Sunday, July 2, 2017

திருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகும் பதிவு செய்யலாம்: சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்
திருமணம் முடிந்து 5 மாதங் களுக்கு பின்னரும் அதை பதிவு செய்யும் வகையில், திருமண பதிவுத் திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

சட்டப்பேரவையில் திருமண பதிவு திருத்தச் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அறிமுகம் செய் தார். இதற்கான நோக்க காரண விளக்க உரையில் கூறியிருப்ப தாவது:

2009-ம் ஆண்டு சட்டம்

தமிழகத்தில் அனைத்து திரு மணங்களையும் கட்டாயமாக பதிவு செய்வதற்காக கடந்த 2009-ம் ஆண்டு திருமணங்களை பதிவு செய்தல் சட்டம் கொண்டுவரப் பட்டது. இச்சட்டத்தின்படி திரு மணம் செய்துகொண்ட தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் அல்லது அதற்குமேல் 60 நாட்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி, திருமணம் செய்தவர்கள் தங்கள் விவரக்குறிப்பை பதிவாளரிடம் அளிக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்

இந்நிலையில், 150 நாட்கள் அதாவது 5 மாதங்களுக்குமேல், கூடுதல் கட்டணம் செலுத்தி திருமணத்தை பதிவு செய்வதற் கான வழிமுறைகளை செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதேபோல, சிறப்பு நிகழ்வுகள் தவிர பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள், நேரடி யாக வராமல் சட்ட அடிப்படையில் திருமண பதிவு செய்யக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. திருமண பதிவுச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மதகுரு என்னும் சொல் அனைத்து மதங்களின் நபர்களையும் உள்ளடக்கியதாக உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் அடிப்படையில், சரியான வகையில் திருமண பதிவுச் சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதாவை அறிமுக நிலை யிலேயே எதிர்ப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் அடிப்படையில், சரியான வகையில் திருமண பதிவுச் சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத்துள்ளது.

ஒளிரும் நட்சத்திரம்: ஸ்ரீதேவி

ஓவியம் ஏ. பி. ஸ்ரீதர்*
 இந்தியத் திரையுலகம் எத்தனையோ கனவு தேவதைகளை உருவாக்கி அளித்திருக்கிறது. அவர்களில் ஸ்ரீதேவியின் சாதனைகளை முறியடிக்க யாருமில்லை. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. 54 வயதில் அடிவைக்கக் காத்திருக்கும் ஸ்ரீதேவிக்கு மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு தர விரும்பிய அவருடைய கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் 300-வது படத்தைத் (மாம்) தயாரித்து, அதை ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்கிறார்.

* கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது ‘துணைவன்’ (1969) படத்தில். ‘சாண்டோ’ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் எம்.ஏ. திருமுகம் எனும் சாதனை இயக்குநரால் கண்டறியப்பட்டு, இசையருவி கே.பி.எஸ், சௌஹார் ஜானகி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன் போன்ற சாதனைக் கலைஞர்களுடன் முதல் படத்திலேயே நடிக்கும் பேறுபெற்றார். குழந்தை முதலே கொள்ளை அழகாக விளங்கிய ஸ்ரீதேவிக்கு மீண்டும் பல படங்களில் முருகன் வேடம் கிடைத்தாலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் விதவிதமாகக் குழந்தை கதாபாத்திரங்கள் கிடைத்தன. அவற்றில் 1971-ல் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘பூம்பட்டா’ என்ற படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது. அதில் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் வென்றார்.

* குழந்தை நட்சத்திரமாகப் புகழ்பெற்றுவிட்டாலும் குமரியானதும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற உந்துதல் சாவித்திரியைப் பார்த்தே உருவானது எனக் கூறும் ஸ்ரீதேவி, தனது 12 வயதில், சேதுமாதவன் இந்தியில் இயக்கிய ‘ஜூலி’படத்தில் அறிமுகமாகி, கதாநாயகியின் தங்கையாக நடித்தார். அதன்பிறகு ஸ்ரீதேவியை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது ‘மூன்று முடிச்சு’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். அந்தப் படத்தில் கமல், ரஜினியுடன் தொடங்கிய பயணம்... ‘16 வயதினிலே’ மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. அன்று ரசிகர்கள் நேசித்த பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் தேர்வாக மாறினார்.

