Saturday, August 19, 2017


நேற்று திறப்பு; இன்று மூடல்! மக்களுடன் மல்லுக்கட்டிய அதிகாரிகள்





நெல்லையில் கட்டி முடிக்கப்பட்டு நீண்டகாலமாகத் திறக்கப்படாமல் இருந்த மேம்பாலத்தைப் பொதுமக்களே திறந்து போக்குவரத்தைத் தொடங்கிய நிலையில், அதை அதிகாரிகள் மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நெல்லை-பாபநாசம் சாலையில் ஆரைக்குளம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ல் தொடங்கியது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட இந்தப் பகுதி வழியாக எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் செல்லும். இதனால், இந்த இடத்தில் 30 முறை ரயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் அடிக்கடி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த இடத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்தன.

பாலத்தின் கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படவில்லை. பாலப் பணிகள் காரணமாக பாபநாசம் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு சுற்றிச் செல்லும் வகையில் மாற்றுச் சாலை வசதி செய்யப்பட்டது. இதனால் இந்த மார்க்கமாகச் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஒருவழியாகப் பாலம் கட்டப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர். இனி தங்கள் பிரச்னை தீரும் என நம்பினார்கள்.

ஆனால், பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் பாலத்தைத் திறப்பதற்கான வழியே இல்லை. பாலத்தின் தொடக்கப் பகுதியில் அடைத்து வைத்து இருந்தனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பாலத்தைத் திறக்க மேலிடத்தில் அனுமதி கேட்கப்பட்டதாகவும், உரிய பதில் இல்லாததால் போக்குவரத்துக்குத் திறக்கப்படவில்லை எனவும் விரைவில் திறக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனால், அந்த வழியாகச் செல்லும் பயணிகளும் வாகன ஓட்டிகளும் அதிருப்தியடைந்தனர். அவர்களே அந்தப் பாலத்தைத் திறந்து போக்குவரத்தைத் தொடங்கினார்கள். நேற்று முழுவதும் அந்த மேம்பாலத்தின் வழியாகப் போக்குவரத்து நடைபெற்றது. இது பற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் இன்று விரைந்து வந்த அதிகாரிகள் அந்தப் பாலத்தில் நடந்த போக்குவரத்தை தடுத்துநிறுத்தினர். பாலத்தில் இரும்புக் கம்பியைப் போட்டு தடுப்பு உருவாக்கினர். இதனால் மீண்டும் வாகன ஓட்டிகள் 10 கி.மீ தூரம் சுற்றியபடி செல்ல வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது. இது வாகன ஓட்டிகளையும் பயணிகளையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

Dailyhunt

தாம்பரத்திலிருந்து செங்கோட்டை, நெல்லைக்கு புதிய ரயில்கள் இயக்க முடிவு




தாம்பரம்: சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு இரண்டு புதிய ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தற்போது சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ஒரு ரயிலும் திருநெல்வேலிக்கு 5 ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கும் நெல்லைக்கும் இரு புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

புதிய ரயிலின் புறப்பாடு மற்றும் வந்து சேரும் கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் முனையத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், ரயில் பாதையில் ஏற்படும் நெருக்கடி காரணமாக கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

இந்த ரயில்களின் பராமரிப்பு பணி அருகில் உள்ள கோபாலபுரம் பணி முனையில் நடைபெறுகிறது. தாம்பரம் சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக மாற்றப்பட்டதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கூடுதல் ரயில்களை இயக்கினால் அவற்றின் பராமரிப்பு பணிகளுக்காக புதிய ரயில்வே பணிமனையை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கடந்த 7-ம் தேதி முதல் தாம்பரம் 3 வது முனையம் செயல்பட தொடங்கி விட்டது. அங்கிருந்து 2 வாரந்திர விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com
Dailyhunt

ஆகஸ்ட் 22-ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. ஏடிஎம்கள் பாதிக்கப்படும்!





சென்னை: வங்கிகள் தனியார்மயமாதலைக் கண்டித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கடன்களை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் செய்யக் கூடாது. வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

எனவே வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து சென்னையில் வங்கிகள் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், வரும் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். வங்கிகளை தனியார்மயமாக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு ரூ.5000 என்ற நிர்ணயித்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கிக் கடன்கள் வசூலிக்கப்படவில்லை. மக்களும் அதிருப்தியில் உள்ளனர். அதிருப்தி அதிகமானால் போராட்டங்கள் அதிகரிக்கும். பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றார் அவர்.

source: oneindia.com

Dailyhunt

18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ஒயிட்னர் விற்பனை செய்ய தடை

கடலூர்: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒயிட்னர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவதை தடுக்க விழுப்புரம் டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஒயிட்னர் முகர்ந்து மாணவர்கள் போதைப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக புகார் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஒயிட்னர்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dailyhunt

IndiGo denies cancelling new flights due to engine issues in A320 Neo planes

According to sources of PTI, a total of 667 flights were cancelled by IndiGo between June 21 and July 3 this year, with 61 flights cancelled on June 27 alone, due to the grounding of these planes.


