Monday, October 2, 2017

It’s holiday season again

Tourists at the Bryant Park in Kodaikanal.FILE PHOTO: G. Karthikeyan.  

Big spurt in arrival of tourists in Kodaikanal

Thanks to cool weather, mist-covered valleys and cloud-capped peaks, the second holiday season has picked up momentum in Kodaikanal. Arrival of tourists registered a sharp increase this weekend.
The crowd was heavy at major tourism locations. The lake, one of the most popular spots, attracted a huge crowd. Tourists thronged Bryant Park with Horticulture Department creating a ‘train’ made of flowers to entertain children.
Last year, the department had created a blue Kurinji garden inside the park by planting more than 200 saplings. “Now, they have started blooming,” said R.C. Raja Priyadharsan, Horticulture Officer in Bryant Park. “The Kurinji plant, which blooms once in 12 years, blossomed in 2006. While the next flowering season is 2018, several plants have started blooming this year due to climate change and their own blooming cycle.”
Tourists got an opportunity to see Kurinji flowers inside the park this season. Earlier, they had to go to interior villages or to the valley, 3,000 feet below Coakers Walk to see the flowers.
The park received more than 6,000 visitors on Saturday. Revenue through sale of ticket at Bryant Park was Rs. 1.56 lakh. The blooming of Agave Attenuate plant was another star attraction this season as it blooms either in winter or summer once a decade, the officer said.
Cab operators and hoteliers were in jubilant mood because of the sudden spurt in arrival of tourists. Almost, all rooms in major hotels were booked. Arrival of tourists from Kerala and Karnataka was also high.
The number of vehicles crossing the toll gate manned by Kodaikanal Municipality crossed 1,500 against 350 to 500 during normal days. Many tourists from Chennai, Kerala and Karnataka too visited the hill. The second season closes by October-end or the first week of November.
Flight services affected as heavy rain lashes Chennai

V Ayyappan| TNN | Oct 1, 2017, 10:56 IST


Chennai received 25.3mm rainfall from 8.30am on Saturday till 8.3am on Sunday.

CHENNAI: Two flights were diverted and 14 flights, including nine international flights, were delayed due to heavy rain and poor visibility at Chennai airport in the early hours of Sunday.

Chennai received 25.3mm rainfall from 8.30am on Saturday till 8.3am on Sunday. The city received heavy rain between 3.30am and 5am on Sunday, Met officials said.

At Chennai airport, four arrivals and 10 departures were delayed from half an hour to two hours. The scheduled arrivals between 2am and 3.50am and scheduled departures between 1am and 6.45am were delayed.

Airport sources said a British Airways flight from London and an Etihad Airways flight from Abu Dhabi, scheduled to arrive around 3.50am, were diverted to Hyderabad.

A Chennai-London British Airways flight, which was scheduled at 5.30am, departed at 9am while a Chennai-Abu Dhabi Etihad Airways flight, scheduled for 4.50am, departed at 7.40am because of diversion.

A Kuwait Airways flight from Kuwait City and a Qatar Airways flight from Doha were delayed by an hour while red eye domestic flights from Delhi and Mumbai reached an hour late while a Pune-Chennai SpiceJet flight scheduled to land at 3.20am arrived at 5.30am.

LATEST COMMENTChennai airport is built over sewage lines, which get flooded when it pours as it happened a couple of years ago.Alas in Chennai and in whole of India roads, airports,schools ,hospitals and all ameni... Read Mores ramakrishnsn

Six international departures were delayed, including the two flights that were diverted. The delayed departures included Thai Airways flight to Bangkok, Kuwait Airways flight to Kuwait City, Air India flight to Sharjah, an IndiGo flight to Singapore.

However, early morning departures after 5.30am from the airport were not affected.
I don’t know secret to succeed in politics but Kamal Haasan might know, Rajinikanth says

Abdullah Nurullah| TNN | Updated: Oct 1, 2017, 14:54 IST

HIGHLIGHTS

Rajinikanth says legendary actor Sivaji Ganesan taught his followers a valuable lesson in politics
Sivaji Ganesan taught us fame and money are not enough to succeed in politics, he says
He says Kamal might know the secret to succeed in politics

Rajinikanth and Kamal Haasan at the inauguration of the Sivaji Ganesan memorial in Chennai on Sunday (TOI photo by Ramesh Shankar)



CHENNAI: Superstar Rajinikanth on Sunday took a dig at actor Kamal Haasanwho is planning to enter politics. Speaking at the inauguration of the memorial of legendary Tamil actor Sivaji Ganesan in Chennai, Rajinikanth said it takes more than fame and money to succeed in politics.

"Legendary actor Sivaji Ganesan taught his followers a valuable lesson in politics", said Rajinikanth. The superstar said Sivaji Ganesan, who had stood and lost in his own constituency, proved that fame and money alone were not enough to succeed in politics.