* ‘காதல் இளவரசன்’ எனக் கொண்டாடப்பட்ட 80-களின் கமலுக்குக் கச்சிதமான ஜோடி என ரசிகர்களால் பிரகடனம் செய்யப்பட ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘மீண்டும் கோகிலா’, ‘வாழ்வே மாயம்’, ‘குரு’ போன்ற பல படங்கள் காரணமாக அமைந்தன. இந்த இணையின் முத்தாய்ப்பாக அமைந்தது ‘மூன்றாம் பிறை’. குழந்தைமை நினைவுகள் கொண்ட குமரிப்பெண்ணாக ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டும் அவருக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்க வேண்டிய நடிப்புக்கான தேசிய விருதை, கமலின் நடிப்பு வென்று நின்றது. எனினும் என்னைவிடச் சிறந்த நடிப்பை ஸ்ரீதேவியே வழங்கியிருந்தார் என்று கமலைக் கூற வைத்தது ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு ஆளுமை.

* கமல், ரஜினியோடுதான் ஸ்ரீதேவி நடிப்பார் என்ற முத்திரைக்குள் சிக்கிவிடாமல், சிவகுமார், விஜயகுமார் என அனைத்து முக்கிய நடிகர்களையும் மதிக்கும் நாயகியாக மிளிர்ந்தார். அவ்வளவு ஏன் தலைமுறைகளைக் கடந்து கதாநாயகியாகவே மிளிந்த சாதனை ஸ்ரீதேவிக்கு மட்டுமே உரியது. தெலுங்குப் படவுலகம் கொண்டாடிய நாகேஸ்வர ராவுக்கு ஜோடியான ஸ்ரீதேவி, அவருடைய மகன் நாகார்ஜுன் ஜோடியாகவும் நடித்தார். இந்திப் படவுலகிலோ தர்மேந்திராவுடன் ஜோடி சேர்ந்தவர் , அவருடைய மகன் சன்னி தியோலுக்கும் ஜோடியாகி அசத்தினார்.
* நடிப்புக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரும் முக்கிய நட்சத்திரமாக மாறிய ஸ்ரீதேவி, தமிழைத் தாண்டி தென்னிந்திய மொழிகளைக் கடந்து, இந்திப் படவுலகில் தனித் தடம் பதித்தது முன்மாதிரி இல்லாத வெற்றிக்கதை. அவர் இந்தியில் அறிமுகமான ‘சோல்வா சாவன்' தோல்வி அடைய, துவண்டுவிடாமல் ‘ஹிம்மத்வாலா'வில் ஹிட் அடித்தார். அதன் பிறகு போனி கபூரை மணந்துகொள்ளும் வரை அவருக்கு வாய்ப்புகள் குவிந்துகொண்டேயிருந்தன.
* திருமண வாழ்க்கையில் சிறந்த மனைவியாக, இரு பெண் குழந்தைகளின் அர்ப்பணிப்பு மிக்க தாயாக, திரை நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் திரையிலிருந்து விலகிய 15 ஆண்டுகளுக்குப் பின் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் வசீகரம் குறையாத தோற்றத்துடன் தோன்றி நடித்தார். ஆங்கிலம் பேசக்கற்றுக்கொண்டு சாதிக்கும் சசி கதாபாத்திரம் ஏற்றுத் தன்னம்பிக்கை காட்டினார். “சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இன்னும் நிறையவே காலம் நேரம் இருக்கிறது” என்கிறார் தாய்மையை ஹீரோவாகக் காட்டும் அடுத்த கதாபாத்திரத்தை எதிர்பார்த்தபடி.

* திரை நடிப்பிலிருந்து வெளியேறியபோது எப்படி இருந்தாரோ, அதைப் போலவே இன்றும் தன் தோற்றத்தை எப்படிப் பராமரிக்கிறீர்கள் என்று கேட்டால் “ எதிர்மறையான எண்ணங்கள் எதுவும் மனதில் நுழைய அனுமதிக்கக் கூடாது. முடிந்தவரை சந்தோஷமாக இருக்கக் பழகிக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் சந்தோஷம் இருந்தால் முகத்தில் இளமை இருக்கும். இதுவே என் இளமையின் ரகசியம்” என்பது ஸ்ரீதேவியின் பதில்.

* “நடிக்கும்போது நடிகையாக இருந்ததில் கிடைத்த மகிழ்ச்சியைவிட எனது குழந்தைகளுக்கு அம்மாவாக நான் இருப்பதிலும் அன்பான கணவரின் மனைவியாக இருப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறும் ஸ்ரீதேவி “எல்லா அம்மாக்களையும் போல “வெளியே சென்ற மகள்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்ற கவலையுடன் வயிற்றில் நெருப்பைக், கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன்” என்று கூறி சாமானிய அம்மாவாகவும் மாறிவிடுகிறார்.

