Thursday, September 14, 2017

A medical college up for sale

The advertisement that appeared in Malayalam daily seeking prosepective buyers.  

Faced with severe cash crunch, some managements looking for sale or takeover

In what could well be a symptom of a widespread rot, a medical college in Kerala has advertised that it is up for sale.
The advertisement appeared in a leading Malayalam daily on September 13 and reads that a “reputed well-run medical college in Kerala for sale/takeover.” The advertisement asks “financially sound parties” to respond via email.
The advertisement flies in the face of the accepted logic in Kerala that it is only the engineering colleges that are in a corner and that the medical colleges are doing far better. But is it the paucity of students that plagues medical colleges in the State? Are there other reasons for medical colleges to throw in the towel and call it a day?
According to those associated with the running of medical colleges, the prime problem is cash crunch. Back when managements could admit students to the management quota, they could collect money by way of donations, capitation fee, upfront fee and bank guarantees for all the five years of the MBBS programme. That era is over. Now all students are being admitted by the Commissioner for Entrance Examinations from the NEET rank list according to merit and on the basis of a pre-declared fee, except where the matter is with the courts.
Strict action
The other day when some managements started asking for blank cheques from parents, the Admission Supervisory Committee reacted with alacrity and issued an order that the collecting of blank cheques or asking for an upfront fee (of all the five years together) would come under the definition of capitation fee and that action would be taken under the relevant rules.
“The fact is that all the newcomer colleges have a cash crunch,” Fazal Gafoor, spokesperson of the MES, told The Hindu. “On the one hand we are asked to reduce the fee and on the other we have to keep the college going. This is no joke. The managements are left with no option to raise money. It is my understanding that at least a handful of medical colleges are contemplating a sale or takeover,” he said.
Anilkumar Vallil, Secretary of the Self-financing Medical Colleges Management Association, told The Hindu that many medical colleges were today finding it difficult to stay afloat.

Academics for subject-wise categorisation of UGC-approved journals

Universities face difficulties due to non-categorisation

Although the University Grants Commission (UGC) has prepared a revised approved list of journals that needs to be considered for appointment and promotion of teaching faculty, academics here say there are still difficulties in going about the task.
Recommendations for 7,255 additional journal titles were received from 141 universities during the second phase of opening of the ‘recommendation platform’ between June 16 and 22. All recommended journal titles were subjected to a checklist devised by the UGC Standing Committee. After the removal of journals that were of poor quality, duplicates and failed to fulfil the criteria, 2,407 unique journal titles were included in the UGC-approved list.
During the first phase, more than 800 journal titles of poor quality were removed by the Standing Committee from the list of 6,507 journals on the basis of feedback from individuals and institutions.
However, universities and colleges say difficulties persist because the journal titles have not been categorised subject-wise for reference at the time of approving teachers for the Career Advancement Scheme (CAS) and Direct Recruitment of Teachers and other academic staff as required under the UGC (minimum qualifications for appointment of teachers and other academic staff in universities and colleges) Regulation, 2016.
The UGC-approved list of journals consists of those indexed in WoS (Science Citation Index, Social Science Citation Index and Arts and Humanities Citation Index); journals indexed in Scopus; journals indexed in Indian Citation Index ; journals recommended by the Members of the UGC Standing Committee and Language Committee; and journals recommended by the universities during the two phases.
“The UGC crackdown on predatory journals has been long overdue. There have been many instances of teachers securing promotion based on publication of their papers in fake and predatory journals,” a senior professor of Bharathidasan University said, adding that journals started after 2000 needed to be scrutinised thoroughly.
At present, the UGC has instructed the academic community to route complaints about predatory, fake or questionable journals found in the UGC-approved list through universities or through research guide or faculty in a university.
It has given an opportunity to universities to double-check their recommendations and pass on the information about the ISSN/EISSN number, publisher's name and remarks, in case an undeserving journal has been inadvertently included in the list submitted by them.
டிங், டிங், டிங்... உருகவைக்கும் குல்ஃபி விற்பவர்களின் சோகக்கதை!