By: Express Web Desk | New Delhi | Updated: August 18, 2017 3:51 pm

Of the 667 flights cancelled by IndiGo in 13 days, a total of 504 flights were cancelled between June 21 and June 30, while the remaining 163 were cancelled on the first three days of July.
IndiGo was forced to ground 13 planes and cancel 84 flights on Friday owing to issues with its Pratt and Whitney manufactured engines on its Airbus A320 neo aircraft, PTIreported. IndiGo and GoAir have been facing delays in receiving planes from Airbus due to ongoing problems with engines developed by Pratt and Whitney, owned by United Technologies, reported Reuters.

However, Indigo has denied the reports. “There is misleading information being spread by section media on IndiGo’s flight cancellations. 8 Neos grounded, schedule already planned in the month of June on non-availability of these aircraft for July, August and September,” the airline said in a statement. The statement further read: “No new flight cancellations have been made. The affected passengers have already been accommodated with suitable options.”

According to PTI sources, a total of 667 flights were cancelled by IndiGo between June 21 and July 3 this year, with 61 flights cancelled on June 27 alone, due to the grounding of these planes.

IndiGo president Aditya Ghosh said during the post-Q1 earnings call on July 31 that “regrettably, there have been days when we have had to ground as many as nine A320 Neo (planes) due to lack of spare engines. While we do receive certain compensation from Pratt & Whitney for these groundings, the operational disruptions are quite challenging and we are not happy with that situation.”

மனநலம் குன்றிய வாலிபரின் கனவை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர்! குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்


மனநலம் குன்றிய வாலிபரின் கனவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நிறைவேற்றினார். ஸ்டீவனின் கனவை நனவாக்க காவல்துறையினருக்கு அவரின் பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜீவ் தாமஸ். இவர் கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மகன் ஸ்டீவன்.
19 வயதான ஸ்டீவன் மனநலம் குன்றியவர். ஆனாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உடையவர். அவரின் கனவு ஒரு காவல்துறை அதிகாரியாகி மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்பதே. இதை நிறைவேற்ற உதவக்கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை அனுப்பினார் ஸ்டீவன்.
ஸ்டீவனின் கோரிக்கையைக் கனிவுடன் அணுகிய போலீஸ் கமிஷனர், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தி.நகர்
காவல் துணை ஆணைய‌ரை நியமித்தார். ஸ்டீவனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு தேவையான ஏற்பாட்டைச் செய்து நேற்று ஒருநாள் அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரானார் ஸ்டீவன். காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, வாக்கி டாக்கியில் பேசி, காவல்துறை வாகனத்தில் ரோந்து சென்று உதவி ஆய்வாளராக வலம் வந்தார். காவல்துறையினர் தனது கனவை நிறைவேற்றிய சந்தோஷத்தில் ஸ்டீவன் இருந்தார். மகனின் கனவை நிறைவேற்றிய காவல்துறையினருக்கு ஆனந்த நன்றியைக் கண்ணீருடன் தெரிவித்தனர்.

மேலும், ஸ்டீவனின் கனவை நனவாக்க உதவிய மாநகர காவல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணைய‌ர் மற்றும் அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு ஸ்டீவனின் பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

தேங்காய், வாழைப்பழம் மட்டும் ஏன் கடவுளுக்குப் படைக்கிறோம் தெரியுமா?


ந்த சாமியானாலும் சரி அர்ச்சனை செய்ய வேண்டும் அல்லது பூஜை செய்ய வேண்டும் என்றால், தேங்காய், வாழைப்பழம் இல்லாமல் முடியவே முடியாது இல்லையா? சரி அது என்ன தேங்காய், வாழைப்பழம் மட்டும் பூஜையில் முக்கிய இடம் பெறுகிறது என்று நீங்கள் கேட்கலாம். வாழைப்பழம் எல்லா சீசனிலும் எல்லா ஊர்களிலும், குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது. தேங்காய், முக்கண்களைக் கொண்டிருப்பதால் ஆணவம், கன்மம், மாயைதனை உடைப்பது என்பதால்தான் தேங்காய், வாழைப்பழத்தைப் படைக்கிறோம் என்று சொல்வார்கள். ஆனால், அது மட்டும் காரணமில்லை.
வாழைப்பழம்
நாம் உண்டு முடித்தவுடன் எந்தக் காய், கனிகளின் கொட்டைகளைக் கீழே போட்டாலும், அது மீண்டும் முளைத்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆனால், வாழைப்பழத்தைத் தின்று தோலை வீசினாலோ, தேங்காயை தின்றுவிட்டு அதன் சிரட்டையைக் கீழே போட்டாலோ, அது மீண்டும் முளைப்பதும் இல்லை. வேர்விடுவதும் இல்லை. அதைப்போலவே, நாமும் நமது பாவங்களை எண்ணி மனம் வருந்தி வேண்டிக்கொள்ள வேண்டும். இதனால் நமது ஆன்மா தூய்மையாகித் துன்பங்கள் ஒழிந்து, மீண்டும் பிறக்காத நிலையை அடையலாம் என்பதே தேங்காய், வாழைப்பழம் நமக்கு உணர்த்தும் ரகசியம். எனவே, முன்னோர்கள் காரணம் இல்லாமல் ஒன்றும் தேங்காய் பழத்தை கடவுளுக்குப் படைக்கவில்லை என்பதை உணர்வோம்.

NEWS TODAY 29.01.2026