* “இன்று பெண்கள் சாதிக்க யாரும் அறிவுரை கூற வேண்டியதில்லை” என்பவர், “திருமணம் ஆனதும் பெண்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் கணவருக்காக, குழந்தைகளுக்காக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்” என்று அனுபவப் பாடம் சொல்லித் தருகிறார். தினசரி 1 மணிநேரம் ப்ளோர் உடற்பயிற்சி செய்பவர். அதில் முக்கியமானது 250 முறை ஸ்கிப்பிங் செய்வது. வாரத்தில் இருமுறை நீச்சல் பயிற்சி. பொரித்த உணவுகளை ஸ்ரீதேவி சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. ஸ்ரீதேவி இதுவரை கோபப்பட்டு யாரிடமும் பொரிந்ததில்லை என்பது கணவர் போனி கபூரின் சாட்சியம்.
தொகுப்பு: ஆர்.சி.ஜெ.

தளம் புதிது: பி.டி.எஃப். கருவிகளை அளிக்கும் இணையதளம்

சைபர் சிம்மன்

பி.டி.எஃப். கோப்பு வடிவத்தை நீங்கள் பலவிதங்களில் எதிர்கொள்ளலாம். இணையத்தில் உலாவும்போது, பல தகவல்கள் பி.டி.எஃப். கோப்பு வடிவில் இருப்பதைப் பார்க்கலாம். பணி நிமித்தமாக நீங்களேகூட, பி.டி.எஃப். கோப்புகளை உருவாக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். பி.டி.எஃப். கோப்பு பயன்பாடு தொடர்பான உங்களுக்குத் தேவைப்படக்கூடிய பலவிதமான இணையக் கருவிகளை ஒரே இடத்தில் வழங்குகிறது கிளவர்பி.டி.எஃப். இணையயதளம்.
பி.டி.எஃப். கோப்பை உருவாக்குவது எளிதானது. அதற்குரிய மென்பொருள் இருந்தால் போதும். ஆனால், பல நேரம் பி.டி.எஃப். கோப்பை வேறு வடிவங்களுக்கு மாற்றும் தேவை ஏற்படலாம். உதாரணத்துக்கு பி.டி.எஃப். கோப்பைச் சாதாரண வேர்டு கோப்பாக மாற்ற வேண்டியிருக்கலாம். இத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கான கருவிகள் அனைத்தும் இந்தத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐகான் இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் விரும்பிய கோப்பு வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இதேபோலப் பிற கோப்பு வடிவங்களிருந்தும் பி.டி.எஃப். கோப்பாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பவர் பாயிண்ட் அல்லது உருவப்படத்தைப் பி.டி.எஃப். கோப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

இவற்றைத்தவிர, பி.டி.எஃப். கோப்புகளை இணைப்பது, பி.டி.எஃப். கோப்புகளைப் பிரிப்பது, சுருக்குவது போன்ற தேவைகளுக்கான இணையக் கருவிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படி பி.டி.எஃப். தொடர்பான 19 வகையான பயன்பாட்டுக்கான இணையக் கருவிகளை இந்தத் தளத்தில் பெறலாம்.
இணைய முகவரி: https://www.cleverpdf.com/

