Sunday, August 27, 2017

மொட்டைக் கடுதாசி எனும் சராஹா!

Published : 18 Aug 2017 10:20 IST


குண்டக்க மண்டக்க வரும் மொட்டைக் கடிதத்தால் குடும்பத்தில் குழப்பக் கூத்துகள் நடந்த வரலாறெல்லாம் முந்தைய தலைமுறையினுடையது. இந்தத் தலைமுறையினர்தான் டிஜிட்டல் தலைமுறையினர் ஆயிற்றே? ‘மொட்டைக் கடுதாசி போடுங்க’ எனக் கெஞ்சாத குறையாகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். மொட்டைக் கடுதாசி போடுவதற்காக ‘சராஹா’ (Sarahah) எனும் செயலி, இந்தத் தலைமுறையினருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே இளசுகளை யோசிக்கவிடாத அளவுக்கு மூழ்கடித்துக்கொண்டிருக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு மத்தியில், மொட்டைக் கடுதாசி பாணியிலான இந்த சராஹா மீதான மோகம் நல்லதா?

இந்தியாவில் வைரல்

சராஹா புதிதாக வந்த செயலி என்று அல்ல. ஏற்கெனவே ‘அனானிம்ஸ்’ சாட், ‘ஸ்டிரேஞ்சர்’ சாட் என விதவிதமான முகம் தெரியாத சாட்டிங்குகளைக் கொண்ட செயலிகள் நிறைய உள்ளன. அதுபோன்ற ஒரு செயலிதான் இதுவும். இந்தச் செயலியை உபயோகப்படுத்துவது எளிது. முதலில் இந்தச் செயிலியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவுசெய்ததும் நமக்கென ஒரு பிரத்யேக சராஹா இணைப்பு கிடைக்கும். அதை நண்பர்களுடன் பகிர்ந்தால், அவர்கள் தங்களது பெயரை வெளியிடாமல் நமக்குக் குறுஞ்செய்திகளை அனுப்புவார்கள். தகவல் அனுப்பியவர் யார் என்றே இதில் தெரியாது என்பதுதான் சராஹாவின் முக்கிய அம்சம்.

சவுதி அரேபியா, எகிப்து என இரு நாடுகளில் மட்டும் அறியப்பட்ட இந்தச் செயலி திடீரென ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரிட்டன், அமெரிக்காவில் கடந்த மாதம் வைரலாகப் பரவியது. இந்த மாதம் இந்தியாவில் அதிரடியாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஒரே வாரத்தில் இந்தச் செயலியை சுமார் 75 லட்சம் பேர் இந்தியாவில் மொபைல்களில் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

அடையாளம் சொல்லாத செயலி

சவுதி அரேபியாவைச் சேர்ந்த சயின் அல் அபிதின் தவுபிக் என்பவர் இந்தச் செயலியைக் கடந்த ஆண்டு உருவாக்கினார். அரேபியப் சொல்லான ‘சராஹா’ என்பதற்கு ‘நேர்மையான’ அல்லது ‘வெளிப்படையான’ என்று பொருள். இந்தச் செயலியை உருவாக்கியபோது, ஒரு நிறுவனத்தின் தலைவரும் தொழிலாளர்களும் ஒளிவுமறைவின்றித் தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இது உருவாக்கப்பட்டதாக அபிதின் தவுபிக் சொன்னார். ஆனால், இப்போது இந்தச் செயலியைப் பயன்படுத்திக்கொண்டிருப்போர் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் அந்த ரகத்தில் இல்லவே இல்லை.



அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தகவல்களை அனுப்பும் முறை, குறை கேட்பு நிகழ்ச்சிகள் நடத்துவோருக்கு வேண்டுமானல் சரிப்பட்டு வரலாம். அதேபோல மக்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிய அரசுக்குப் பயன்படலாம். ஆனால், சராஹா செயலி, இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருவியாகவே இருக்கிறது.

