Sunday, July 30, 2017

Sathyabama univ conducts convocation
Chennai:
TNN 
 


Nearly 3,000 students received their degrees at Sathyabama University's 26th convocation ceremony celebrated on Saturday . Around 2,392 undergraduates, 284 postgraduate and 58 PhD students received their degrees. The chief guest S Christopher, chairman, DRDO, along with VR Lalithambika, deputy director, Vikram Sarabhai Space Centre, Isro, and J Ajeeth Pradath Jain, senior principal, Bhavan's Rajan Vidyashram, were awarded honorary degrees.


அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
21:39

கோவை, :கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து, ஆக., 5ல் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த இருப்பதாகஅறிவித்துள்ளனர்.'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; எட்டாவது ஊதிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்குழுவின் ஆய்வு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதன் அமைப்பாளர்கள் செந்தில்    குமார் உள்ளிட்டோர்   றியதாவது:கோரிக்கையை வலியுறுத்தி, ஆக., 5ல் கோட்டையை நோக்கி பேரணி, 22ல் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும். 26ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடக்கும்.செப்., 7 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டம் நடத்தப்படும்.இதில், 27 ஆசிரியர் சங்கங்கள், 17 அரசு ஊழியர் சங்கங்கள் உட்பட, 64 சங்கங்கள் கைகோர்த்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தினரை, அழைத்து பேசி, கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரை, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


ராகிங்'கை தடுக்க கல்லூரிகளுக்கு அறிவுரை

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
19:10

கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 'ராகிங்'கை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, கல்லுாரிகள், பல்கலைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பழைய மாணவர்கள், புதியவர்களை, 'ராகிங்' செய்யும் நடவடிக்கை, கிரிமினல் குற்றம். இது குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.* முதல்வரின் அறை முன், புகார் பதிவு புத்தகம் வைக்க வேண்டும்* கல்லுாரி வளாகம் முழுவதும் தெரியும்படி, கண்காணிப்பு கேமரா, செயல்பாட்டில் இருக்க வேண்டும்* மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்தி, 'ராகிங்' நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்* மாணவர்களிடமிருந்து புகார் வந்தால், உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்* 'ராகிங்' கண்காணிப்பு கமிட்டி அமைத்து, கல்லுாரி வளாகத்தில், ஆசிரியர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு பல அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. - நமது நிருபர் -
கரோனரி ஸ்டென்ட்' சிகிச்சையில் புதிய புரட்சி!

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
23:51

நெஞ்சுவலி, மாரடைப்பு என்றால், இதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி, 'ஸ்டென்ட்' வைப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. 'அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் இறந்து விடுவாய்' என டாக்டர்கள் சொல்லி விடுகின்றனர். உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி'க்கு தயாராகி விடுகின்றனர்.

ஆனால், எப்போது,

'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்?நெஞ்சு வலி வந்தவுடன், இ.சி.ஜி., 'டிரெட்மில் டெஸ்ட்' எனப்படும், டி.எம்.டி., எக்கோ எடுத்த பின், மருந்து கொடுத்து, ஆய்வு செய்து, பின், 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்.
எப்போது உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்?
மார்பு வலியுடன் வருபவருக்கு, ஊசி மூலம் மருந்து கொடுத்து, ஐ.சி.சி.யு.,வில் சேர்த்து, 24 மணி நேரத்திற்கு பின், செய்ய வேண்டும்.


சில சமயம் நோயாளிகளுக்கு இதய துடிப்பு குறைந்தாலோ, ரத்த அழுத்தம் குறைந்தாலோ, உடனே ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய வேண்டும்; இதனால், பலன் கிடைக்கும். இது தான் முறை. இது, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும்; இது உயிர் காக்கும் சிகிச்சை.
'ஆஞ்சியோ கிராம்' செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?

