Monday, August 14, 2017



சென்னை:தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.





தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றுவதால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது. இதனால், 17ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு முடிவு அடிப்படை யில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி. எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தகுதி தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது. தமிழகத்தில் மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அதனால், 'நீட்' தேர்வை அடிப்படையாக வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தினால், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, தமிழக அரசு அரசாணை இயற்றியது.

பிரதமருடன் பேச்சு

இதை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், ரத்து செய்தன. அதனால், 'நீட்' தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும் என, முடிவாகியிருந்தது.இந்நிலையில், 'அவசர சட்டம் இயற்றினால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க, மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக, அறிவித்துள் ளார்.

இதுகுறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரத மரையும், என்னையும், சுகாதார அமைச்சர், ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகார அமைச்சர், ஜிதேந்திர சிங் போன்றோரை சந்தித் தனர்.இதில், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள் ளன. தமிழகத்தில், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகளில், 'நீட்' அமலுக்கு வந்துவிட்டது.

'நீட்' தேர்ச்சியில், தமிழக கிராமப்புற மாணவர் கள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், மருத் துவ வாய்ப்புகளை அவர்கள் இழந்துள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை ஆதரிக்க தயார். இதே கோரிக்கையை தான் தமிழக அரசும் வைக்கிறது.

இதுகுறித்து, பிரதமரை சந்தித்து, நானும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பேசினோம். தமிழக அரசு வழங்கியுள்ள புள்ளி விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். அதன்படி, தமிழகத்திற்கு, இந்த ஆண்டு மட்டும், 'நீட்' தேர்வில், விலக்கு கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்.

பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக முதன்மை செயலரிடமும் பேசினோம். அதற்கு, 'நீட் தேர்வு தொடர்பாக, மத்திய அரசு இனி, சட்டம் கொண்டு வராது;

மாநில அரசுஅவசர சட்டம் இயற்றினால், அதற்கு நாம் உதவ தயாராக உள்ளோம்' என, பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

மத்திய அரசு தயார்

எனவே, கிராமப்புற மாணவர்களின் நிலைமையை விளக்கி, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு ஒத்துழைப்பு தர, மத்திய அரசு தயாராக உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து, நிரந்தர விலக்கு கிடையாது. தமிழக, 'மெட்ரிக்' பாடத்திட்டத்தை மாற்றி, கூடுதல் பயிற்சி அளித்து, 'நீட்' தேர்வில் தகுதி பெற வைத்தால், தமிழகத்தில் மட்டு மின்றி, வெளிமாநிலங்களில் உள்ள கல்லுாரி களிலும், தமிழக மாணவர்கள் மருத்துவ இடங்களை பெறலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மத்திய அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அவசர சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் தலைமையில், அதிகாரிகள் குழு, நேற்றிரவு டில்லி சென்று, முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சிக்கு, பலன் கிடைக்கிறது. தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றுவதால், பல மாதங்களாக நீடித்த, மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது.

தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்கு கிடைத்து, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் படி, 'கட்-ஆப்' கணக்கிட்டு, 17ம் தேதி, மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, August 12, 2017


நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !!

நாடு முழுவதும் மே 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசு அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்ைல. நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் அந்த

அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். நீட் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும்’’ என்றார்.

University of Madras

NEET: TN waiting for favourable decision from Centre

 | Updated: Aug 11, 2017, 04:09 PM IST

(Representative image)(Representative image)
CHENNAI: After the Supreme Court dismissed Tamil Nadu's appeal against the Madras high court order that quashed a GO for 85% reservation for state board students in medical admissions, Tamil Nadu chief minister Eddapadi K Palaniswami met Prime Minister Narendra Modi in Delhi on Friday and requested him to exempt the state from NEET for medical admissions.

"We expect a favourable decision from the Centre," the chief minister said after the meeting.

Palaniswami met the PM after the swearing-in ceremony of Vice-President Venkaiah Naidu.

Medical counselling to start next week

Officials in the Directorate of Medical Education said they would have to start counselling by next week so that they could complete the process before the Supreme Court deadline of August 31.

"We have got more time to complete BDS admission as the Dental Council of India has extended deadline by ten days (till September 10). But we are yet to receive any such extension from the Medical Council of India. We will have to start the medical counselling soon," said director of medical education Dr A Edwin Joe.


This year, the state selection committee is in charge of admission of students to MBBS courses in 22 state-run colleges and 10 self-financing colleges as well as BDS students in 19 colleges. While most states and Union territories have completed the first round of counselling and have started the process for the second round, Tamil Nadu is yet to publish its rank list. There are more than 50,000 applications this year for 3,377 MBBS seats.

Latest Comment

When was the SC judgement of squashing TN govt 85% reservation for SB... may be I missed the udgement ... Any way it must be a NEET based ranking, with 69%/31% caste based counselling from this year ... Read MoreGopalarathnam Krishna Prasad

The state put on hold the counselling, scheduled to begin on July 15, after the Madras high court quashed a GO allowing reservation of 85% of medical and dental seats in the government quota for students from the state board.


Selection committee secretary Dr G Selvarajan has said the committee is ready with the rank list in all permutations, with or without NEET, and with or without the 85% reservation. "We will publish it as soon as we get orders from the government," he said.


சத்திரப்பட்டியில் டாஸ்மாக் கடை சூறை ; பெண்கள் ஆத்திரம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:05




சத்திரப்பட்டி; விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி கிழவன் கோயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடினர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இருநாட்களுக்கு முன் சத்திரப்பட்டி கிழவன் கோயில் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. இப்பகுதியை சுற்றி வீடுகள், பேண்டேஜ் ஆலைகள், அகதிகள் முகாம் உள்ளன. கடை முன்புள்ள பாதையை குறவர் காலனி மற்றும் அகதிகள் முகாமில் வசிப்போர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மது குடித்த சிலர் இப்பகுதியில் நடந்து சென்ற சிறுவனை தாக்கினர்.

ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 50 க்கு மேற்பட்டோர் நேற்று காலை டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததையடுத்து, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்தனர். உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த மது பாட்டில்களை பெட்டியுடன் எடுத்து வந்து கடை வாசலில் போட்டு உடைத்தனர். ' சேதமுற்ற மது பாட்டில்களின் மதிப்பு ரூ.4 லட்சத்திற்கும் மேல் இருக்கும் ,'என. கடை மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
இப்பகுதி சந்தனமாரிகூறுகையில்,“ஏற்கனவே வீட்டில் உள்ள ஆண்கள் யாரும் கூலி வேலை சென்று பணம் கொண்டு கொடுப்பதில்லை. இதில் டாஸ்மாக் கடை வேறு திறந்துள்ளதால் வீட்டில் நிம்மதி கெட்டு விடும். அதற்கு பயந்தே எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரிகள் யாரும் வராததால் பாட்டில்களை உடைத்தோம். பெண்களின் பிரச்னைகளை புரிந்து கடையை அகற்ற வேண்டும்,” என்றார். வன்னியம்பட்டி போலீசார் மதுபாட்டில்களை சேதப்படுத்திய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக ஆலோசித்து
வருகின்றனர்.

NEWS TODAY 27.01.2026