Saturday, August 26, 2017

Consumer forum awards insurance for dental surgery


By Express News Service  |   Published: 26th August 2017 01:06 AM  |  
Last Updated: 26th August 2017 06:54 AM  |    

CHENNAI: An insurance company was directed to pay the amount incurred for a dental surgery by a resident of the city. The consumer forum rejected the argument that the dental surgery falls under “cosmetic” category and directed the insurance company not just to pay for the surgery but also pay `50,000 more as compensation for delaying the rightful reimbursement and causing ‘mental agony.’
The complainant, Surendra S Jain, was hospitalised at Dr Mehta Specialty Hospital in December, 2014 for an odontogenic keratocyst procedure. Jain had incurred a total expenditure of `1,44,374 and had submitted the forms to MD India Healthcare Services (TPA). However, MD India repudiated the claim and said the procedure was excluded from the scope of the policy and hence the claim was not payable.
Despite Jain writing two letters, validated by a doctor’s certificate, that sought to explain that the procedure was not dental treatment but a disease, it had no effect. “Any dental treatment or surgery which is corrective, cosmetic or of aesthetic procedure, filling of cavity, root canal including wear and tear etc unless arising from disease or injury and which requires hospitalisation for treatment,” the policy reads.
Both the opposite parties, Oriental Insurance Company and MD India, claimed that they could not reimburse the amount as it was a violation of a clause in the policy document.
Therefore, the parties claimed that “the treatment was for external congenital disease or defect which is excluded from the scope of the policy and the complainant had undergone dental treatment without any hospitalisation without any disease or injury which is not covered by the policy.”
District Consumer Redressal Forum, Chennai  (North), said that the opposite parties had not filed any proof that mandible cyst or odotongenic keratocyst is either a genetic disorder or a congenital disease.
“In the case in hand, the complainant was treated as inpatient for four days,” K Jayabalan, president of the forum, observed. “Therefore, the claim being repudiated quoting these exclusion clauses is not sustainable and consequently we hold that the opposite parties have committed deficiency in service in rejecting the claim made by the complainant.”
The forum directed payment of `1,35,424 towards treatment, `50,000 towards mental agony suffered by Jain and `5,000 towards litigation charges.
Shot at rajan?
Surendra S Jain underwent odontogenic keratocyst procedure
Incurred expenditure of D1,44,374 and submitted claims for same
Claims rejected by company which classified procedure as ‘cosmetic’
Forum awards D1,35,424 towards treatment, D50,000 for mental agony and `5,000 towards litigation charges

No surprise as CBSE students hog seats


By Express News Service  |   Published: 26th August 2017 01:06 AM  |  
Last Updated: 26th August 2017 06:54 AM  | 

CHENNAI: As expected, the first day of medical counselling saw CBSE students bagging most of the seats in top medical colleges in the state. Besides CBSE students, those who had skipped a year to prepare for the NEET bagged most of the seats in the coveted Madras Medical College .  State Board students who passed out this year could manage much lesser seats, compared to previous years. But most toppers had already participated in the all-India counselling and hence became ineligible to take part in the state counselling.
The candidate who selected the first seat was ranked 27 in the state. The toppers up to  rank 26 had already got admissions in the all India counselling. Health secretary J Radhakrishnan handed over medical seat allotment order to the first top 10 students and all of the top 10 had selected the Madras Medical College.
On Friday, of the 1,209 candidates called for the counselling, 1,077 attended. Of these, 35 candidates opted out by not selecting any of the available seats and eight were wait listed.
Meanwhile, a few students who had taken all India quota seats had come to the counselling and argued with the officials. The officials later clarified to them that they cannot participate in state counselling as per the Supreme Court order. According to the officials, out of top 10 candidates who took seats at MMC, eight were CBSE students, and two are from state board. Out of 10, two had skipped a year.

9 students faked nativity certificate


NO EDITION TODAY..DECCAN CHRONICLE

ண்டைய காலங்களில் எந்தவொரு மன்னருக்கும் போரில் கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர், அவர்களுடைய தளபதி தான். வீரமிக்க, திறமைமிக்க தளபதிதான் மன்னருக்கு வலதுகரமாக திகழ்ந்து இருக்கிறார். அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்சி பணியில் வலதுகரமாக இருப்பவர் தேசிய தலைவர் அமித்ஷா. அவர் இந்த மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையிலும், 24–ந் தேதி கோவையிலும் சுற்றுப்பயணம் செய்வதாக பயணத்திட்டம் வகுக்கப் பட்டிருந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமே, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை பலப்படுத்த வேண்டிய முயற்சி களை, திட்டங்களை வகுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், திடீரென அமித்ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணங்கள் கூறப்படவில்லை என்றாலும், தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையினால் வரவேண்டாம் என்று முடிவெடுத்ததாக பொதுவாக அரசியல் உலகில் பேசப் பட்டது. ஏற்கனவே ஒருமுறை அமித்ஷாவின் சுற்றுப் பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. விரைவில் மீண்டும் தமிழ்நாடு வர இருக்கிறார். 

