Thursday, August 10, 2017

தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை
பதிவு செய்த நாள்09ஆக
2017
19:20




தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனிடையே தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆக.,9) பிற்பகலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. 

மதுரை மாவட்டம்மதுரை மாவட்டம், மேலூர், கல்லம்பட்டி , தும்பைபட்டி, வெள்ளலூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.




இன்ஜி., கவுன்சிலிங் நாளை(ஆக.,11) நிறைவு

பதிவு செய்த நாள்10ஆக
2017
05:45




சென்னை: இன்ஜி., பொது கவுன்சிலிங் நாளை(ஆக.,11) முடிகிறது. நேற்று வரை, 79 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. 

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23ல், பொது கவுன்சிலிங் துவங்கியது. இதில் விண்ணப்பித்த, 1.35 லட்சம் பேரில், தினமும், 5,000 முதல், 8,000 பேர் வரை அழைக்கப்பட்டு, அவர்களுக்கு, கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 17 நாட்களாக நடத்தப்பட்டு வரும் கவுன்சிலிங், நாளை முடிகிறது.
நேற்று வரை கவுன்சிலிங் மூலம், 79 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. இன்னும், 96 ஆயிரத்து, 141 இடங்கள் காலியாக உள்ளன. இன்றும், நாளையும், அதிகபட்சம், 8,000 இடங்கள் நிரம்பும். கவுன்சிலிங்கின் முடிவில், 88 ஆயிரம் இடங்கள் காலியாகும் என, தெரிகிறது.




Advertisement
80 நாட்டினர் கத்தாருக்கு விசா இல்லாமல் செல்லலாம்

பதிவு செய்த நாள்  09ஆக
2017
22:37




துபாய்:விசா இல்லாமல் 80 நாடுகளை சேர்ந்தவர்கள் கர்த்தாருக்குள் அனுமதிக்கப்படுவார்கள், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளன.கத்தாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்தனர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கத்தாருக்கு வர இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகை தரும் பயணிகளின் நாட்டைப் பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறை 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை மாறுபடுகிறது.

கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன் அல் இப்ராஹிம் கூறுகையில், “80 நாடுகளை சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதிபெறுகிறார்கள். கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகி உள்ளது. எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறிஉள்ளார்.

கடந்த நவம்பர் 2016ல் கத்தார் இலவச டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்தது. பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரங்களில் இருந்து 96 மணி நேரங்கள் (நான்கு நாட்கள்) டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் கத்தார் ஏர்வேஸ் தோகாவில் 5 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல்களில் இலவச தங்கும் வசதியுடன் கொண்ட சிறப்பு சலுகையை அறிவித்தது. இப்போது விசா தொடர்பான முடிவு அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி செயல்பாட்டிற் வருகிறது.
மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை: கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரும்பாலான கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 09, 2017, 03:30 AM


சிவகங்கை,

தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் வறட்சி தாக்கம் அதிகமாக இருந்தது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை என மாவட்டம் முழுவதும் எங்கும் பெண்கள் குடங்களுடன் தண்ணீருக்காக அலைந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் மாவட்டத்தில் கடந்த மாதம்(ஜூலை) பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் இளையான்குடி தவிர மற்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்துள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது.
தலையங்கம்

திறமையின் அடிப்படையில் கேள்விகள்


தமிழ்நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக என்ஜினீயரிங் படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்கள் வரிசையில் சேர்ந்து விடுகிறார்கள்.

ஆகஸ்ட் 10 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக என்ஜினீயரிங் படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்கள் வரிசையில் சேர்ந்து விடுகிறார்கள். தமிழக அரசு பணிகளுக்கான அனைத்து தேர்வு களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத்தான் நடந்து வருகிறது. ஒவ்வொரு வேலைதேடும் இளைஞரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தில் எப்போது அரசு பணிக்காக தேர்வு நடத்துவார்கள்? அதற்கான விளம்பரம் எப்போது வரும்? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்கும் விளம்பரம் வரும்போது எத்தனை இடங்கள் காலியாக இருக்கிறதோ, அதைவிட பல நூறு மடங்கு விண்ணப்பதாரர்கள் களத்தில் இறங்குவார்கள். அந்த வகையில், தமிழக அரசு அனைத்து துறைகளிலும் உதவி யாளர்களாக பணிபுரிவதற்கான குரூப்–2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது.

பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பதவிகள், தலைமைச் செயலகம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நேர்முக எழுத்தர் பதவி, தலைமைச் செயலகத்தில் சுருக்கெழுத்து, தட்டச்சர் பதவி உள்பட ஏராளமான துறைகளில் உதவியாளர் பணிக்காக ஆயிரத்து 953 பணி இடங்களுக்கு, 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த பணிகளுக்கு பட்டப்படிப்புதான் அடிப்படை கல்வித் தகுதி. எனவே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, இந்த தேர்வுகள் நடந்தன. உதவியாளர் வேலை என்பது மிக முக்கியமான வேலை. ஆனால் இந்த வேலைக்கு கேட்கப்பட்ட கேள்விகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன. பொது தமிழ் பகுதியில் உள்ள கேள்விகளில், பல கேள்விகள் எல்லோ ராலும் பேசப்பட்டன. எடுத்துக்காட்டாக 1–ம் வகுப்பில்

கேட்கப்படும் கேள்விகள்போல பொருத்துக என்று தலைப்பிட்டு ஒரு பக்கம் காகம், குதிரை, சிங்கம், குயில் போடப்பட்டிருந்தது. அதை பொருத்தவேண்டிய வார்த்தை களாக அதன் பக்கத்திலேயே கூவும், கரையும், கனைக்கும், முழங்கும் என்று போடப்பட்டிருந்தது.

9–ம் வகுப்பு பாடப்புத்தகம் 3–ம் பருவம், பக்கம் 82–ல் உள்ள கீழ்க்காணும் தொடரில் உள்ள சரியான தேர்வை செய்க. யானையின் கண் சிறியது, யானையின் கண்கள் சிறியது, யானையின் கண்கள் சிறியன, யானையின் கண் சிறியன என்று கேட்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கேள்விக ளெல்லாம் சிறுகுழந்தைகள் பதில் அளிக்கக்கூடியதாக இருந்தாலும், பார்த்தவுடன் சரியான பதில்களை தேர்வு செய்யும் உடனடி பொது கண்ணோட்டம் இருக்கிறதா என்பதை முடிவு செய்யும். மேலும் ஒருசில கேள்விகள் எல்லோராலும் எழுத முடியாத நிலையில் கடினமாக இருந்தது. தமிழ் இலக்கியம் படித்தவர்களால் மட்டுமே அத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும். ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள வினாக்கள் சில இலக்கணப் பிழையுடன் இருந்தன. கணக்கு பகுதியில், கணக்கு பாடத்தை முக்கியமாக கொண்டு படித்தவர்களால் மட்டுமே பதில் அளிக்க முடியும். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் உள்ள முக்கிய பிரச்சினைகள் எதைப்பற்றியும் கேட்க வில்லை. இப்படி பொதுத்தேர்வில் கேள்விகளை கேட்கும் போது அந்த பணிக்கு பொருத்தமான கேள்விகள், அந்த பணியில் சேர்ந்தால் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளை கேட்டு தேர்வு செய்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் வேண்டுவதெல்லாம் தேர்வு தாள்களை திருத்துவதில், மதிப்பிடுவதில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது. எங்கள் திறமையின் அடிப்படையில்தான் தேர்வு நடக்க வேண்டுமே தவிர வேறு எந்தவித புகார் களுக்கும், சந்தேகத்துக்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் தேர்வு எழுதியவர்களின் எதிர்பார்ப்பாகும்.
மாவட்ட செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு


சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

ஆகஸ்ட் 10, 2017, 07:45 AM
சேலம்,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத் திரியை பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும், உடல்நிலைக்குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேர மருத்துவர் கிடையாது. அதனால் இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் சேலம், ஓமலூர், மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது. அதனால் ஜலகண் டாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்க வேண்டு மென கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பெற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக இரவு நேர மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியை பார்வையிட்ட போது அவருடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மேட்டூர் தாசில்தார் செந்தில் குமார், சங்ககிரி எம்.எல்.ஏ. ராஜா, ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஜலகண்டாபுரம் கூட்டுறவு வங்கித்தலைவர் மாதையன், எடப்பாடி ஒன்றியச் செயலாளர் மாதேஸ் வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

எடப்பாடி பகுதியில் சுகாதாரத்துறை மூலம் நடைபெறும் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான அதிகாரிகள் கலந்தாய்வு முகாம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இம்முகாமில் கலந்து கொள்ள அமைச்சர் விஜய பாஸ்கர் வந்தார்.
அவருடன் திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன், சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரை முருகன், தாசில்தார் சண்முக வள்ளி மற்றும் பலர் வந்தனர். பின்னர் சுகாதார விழிப்புணர்வு குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்தும் சுகாதார அதிகாரிகள் மருத்து வர்களிடம் கேட்டறிந்து பேரணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் எடப் பாடி அரசு ஆஸ்பத்திரி வரை நடந்து சென்றார். அப்போது சாலை ஓரத்தில் உள்ள வீடுகள், கடைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்த நோயாளி களை பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு அம்மா சஞ்சீவினி மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும் எடுத்து கூறி, துண்டுபிரசுரங்கள் கொடுத்தார்.

Wednesday, August 9, 2017


Beware! Bigg Boss may not have small impact on kids

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN
PublishedAug 9, 2017, 6:26 am IST


Children should be educated on reality shows, says expert.

Some teachers have taken the initiative to make students aware of the popular reality show, which could possibly affect the emotional well- being of adolescents.


Chennai: Though no formal survey is yet to be conducted on the impact of Bigg Boss show, teachers are saying that students studying from classes 6 to 12 are watching the show.

Some teachers have taken the initiative to make students aware of the popular reality show, which could possibly affect the emotional well- being of adolescents.

Students write what they like and not in Bigg Boss show on the blackboard in a school at Madurai. (Photo: DC)

“When I heard about the controversy on invocation to Goddess Tamil (Tamil Thai Vazhthu) I wanted to check whether students are watching the show. To my surprise, of 45 students in class 9 more than 30 students said they are watching the show along with their parents,” said R.Shiva, a teacher from Madurai College Higher Secondary School.

“Unlike television serials where the students know it's just a fiction, in this programme they believe everything is true and can be disturbed by the events happening in the show,” he said.

He tried to bring some awareness by conducting a discussion on it. At discussion, many students said they did not like the occupants constantly talking ill of others and the groupism in the show. Among the positives, they mentioned cooking, emotions expressed and the house in which the occupants reside. Interestingly, the students did not like the show host and the big star Kamal Haasan

A teacher from the school in Elephant Gate said, “Many students in our school are watching the programme. Our students are predominantly from in and around slum areas and it's their timepass."

“Since our students are having a hard time as kids, this programme cannot create any major impact on them,” he said.

A professor from the Quaid-e-Millath Government College for Women said, “My son is studying class 12. We don't watch the television in our house. But, he insists on watching the programme during dinner.”

Educationist P.B. Prince Gajendrababu said, “Teachers should educate children and parents on watching television programmes. They should use the social science classes to create awareness on reality shows and television serials.”
Dr Viruthagirinathan, clinical neuropsychologist, said, "The Bigg Boss programme is not advisable for children and adolescent children who may not have the emotional and social maturity.”

“Adults can understand the emotional issues involved in the programme. But, the children may not understand it and there are chances that it may affect them in long term,” he said.

NEWS TODAY 26.01.2026