மார்பு வலி, மாரடைப்பு உள்ளவர்களுக்கு ஆஞ்சியோகிராம் செய்து, அடைப்பு இருந்தால், கரோனரி ரத்தக் குழாய் அடைப்புகளை கவனிக்க வேண்டும்.
* அடைப்பு எத்தனை சதவீதம் என்பதை ஆஞ்சியோ படத்தில் அறிய வேண்டும்
* ஒரு அடைப்பா, இரண்டா, மூன்றா, நான்கா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எத்தனை ரத்தக் குழாயில் என்று அறிய வேண்டும்
* அதன் நீளம் எதுவரை உள்ளது என்பதை அறிய வேண்டும். மகாதமனி ஆரம்பத்தில் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
இந்த அடைப்புகள், ஆஞ்சியோ பிளாஸ்டி, 'ஸ்டென்ட்' சிகிச்சைக்கு தகுதியானவையா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

ஆஞ்சியோ படத்தை நம் கண்களால் பார்க்கும் போது, குத்துமதிப்பாக தான் அறிய முடியும். இதில் தவறு ஏற்படலாம். எந்த அடைப்பால் நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று துல்லியமாக அறிய, எப்.எப்.ஆர்., என்ற, 'பிராக் ஷனல் புளோ ரிசர்வ்' பரிசோதனை செய்ய வேண்டும். இது, உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனரி ரத்த அழுத்தமானது, அடைபட்ட ரத்தக் குழாய் பிரச்னையிலிருந்து வேறுபடும். சாதாரணமாக ரத்த அழுத்தம், கரோனரி ரத்தக் குழாய் முழுவதும் ஒரே அளவாக இருக்கும். அடைப்புக்கு முன்பு இருக்கும் அழுத்தம், அடைப்பு ஏற்பட்ட பின் குறைவாக இருக்கும். இந்த வேறுபாடு, ௦.8க்கு கீழ் அதாவது, 0.7, 0.6, 0.5 என இருந்தால், அடைப்பு அதிகமாக உள்ளது; இதனால் தான் வலி வருகிறது என்பதை அறியலாம்.

இதற்கு உடனே, 'ஸ்டென்ட்' சிகிச்சை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் ஒரே ரத்த குழாயில் எத்தனை அடைப்பு, எந்தெந்த ரத்த குழாயில் அடைப்பு, அடைப்பின் அளவு என்ன, எத்தனை ஸ்டென்ட் வைக்கலாம், எவ்வளவு மருந்து, மாத்திரை கொடுக்கலாம் என, முடிவு செய்ய முடியும்.

'பை பாஸ்' செய்தவர்களுக்கு, இந்த பரிசோதனை செய்து, 'பை பாஸ் கிராப்ட்' அடைப்பை கண்டறியலாம்; ஸ்டென்ட் அடைப்பை கூட, இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

பை பாஸ் சிகிச்சை செய்தவர்கள் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து, ஐந்து ஆண்டு முடிந்தவர்கள் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கரோனரி ரத்த நாளத்தைப் படம் பிடித்துக் காட்டும், ஐ.வி.யு.எஸ்., - இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் ஒலிப்படம், ரத்த நாளத்தின் உட்சுவர், வெளிச்சுவர்களை முழுமையாக காட்டும். ரத்த நாள உட்சுவரிலுள்ள அடைப்பு, எந்த அளவு உள்ளது என்பதை காட்டும்.
உதாரணம் தேங்காயை உடைத்தால், எப்படி தேங்காய் தோல், பருப்பு என, தனியாகத் தெரியுமோ, அது போல உள்பகுதி தெரியும். ஒரு குழாய் மூலம், ஒலியின் ரத்த நாளத்தில் செலுத்தி படம் எடுத்து காட்டும் கருவியின் பெயர் தான், 'ஐவஸ்!'

இந்த ஐவசில் ரத்த நாளத்தின் முழு நீளத்தை பார்க்க முடியும். அதேநேரத்தில் ஒவ்வொரு விட்டமாகவும் பார்க்க முடியும். மேலும், எவ்வளவு அடைப்பு உள்ளது, அதில் கொழுப்பு, கால்ஷியம், நார் திசுக்கள் எவ்வளவு சூழ்ந்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்த அடைப்பு தான், 'பிளேக் தாக்கம்' என்றழைக்கப்படுகிறது. இந்த அடைப்பு சில சமயம் ரத்த நாளத்தில் நீண்டு இருக்கும். சில பகுதியில், 20 சதவீத அடைப்பு இருக்கும். இதை சாதா ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது.

