Tuesday, August 22, 2017

Amit Shah cancels visit to Tamil Nadu for second time
TNN | Aug 22, 2017, 05:33 AM IST
BJP chief Amit Shah.BJP chief Amit Shah.
CHENNAI: BJP chief Amit Shah has postponed his three-day tour of Tamil Nadu, for which he was scheduled to leave Delhi on Tuesday morning amid speculation of a reshuffle in the Narendra Modi cabinet.



"He has postponed his visit since he has to remain here for some other important work that has come up," a senior party leader said on Monday when asked about the postponement of the Chennai visit. This is the second time Shah has put off his trip to Tamil Nadu, which is part of BJP's expansion plans. He was earlier scheduled to visit Tamil Nadu in May.



BJP sources also did not rule out the possibility of a Cabinet reshuffle which could see induction of members of the Nitish Kumar-led JD(U), which joined the NDA last Saturday. Union minister and RLSP leader Upendra Kushwaha also met Shah, adding to the speculation. In a statement from Chennai, Tamil Nadu BJP chief Tamilisai Soundararajan said Shah had to postpone his visit due to a meeting with the party chief ministers in Delhi on Monday and his subsequent requirement in various other important meetings.



As a result, his visit to Tamil Nadu as part of the 95 day nationwide tour has been postponed, she said.The new schedule for his visit would be announced later, she added.



The political situation in the state has been volatile since the death of former party supremo and chief minister J Jayalalitha, first due to factional fights that broke out in the ruling AIADMK and then due to intense efforts for a merger between the two main groups, one headed by chief minister Edappadi K Palaniswami and another by former chief minister O Panneerselvam.



While both factions have been friendly to BJP and supported the party's presidential and vice-presidential nominees recently, the saffron party has indicated its preference for their unification.



While BJP has one Lok Sabha MP from the state, it has no representation in the 234-member state assembly, dominated by AIADMK at present.


With an eye on the 2019 Lok Sabha polls, Shah is travelling across the country to strategise and find ways to improve the party's presence in new areas.


Shah was likely to meet leaders representing backward and most backward classes as part of efforts to strengthen the party in Tamil Nadu during his three-day visit to the state. He was scheduled to address leaders of backward classes from diverse backgrounds here on Tuesday.
ஆங்கிலம் அறிவோமே 173: எதுவுமே சொல்லவில்லையா?
Published : 15 Aug 2017 11:48 IST




கேட்டாரே ஒரு கேள்வி

மல்லாக்கப் படுத்துக் கொள்வது என்பதை எப்படிக் குறிப்பிடுவது?


********************

“‘As a senior citizen he is allowed to audit University classes’என்று படித்தேன். அர்த்தம் பொருத்தமாக இல்லையே!”

Audit என்பதற்கான வழக்கமான பொருள் தெரியும். ஒரு வியாபாரம் அல்லது தொழிலின் கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பதை audit என்பதுண்டு.

அதேநேரம் ஆர்வத்தில் ஒரு வகுப்புக்கு நீங்கள் சென்றால் (தேர்வு எழுதுவதோ சான்றிதழ் பெறுவதோ உங்கள் நோக்கமல்ல) அதை audit என்பதுண்டு. அந்தப் பொருளில்தான் வாசகர் சந்தேகம் எழுப்பியுள்ள வாக்கியத்தில் audit என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் கணக்கு வழக்குகள் வாய்வழியாகக் கூறப்பட, அவற்றைச் சரி பார்த்தார்கள். லத்தீன் மொழியில் audire என்பதற்குப் பொருள் ‘கேட்பது’. இதிலிருந்து வந்த சொல் audit என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

மற்றபடி audio என்பது கேட்பது தொடர்பானது என்று கூறி audio-visual, audible, audience என்பதை நான் உதாரணங்களாக்கினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்தான்.

********************

Gents என்பதன் ஒருமை என்ன என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Gent என்று ஒரு வார்த்தை இருக்காது என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். என்றாலும் gent என்பதுதான் அதன் ஒருமைச் சொல். இன்று gent என்று ஒருவரைக் குறிப்பிட்டால் அது ஏதோ நகைச்சுவையாகச் சொல்வதுபோல ஆகி வருகிறது. மற்றபடி gentlemen என்பதன் சுருக்கம்தான் gents.

********************

கேட்டாரே ஒரு கேள்விக்கான பதில். மல்லாந்து அல்லது மல்லாக்கப் படுத்துக்கொள்வது என்பதை face up எனலாம். Supine என்கிற இன்னொரு வார்த்தையும் உண்டு. After her knee surgery, she could only lay supine.

********************

“I didn’t say nothing” என்று ஒரு வாக்கியத்தைப் படித்தேன். குழப்பமாக இருக்கிறதே! இப்படி ஆதங்கப்பட்டிருக்கிறார் ஒரு வாசக நண்பர்.