ஜிஎஸ்டி அமலால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?- முழு பட்டியல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. பெரும்பான்மையான பொருட்களுக்கு 18 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியால் விலை குறையும் பொருட்கள்
உணவுப் பொருட்கள்
பால்பவுடர்
தயிர்
மோர்
பிராண்ட் அல்லாத இயற்கை தேன்
பாலாடைக் கட்டி
நறுமணப் பொருட்கள்
தேயிலை
கோதுமை
அரிசி
கடலை எண்ணெய்
சூரிய காந்தி எண்ணெய்
பாமாயில்
தேங்காய் எண்ணெய்
கடுகு எண்ணெய்
சர்க்கரை
வெல்லம்
பாஸ்தா
மாக்ரோனி
நூடுல்ஸ்
பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஊறுகாய்
ஜாம்
சாஸ் வகைகள்
இனிப்பு வகைகள்
இன்ஸ்டண்ட் உணவு மிக்ஸ்
ஐஸ்
மினரல் வாட்டர்
முந்திரி
பிஸ்கட்
பேக்கிங் பவுடர்
தினசரி பயன்படும் பொருட்கள்
குளியல் சோப்
தலைக்கு தடவக்கூடிய எண்ணெய்
சோப்புத் தூள்
சோப்
டிஸ்யூ பேப்பர்ஸ்
நாப்கின்ஸ்
மெழுகுவர்த்திகள்
மண்ணெண்ணெய்
எல்பிஜி டொமஸ்டிக்
தீப்பெட்டிகள்
ஸ்பூன்கள் மற்றும் போர்க்
அகர்பத்திகள்
பற்பசை மற்றும் பற்பொடி
எல்பிஜி ஸ்டவ்
ஸ்டேஷனரி பொருட்கள்
நோட்டு புத்தகம்
பேனா
அனைத்து வகையான பேப்பர்
கிராப் பேப்பர்
பள்ளி புத்தகப்பை
படம், ஓவியம், வண்ணம் தீட்டும் புத்தகங்கள்
கார்பன் பேப்பர்
பிரிண்டர்ஸ்
மருந்துகள்
இன்சுலின்
எக்ஸ்ரே பிலிம்
மருத்துவப் பரிசோதனை பொருட்கள்
கண்ணாடிகள்
சர்க்கரை மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள்
ஆடை சம்பந்தப்பட்ட பொருட்கள்
பட்டு
கம்பளி பொருள்
காதி துணிகள்
ரூ.500க்கும் கீழ் உள்ள காலணிகள்
ரூ.1,000 வரை உள்ள ஆடைகள்
மற்றவை
15 ஹெச்பிக்கும் குறைவான திறன் உள்ள டீசல் இன்ஜின்
டிராக்டர்
எடை மெஷின்கள்
எலெக்ட்ரிக் டிரான்பார்மர்ஸ்
வைண்டிங் வொயர்ஸ்
ஹெல்மட்
பட்டாசுகள்
இரு சக்கர வாகனங்கள்
சொகுசு கார்கள்
ஸ்கூட்டர்ஸ்
எகானாமி பிரிவு விமான டிக்கெட்டுகள்
ரூ.7,500 க்கும் குறைவான அறை வாடகை கொண்ட ஹோட்டல்கள்
சிமெண்ட்
செங்கற்கள்
விலை உயரும் பொருட்கள்
பன்னீர்
காபி
மசாலா பவுடர்
நெய்
சுவிங்-கம்
ஐஸ் கிரீம்
சாக்லேட்
தங்கம்
7500 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஓட்டல் அறை
ஐந்து நட்சத்திர ஓட்டல்
100 ரூபாய்க்கு மேல் இருக்கும் டிக்கெட் கட்டணம்
ஐபிஎல் போட்டிகள்
1000 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஆடைகள்
ஷாம்பு
வாசனை திரவியம்
முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு டிக்கெட்கள்
ஏசி
குளிர்சாதன பெட்டி
வாஷிங் மெஷின்
தொலைக்காட்சி பெட்டி
கொரியர் சேவைகள்
மொபைல் கட்டணங்கள்
வங்கி சேவைகள்
பிராட்பேண்ட்
கிரெடிட் கார்டு கட்டணம்
350 சிசிக்கும் மேலான இரு சக்கர வாகனம்
சிறிய மற்றும் நடுத்தர கார்
எஸ்யூவி
மீன் வலை
ஸ்மார்ட்போன்
லேப்டாப்
டெஸ்க்டாப்
உடற்பயிற்சி சாதனங்கள்
காற்றடைக்கப்பட்ட பானங்கள்
சிகரெட்
புகையிலை
மதுபானம்
சொகுசு பொருட்கள்
பான் கார்டு – ஆதார் இணைப்பு புதிய படிவம் வெளியிட்டது வரித்துறை!!!

பான் என்னும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய, ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.

மக்கள் பீதி
‘ஜூலை 1க்குள், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப்படும்’ என, சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் தகவல் வெளியானதையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்தனர்.அவர்களின் பீதியை போக்கும் வகையில், ‘ஆதார் எண் இணைக்காதவர்களின் பான் எண் முடக்கப்படாது என்றும், தொடர்ந்து இணைக்கலாம்’ என, வருமான வரித்துறை அறிவித்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முறையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்கள், நேரடியாக இணைப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில், ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை நேற்று வெளியிட்டது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முறையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாதவர்கள் மற்றும் இணையதளவசதி இல்லாதவர்களுக்காக, புதிய, ஒரு பக்க படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்பி, அத்துடன், ‘என்னிடம் ஒரு பான் எண் மட்டும் உள்ளது.