ஸ்டென்டை நல்ல முறையில் வைப்பது எப்படி?

* ஸ்டென்ட் நன்றாக விரிவடைந்து, ரத்த நாளத்தின் உட்சுவரில் அதை நன்றாக அழுத்தி வைக்க வேண்டும்.

* ஸ்டென்ட்டில் ஆரம்பமும், கடைசி பகுதியும் நன்றாக விரிவடைந்து உட்கார வேண்டும்.

* அடைப்பு துவங்கும் பகுதியின் முன் நன்றாகவுள்ள பகுதியில் ஆரம்பித்து, அடைப்புக்கு இறுதி பகுதியிலுள்ள நல்ல பகுதி வரை ஸ்டென்டை கவர் செய்ய வேண்டும். அப்படி வைத்தால் தான் ஸ்டென்ட் உறுதியாக பல ஆண்டுகள் இருக்கும்.  சாதாரணமாக ஆஞ்சியோ செய்து ஸ்டென்ட் வைக்கும் போது ஏற்படும் குறைபாடுகள்:

* ஸ்டென்ட் சரியாக விரிவடையாமல் இருந்தால், திரும்பவும் அடைப்பு ஏற்படும்.

* அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பதால், ரத்த நாள உட்சுவர் பிரிந்து, 'டிசெக் ஷன்' ஏற்படலாம்.

* ரத்த நாளத்தில் ஓட்டை ஏற்பட வாய்ப்பு உருவாகும்.
இது உடனே சிக்கல் உண்டாகி, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, மரணமும் நிகழலாம். எனவே, இதை ஜாக்கிரதையாக, கண்காணித்து செய்ய வேண்டும்.
இந்த சிக்கலையும், விளைவு களையும் தவிர்க்க, 'இமேஜ்' தழுவிய ஸ்டென்ட் சிகிச்சை, அதாவது, ஐவஸ், ஓ.சி.டி., உபயோகப்படுத்தி, 'பிளாஸ்டி ஸ்டென்ட்' செய்தால் சிக்கல் இருக்காது. தெளிவாகவும், உறுதியாகவும், ஸ்டென்ட் பொருத்த முடியும்.

ஓ.சி.டி., - ஆப்டிக்கல் கோஹெரன்ஸ் டோமோகிராபி என்ற நவீன வரைபடம் மூலம், ஸ்டென்ட் சிகிச்சை செய்யலாம். இதற்கும், ஐவசுக்கும் என்ன வித்தியாசம்?

ஓ.சி.டி.,யில், அல்ட்ரா வயலெட் ஒளியை உபயோகப்படுத்துவதால், படம் வண்ணத்திலும், துல்லியமாகவும் இருக்கும். ஐவசில், ஒலியை உபயோகப்படுத்தும் போது ஒலி அலைகளால் படம் தெளிவாக இருக்காது; கருப்பு வெள்ளையாக இருக்கும். எனினும், இந்த இரண்டு கருவிகளும், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படி செய்வது தான் உறுதியான,
சுத்தமான வேலை.
எனவே, ஆஞ்சியோகிராம் சிறிய பரிசோதனை தான்; ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.
மக்கள் கவனிக்க வேண்டியவை:

* டி.எம்.டி., எக்கோ செய்து, ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.

* நெஞ்சு வலி வந்தவுடன், மருத்துவமனையில் சேர்த்து சில பரிசோதனைகளை செய்த பின் தான், ஆஞ்சியோ செய்ய வேண்டும்.

* மருத்துவமனையில், நல்ல கேத்லேப், தேவையான உபகரணங்கள், பயிற்சி பெற்ற நர்சுகள், டெக்னீஷியன்கள் இருக்க வேண்டும்.

