Thursday, September 14, 2017

'போராட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி பதில்

பிரேம் குமார் எஸ்.கே.

தமிழகத்தில் தற்போது, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதுதொடர்பான வழக்கில்,“போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது” என்று உயர் நீதிமன்றத்தில் இன்று, தமிழகக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்தார்.



புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய திட்டத்தின் அடிப்படையிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் இன்று, உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த மாநிலக் கல்வித்துறை, “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. பணிக்கு வராத நாள்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறையாகத்தான் கணக்கில் கொள்ளப்படும் ” எனக் கூறியது. இது,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...