அதனுடன் மட்டுமே என்னுடைய ஆதார் எண்ணை இணைக்கிறேன்’ என்ற உறுதிமொழியையும் சமர்ப்பிக்க வேண்டும்.2.62 கோடி பேர்நாடு முழுவதும், 115 கோடி பேருக்கு ஆதார் எண்ணும், தனி நபர், நிறுவனம் உள்ளிட்ட, 25 கோடி பேருக்கு, பான் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது; இதுவரை 2.62 கோடி பேர், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Posted by kalviseithi.net A

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதிப்பெற்றவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான பதிவுwww.mcc.nic.inஎன்ற இணையதளத்தில் வரும் 3-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.

சேர்க்கைக்கு பின் சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்: தனியார் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு.

கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் ஒவ் வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடங்கும்போதே அந்த கல்வியாண்டுக்கான முழு கட்டணத்தையும் வசூலித்து விடு கின்றனர். இந்நிலையில், மாண வர்கள் வேறு படிப்புக்கு விண்ணப் பித்து அந்த படிப்புக்கு இடம் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்தச் சூழலில், மாணவர்கள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை பல கல்லூரிகள் திருப்பி அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்வோர்பாது காப்பு கவுன்சில் மற்றும் காஞ்சி புரத்தை அடுத்த வெம்பாக்கத்தைச் சேர்ந்த எம்.என்.ராமன் ஆகியோர் செங்கல்பட்டு நுகர்வோர் குறை தீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:இரண்டாவது மனுதாரரான நான், எனது மகளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2011 ஜூலை 22-ம் தேதி ரூ.67,000 செலுத்தி பொறியியல் படிப்பில் சேர்த்தேன். வகுப்புகள் தொடங்கிய 6 நாட்களில், எனது மகளுக்கு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பிறகு, எனது மகள் பொறியியல் கல்லூரிக்கு செல்லவில்லை.எனவே, ஓராண்டு கல்வி கட்ட ணமாக செலுத்திய தொகையை திருப்பி அளிக்கும்படி கல்லூரிக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு எந்த விதமான விளக்கத்தையும் அளிக் காத கல்லூரி நிர்வாகத்தினர், எனக்கு ரூ.22,000-த்துக்கான காசோலையை மட்டும் அனுப்பி வைத்தனர்.

எனவே, மீதமுள்ள தொகையை திருப்பி அளிக்கவும், மன உளைச் சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த செங் கல்பட்டு நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவர் கே.சிவானந்தஜோதி, உறுப்பினர்கள் கே.பிரமீளா, டி.பாபு வரதராஜன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு வழக் கில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாணவர்கள் கல்வி நிறுவனங் களில் பயிலாத காலத்துக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளி யிட்ட பொது அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ளது.யுஜிசி-யின் அந்த அறிவிப்பில், “மாணவர்களின் சேர்க்கையில் காத் திருப்போர் பட்டியலை கல்வி நிறு வனங்கள் வைத்திருக்க வேண்டும்.

வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் வெளியேறினால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவரை சேர்க்க வேண்டும். வெளியேறும் மாணவரிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தில் சேர்க்கை நடைமுறை கட்டணமாக அதிக பட்சம் ரூ.1,000 வரை பிடித்தம் செய்துகொண்டு மீதித் தொகை திருப்பி அளிக்க வேண்டும்.வகுப்புகள் தொடங்கிய பிறகு ஒரு மாணவர் வெளியேறினால், காலியாக உள்ள அந்த இடத் துக்கு வேறொரு மாணவர் சேர்க்கப் படும்போது, கல்லூரியில் பயின்ற நாட்களுக்கான பிடித்தம் போக மீதி கல்வி கட்டண தொகையை வெளியேறும் மாணவருக்கு திருப்பி அளிக்க வேண்டும்’’ என தெரி விக்கப்பட் டுள்ளது.

இரண்டாவது மனுதாரரின் மகள் 6 நாட்கள் மட்டுமே கல்லூரியில் பயின்றுள்ளார். எனவே, மனுதாரர் கோரிய மீதித் தொகையை 6 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5,000, வழக்கு செல வாக ரூ.5,000-த்தையும் கல்லூரி நிர்வாகம் அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 31.01.2026