* கேத் லேப் அருகில், ஐ.சி.சி.யு., இதய அறுவை சிகிச்சை அரங்கம் இருக்க வேண்டும். மயக்க மருந்து கொடுக்க, மருத்துவர் அருகில் இருக்க வேண்டும்.
கேத் லேப் வலது புறம் அறுவை சிகிச்சை அரங்கமும், இடது புறம் தீவிர சிகிச்சை பகுதியும் என்ற முறையை, இந்தியா முழுவதும் கொண்டு வந்தவர், என் இனிய நண்பரும், இதய மாற்று சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் கே.ஆர்.பாலகிருஷ்ணன். இவர் பணிபுரியும் மருத்துவமனைகளில் இந்த முறை செயல்படுகிறது. சில நேரங்களில் ஆஞ்சியோ பிளாஸ்டியில் சிக்கலானால், இம்மாதிரியான அறை அமைப்புகள், உபயோகமாக இருக்கும்.
வெற்றிகரமான ஸ்டென்ட் சிகிச்சை செய்ய; நுட்பமான, தெளிவான சிகிச்சை; எது, எப்படி, எப்போது என்ற முடிவுக்கு வர, அனுபவமிக்க இதய வல்லுனர்களால் தான் முடியும்.

இதய ஊடுறுவல் நிபுணராக வர வேண்டியவர்கள், ஐந்து முதல்,10 ஆண்டுகள் வரை நிறைய நோயாளிகளை பரிசோதனை செய்யும் கூடத்திலும், மருத்துவமனையிலும், பை பாஸ் சர்ஜரி உள்ள மருத்துவமனையிலும் பணியாற்றினால் தான், தெளிவான உறுதியான செயல்திறன் மிக்கவர்களாக திகழ முடியும். டி.எம்., - டி.என்.பி., பட்டம் மட்டும் போதாது.
நல்ல ஆசிரியர், பலருக்கு சொல்லிக் கொடுத்து தெளிவான அறிவும்,திறனையும் பெறுகிறார்.- பேராசிரியர் சு.அர்த்தநாரிஇதய ஊடுறுவல் நிபுணர்டாக்டர் எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக் கிருஷ்ணாபுரம், ராயப்பேட்டை,சென்னை - 14.
கைப்பேசி: 98401 60433.
சிறிய பிழை இருந்தாலும்
வருமான வரி படிவம் நிராகரிப்பு 

 
வருமான வரி கணக்கு தாக்கலில் சிறு தவறு கள் இருந்தாலும், அந்த மனுக்களை வருமான வரித்துறை நிராகரிக்கிறது. தவறுகளை, திருத்தம் செய்ய, 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.




இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரித்துறை,ஒவ்வொரு பிரிவினருக்கும், கணக்கு தாக்கல் செய்ய, தனித்தனி படிவங்களை தயாரித்துள் ளது. சிலர், தங்களுக்குரிய படிவத்தை சமர்ப்பிக் காமல், தவறான படிவத்தில் கணக்கு தாக்கல் செய்து விடுகின்றனர். அது போன்ற படிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

சமீபத்தில், ஒருவருக்கு, அலுவலகத்தில்   தரப்பட்ட, படிவம் - 16ல் இருந்த விபரத்திற்கும், அவர் தாக்கல் செய்த படிவத்திற்கும், வருவா யில், 300 ரூபாய் கூடுதலாக இருந்தது. அதனால், அந்த படிவம் நிராகரிக்கப்பட்டது.இது போல, வருமான வரி படிவத்தில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட் டால், அவர்களின், மொபைல் போன் எண்ணுக்கு, அதுகுறித்து, எஸ்.எம்.எஸ்.,அனுப்பப்படுகிறது.

அவர்கள், வருமான வரி சட்டம், 139 - 9ன் படி, தகவல் வந்த, 15 நாட்களுக்குள், அந்த தவறை திருத்தி, உரிய படிவத்தில், சரியான விபரங்களுடன், மீண்டும், கணக்கு தாக்கல் செய்யலாம். தாமதம் செய்தால், கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாகிவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழு வித படிவங்கள்

* ஆண்டு வருவாய், 50 லட்சம் ரூபாய்க்கு குறை வாக உடைய, மாத வருமானதாரர்கள்; ஒரு வீடு மட்டும் சொந்தமாக வைத்திருப்போர் மற்றும் வட்டி மூலம்வருவாய் பெறுவோர், ஐ.டி.ஆர்., - 1 என்ற படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்