VIKATAN

இரா. குருபிரசாத்
தே.அசோக்குமார்

குல்ஃபி என்ற பெயரைக் கேட்ட உடனே, உங்கள் நாக்கில் எச்சில் ஊறுகிறதா? மொபைல் ரிங் சத்தத்தைவிட, காலிங்பெல் சத்தத்தை விட, டிங், டிங், டிங் என்று அடிக்கும் குல்ஃபி விற்பவர் எழுப்பும் சத்தத்துக்குக் காத்திருந்து சந்தோஷப்படுபவரா நீங்கள்? அப்ப, சியர்ஸ் போடுங்க... குல்ஃபி ஆர்மியில் இருக்கும் கோடானு கோடிப் பேரில் அடியேனும் ஒருவன். இளையராஜாவுக்கு அடுத்ததாக, என் இரவுகளை இனிமைப்படுத்தியது இந்த குல்ஃபி-க்கள்தான்.



ஒவ்வொரு முறை குல்ஃபி சாப்பிடும்போதும், சொர்க்கத்தின் வாசலை எட்டிப்பார்த்துவிட்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் அந்த குல்ஃபி விற்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ற கேள்வி, என் மெடுலா ஆப்லகெட்டாவில் நீண்ட நாள்களாக தட்டிக்கொண்டே இருந்தது. சரி, இந்தக் கேள்விக்கு விடை தேட, பைக்கை எடுத்து மெரினாவை நோக்கிக் கிளம்பினோம்.



அகன்று விரிந்த வாலாஜா சாலையின் ஓரமாக குல்ஃபி விற்பவர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை அலேக்காகப் பிடித்து பேசத்தொடங்கினோம். நாம் முதலில் பேசியவர், இம்ரான். இவர், இரண்டாவது தலைமுறையாக குல்ஃபி விற்பனை செய்கிறார். இவரது தந்தை, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் குல்ஃபி விற்றவர். இரண்டாவது தலைமுறையாக குல்ஃபி வியாபாரத்தில் இறங்கியுள்ள இம்ரான், நான்கு குல்ஃபி வண்டிகளுக்குச் சொந்தக்காரர்.

இம்ரானிடம் பேசினோம், "புளியந்தோப்புல இருந்து வரேன் சார். 15 வருஷமா இதுதான் பொழப்பு. அப்பாகிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். கொஞ்சநாள்ல அப்பா இறந்துட்டாரு. அப்பறம் நானே முழுசா இறங்கிட்டேன். குல்ஃபி விக்கிறது நைட் டைமா இருந்தாலும், காலைல 8 மணில இருந்தே எங்களுக்கு வேலை ஆரம்பிச்சுரும். பாலை சுண்ட வெச்சு, தண்ணீரைக் கலக்கி, அதை ஐஸ் ஆக்கறதுக்கு எப்படியும் மதியம் 1 மணி ஆய்டும்.



அதுக்கப்பறம், சாய்ங்காலம் 7 மணிக்கு சைக்கிள் எடுத்துட்டு வியாபாரத்துகுப் போவோம். எங்களுக்குள்ளயே ஏரியா பிரிச்சுப்போம். நைட்டு 1.30 மணிக்கு ஏரியா முடிச்சுட்டு, இங்க வந்து கணக்குப் பார்ப்போம். வீட்டுக்குப் போய் தூங்க 3 மணி ஆய்டும். ஒரு நாள் நல்லா வியாபாரம் ஆவும். ஒரு நாள் சுத்தமா வியாபாரம் ஆவாது. மழை வந்தா ரொம்ப கஷ்டம். சில பேரு மழை டைம்ல வாங்கண்ணு சொல்வாங்க. ஆனா, அப்ப வியாபாரம் பண்றதுல சிக்கல் இருக்குது. வெள்ளம் வந்தப்ப எல்லாம் சுத்தமா வியாபாரமே இல்ல. சராசரியா ஒரு நாளைக்கு 300 ரூபா லாபம் கிடைக்கும். வேலைக்கு வரவங்களுக்கு கமிஷன் அடிப்படைல காசு கிடைக்கும்.



