Monday, August 14, 2017

Medical tragedy in Gorakhpur

DH News Service, Aug 14 2017, 1:19 IST

The utter callousness of authorities in Uttar Pradesh has resulted in the death of over 70 children at a government hospital in Gorakhpur. These deaths occurred over a span of six days. Several of the victims were new-borns in the neonatal ward. While a formal probe is yet to be done, initial investigations reveal that the children died due to a shortage of oxygen, an allegation that the UP government and authorities at the Baba Raghav Das Hospital have denied. It appears that the gas company supplying oxygen to the hospital stopped doing so because BRD Hospital had failed to clear bills of over Rs 68 lakh that were pending for months. Some reports say that the vendor’s contract with the hospital had ended in March. The result of this major lapse on the part of hospital authorities is that patients were denied oxygen. Several of the children were reportedly suffering from lung infections, others had been diagnosed with Japanese encephalitis. They all needed continuous supply of oxygen. 

But BRD Hospital was not in a position to provide them with this basic, yet critical, facility. It is shocking that the hospital management did not act even after several people, including its employees, had raised red flags over the dipping liquid oxygen levels in the plant. A Comptroller and Auditor-General Report in June had drawn attention to the state of affairs at this hospital. It pointed out that there was a 27% shortage of clinical equipment and 56% shortfall in non-clinical equipment against the minimum requirement prescribed by the Medical Council of India. Incidentally, the hospital was not suffering due to a lack of funds. So, why was payment to the oxygen supplier withheld?

The UP government has ordered a magisterial probe into the tragedy. But will anything substantial come of it? Or will it be yet another attempt to cover up the critical and multiple crises that grip India’s public healthcare system? At BRD Hospital, important evidence has already been destroyed. It appears that post-mortems were not conducted. Parents of the deceased children were made to take away the bodies immediately. All this will hinder efforts at establishing the cause of the children’s death.

The tragedy unfolding in Gorakhpur is not new. Similar tragedies occur at government-run hospitals and primary healthcare centres across the country. Patients are denied basic treatment. Lab attendants conduct surgeries because doctors don’t show up. Patients share ward space with stray dogs. Undoubtedly, India’s public healthcare system is in a grave crisis. Hopefully the probe into the Gorakhpur tragedy will throw full light on what ails the system.
குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு 'நோட்டீஸ்'
பதிவு செய்த நாள்14ஆக
2017
01:13

திருநீர்மலை: பல மாதங்களாக குடிநீர் கட்டணம் செலுத்தாத, ௧,200 வீடுகளுக்கு, திருநீர்மலை பேரூராட்சி, 'நோட்டீஸ்' வழங்கியுள்ளது.திருநீர்மலை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நாள் ஒன்றுக்கு, ஐந்து லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கிறது. இதற்காக, வீட்டு இணைப்புக்கு, மாதந்தோறும், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.திருநீர்மலை பேரூராட்சி யில் உள்ள பலர், குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இதனால், பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, 1,200 குடியிருப்புகள், ஓர் ஆண்டுக்கு மேலாக, குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்பது தெரிய வந்தது.இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம், ௧,200 குடியிருப்புகளுக்கு, நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், 'ஏழு நாட்களுக்குள் நிலுவையில் உள்ள தொகையை செலுத்தவில்லை எனில், இணைப்பு துண்டிக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சாலையோரம் கரடிகள் 'வாக்கிங்' : சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்14ஆக
2017
00:02




கூடலுார்: 'முதுமலை, சாலையோரங்களில் சுதந்திரமாக உலா வரும், கரடிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகில், சாலையோரங்களில் வன விலங்கினங்கள் உலா வருகின்றன.நேற்று முன்தினம், சாலையோரம், இரண்டு கரடிகள் உலா வந்தன. சுற்றுலா பயணியர், அவற்றின் அருகே வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்தினர். அங்கு வந்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை கூறி, அனுப்பினர்.