* தொழில், வர்த்தகத்தில் ஈடுபடாத, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உடைய தனி நபர், கூட்டு குடும்பத்தினர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு வைத்தி ருப்போர், ஐ.டி.ஆர்., - 2 என்ற படிவத்தை தாக்கல்   செய்ய வேண்டும்
* ஒரு நிறுவனத்தை நடத்தி வருவாய் ஈட்டும் தனி நபர் அல்லது கூட்டு குடும்பத்தினர், ஐ.டி.ஆர்., - 3 என்ற படிவத்தையும்; வருவாய் கூடினாலும், குறைந்தாலும், அரசு நிர்ணயித்த வருவாய்க்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்தும் வணிகர்கள் அல்லது தொழில் செய்வோர், ஐ.டி.ஆர்., - 4 என்ற படிவத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்

* அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் நடத் துவோர், ஐ.டி.ஆர்., - 5, 6, 7 ஆகிய படிவங்களை, பிரிவு வாரியாக, தாக்கல் செய்வது அவசியம்.
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் தயார்

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
19:53

சென்னை, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மூன்று விதமான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை; மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீட்டு முடிவுக்கும், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், ஜூலை, 17ல் நடக்க இருந்த, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், ரத்து செய்யப்பட்டுள்ளது. எப்போது கலந்தாய்வு நடக்கும் என, மாணவர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை, ஆக., 31க்கும் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், மூன்று விதமான தரவரிசை பட்டியலை தயாரிக்கும் பணியில், மருத்துவ கல்வி இயக்ககம் ஈடுபட்டுள்ளது. கவுன்சிலிங் நடத்தும் முன்னேற்பாடுகளையும் துவக்கி உள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த, ஒரு மாதம் மட்டும் அவகாசம் உள்ளது. இதனால், தற்போது விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில், பிளஸ் 2 மதிப்பெண்; நீட் தேர்வு மதிப்பெண்; நீட் தேர்வு அடிப்படையில் இட ஒதுக்கீடு ஆகிய மூன்று விதமான தரவரிசை பட்டியல்   ரிக்கப்பட்டுள்ளது.அதேபோல், பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில், கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. எந்த தரவரிசை பட்டியல் அடிப்படையில், கவுன்சிலிங் நடைபெற வேண்டும் என்று அரசு தெரிவித்தால், அதன் பின், 24 மணி நேரத்தில், கவுன்சிலிங் நடத்த தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
19:44

'மத்திய அரசின் துாய்மை வளாக திட்டத்திற்கு, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், வரும், நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்' என, பல்கலைக்கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், ஒவ்வொரு துறையும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், வளாகங்களில், துாய்மையை பேணுவது தொடர்பான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு, பரிசும், சான்றிதழும் தரப்படுகிறது. இந்த வகையில், மத்திய அரசின், 'ஸ்வச்தா' என்ற, துாய்மை வளாக தரவரிசை பட்டியலில் இடம் பெற, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.இதன்படி, நாளைக்குள் விண்ணப்பங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பித்த கல்வி நிறுவன வளாகங்களின், துாய்மை, சுகாதார திட்டங்கள் மற்றும் வசதிகள், ஆகஸ்டில் ஆய்வு செய்யப்படும். செப்., முதல் வாரம் தரவரிசை வெளியாகும். செப்., 8ல் சிறந்த நிறுவனங்களுக்கு, டில்லியில் விருது வழங்கப்படும்.கல்லுாரி, விடுதிகளில் கழிப்பறை வசதி மற்றும் துாய்மை பராமரிப்பு, கேன்டீன்களில் சுகாதாரமாக உணவு சமைத்து பரிமாறுதல், வளாகத்தை துாய்மையாக வைத்திருத்தல், தரமான குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம் கையாளுதல், அருகிலுள்ள ஏதாவது கிராமத்தை தத்தெடுத்து, துாய்மையை பராமரித்தல் போன்றவற்றின் அடிப்படையில், இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- நமது நிருபர் -

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...