Saturday, September 30, 2017

எம்.டி., சித்தா படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பதிவு செய்த நாள்29செப்
2017
21:51

சென்னை, இந்திய மருத்துவம்மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மற்றும் பாளையங்கோட்டை, அரசு சித்தா மருத்துவமனைகளில், எம்.டி., சித்தா மருத்துவ படிப்புகளுக்கு, 94 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை, அக்., 1 முதல், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை, அரும்பாக்கம்,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறைக்கு, அக்., 16க்குள் வந்து சேர வேண்டும். இதில் சேர, அகில இந்திய முதுநிலை ஆயுஷ் நுழைவுதேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பரிதாபம்!

கூட்ட நெரிசலில் சிக்கி 25 பேர் பலி
வதந்தியால் மும்பை ரயில் நிலையத்தில் சோகம்

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, பரேலில் உள்ள எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலைய நடைபாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 25 பேர் பரிதாபமாக பலியாயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடும் மழை பெய்த நிலையில், மின்சாரம் பாய்வதாக பரப்பப்பட்ட வதந்தியால் தப்பிக்க முயன்றபோது, இந்த விபந்து நடந்தது.



மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மும்பையில் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருப்பது, புறநகர் ரயில் சேவையே. நாட்டிலேயே, அதிக அளவுக்கு புறநகர் ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்படுவது இங்குதான்.இங்குள்ள புறநகர் பகுதி யான பரேலில் நான்கு முக்கிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. மத்திய ரயில்வே இயக்கும் புறநகர் ரயில் சேவையின் கீழ், பரேல் மற்றும் கர்ரி ரோடு ரயில் நிலையங்கள் உள்ளன.

நடை பாலம்:

மேற்கு ரயில்வே இயக்கும்


ரயில் பாதையில், எல்பின்ஸ்டோன் ரோடு மற்றும் லோயர் பரேல் ரயில் நிலையங்கள் உள்ளன.

எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்காக உள்ள நடைபாலம் மூலம், பரேல் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும். நேற்று காலை, 10:40 மணிக்கு, ஒரே நேரத்தில், இரண்டு ரயில் பாதைகளிலும் ரயில்கள் வந்து சேர்ந்தன. அதனால், கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில், கனமழை பெய்ததால்,மழையில் நனையாமல் இருக்க, நடைபாலத்துக்கு மக்கள் முண்டியடித்த னர்.

இந்த நிலையில், கனமழையில் மின்கசிவு ஏற்பட்டு, நடைபாலத்தின் ஒரு பகுதியில், 'ஷாக்' அடிப்பதாக வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து, தப்பிப்பதற்காக, நடைபாலத்தின் படிக்கட்டு வழியாக மக்கள்வேகமாக இறங்க முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி, சிலர் படிகட்டில் உருண்டனர். பலர் தடுமாறி விழுந்ததால், 25 பேர் நசுங்கி உயிரிழந்தனர். 40க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.வீண் வதந்தியால் பலர் உயிரிழந்த சம்பவம், மும்பை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர்கள் இரங்கல்:

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, பிரதமர்,மோடி, மஹாராஷ்டிரா

முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே நிகழ்ச்சிகள் ரத்து:

மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே சார்பில்,பல்வேறு புதிய ரயில் சேவைகள், நேற்று துவக்கி வைப்பதாக இருந்தது. ரயில் நிலைய விபத்தால், அவை ரத்து செய்யப்பட்டன. இந்த புதிய ரயில் சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் நேற்று, மும்பை வந்தார்; விபத்து நடந்த பகுதிக்கு சென்று, பார்வையிட்டார்.

''இந்த சம்பவம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, மேற்கு ரயில்வேயின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் விசாரிக்கப்படும். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார், பியுஷ் கோயல்.

பரேலில் தினசரி பிரச்னை

மும்பையின் ஜவுளி மில்களின் மையமாக பரேல் இருந்தது. கடந்த, 1990களின் கடைசியில், இந்தப் பகுதியில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. மில்கள், மிகப் பெரிய அலுவலகங்களாக மாறியுள்ளன. மும்பையின் பிரதான பகுதிகளான நரிமன் பாயின்ட், கபே பரேட் பகுதிகளுக்கு இணையாக, பரேல் மிகப் பெரிய வர்த்தக, தொழில் மையமாக மாறியுள்ளது.

விபத்து நடந்த எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் உள்ள நடை பாலத்தின் வழியாக, பரேல் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும்.அதனால், இந்த ரயில் நடைபாலத்தில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பரேல் கடந்த, 30 ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ற வசதிகள் ஏதும் செய்யப்பட வில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நடைபாலமே, தற்போதும் உள்ளது. இங்கு பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. செய்யப்பட்ட ஒரே மாற்றம், எல்பின்ஸ்டோன் ரோடு என்ற ரயில் நிலையத்தின் பெயர், பிரபாவதி என்று மாற்றியதுதான்.
திண்டுக்கல்லில் 106 மி.மீ.,மழை
பதிவு செய்த நாள்
செப் 30,2017 01:20


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 106.42 மி.மீ.,கூடுதலாக மழை பெய்துள்ளது, என வேளாண் இணை இயக்குனர் தங்கச்சாமி தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல்லில் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையில் 418.10 மி.மீ.,ல் இதுவரை 524.52 மி.மீ.,மழை பெய்துள்ளது. அதாவது, கூடுதலாக 106.42 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 91 ஆயிரத்து 488 பாசன கிணறுகளில் 50 சதவீத கிணறுகளில் 3 மணி நேரமும், மீத 50 சதவீத கிணறுகளில் 1 மணி நேரம் பாசன வசதி பெறக் கூடிய அளவு நீர் உள்ளது.