சில மொழிகளில் இரண்டு எதிர்மறை வார்த்தைகள் இடம்பெற்றால் அவை ஒன்றுக்கொன்று ஆதரவாகவும், அடிக்கோடிடுவதாகவும் இருக்கும்.

ஆனால், ஆங்கிலத்தில் இரண்டு எதிர்மறைச் சொற்கள் பயன்படுத்தப் பட்டால் அவை ஒன்றையொன்று ரத்து செய்து விடும்.

அதாவது I didn’t say nothing என்பதில் not, nothing ஆகிய இரண்டு எதிர்மறைச் சொற்கள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றையொன்று நீக்கிவிடும். அப்படியானால் அந்த வாக்கியத்துக்குப் பொருள் I did say something என்பதுதான். எனவே I didn’t say nothing என்பதற்கான அர்த்தம் நான் நிச்சயம் எதையோ கூறினேன் என்பதுதான்.

Its importance cannot be underestimated. I should not be surprised if it didn’t rain.

ஆனால், சில நேரம் எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவது குழப்பம் அளிக்கக் கூடும்.

Every member of the team was not present என்று ஒருவர் கூறினால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? ஒரு உறுப்பினர்கூட வரவில்லை என்று எடுத்துக்கொள்வதா அல்லது சில உறுப்பினர்கள் வரவில்லை என்று எடுத்துக்கொள்வதா? இந்த இடத்தில் வாக்கியத்தைச் சற்று மாற்றியமைத்தால் குழப்பம் தீர்ந்துவிடும்.

No member of the team was present என்றால் யாருமே வரவில்லை என்றாகிறது.

Not every member of the team was present என்றால் உறுப்பினர்களில் சிலர் வரவில்லை என்றாகிறது.

(Some members of the team were not present என்று குறிப்பிடலாமே என்கிறீர்களா? குறிப்பிடலாம்.)

********************

Myself, himself, itself போன்றவற்றை ‘Emphatic reflexive pronouns’ என்பார்கள். அதாவது ஒரு செயலை ஒருவருக்குப் பதிலாக மற்றொருவர் செய்வதை அழுத்தமாகக் கூறுவது.

Please do not clean the room. I will do it myself.

ஆனால் இந்தியர்கள் ஆங்கிலத்தை பேசும்போது இது தேவையில்லாத பல இடங்களில் (பார்க்க கார்ட்டூன்) பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை இந்திய மொழிகளில் உள்ள சொற்களில் இந்த அழுத்தம் இருப்பதால் அதை ஆங்கிலத்தில் கொண்டு வருகிறோமோ என்னவோ. தமிழில் இன்றே என்பதும், ஹிந்தியில் ‘ஆஜ் ஹீ’ என்பதும் இரண்டு எடுத்துக்காட்டுகள்.

********************

When will the next contest in your column reoccur? என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். அவரது ஆர்வத்துக்கு நன்றி. ஆனால், அவர் கூறுவதைப் பார்த்தால் ஏற்கெனவே நான் இந்தப் பகுதியில் முன்வைத்த ஒரு போட்டியை மீண்டும் அளிக்க வேண்டும் என்ற அர்த்தமாகிறது.

தவிர reoccur என்ற சொல்லை நாம் பயன்படுத்துவதில்லை. Recur என்பதே சரி. (வாசகரின் விருப்பம் விரைவில் நிறைவேற்றப்படும்.).

********************


போட்டியில் கேட்டுவிட்டால்?

I ________ for you since 8 a.m.

a) Waited

b) Waiting

c) Am waiting

d) Have been waiting

e) Was waiting

Since என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்போது குறிப்பிட்ட நிகழ்வு இன்னும் தொடர்கிறது என்று அர்த்தம்.

எனவே waited, was waiting ஆகிய விடைகள் பொருந்தவில்லை.

I waiting என்பது சரியான பயன்பாடு அல்ல. I am waiting என்பது இலக்கணப்படி சரி. ஆனால், அந்த முழு வாக்கியத்தில் அது சரியாகப் பொருந்தவில்லை.

எப்போதோ தொடங்கிய ஒரு விஷயம் (இங்கே ‘காத்திருத்தல்’) இன்னமும் தொடர்கிறது என்றால் have been waiting என்பதுதான் பொருத்தமாக இருக்கிறது.

I have been waiting for you since 8 a.m.

Polymath என்றால் genius என்று அர்த்தமா?

ஒரு விதத்தில் அப்படித்தான். பலவற்றிலும் ஞானம் உள்ளவர். என்றாலும் இப்போதெல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை. All round என்பது புழக்கத்தில் வந்துவிட்டது.