கடந்த திங்கட்கிழமை வெகுநேரம் வரையில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவும், பா.ஜ.க. ஆளும் மற்றும் கூட்டணியாக ஆண்டு கொண்டி ருக்கும் மாநிலங்களின் முதல்–மந்திரிகளை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினர். இந்தக்கூட்டத்தில், உத்தரபிரதேசம், அசாம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், உத்தரகாண்ட், மராட்டியம், சத்தீஷ்கார், மணிப்பூர், கோவா, மத்தியபிரதேசம் ஆகிய பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்–மந்திரிகளும், பீகார், ஜம்மு– காஷ்மீர் போன்ற பா.ஜ.க. கூட்டணியோடு ஆளும் மாநிலங்களின் துணை முதல்–மந்திரிகளும் கலந்து கொண்டனர். 11 மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் பா.ஜ.க.வின் நட்பு கட்சிகள் ஆட்சி அமைத்திருக்கின்றன. கடந்த 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில், பா.ஜ.க. 282 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு குறையாமல் பா.ஜ.க. மட்டும் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான வகையில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 

எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசாங்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ‘சு‌ஷசன் யாத்ரா’ என்ற பெயரில், ‘‘சிறந்த நிர்வாக பேரணி’’ ஒன்றை நடத்தவும், அந்த பேரணியில் மத்திய அரசாங்கம் நிறைவேற்றிவரும் 17 நல மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் பறைசாற்றப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் கிராமப்புற குடும்பங் களுக்கு பயன் அளிக்கும் இந்த திட்டங்கள் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கப்பட்டால், நிச்சயமாக 350 இடங்கள் என்ற இலக்கை அடைய முடியும் என்று உறுதியாக பா.ஜ.க. தரப்பில் நம்பப்படுகிறது. இந்தவகையில், 

பா.ஜ.க.வின் அடுத்த குறி ‘தமிழ்நாடு’ தான். 2019–ம் ஆண்டில் நிச்சயம் தமிழ்நாட்டிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க அளவில் இடங்கள் வெற்றி பெறவேண்டும். அதற்கேற்ற வகையில், கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் 350 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி என்றாலும், அதில் தமிழகத்தின் பங்கும் ஓரளவுக்கு இருக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் இலக்கு. அதற்கேற்ற வகையில், அடுத்த சில மாதங்களில் நிறைய மாற்றங்களை, முயற்சி களை பார்க்க முடியும். 2019–ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வலுவுள்ள கூட்டணியாக அமையும். எதிர்பாராத கூட்டணியாக அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சேலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்: 27 டன் பழைய டயர்கள் அகற்றம்



சேலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே 27 டன் பழைய டயர்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சினிமா தியேட்டர் – 3 குடோன்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 25, 2017, 04:15 AM

சேலம்,

சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 60 வார்டுகளிலும் ‘டெங்கு‘ காய்ச்சலை உருவாக்கும் ‘ஏடிஸ்‘ கொசுக்களை ஒழிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு, பள்ளி, நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பழைய டயர், தொட்டி, டப்பாக்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளில் தேங்கும் தண்ணீரை அகற்றி சுத்தப்படுத்த அறிவுரை வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்தை பேணிகாக்காத வகையில் செயல்பட்ட பள்ளி, ஓட்டல், சினிமா தியேட்டர் உள்ளிட்ட 120 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள், கார்கள், லாரிகள், டிராக்டர்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் டயர்கள் விற்பனை செய்யும் கடைகள் முன்பு பழைய டயர்கள் குவித்து வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதாக சேலம் மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று காலை சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தாதுபாய்குட்டை, சி.சி.ரோடு, ஏ.ஏ.ரோடு, இ.இ.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டயர் கடைகள், குடோன்கள் மற்றும் சந்து பகுதிகளில் டெங்கு சிறப்புப்பணி டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சித்தேஸ்வரன், சந்திரன், ஆனந்தகுமார் ஆகியோர் துப்புரவு பணியாளர்களுடன் ஆய்வு நடத்தினர்.

அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் டயர்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதைத்தொடர்ந்து கடைகள், குடோன்களில் உள்ள பழைய டயர்கள் 27 டன் அளவுக்கு 4 லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் 3 டயர் குடோன்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள 4 சினிமா தியேட்டர்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஒரு தியேட்டரில் பழைய டப்பாக்கள் மற்றும் தொட்டியில் தேங்கி நின்ற தண்ணீரில் கொசு புழுக்கள் உருவாகி இருப்பதை அதிகாரிகள் கண்டனர். அதைத்தொடர்ந்து அவற்றை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். மேலும் அந்த தியேட்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் ரோகிணி



சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 26, 2017, 05:00 AM
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் வா.சம்பத். அவர் தற்போது சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதில், சேலம் மாவட்ட புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாகவும் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றி வந்தவர். இவர் சேலம் மாவட்டத்தின் 171-வது கலெக்டராக பதவி ஏற்கிறார். அத்துடன் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி ஆர்.பாஜிபாகரேயின் கணவர் விஜயேந்திரபிதாரி. இவர் ஐ.பி.எஸ். அதிகாரி. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். தற்போது மத்திய புலனாய்வுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் மராட்டிய மாநிலம் சோலாப்பூர்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த ரோகிணி, புனேவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். 2008-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக பணியை தொடர்ந்தார். அப்போது தாமிரபரணி ஆற்றில் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி சென்றவர்களை மடக்கி பிடித்து பீதிக்குள்ளாக்கியவர்.

அதன் பின்னர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராகவும் கூடுதல் கலெக்டராகவும் பணியை தொடர்ந்தார். அப்போது மத்திய அரசின், ‘தூய்மை பாரதம்‘ திட்டத்தின்கீழ் சுகாதாரத்தை காக்க, கிராமப்புறங்களில் தனிநபர் கழிவறைகள் கட்டி கொடுக்க அரும்பாடுபட்டார். அதற்காக, ரோகிணிக்கு மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகரம் பாராட்டு தெரிவித்தது.

சேலம் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பொறுப்பு ஏற்கலாம் என தெரிகிறது.

NEWS TODAY 10.07.2026