பாதாம், பிஸ்தா, சாக்லேட்னு 5, 6 ஃப்ளேவர் விற்போம். ரெகுலர் கஸ்டமர்ஸ் நிறைய இருக்காங்க. அவங்க டீசன்ட்டா காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவாங்க. ஆனா, எல்லா ஏரியாலயுமே ரவுடிங்க தொல்லையும் இருக்கு. கத்தியக் காட்டி, மிரட்டி குல்ஃபி வாங்குவாங்க. சிலர் அடிச்சும் குல்ஃபி வாங்குவாங்க. சிலர், டேய் நாளைக்கு வந்து காசு வாங்கிக்கோன்னு சொல்லி மிரட்டுவாங்க. ஒருசிலர், பைக்ல இருந்து இறங்காமயே குல்ஃபி கேட்பாங்க. குல்ஃபி கொடுத்தா, திரும்பி காசு கொடுக்காம அப்டியே பைக்ல சல்லுனு பறந்துருவாங்க. எப்டியும் ஒரு நாளைக்கு 50 ரூபாக்கு மேல இப்படி நட்டம் ஆகும். அதுவும் இந்த சனி, ஞாயிறு வந்தா எங்க பாடு ரொம்பவே திண்டாட்டம்தான். சனி, ஞாயிறுல குறைஞ்சது 300 ரூபா நட்டம் ஆகும்



ஜனவரி மாசம் நல்ல சீசன். அப்போ, நல்லா வியாபாரம் ஆகும். ஆனா, இந்த ஆகஸ்ட் செப்டம்பர்ல வியாபாரம் கொஞ்சம் டல்லாதான் இருக்கும். சீசன் டைம்ல வட நாட்டுக்காரங்க தொல்லை வேற. அவங்க கரெக்டா இந்த சீசன் டைம்லதான் குல்ஃபி விற்க வருவாங்க. நம்ம செய்யற அளவுக்கு குவாலிட்டியும், டேஸ்ட்டும் அவங்கக்கிட்ட வராது. நம்மளவிட குறைஞ்ச காசுக்கு வித்துட்டு காசு பார்த்துடுவாங்க. அதனாலயும் நம்ம பொழப்பு அடிவாங்கும்" என்று முடித்தார்.

இம்ரானிடம் வேலை செய்யும் இக்பால், "இந்த போலீஸ்காரங்கதான் சார் எங்களுக்குப் பாதுகாப்பே. ஆனா, ரவுடிங்க பிரச்னை பண்ற இடத்துல அவங்க அதிகமா இருக்க மாட்டாங்க. போன மாசம் கூட நாலு ரவுடிங்க வந்து காசு கொடுக்காம குல்ஃபி கேட்டாங்க. நா இன்னும் போனி ஆகலைணு சொன்னேன். அதுக்கு என்னை அடுச்சுட்டாங்க. நிறைய போலீஸ்காரங்க காசு கொடுத்து குல்ஃபி வாங்குவாங்க. ஆனா, சில போலீஸ்காரங்க காசு கொடுக்க மாட்டாங்க.



மெரினால வியாபாரம் பண்றப்ப சில நேரம் பிரச்னை வரும். அங்க இருக்கிற வியாபாரிங்க சிலர், இங்க வியாபாரம் பார்க்ணும்ணா, சங்கத்துல ரிஜிஸ்டர் பண்ணணும்னு சொல்லி, குல்ஃபி டப்பால மண் அள்ளிப் போட்டுருவாங்க. இத்தனையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதான் வியாபாரம் நடத்தறோம்" என்று விரக்தியாகச் சொன்னார்.




ஆண்களை விட பெண்களே, அதுவும் திருமணம் ஆன பெண்கள் குல்ஃபிக்கு முரட்டு ரசிகர்கள் என்ற ரகசியத்தையும் அவர்கள் நம்மிடம் உடைத்தனர். இவர்களிடம் பேசியதில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது. இவர்களது வாழ்க்கை குல்ஃபியைப் போல இனிமையான ஒன்று இல்லை. அதில், கசப்புகளே அதிகம் உள்ளன.
'போராட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி பதில்

பிரேம் குமார் எஸ்.கே.

தமிழகத்தில் தற்போது, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதுதொடர்பான வழக்கில்,“போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது” என்று உயர் நீதிமன்றத்தில் இன்று, தமிழகக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்தார்.



புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய திட்டத்தின் அடிப்படையிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் இன்று, உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த மாநிலக் கல்வித்துறை, “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. பணிக்கு வராத நாள்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறையாகத்தான் கணக்கில் கொள்ளப்படும் ” எனக் கூறியது. இது,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.
“ ‘சுருட்டை முடி அழகு’, ‘ஹேர் ஸ்ர்ரெய்டனிங்’, உயர, நிற சீண்டல்!” கொந்தளிக்கும் தமிழிசை செளந்தரராஜன்

ANANDA VIKATAN
வே.கிருஷ்ணவேணி

NAGAMANI V



கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் தமிழிசை செளந்தரராஜன்தான் ஹிட் டாபிக். திருச்சியில் நடந்த பா.ஜ.க மாநாட்டில் அவர் பேசிய வீடியோ வைரலானது. அவரது ஹேர்ஸ்டைலும் மாறியிருப்பதாக சோஷியல் மீடியாக்கள் சொல்லிவருகின்றன. இதுகுறித்து அவரிடம் பேசியபோது...

''உங்க ஹேர்ஸ்டைல் பற்றி அடிக்கடி விமர்சனம் வருதே...''

''சமூகத்துக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். நான் எப்பவும் எதார்த்தமா இருக்க நினைக்கிறேன். ஜெயலலிதா இறந்ததும் அவரை மாதிரியே புடவை, ஜாக்கெட், ஹேர்ஸ்டைல் என மாத்திக்கிட்ட சசிகலா மாதிரியான ஆள் நானில்லை. நான் எப்பவும் நானாகவே இருப்பேன். 'ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஆகிட்டீங்க, ஹேர்ஸ்டைலை மாத்திக்கலாமே'னு பலரும் என்கிட்டே சொல்லியிருக்காங்க. அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்றால் இப்படித்தான் இருக்கணும்னு பிக்ஸ் பண்றாங்க. தேவைப்படுற நேரங்கள்ல தோற்றத்துல மாற்றம் செய்துகொள்வது தவறில்லை. ஆனால், அதைப் போலித்தனமா வலிந்து செய்யக் கூடாது.''

''ஆனால் நீங்கள் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்துகிட்டதா சொல்றாங்களே...''

''எனக்கு நடிக்கத் தெரியாது. நான் நானாதான் இருக்கேன். ஏசியில் உட்கார்ந்திருக்கும்போது தலைமுடி கலையாமல் இருக்கும். வெளியில் ஃபீல்டுக்கு வரும்போது கலைஞ்சு இருக்கும். அதையெல்லாம் போட்டோ எடுத்துப் போட்டு கலாய்க்கிறாங்க. 'உனக்குச் சுருட்டை முடிதான் அழகு'னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. அதனாலேயே என்னோட இயற்கையான சுருட்ட முடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். தலைவர்னா இப்படித்தான் இருக்கணும் ஏன் பிக்ஸ் பண்றீங்க? இறைவன் கொடுத்த ஒரு விஷயத்தை நீங்க எப்படி விமர்சிக்கலாம்? என் தோற்றம், முடி, நிறத்தைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறதுதான் உங்க நாகரிகமா? நான் ஊழல் செய்திருந்தாலோ, தவறான வார்த்தைப் பிரயோகித்திருந்தாலோ விமர்சிக்கலாம். இப்படி உணர்வு சார்ந்த விஷயத்தில் என்னைக் குத்திக் கிழிக்கிறது சரியா?''

''அரசியல்வாதிகளின் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கிறீங்க?''

''நான் கொஞ்சம் ஷார்ட்டாக இருப்பதால் மேடையில் பேசும்போது, எல்லோருக்கும் தெரியணும்னு ஒரு ஸ்டூல் போட்டு அதுக்கு மேலே ஏறி நின்னு பேசுவேன். அதுக்கும், 'பிஜேபியின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கு'னு கிண்டல் பண்றாங்க. எவ்வளவு மையை எடுத்துப் பூசினாலும் இதுக்கெல்லாம் அசரக்கூடிய ஆள் நானில்லை. 'டாக்டர் அக்கா' என அன்போடு கூப்பிடறவங்க ஒரு பக்கம் இருந்தாலும், 'பரட்டை அக்கா'னு கூப்பிடறவங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் பொதுச்சேவையில் இருக்க முடியாது.''

''சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ்களும் விமர்சனங்களும் வர்றது பற்றி என்ன நினைக்கிறீங்க?''

''அந்த நண்பர்களின் கற்பனைத் திறனைப் பாராட்டுறேன். மீம்ஸூக்கான ஒவ்வொரு படங்களையும் சரியான இடத்தில்வெச்சு கலாய்க்கறாங்க. ஆனால், சில கட்சிகள் சம்பளம் கொடுத்து எங்களை கலாய்க்கிறதையே வேலையாக்கி வேற மாதிரி மீம்ஸ் போடுறதை கண்டிக்கிறேன்.''



