒரே இந்தியா–உன்னத இந்தியா, அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம்’ என்ற தலைப்பில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இன்னும் பல வாக்குறுதிகள் தொடக்கத்தை காணாமல் இருக்கின்றன. சாத்தியக்கூறுகள் அடிப்படையில், ‘நதிகள் இணைப்புத்திட்டம்’ செயல்படுத்தப்படும், கடலோர நகரங்களில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்பட ஏராளமான அறிவிப்புகள் இன்னும் மத்திய அரசாங்கத்தின் நிலுவையில் உள்ளன.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை கடலோர பகுதிகளில் அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டிருந்தால், 1,076 கி.மீ. நீளமுள்ள தமிழக கடலோரபகுதிகளில் பல நகர்ப்புறங்கள் பயனடைந்திருக்கும். இப்போதுள்ள கடும் வறட்சியில் நிச்சயமாக இத்தகைய நிலையங்கள் கைகொடுத்து இருக்கும். எனவே, மத்திய–மாநில அரசுகள் உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றவில்லையென்றால், மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஜியோவை முந்தியது பிஎஸ்என்எல்-ன் அசத்தலான மூன்று முத்தான அதிரடி சலுகை!

By DIN  |   Published on : 24th April 2017 08:54 AM  | 
bsnl
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொலை தொடர்பு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி ஆதிக்கம் செலுத்திவந்த ஜியோவின் ஆட்டத்தை அடக்கும் விதமாக, பொதுத் துறையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான மூன்று முத்தான அதிரடி சலுகை திட்டங்களை அறிவித்து அடங்கியுள்ளது.
ஜியோவோடு போட்டி போடும் முனைப்பில் பி.எஸ்.என்.எல் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஜியோவின் இலவச சலுகை மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற இருந்தது. ஆனால் ஏப்ரல் 22 வரை நீடித்தது. தற்போது ஜியோ வாடிக்கையாளர்களை தன்னுடன் வைத்திருக்கும் பொருட்டு "தன் தனா தன்' என்ற சலுகையை அறிமுகம் செய்தது.
"தன் தனா தன்' என்ற புதிய சலுகை திட்டத்துக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
முதலாவதாக "டிரிப்பிள் ஏஸ்' (Triple Ace) என்ற புதிய திட்டத்தின்படி ரூ.333-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி வேகத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வரை வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 90 நாட்களாகும். அதாவது வாடிக்கையாளர்கள் ரூ.1.23காசுக்கு ஒரு ஜிபி என்ற அடிப்படையில் 270 ஜிபி கிடைக்கும்.
"தில் கோல் கே போல்'  (Dil Khol Ke Bol) திட்டத்தின் கீழ் ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வரம்பற்ற உள்ளூர்-வெளியூர் அழைப்புகளுடன் தினமும் 2ஜிபி டேட்டா 3ஜி வேகத்தில் வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்களாகும்.
மூன்றாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள "நெஹ்ளே பே தெஹ்லா' (Nehle pe Dehla) திட்டத்தில் ரூ.395-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் 3,000 நிமிட அழைப்புகளும், இதர நிறுவன நெட்வொர்க்கிற்கு 1,800 நிமிட அழைப்புகளும் வழங்கப்படும். அத்துடன் தினமும் 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இத்திட்டத்தின் வேலிடிட்டி காலம் 71 நாட்களாகும்.
போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக, ரூ.339- திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி 2ஜிபி டேட்டா என்ற அளவிலிருந்து 3ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பி.எஸ்.என்.எல். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில்  இன்று 11 இடங்களில் வெயில் சதம்

    By DIN  |   Published on : 24th April 2017 07:56 PM 
    தமிழகத்தில் திங்கள்கிழமை 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. வடமேற்கு தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நெருங்குவதால், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரி வெப்பம் 106 டிகிரி முதல் 111 டிகிரி வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அனல் காற்று எச்சரிக்கை: தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களான வேலூல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    மழை பதிவு: அதிக வெப்பத்தின் காரணமாக இடிமேகங்கள் உருவாகி ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 30 மி.மீ., பெரம்பலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 20 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.

    11 இடங்களில் சதம்: திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. 
     
     வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
     வேலூர், திருத்தணி - 110
     திருச்சி - 108
     மதுரை, கரூர் பரமத்தி - 106
     பாளையங்கோட்டை - 105
     திருப்பத்தூர், சேலம் - 104
     சென்னை - 103
     தருமபுரி - 102
     பரங்கிப்பேட்டை -101.