சீண்டும் தகவல்கள்

சராஹாவில் தம்மைப் பற்றிப் பாராட்டுகள் அல்லது தன்னுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள் என எதிர்பார்த்து சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் கிடைத்து வருகிறது. இதில் பாராட்டுகளைவிட வசைபாடுதலைக் கேட்டவர்கள்தான் அதிகம். ஒரு ஒவியனுக்கு, “உன் ஒவியம் எதற்கும் உதவாது, உன் ஒவியம் படு மோசம்’’ என்பது போன்ற கருத்துகளை அனுப்புவது, அந்த ஒவியனுக்கு தன் திறமை மீதான நம்பிக்கையைக் கண்டிப்பாகக் குறைக்கும் அல்லவா? அப்படியான சராஹா தகவல்கள் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. உடல் குறைபாடுகளைக் கேலி செய்வது, விளையாட்டாக சிண்டு முடிக்கும் கருத்துகளை அனுப்புவது என சராஹாவின் தகவல்கள் எதுவுமே ஒருவர் மேம்படுத்திக்கொள்ளும்விதமாக இல்லை.

இது ஒருபுறம் இருக்க, பெண்களைச் சீண்டுவதற்கென்றே இருக்கும் ஆண்களுக்கு இந்தச் செயலி கடவுள் கொடுத்த வரம். இதுநாள்வரை, அடையாளம் தெரிந்துவிடுமே என்ற பயத்தில் கண்ணியமாக நடந்துகொண்ட ஆண்கள்கூட, இப்போது பெயர் தெரியாதே என்ற மகிழ்ச்சியில், தவறான பல செய்திகளைச் துணிச்சலாக அனுப்பவும் செய்கிறார்கள். ‘உன்னை ரசித்துக்கொண்டே இருக்கிறேன்’, ‘டேட்டிங் செல்வோமா’, ‘ஐ லவ் யூ’ என்றெல்லாம் பெண்களுக்குத் தகவல்கள் வருகின்றன. இதைப் பார்க்கும் பெண்கள், இந்தக் குறிப்பை அனுப்பியது யார் என்று குழம்பி, தங்களுக்கு வரும் தவறான கருத்துகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, “தைரியம் இருந்தால் உன் பெயரை சொல்” என்று கேட்பதைப் பார்த்து, சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

குழம்பும் நண்பர்கள்

விளையாட்டாக அனுப்பும் பல தகவல்கள் பிறரின் வாழ்கையையே பாதிக்கக்கூடும் என்ற அச்சத்துக்கெல்லாம் சராஹாவில் வேலையே இல்லை. ஆக்கப்பூர்வமான குறிப்புகளைப் பகிர இது உதவும் என்றாலும், பெரும்பாலும் இதை சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளவும், நமக்குப் பிடிக்காதவர்களைத் திட்டவும், பாலியல்ரீதியான கேள்விகளை எழுப்பவுமே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் நிதர்சனம். இதை எழுதி அனுப்பியது யாராக இருக்கும் என்று நினைத்து, நண்பர்கள் அனைவரையும் சந்தேகித்து மனதைக் குழப்பிக்கொள்வது தேவைதானா?

இணையத்தில் புதிதாக ஒரு வதந்தி சில நாட்களுக்கு முன் பெரிதாகப் பரவியது. அது, சராஹா நிறுவனம், குறிப்புகளை அனுப்பியவர்களின் அடையாளத்தைச் சில தினங்களில் வெளியிடும் என்ற வதந்திதான் அது. ஆனால், இந்தச் செய்தி தவறு என்று சரஹா மறுப்பு வெளியிட்டது. இந்த மறுப்பு செய்தியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவர்கள் பலர். அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் பலர் நட்பையும் உறவையும் இழந்திருப்பார்கள்.