''நீங்க கோடி ரூபாய் கொடுத்துதான் டாக்டரானதா சொன்னீங்களாமே...''

''அப்படி நான் சொல்லவே இல்லை. நீங்க வீடியோவை சரியா பாருங்க. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு கோடி ரூபாய் இல்லாமல் சீட் வாங்க முடியாதுனு பொதுவாக சுட்டிக்காட்டியிருப்பேன்.''

''ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சது பற்றி...''

''கலைஞர் போட்ட பிச்சையில்தான் நான் டாக்டரானே'னு ஸ்டாலின் சொல்லியிருக்கார். நான் என்னுடைய திறமையால்தான் மருத்துவச் சீட்டு வாங்கினேன். ஒருவேளை கலைஞரின் திட்டத்தால்தான் மருத்துவரானேனு வெச்சுக்கிட்டாலும் அதுக்காக அவங்களுக்கு அடிமையாக இருக்கணுமா என்ன?''

''ஒரு ரேடியோ பேட்டியில், 'நான் அந்தப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்திருந்தா இறந்திருப்பாங்க'னு சொல்லியிருந்தீங்களே...''

''அது ஒரு ஜாலி புரோகிராம். ஜாலியாகக் கேள்விகள் கேட்டாங்க. அதற்குப் பதில் சொன்னேன். அவ்வளவுதான். ஒருமுறை ரோட்டுல பிரசவ வலியில் துடிச்சுட்டு இருந்த ஒரு பெண்மணியை கார்ல போன நான் பார்த்துட்டு, உடனே இறங்கி அவங்களை என் காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவெச்சுட்டு, மழையில் நின்னுட்டிருந்தேன். அதைத் தெரியப்படுத்தினப்ப, இதெல்லாம் விளம்பரம், அது இதுனு கேலி பண்ணினாங்க. உண்மையாக ஒருத்தருக்கு உதவினதையும் இப்படிச் சொன்னா எப்படி? இப்படி எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும், அதை நெகட்டிவாக விமர்சனம் செய்யறாங்க. அதையும் நான் பெருசா எடுத்துக்கலை. அந்த மருத்துவமனையில் வேலைப் பார்த்த அந்தப் பெண்ணின் சகோதரர்தான், 'தமிழிசை அட்மிட் செய்தது என் சொந்தத் தங்கை. அவருக்கு என் நன்றிகள்' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.”

''நீங்கள் இப்பவும் மருத்துவம் பார்க்கறது உண்டா?''

''பிஜேபியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான பிறகு மருத்துவம் பார்க்கிறதை நிறுத்திட்டேன். இரண்டிலும் முழுமையாக ஈடுபட முடியாது என்பதற்காகத்தான் அந்த முடிவை எடுத்தேன். வேலையில்லாத மருத்துவர் அல்ல நான். என் காலகட்டத்தில் ஸ்கேன் படிப்பைப் பெரிதாக யாரும் எடுத்துப் படிக்காதபோது, நானும் சென்னை மெடிஸ்கேன் சுரேஷூம்தான் ஸ்கேன் சம்பந்தமான படிப்பைப் படிச்சிருந்தோம். அல்ட்ரா சவுண்ட்ல என்னை மாதிரி ஒரு டாக்டரை பார்த்திருக்கவே முடியாது. இதுவரை நான் ஸ்கேன் பார்த்து எந்தவொரு லிட்டிகேஷனும் வாங்காதவள். அந்த அளவுக்கு நான் சொல்றது துல்லியமாக இருக்கும். நான் ஸ்காலர் முடிச்சது எல்லாமே கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும்தான். தஞ்சை மருத்துவக் கல்லூரியில பயிற்சியில் இருந்தபோது, ஏசி இல்லாமல் ஸ்கேன் மிஷின் பயன்படுத்தப்படாமல் இருந்துச்சு.