    சிவப்பு விளக்கு சுழலாது!

    By ஆசிரியர்  |   Published on : 24th April 2017 01:57 AM  |   
    மக்களால் மக்களுக்காக மக்களை ஆளத் தேர்ந்தெடுக்கப்படும் அரசில், மக்களைவிட அதிகப்படியான சலுகைகளை அமைச்சர்களும், அதிகாரவர்கமும் அனுபவிப்பது ஜனநாயக முரண். சர்வதேச அளவில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இடர்காலச் சேவைகளும், தீயணைப்பு மற்றும் காவல்துறை வாகனங்களும் மட்டும்தான் சிவப்பு விளக்குப் பொருத்திக் கொள்வது வழக்கம். ஆனால் நமது இந்தியாவிலோ, அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரவர்கத்தினர் எல்லோருமே சிவப்பு விளக்குப் பொருத்தப்பட்ட வாகனங்களில் வளைய வருவது, அவர்களது பதவியின் கெளரவமாகவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
    நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மே மாதம் 1-ஆம் தேதி முதல் எந்தவொரு சிறப்பு மரியாதைக்குரிய குடிமகனும் இந்தியாவில் சிவப்பு விளக்கு சுழலும் வாகனத்தில் வலம் வர முடியாது என்று துணிந்து முடிவெடுத்திருக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்கள் என்று யாருமே இனி சிவப்பு விளக்கு சுழலும் வாகனத்தில் பயணிக்க முடியாது. இடர்கால சேவைகளுக்கான ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் சுழலும் நீல விளக்கு பயன்படுத்திக் கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
    அதிகாரவர்க்கத்தினரால் சிவப்பு விளக்கு தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட பொது நல வழக்கில் 2013-இல் உச்சநீதிமன்றம், இந்த வழக்கத்திற்குக் கண்டனம் தெரிவித்
    திருந்தது. சிவப்பு விளக்கு சுழலும் வாகனங்களில் வலம் வருவது என்பது காலனிய ஆட்சிக்கான அதிகார வர்க்கத்தின் மனோநிலையி
    லிருந்து நமது ஆட்சியாளர்கள் இன்னும் விடுபடாததைக் காட்டு
    கிறது என்றும், குடிமக்களை அடிமையாகக் கருதும் அதிகார மமதையின் நீட்சிதான் "சிவப்பு விளக்கு' சுழலும் வாகனங்கள் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
    தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தான் பதவிக்கு வந்ததும் உடனடியாக சிவப்பு விளக்கு சுழலும் வாகனங்களுக்கு முடிவுகட்டினார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்
    பின், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தத்தம் மாநிலங்களிலும் சிவப்பு விளக்குக் கலாசாரத்திற்கு முடிவு கட்டினர். இப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுமைக்கும் ஒரேயடியாக சிவப்பு விளக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டிருக்கிறார். பாராட்டுகள்.
    வாகனங்களில் சிவப்பு விளக்கு சுழலாது என்பதால் நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் எல்லா சிறப்பு சலுகைகளையும் இழந்துவிடுவார்கள் என்று அர்த்தமில்லை. விமான நிலையங்களில் அவர்கள் வரிசையில் நிற்கப் போவதில்லை; சுங்கச்சாவடிகளில் அவர்களது வாகனங்கள் கட்டணம் செலுத்தப் போவதில்லை;
    ஏன், நீல விளக்கு சுழலும் காவல்துறை வாகனங்கள் முன்னால் செல்லாமல் அவர்கள் பயணிக்கப் போவதும் இல்லை. ஆனாலும்கூட, பொதுமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டிக் கொள்ளும் காலனிய அடையாளத்தைத் துறந்திருக்கிறார்கள் என்பது வரை மகிழ்ச்சி.
    மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் கடினமான பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சில சலுகைகள் தரப்பட வேண்டும்தான். ஆனால் அதையே தங்களது உரிமைகளாக அவர்கள் கருதும்போது, தேர்ந்தெடுத்தவர்கள் சிறுமைப்படுத்தப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று, உறுப்பினர்களின் சம்பளத்தை ஆண்டொன்றுக்கு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாகவும், படியை ரூ.45,000-த்திலிருந்து ரூ.90,000 ஆகவும் உயர்த்தப் பரிந்துரைத்திருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவில் தனிநபர் வருவாயைவிட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஆறு மடங்கு அதிகம். பிரிட்டனில் இரண்டு மடங்கும், அமெரிக்காவில் மூன்று மடங்கும் இருக்கும்போது இங்கே ஆறு மடங்கு!
    அவர்களது சம்பளம் உயர்த்தப்பட வேண்டுமா, கூடாதா என்பதல்ல பிரச்னை. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் சம்பள உயர்வை தங்களுக்குத் தாங்களே நிர்ணயித்துக் கொள்கிறார்களே, அதுதான் வேடிக்கை. அமெரிக்காவில் 1970 முதல், அமெரிக்க அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு
    ஏற்றாற்போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
    எல்லாவற்றையும்விட வேடிக்கை, நமது நாடாளுமன்ற உறுபினர்களில் 84% உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள். இவர்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாகக் கூறுபவர்கள்!
    சிறப்புச் சலுகைகள் பெறுவதிலும், சாமானியக் குடிமக்களி
    லிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதிலும் அதிகாரவர்க்கம் அரசியல்வாதிகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. அரசு வீட்டுமனைகள் ஒதுக்கீட்டிலாகட்டும், அரசு செலவில் வெளிநாடு சுற்றிவருவதிலாகட்டும், தங்கள் வீட்டு வேலைக்கு அரசு ஊழியர்களை பயன்படுத்துவதிலாகட்டும் அதிகாரிகள் இப்போதும்கூட பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளின் செயல்பாடுகளைத் தொடர்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
    சிவப்பு விளக்கை வாகனங்களிலிருந்து அகற்றுவதுடன் நின்றுவிடக்கூடாது இந்த ஞானோதயம். சுதந்திரம் அடைந்தபோது காங்
    கிரஸ் கொடியும் தேசியக் கொடியும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தங்களது அதிகாரத்தைப் பாதுகாக்க உதவியது, சாதகமாகவும் இருந்தது. உலகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக கொடி கிடையாது. அரசியல்கட்சிகளுக்கு சின்னம் தேவைதான். ஆனால் கொடி எதற்காக? சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