ஏனென்றால் ‘மொட்டைக் கடுதாசி’ செய்யும் வேலை எப்பவுமே அப்படித்தானே!
தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் முதியோர் உதவித்தொகை பயனாளிகள் 50 சதவீதம் பேரின் பெயர் நீக்கம்

2017-08-27@ 02:04:08



வேலூர் : தமிழகத்தில் சொந்த நிலம், வீடு இல்லாமல் 60 வயதை கடந்த ஆதரவற்றோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் சிபாரிசு கடிதத்தால் வசதி படைத்தோரும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். இதனால்
அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்பட்டு வந்தது. உண்மையான பயனாளிகளை கண்டறிய அதிகாரிகளை கொண்ட தனிப்படை அமைத்து வீடு வீடாக சென்று விசாரணை நடத்தியும் பயனில்லை. இதனால் போலியானவர்கள் அரசு உதவித்தொகை பெறுவதை தடுக்க முடியாமல் அதிகாரிகள் குழம்பி வந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதற்காக குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், புகைப்படம், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய தகவல்கள் அனைத்தும் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் பதிவேற்றப்பட்டது.

அப்போது, குடும்பத்துடன் வசித்துக்கொண்டு முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் 50 சதவீதம் பேரின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்ப உறுப்பினர்களில் யார் முதியோர் உதவித்தொகை வாங்குகிறார்களோ அவர்களின் பெயர் இல்லாமல்தான் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டுகளில் இருந்த முதியோர் உதவித்தொகை பயனாளிகள் பெயர் பட்டியலை அந்தந்த மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது 50 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகையும் கட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Common Counselling Crisis : 1200 MBBS Seats may go empty this year, says report

Common Counselling Crisis : 1200 MBBS Seats may go empty this year, says report 0Colleges, Editors Pick, Medical Education, News, PolicyAugust 26, 2017 27A+A- Share this: inShare EmailPrint New Delhi: 50% MBBS seats in deemed universities and private medical colleges continue to remain vacant this year, despite the fact that the authorities have followed the Supreme Court directive of conducting centralized counselling to admit students to both MBBS and dental courses. The Dental scenario is...

Read more at Medical Dialogues: Common Counselling Crisis : 1200 MBBS Seats may go empty this year, says report http://education.medicaldialogues.in/common-counselling-crisis-1200-mbbs-seats-may-go-empty-this-year-says-report/

நான்கு நாள்கள், 10 ஆயிரம் ‘விவேகம்’ டிக்கெட்டுகள்: போரூர் ஜிகே திரையரங்கத்தின் சாதனை!

By எழில்  |   Published on : 26th August 2017 01:11 PM  |   


சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.


இந்தப் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கத்தில் விவேகம் படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்த தகவல்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.


ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 27 வரை, இந்த 4 நாள்களில் மட்டும் 10,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக ஜிகே திரையரங்கம் சார்பாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 2-ம் நாளான வெள்ளிக்கிழமை காலை 1.45 மணிக்குச் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டுள்ளது. அதன்பிறகு காலை 5 மணிக் காட்சியும் தொடர்ந்துள்ளது. விவேகம் படத்தின் வசூல் நிலவரங்கள் இதுபோன்று பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.


சென்னையில் உச்சபட்ச வசூல்: இரண்டாம் நாளிலும் வசூலில் சாதனை செய்துள்ள அஜித்தின் ‘விவேகம்’!
By எழில் | Published on : 26th August 2017 03:39 PM |




தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் ஒருநாளில் ரூ. 1.50 கோடி வசூலித்த படம் என்கிற சாதனையை அஜித் நடித்துள்ள விவேகம் படம் அடைந்துள்ளது. இந்தப் படம் தனது இரண்டாவது நாளிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.


சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.

சென்னையில் முதல் நாளன்று விவேகம் படம் ரூ. 1.21 கோடி வசூலித்தது. இது கபாலியின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். சென்னையில் முதல் நாளன்று கபாலி, தெறி, விவேகம் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரூ. 1 கோடி வசூலை முதல் நாளன்று பெற்றுள்ளன.