மானாவரி நிலங்களில் கோடை உழவு செய்து, மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொறியியல் துறை மூலம் 20 இடங்களில் தடுப்பணைகள் அமைத்து, அதன் மூலம் மானாவரி நிலங்களில் நீர் செறிவு உண்டாவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுப்பிலும் சாகுபடி பரப்பு கணக்கிடப்பட்டு, அதற்கு தேவையான இடுபொருள், உரங்கள், விதைகள், நுண்ணுரங்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுஉள்ளது, என தெரிவித்தார்.
மும்பை ரயில் நிலைய விபத்து: விசாரணைக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்29செப்
2017
13:41



மும்பை: மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் விபத்தில் சிக்கி 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். மேலும் கூறுகையில்; நெரிசலில் சிக்கி மக்கள் பலியான சம்பவம் வருத்தமளிக்கிறது. மேற்குரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் விசாரணை நடக்கும் எனவும் கூறினார்.

நடவடிக்கை:

முதல்வர் பட்னாவீஸ் கூறுகையில், ரயில் அமைச்சகமும், மாநில அரசும் இணைந்து விசாரணை மேற்கொள்ளும். சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரணம்:

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் வினோத் தாவ்தே கூறுகையில், பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் செலவை மாநில அரசு ஏற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வேலூர் ஏ.டி.எம்.,களில் அதிக நீளத்தில் ரூ.500 நோட்டு
பதிவு செய்த நாள்
செப் 30,2017 03:47

வேலுார்: வேலுார், ஏ.டி.எம்.,களில், சரியாக வெட்டப்படாத, 500 ரூபாய் நோட்டுகள் வந்தன.

வேலுார், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில், ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்., மில் நேற்று முன்தினம் இரவு, ஒருவர் பணம் எடுத்தார். இதில் 500 ரூபாய் சரியான அளவில் வெட்டப்படாமல், ஒரு முனையில் மட்டும் நீளமாக இருந்தது. இதுபோன்ற நோட்டுகள், சத்துவாச்சாரி, வேலுாரில் உள்ள ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்.,களில் மட்டும், பலருக்கு வந்தது.

வங்கிகள் தொடர் விடுமுறையால், அவற்றை மாற்ற முடியாமல் 20க்கும் மேற்பட்டோர் புலம்பினர். இதற்கு வங்கி நிர்வாகமே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.

Friday, September 29, 2017

Birthday boy, friend drink acid by mistake, die

TNN | Sep 29, 2017, 02:49 IST

HIGHLIGHTS

The boy and one of his friends mistook sulphuric acid for cold drink.

According to police, Sahil was in Class III and Aryan a Class II student.
The boy's father was not in the house during the party, and his wife Sunita was attending to the guests.

BENGALURU: A boy celebrating his ninth birthday and one of his friends died on Wednesday night after they mistook sulphuric acid for cold drink, and drank it.

Sahil Shankar, whose birthday it was, and his goldsmith-father Shankar had invited friends and relatives from the neighbourhood for a party at their Kilari Road residence off Kempe Gowda Road.

After the cake was cut and the guests sat down for dinner, Sahil and his friend Aryan went into a room where Shankar had stored sulphuric acid in a glass bottle for jewellery-related work.

"The children mistook it for a soft drink and drank it. Soon, they collapsed. The guests rushed the children to a private hospital, which referred them to Victoria hospital, where doctors declared them brought dead," a police officer said. The bodies of the boys were handed over to the parents after a postmortem examination on Thursday.

TOP COMMENTUnlabelled sulfuric acid within the reach of a 9 year old ? Unbelievable. Father would have been charged with negligent homicide in the US !Amrit Bindra

According to police, Sahil was in Class III and Aryan a Class II student. Both studied at a private school in Chamarajapet. Shankar was not in the house during the party, and his wife Sunita was attending to the guests.

Police said Shankar's family hail from Maharashtra, and moved to Bengaluru three decades ago. Sahil was the couple's elder child. Aryan too was the elder child of his his goldsmith father, a native of Uttar Pradesh.
Chennai sees huge traffic snarls ahead of Ayudha Puja

Daniel George| TNN | Sep 28, 2017, 16:59 IST

(
CHENNAI: There were huge blocks in Chennai on Thursday, especially on roads leading to Chennai Mofussil Bus Terminus in Koyambedu as commuters made a beeline to take buses to their hometowns ahead of Ayudha Puja.

There were traffic blocks at Arumbakkam, Vadapalani, Kodambakkam and Ashok Nagar.

TOP COMMENT  why these comuters prefer to travel by road to Koyambedu. InsteadThey might have reached a metro station of their choice and took metro to Koyambedu.Since the block is only at Asoknagar and vadapala... Read Morevenkataramans

Sunil Kumar, a marketing executive, said, "It took more than one and a half hours for me to reach Koyambedu from Chennai Central in an autorickshaw in the afternoon. The traffic on the Poonamallee High Road was moving at a snail's pace."

Police said more traffic snarls were expected towards the evening on all roads leading to Koyambedu.

NEWS TODAY 31.01.2026