Xerox என்பது நிறுவனத்தின் பெயர் என்பதால் photostat என்பதுதான் நகல் எடுப்பதன் சரியான வார்த்தையா?

Photostat என்பதும் நிறுவனத்தின் பெயர்தான். Photocopy என்பதே சரியானது.

ஆண் சிங்கத்துக்குப் பிடரி என்கிறோமே. பிடரி என்பதை ஆங்கிலத்தில்

எப்படிக் கூறலாம்?

Mane

தொடர்புக்கு: aruncharanya@gmail.com
சேதி தெரியுமா? - 54,000 நீட் தேர்வுக் கேள்விகள்!

Published : 15 Aug 2017 12:13 IST

அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி. வழங்கப்படும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். “நீட் தேர்வுக்குத் தயாராக ரூ. 1.5 லட்சம்வரை சில மாணவர்கள் செலவுசெய்திருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதைத் தடுக்கவே இந்த சி.டி.யைத் தயாரித்திருக்கிறோம்.

54,000 கேள்விகளை உள்ளடக்கிய இந்த சி.டி. முப்பது மணி நேரம் ஓடும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். மற்ற மாநிலங்களில் கேட்கப்பட்டிருக்கும் மாதிரிக் கேள்விகளை ஆய்வுசெய்து இந்தக் கேள்விகளைத் தயார்செய்திருக்கிறது இதற்காக அமைக்கப்பட்ட குழு” என்றார். இன்னும் மூன்று மாதங்களில் புதிய கல்வி சீர்திருத்தங்களைத் தமிழக அரசு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
புதிதாக 300 காஸ் ஏஜன்சிகள் : எண்ணெய் நிறுவனங்கள் முடிவு
பதிவு செய்த நாள்22ஆக
2017
02:26


சமையல், காஸ் சிலிண்டர்களை விரைவாக சப்ளை செய்ய, கிராமங்களில் அதிக ஏஜன்சிகள் நியமிக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு, வீடு, வணிக பயன்பாடு என, 1.90 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும், 1,084 காஸ் ஏஜன்சிகள் மூலம் சிலிண்டர்கள் சப்ளை செய்கின்றன.

கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு, இலவசமாக காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி உள்ளார். அதனால், காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெட்ரோலிய அமைச்சக அனுமதி படி, தமிழகத்தில், புதிதாக, 300 காஸ் ஏஜன்சிகள் நியமிக்கப்பட உள்ளன. அவற்றில், பெரும்பாலானவை கிராமங்களில் நியமிக்கப்பட உள்ளன. இதுவரை, ஆவணங்களை சரி பார்த்து, தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்து, பின், குலுக்கல் முறையில் காஸ் ஏஜன்சிகள் தேர்வு செய்யப்பட்டன. இனி, குலுக்கல் தவிர, மற்ற அனைத்து பணிகளும் இணையதளத்தில் மேற்கொள்ளப்படும். ஏஜன்சி உரிமம் பெறுவதற்கான வயது, 21 - 45 வரை இருந்தது; தற்போது, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய ஏஜன்சிகள் துவக்கிய பின், புதிய வாடிக்கையாளர்களுக்கும், கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும், துரிதமாக சிலிண்டர் சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கமிஷன் எவ்வளவு? : எண்ணெய் நிறுவனங்கள், காஸ் ஏஜன்சி நடத்துவோருக்கு, வீட்டு சிலிண்டருக்கு, தற்போது, 47 ரூபாயும், வணிக சிலிண்டருக்கு, 86 ரூபாயும் கமிஷனாக வழங்குகின்றன.

- நமது நிருபர் -
பன்னீருக்கு பழைய அறை!

பதிவு செய்த நாள்
ஆக 22,2017 02:03



சென்னை: துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள பன்னீர்செல்வத்திற்கு, அவர், ஏற்கனவே முதல்வராக இருந்த போது பயன்படுத்திய அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெ., அமைச்சரவையில், நிதி அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்த போது, அவருக்கு, சென்னை, தலைமை செயலகம், முதல் தளத்தில், அறை ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வரான போதும், அதே அறையை அவர் பயன்படுத்தினார். தற்போது, அந்த அறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு தரப்பட்டுள்ளது.

துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள பன்னீர் செல்வத்திற்கு, மீண்டும் அதே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில், நேற்று துணை முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவருக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் செங்கோட்டையனுக்கு, அதே தளத்தில், வேறு அறையும், புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாண்டியராஜனுக்கு, மூன்றாவது தளத்தில் உள்ள அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரும், நேற்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
மானாமதுரை வைகை ஆறு மேம்பாலம்சேதம்:அதிர்வால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பதிவு செய்த நாள்22ஆக
2017
01:29

மானாமதுரை:மானாமதுரை வைகை ஆறு பாலம் சேதமடைந்துள்ளதால் ஏற்படும் அதிர்வால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.மானாமதுரையில் வைகை ஆறு ஊருக்கு நடுவே தெற்கிலிருந்து வடக்கே செல்கிறது. ஊருக்கு நடுவே ஆறு செல்வதினால் இந்த கரையிலிருந்து அந்த கரைக்கு செல்வதற்காக அப்போது மேம்பாலங்கள் கட்டப்பட்டன. நாளடைவில் வாகனங்கள் செல்லும் பாலம் மிகவும் சேதமடைந்ததை ஓட்டி கடந்த 1980ம் ஆண்டு அண்ணாத்துரை சிலை அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தின்வழியாக தற்போது வரை வாகனங்கள் சென்று வருகின்றன.
மேம்பாலம் கட்டப்பட்டு 37 வருடங்கள் கடந்து விட்டதால் தற்போது பாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள்,லாரிகள் செல்லும் போது பாலத்தில் இருந்து அதிர்வு ஏற்படுகிறது. மேலும் பாலத்தின் கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளே இருக்கும் இரும்புகம்பிகள் வெளியே நீட்டி கொண்டிருக்கின்றன.நடைமேடையில் உள்ள சிலாப்கள் பெரும்பாலும் உடைந்து கிடப்பதால் அதில் நடக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் அதில் நடப்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர். 

பாலத்திற்கு கீழே துாண்களுக்கு கீழே எப்போதும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கிகிடப்பதால் துாண்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது,மேலும் துாண்களுக்கு அருகில் பள்ளம் தோண்டி அந்தப்பகுதியில் மணல் அள்ளி வருவதாலும் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.இந்நிலையில் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகின்றன. பாலத்தின் மேற்புறம் இணைப்பு பகுதியில் அடிக்கடி பிளவும் ஏற்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டப்பட்டு 37 வருடங்கள் கடந்து விட்டதால் அதிகாரிகள் விபத்துகள் ஏற்படுவதற்கு முன் உடனடியாக மராமத்து பணிகளை துவக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக ஆர்வலர் சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது:தற்போது மேம்பாலத்தின் கைப்பிடி சுவர்கள் அனைத்தும்சிமென்ட் கலவை உதிர்ந்து கம்பிகள் நீட்டி கொண்டிருக்கின்றன.மேலும் நடைமேடையில் ஆங்காங்கே பள்ளம்,பள்ளமாக உள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடிவதில்லை என்றார். 

தனியார் கம்பெனி தொழிலாளி பிரபு கூறியதாவது: பாலத்தில் டூவீலரில் செல்லும் போது கனரகவாகனங்கள் வந்தால் பாலத்தில் அதிர்வு ஏற்படுவதால் பாலத்தில் செல்ல அச்சமாக உள்ளது.மேலும் பாலத்தில் மின்விளக்குகள் பலநாட்கள் இரவு நேரங்களில் எரியாமல் இருப்பதினால் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர் என்றார்.
மதுரை காமராஜ் பல்கலையில் யு.ஜி.சி., குழுவினர் ஆய்வு
பதிவு செய்த நாள்22ஆக
2017
00:29

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் 'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து யு.ஜி.சி., எனும் பல்கலை மானிய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. 'துாய்மை இந்தியா திட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்' என அழைப்பை அடுத்து பல்கலை சார்பில் விண்ணப்பிக்கப் பட்டது. இதையடுத்து யு.ஜி.சி., குழு உறுப்பினர்களான ஐதராபாத் உஸ்மானியா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சத்யநாராயாணா, ஆந்திரா ஸ்ரீசைலம் அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் நாகேஸ்வரராவ், ஐதராபாத் யு.ஜி.சி., கணக்கு அதிகாரி ராயப்பா ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை, குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, பசுமை வளாகம் பராமரிப்பு, விடுதி வசதி குறித்து ஆய்வு செய்தனர்.

பதிவாளர் சின்னையா, தேர்வாணையர் ஆண்டியப்பன், தொலைநிலை கல்வி இயக்குனர் கலைசெல்வன், சிண்டி கேட் உறுப்பினர்கள் விஜயரங்கன், லில்லிஸ் திவாகர், ராமகிருஷ்ணன், ராஜ்குமார், புலத் தலைவர்கள், பேராசிரியர்கள் சந்திரசேகர், புஷ்பராஜன், பி.ஆர்.ஓ., அறிவழகன் பங்கேற்றனர்.இன்று (ஆக., 22) காரைக்குடி அழகப்பா பல்கலையில் இக்குழு ஆய்வு மேற்கொள்கிறது.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...