சென்னை: முதல்நாள் வசூல்

1. விவேகம் - ரூ. 1.21 கோடி

2. கபாலி - ரூ. 1.12 கோடி

3. தெறி - ரூ. 1.05 கோடி

4. பாகுபலி 2: ரூ. 91 லட்சம்

முதல் நாளில் உலகளவில் ரூ. 33 கோடியை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 16.20 கோடியும் இந்தியாவில் ரூ. 26 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 7 கோடியும் என முதல் நாளிலேயே நம்பமுடியாத அளவுக்கு வசூலித்துள்ளது. அஜித் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் கண்ட படம், கபாலிக்கு அடுத்ததாக அதிகமாக வசூலித்த படம் ஆகிய பெருமைகளை அடைந்துள்ளது விவேகம். கபாலி தமிழ்நாட்டில் முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்தது. அந்தச் சாதனையை இதுவரை எந்தப் படத்தாலும் முறியடிக்கமுடியவில்லை.

தமிழ்நாடு: முதல்நாள் வசூல்

கபாலி: ரூ. 21 கோடி

விவேகம்: ரூ. 16.20 கோடி

பாகுபலி 2: ரூ. 11 கோடி

இரண்டாம் நாளன்று சென்னையில் மட்டும் விவேகம் படம் ரூ. 1.51 கோடி வசூல் பெற்றுள்ளது. இதையடுத்து இரு நாள்களில் சென்னையில் மட்டும் ரூ. 2.72 கோடியைப் பெற்று சாதனை செய்துள்ளது. சென்னையில் இதுவரை எந்தப் படத்தின் வசூலும் ஒரே நாளில் ரூ. 1.50 கோடியைத் தாண்டியதில்லை. நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறைத் தினமாக இருந்ததாலும் பல திரையரங்குகளில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெற்றதாலும் இந்த வசூலை எட்டமுடிந்தது. சென்னை ரோஹிணி திரையரங்குத் தரப்பில் இதுபற்றி கூறும்போது, முதல் இருநாள்களில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அதிக வசூலை விவேகம் படம் அள்ளியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிறு வரையிலான முதல் நான்கு நாள்களில் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விவேகம் படத்தின் இரண்டாம் நாளின் முழு வசூல் விவரங்கள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவேகம்: முதல் நாள் - ரூ. 33 கோடி

சென்னை ரூ. 1.21 கோடி
தமிழ்நாடு ரூ. 16.20 கோடி
இந்தியா ரூ. 26 கோடி
வெளிநாடுகளில் ரூ. 7 கோடி

விவேகம்: இரண்டாம் நாள்

சென்னை: ரூ. 1.51 கோடி

Special trains to Velankanni announced

This is to clear the extra rush of passengers

The Southern Railway has announced that the following special trains would be operated to and from Velankanni to clear the extra rush:
Train No.07060 Secunderabad – Velankanni special train will leave Secunderabad at 7.30 a.m. on September 05 and reach Velankanni at 9.35 a.m. the next day.
Train No. 07059 Velankanni – Secunderabad special train will leave Velankanni at 6.45 p.m. on September 9 and reach Secunderabad at 8.05 p.m. the next day.
The trains will stop at Secunderabad, Jangaon, Kazipet, Warangal, Khammam, Tenali, Nidubrolu, Bapatla, Chirala, Ongole, Kavali, Nellore, Gudur, Renigunta, Katpadi, Villupuram, Tirupadanpuliyur, Cuddalore Port, Chidambaram, Mayiladuthurai, Tiruvarur and Nagapattinam.
Train No.07061 Kakinada – Velankanni special train will leave Kakinada at 9 a.m. on September 5 and reach Velankanni at 9.35 a.m. the next day.
Train No. 07062 Velankanni – Kakinada special train will leave Velankanni at 6.45 p.m. on September 9 and reach Kakinada at 6 p.m. the next day.
The trains will stop at Kakinada Town, Samalkot, Rajamundry, Nidadavolu, Tadepalligudem, Eluru, Vijayawada, Tenali, Nidubrolu, Bapatla, Chirala, Ongole, Kavali, Nellore, Gudur, Renigunta, Katpadi, Villupuram, Tirupadanpuliyur, Cuddalore Port, Chidambaram, Mayiladuthurai, Tiruvarur and Nagapattinam.
Train No.07413 Velankanni - Vijayawada special train will leave Velankanni at 12.50 p.m. on September 6 and reach Vijayawada at 7.30 a.m. the next day.
Train No. 07412 Vijayawada - Velankanni special train will leave Vijayawada at 3.10 p.m. on September 8 and reach Velankanni at 12.25 p.m. the next day.
The trains will stop at Velankanni, Nagapattinam, Tiruvarur, Mayiladuthurai, Chidambaram, Cuddalore Port, Tirupadanpuliyur, Villupuram, Katpadi, Renigunta Gudur, Nellore, Kavali, Ongole, Chirala, Bapatla, Nidubrolu and Tenali.
Train No.00108 Velankanni – Sawantwadi Road special fare special train will leave Velankanni at 8.15 p.m. on August 28 and September 4.
The train will reach Sawantwadi Road at 10.25 p.m. the next day.
Train No.00107 Sawantwadi Road - Velankanni special fare special train will leave Sawantwadi Road at 10.25 p.m. on August 27 and September 3.
The train will reach Velankanni at 1 p.m. the next day.
Train No.00110 Velankanni – Sawantwadi Road special fare special train will leave Velankanni at 11.45 p.m. on September 8. The train will reach Sawantwadi Road at 12.40 a.m. on September 10.
Train No.00109 Sawantwadi Road - Velankanni special fare special train will leave Sawantwadi Road at 9.30 a.m. on September 6 and reach Velankanni at 1 p.m. the next day, according to a Southern Railway press release.