வனத்துறையினர் கூறியதாவது:காலை, மாலை நேரங்களில், சாலையோரம் வன விலங்குகள் வருகின்றன. வாகனங்களை நிறுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், யானை, காட்டெருமை போன்றவை, சுற்றுலா பயணியரை தாக்கும் அபாயம் உள்ளது. 

விலங்குகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில், ஈடுபடுவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'


பதிவு செய்த நாள்14ஆக
2017
04:01


புதுடில்லி: 'ஏசி ஓட்டல்களில் இருந்து, வீடுகளுக்கு வாங்கி செல்லும், 'பார்சல்' உணவுக்கும், 18 சதவீத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும், ஒரே வரி என்ற திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிட, 28 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.
'ஏசி' எனப்படும் குளிர்சாதன வசதி உடைய,  ஓட்டல்கள், மற்றும் மதுபான விடுதிகளுக்கு, 18 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. 'ஏசி' வசதி இல்லாத
ஓட்டல்களுக்கு, 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.எனினும், 'சில ஏசி ஓட்டல்களில், ஒரு தளத்தில் ஏசி பயன்பாடு இல்லை' என கூறி, 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.

இது குறித்து நேரடி வரிகள் வாரியம் கூறியதாவது:

ஏசி ஓட்டல்களில், ஒரு பகுதியில் மட்டும் ஏசி வசதி இல்லை என கூறி, 18 சதவீதத்திற்கு பதில், 12 சதவீத வரி வசூலிப்பதை ஏற்க முடியாது. அங்கிருந்து, 'பார்சல்' உணவு வாங்கி சென்றாலும், அதற்கும், 18 சதவீத வரி கட்டாயம் வசூலிக்க வேண்டும். ஓட்டலில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஏசி வசதி இருந்தாலும், அங்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளது.

திருமங்கலம்- - ராஜபாளையம் நான்குவழிச்சாலைக்கு மூன்று வழிகள் ஆய்வு: ராஜபாளையம் எம்.எல்.ஏ., தகவல்

பதிவு செய்த நாள்13ஆக
2017
23:46

ராஜபாளையம்:திருமங்கலம்- ராஜபாளையம் நான்குவழிச்சாலை பணிக்கு மூன்று வழிகள் ஆய்வு செய்யப்படுவதாக தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; ராஜபாளையத்தில் பை-பாஸ் ரோடு அமைக்க 2010ல் மாநில அரசு அனுமதி அளித்து நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை இணைந்து செய்தன. 

இப்பணியை விரைவுபடுத்தவும், திருமங்கலத்திலிருந்து ராஜபாளையத்திற்கு நான்கு வழிச்சாலை வசதி கோரியும் தேசிய நெடுஞ்சாலை முதன்மை பொதுமேலாளர் சின்னாரெட்டியிடம் மனு கொடுத்தேன். இதனையடுத்து மத்திய அரசு அனுமதி அளித்து பிப்ரவரியில் விரிவான திட்டத்திற்கான டெண்டர் தயாரிக்க ஆய்வுப் பணிக்காக மூன்றுகோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இந்த ஆய்வில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு மூன்று வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. 

மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொதுமேலாளர் நாக்வியை சந்தித்து, 'திருமங்கலத்திலிருந்து குற்றாலம், சபரிமலை கோயில், திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு ராஜபாளையம் வழியாக போக்குவரத்து உள்ளது.
இதனால் ராஜபாளையத்தில் கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்கும் விதமாக திருமங்கலத்திலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லையான சொக்கநாதன் புத்துார் விலக்கு வரை நான்குவழிச்சாலை பணியை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரினேன், அதற்கு அவர் உறுதி அளித்தார்' என தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து சசிகலா கண்ணீர் கடிதம்
'அ.தி.மு.க., என்ற இரும்புக்கோட்டையில், விரிசல் விழுந்து விடக்கூடாது. முன்பை விட, உறுதியாக செயல்பட்டு கட்சியையும், தமிழகத் தையும் காக்க வேண்டும்' என, சிறையில் இருந்தபடி, முன்னாள் முதல்வர், ஜெ.,யின் தோழி சசிகலா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.





பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா,

தொண்டர்களுக்கு எழுதியுள்ள, கண்ணீர் கடிதம்: ஜெயலலிதா நம்மோடு இருந்தால், நாம் எவ்வாறு உணர்வோமோ, அந்த உணர்வோடு தொண்டர்கள் கட்சியில், தாயின் பரிவை, பாதுகாப்பைதொடர்ந்து இனியும் உணரலாம்.

நம் கண் முன், ஜெ., காட்டிய லட்சிய பாதை, விரிந்து கிடக்கிறது. அதில், அ.தி.மு.க., என்ற, இந்த கட்சியின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும். இந்தியாவின், மூன்றாவது பெரிய கட்சி, அ.தி.மு.க., என்ற நிலையில் இருந்து சிறிதும் இறங்கக்கூடாது. 'இரும்பு கோட்டையில் விரிசல்விழுந்து விடாதா; தடி ஊன்றியாவது எழுந்து நிற்க முடியுமா...' என, எதிரிகள் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.

முன்பை விட உறுதியாக, கட்சியையும், தமிழகத்தையும் காக்க வேண்டும்.ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்டுள்ள இடைவெளியை,

எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. ஆண்டு முழுவதும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை, சிறப்பாக கொண்டாட வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

அ.தி.மு.க.,மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன்:அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.வில் இணைகிறார்

பதிவு செய்த நாள்13ஆக
2017
20:05

திருநெல்வேலி:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சென்னைக்கு அமித்ஷா வரும்போதுபாரதிய ஜனதாவில் இணைகிறார்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன்.நெல்லை தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஒரு முறை ஜெ.,அரசின்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். 2016 சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஜெ.,மறைவுக்கு பிறகு டி.டி.வி.,தினகரன்ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். இருப்பினும் அவர் சோபிக்கவில்லை. எனவே சமீபகாலமாக அ.தி.மு.க.,நிகழ்ச்சிகளிலோ அரசு விழாக்களிலோ பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கிறார்.தற்போது அவர் பாரதிய ஜனதாவில் இணைகிறார். வரும் 22ல் சென்னை வரும் பா.ஜ.,தேசிய தலைவர்அமித்ஷா முன்னிலையிலோ அல்லது காரைக்குடியில் நடக்கும் விழாவிலோ இணைகிறார்.இதுகுறித்து பா.ஜ.,மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகபா.ஜ.க.,வை முன்னிலைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமித்ஷாவின்வருகையின் நோக்கமும் அதுதான். தென் தமிழகத்தில் கட்சியில் தலித்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்நோக்கில் அந்த அமைப்பின் பிரமுகர்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சில தலித்கட்சி தலைவர்களிடம் பேசிவிட்டோம். ஒரு கட்சி தலைவர் தற்போதே எங்களுடன் இணைந்துவிட்டார்.

நீட் தேர்வு போன்ற நிலைப்பாடுகளில் எங்களின் குரலை ஒலித்துவருகிறார்.

இதே போல தென்மாவட்டங்களில் வேறு சமூகங்களை சேர்ந்த பிரமுகர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நயினார் நாகேந்திரனிடம் பேசிவிட்டோம். அவர் வெறுமனே வரக்கூடாது. 4 ஆயிரம்பேருடன் இணைய வேண்டும் என்பதுதான் கட்சியின் விருப்பமாகும். அவர் இணைந்ததும் மாநில அளவில் பொறுப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தரப்பில் பேச முயற்சித்த போது அவர் அலைபேசி "ஸ்விட்ச் ஆப் மோடி'லேயே இருக்கிறது. அமித்ஷா வின் சந்திப்பு பிறகு ஓங்கி ஒலிக்கும் போலிருக்கிறது.

NEWS TODAY 27.01.2026