என் அப்பாவுக்கு போன் பண்ணிச் சொன்னேன். சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசினார். அதனால், மிஷினைப் பயன்படுத்துறதுக்கான ஏற்பாட்டை செஞ்சாங்க. அதிகம் ஸ்கேன் இல்லாத காலத்திலேயே ஃப்ரீ ஸ்கேன் செய்த மருத்துவர் நான். தஞ்சையில் இருக்கும்போது, '100 ரூபாய் ஸ்கேன் சென்டர்'னு சொல்வாங்க. ஆயிரம் ரூபாய் வாங்கவேண்டிய விஷயத்துக்கு நூறு ரூபாய் வாங்கினேன். சென்னைக்கு வந்ததும், கோடம்பாக்கம், கே.கே நகர் போன்ற இடங்களில் இருக்கும் கிளினிக்கில் நூறு ரூபாய் மட்டுமே வாங்கினேன். பிரசவப் பெண்களுக்குத் தினமும் மூன்று முதல் நான்கு மணி வரை இலவச ஸ்கேனும் செய்திருக்கேன். குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதே குறைபாடுகளைப் போக்கக்கூடிய விஷயங்களை நான்தான் கையிலெடுத்தேன். பல மருத்துவமனைகளுக்கு ஸ்பெஷலிஸ்டா இருந்திருக்கேன். அதனால், என்னை விமர்ச்சிக்கிறவங்க பேசுறவங்க இதையெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சுட்டுப் பேசினால் நல்லா இருக்கும்.''
ஒலிம்பிக் போட்டியை நடத்தத் தயாராகும் பாரீஸ் நகரம்!

ராகினி ஆத்ம வெண்டி மு.

ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்புதலுடன் 2024-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை பாரீஸ் நகரம் நடத்தவுள்ளது.



சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 2024-ம் ஆண்டில் பாரீஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பாரீஸ் மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஒப்புதல் அளித்த நிலையில் 2024 போட்டியை பாரீஸ் நடத்தவுள்ளது.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இதற்கிடையில் வரும் 2020-ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, தயாராகிவருகிறது உலகின் டிஜிட்டல் நகரமான ஜப்பான். அதன் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள, ஒலிம்பிக் போட்டிகளின் ஒவ்வோர் அம்சத்திலும், டிஜிட்டல் மயம் வெளிப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
வீட்டு பட்டாவுக்காக 24 ஆண்டுகள் போராடிய பெண்... சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

எம்.குமரேசன்

லஞ்சமில்லாமல் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் வேலை நடக்காது. புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் (வயது 53). இவருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான பத்திரத்தைப் பெற ஓராண்டு ஈராண்டுகள் போராடவில்லை. 1993-ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் உரிமையாளர் பத்திரம் கேட்டு குடிசை மாற்று வாரியத்துக்கு நடையாய் நடந்தார் எல்லையம்மாள்.



மனம் நொந்துபோன எல்லையம்மாள், சென்னை சட்ட உதவி மையத்தை நாடி மனு அளித்தார். எல்லையம்மாளின் மனுவைப் படித்த நீதிபதி ஜெயந்தி வியப்படைந்தார். பட்டா பெற ஒரு மனுஷி, 24 ஆண்டுகள் போராடிக்கொண்டிருக்கிறாரா என அவருக்குள் ஆற்றாமை ஏற்பட்டது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு போன்செய்து, உடனடியாக ஆவணங்களைத் தயார் செய்து எல்லையம்மாளுக்கு வழங்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவுக்கும் பலனில்லாமல், எல்லையம்மாள் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டார்.

நீதிபதியிடம் எல்லையம்மாள் மீண்டும் முறையிட, இந்த முறை நீதிபதி ஜெயந்தி அவருடன் சேர்ந்து ஆட்டோவில் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த அலுவலர்களை லெப்ட் ரைட் வாங்கினார். நீதிபதி ஆடிய ருத்ரதாண்டவத்தைக் கண்டு மிரண்டு போன அலுவலர்கள் தீயா வேலை பார்த்தனர். சுமார் 2 மணி நேரத்தில் எல்லையம்மாளுக்கு வீட்டு உரிமையாளருக்கான பத்திரம் வழங்கப்பட்டது.

தன்னுடன் ஆட்டோவில் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக வந்து பத்திரம் வாங்கிக் கொடுத்த நீதிபதி ஜெயந்திக்கு எல்லையம்மாள் கண்ணீர் மல்க நன்றி சொன்னார். எல்லையம்மாளின் அதிர்ஷ்டம் நான்கு மாதத்துக்கு முன்புதான் நீதிபதி ஜெயந்தி இங்கு பணி மாற்றலாகி வந்திருந்தார்.

NEWS TO DAY 16.07.2026