A party loyalist in the limelight

Dhanapal  

Dhanapal’s string of electoral wins testify to his popularity in western region

If the Sasikala group’s ploy of projecting Speaker P. Dhanapal as their choice of Chief Minister succeeds, the senior leader of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) might create history by becoming the first Dalit Chief Minister of Tamil Nadu.
Mr. Dhanapal has remained a loyal man since the days of MGR and emerged as the Dalit face of the party under the leadership of Jayalalithaa.
He became an important leader, which was evident from his being fielded as a candidate in Assembly elections ever since the party jumped into the poll fray for the first time in 1977.
The list of candidates fielded by the AIADMK in the May 2016 Assembly elections included five leaders considered as senior most in the election scenario – ‘Panrutti’ S. Ramachandran, C. Ponnaiyan, S. Semmalai, Mr. Dhanapal and K. A. Sengottaiyan.
All of them were fielded as candidates by late MGR in the Assembly elections fought by the AIADMK for the first time in 1977.
Student days
Mr. Dhanapal joined the AIADMK in his student days as soon as MGR launched the party, breaking away from the DMK in 1972.
He was only 26 when MGR fielded him from Sankagiri (reserved) constituency in Salem district in the 1977 Assembly elections.
He won with a 21,000-vote margin over his DMK rival. He won from Sankagiri again in 1980 and 1984with handsome margins.
After the split in the party following the death of MGR, Mr. Dhanapal threw his weight behind Jayalalithaa, constested from Sankagiri for the fourth time, but lost. This, however, was the only defeat he suffered in his four decade-long political career.
His popularity in the western belt could be gauged from his wins from Rasipuram (reseved) constituency in the neighbouring Namakkal district in 2011 and Avinashi (reserved) constituency in Tirupur district in 2016.
Jayalalithaa recognised his presence by including him in the Cabinet and allotting the vital food portfolio for a few years in her 2001-06 regime. He was elected Deputy Speaker in 2011 and elevated as Speaker in October 2012, becoming the first Dalit to occupy this post since 1955.
Born into the Arundathiar community in Karuppur village in Salem district, Mr. Dhanapal has kept a low profile all through, despite being one of the senior most in party. And, this has been to his advantage, say his supporters.
A senior leader of the party stated that Mr. Dhanapal had a rich political experience by remaining in the party since his student days. It was his loyalty to the party that made Jayalalithaa honour him with important posts such as Minister, Deputy Speaker and the Speaker.

IRCTC to launch clutter-free, faster ticket booking website

IRCTC to launch clutter-free, faster ticket booking website  Dipak.Dash@timesofindia.com 11.06.2026 New Delhi : Booking train tickets throug...