    Bonus issue: Private varsity gets breather

    The Madras High Court has ordered an interim stay against the order of the Industrial Dispute Tribunal, Chennai, directing Sathyabama University, Chennai, to pay bonus to drivers and technicians employed in the institution as per the provisions of the Motor Transport Employees Act.
    Justice M.M. Sundresh passed the interim order while ordering notice to Pudhiya Jananayaga Vagana Ottunargal Mattrum Techniciangal Union, the original petitioner before the tribunal, returnable by eight weeks. While passing the order dated March 24, the tribunal, noting that ‘deemed-to-be universities’ cannot be considered as a non-profit making institution for the purpose of exempting them from paying bonus to their employees, directed Sathyabama University to pay bonus to its workers.

    Doctors go on mass casual leave, stage protest

    Protest scrapping of 50% reserved quota for service doctors in PG courses

    Doctors working at the district headquarters hospital and primary health centres in the district, who were members of the Tamil Nadu government doctors association staged ‘dharna’ after taking en-masse casual leave, protesting against the scrapping of 50% reserved quota for service doctors in Post Graduate courses.
    Association district secretary Dr Mutharasu and Treasurer Dr. Manojkumar who led the protest in front of the headquarters hospital here, said the High Court order, scrapping the 50% quota for doctors who served in rural areas was a great injustice to them and sought government intervention. They said the government, besides challenging the High Court order by filing an appeal, should come forward to protect the interest of doctors by providing legal protection to the reserved quota.
    The scrapping of the quota would not only deprive doctors of their chances of getting admission to PG courses, but affect medical services in rural areas. If doctors could be posted in all the 57 primary health centres in the district, it was because of the quota system, they said. Though doctors availed en-masse casual leave, they ensured that medical services in out-patient, emergency medical services and emergency surgeries remained unaffected, they said.
    Virudhunagar
    Over 200 members of the Tamil Nadu Government Doctor’s Association went on a mass casual leave and staged a hunger strike pressing for continuation of 50 per cent in-service quota for Government doctors in admissions to post-graduate courses, here on Monday.
    The doctors abstained from work for the whole day in 11 government hospitals and 55 primary health centres.
    However, they attended to casualty, delivery and paediatric care.
    The members also staged dharna in front of the District Headquarters Hospital here and also undertook a day-long fast there.
    The protesting doctors said that the scrapping of 50 per cent in-service quota for Government doctors under NEET procedure of admission would hit them.

    NEWS TODAY 02.01.2026