As Kamal looked on, Rajinikanth said, "To succeed in politics, there needs to be something more. Only the people know what that is. I promise I don't know. I think Kamal Haasan knows what that is. Even if he does, he will not tell me."

Rajinikanth went on to joke that Kamal would have told him what that (secret) was if he had asked him two months ago. It was in July when Kamal began his scathing attack on the ruling AIADMK government in Tamil Nadu.

"When I asked him what that is, Kamal Haasan said that he would tell me if I went with him," the superstar said.

Kamal Haasan did not respond to Rajinikanth's jibes during his speech.

TOP COMMENTFilm stars think that are best actors in reel life and in reality politicians are best actor in real lifeAppa Durai

Kamal said, "Sivaji Ganesan is an actor who transcended state, national and continental boundaries. Even if I had not become an actor, I would have been at this event as a film buff. Nobody could have stopped me from coming here today."

Kamal went on to add that he was one of the thousands of actors trying desperately to adhere to the standards set by Sivaji Ganesan.
தமிழகத்தில் மழை நீடிக்கும்

By DIN | Published on : 02nd October 2017 04:28 AM |



வளி மண்டலத்தின் மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வட கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. கேரளம், லட்சத்தீவு, தெற்கு உள் கர்நாடகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக, சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: அரபிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றார் அவர்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 140 மி.மீ., பதிவாகியுள்ளது. பூண்டி மற்றும் செங்குன்றத்தில் 130 மி.மீ., சோழவரம், தாமரைப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 100 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பொன்னேரியில் 90 மி.மீ., திருவள்ளூரில் 80 மி.மீ., பூவிருந்தமல்லி, செம்பரம்பாக்கம், தாம்பரத்தில் தலா 50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டாக்டர் கைது: இளைஞர் படுகாயம்

Published : 30 Sep 2017 18:22 IST

மு.அப்துல் முத்தலீஃப்சென்னை

அண்ணா நகரில் மது போதையில் தனது சொகுசு ஆடி காரில் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டி வந்து வாலிபர் மீது மோதிய டாக்டர் பின்னர் தப்பிக்க நினைத்து காரை வேகமாக ஓட்டியதில் சிக்னல் கம்பம் மீது மோதி போலீஸில் சிக்கினார்.

சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் அருகே பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் குமரன்(47) தனக்கு சொந்தமான விலை உயர்ந்த ஆடி காரில் நேற்று இரவு 3 மணி அளவில்அண்ணா நகர் 3 வது அவின்யூ சாலையில் வந்துள்ளார். போதையில் காரை ஓட்டியதில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் கண்ணுக்குத் தெரியவில்லை. வேகமாக மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வியாசர்பாடியை சேர்ந்த சத்யராஜ்(28) தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய டாக்டர் குமரன் நிதானத்தில் இல்லாததால் தான் ஒரு மருத்துவர் எனபதையும் மறந்து உயிருக்கு போராடும் இளைஞரை காப்பாற்றாமல் அங்கிருந்து தனது காரில் தப்பித்து வேகமாக சென்றார். கார் அண்ணா நகர் ரவுண்டானா அருகில் வேகமாக திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையின் அருகே இருந்த சிக்னல் மீது மோதியது.

இதில் போக்குவரத்து சிக்னலும் காரும் பலத்த சேதமடைந்தது. கார் மோதிய சத்தம் கேட்டு போலீஸார் வெளியே வந்து காருக்குள் போதையில் இருந்த டாக்டரை மீட்டனர். படுகாயத்துடன் சாலையில் கிடந்த இளைஞர் சத்யராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவத்தை நேரில் பார்த்த பெரம்பூரை சேர்ந்த ஜெகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த சத்யராஜ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்றும், பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு உள்ளது. மேலும் காரை ஒட்டி வந்தது டாக்டர் குமரன் என்பது தெரிய வந்தது.

காரை பறிமுதல் செய்த போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீஸார் போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்று மீண்டும் விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

டாக்டர் மறுப்பு

நான் அந்த இளைஞர் மீது மோதவும் இல்லை குடித்து விட்டு வாகனம் ஓட்டவும் இல்லை என்று டாக்டர் குமரன் மறுத்துள்ளார்.

இது குறித்து 'தி இந்து' தமிழ் சார்பில் டாக்டர் குமரனிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

விபத்தின் போது என்ன நடந்தது?

நான் வழக்கமாக பணி முடிந்து காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது முன்னால் பைக்கில் சென்ற அந்த இளைஞர் தடுமாறி வலது புறம் காரின் மீது விழ இருந்தார். அவர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக வலப்புறம் திருப்பினேன். அந்த இளைஞர் பயந்து போய் அவராக இடது புறம் போய் விழுந்தார். என்னுடைய கார் திடீர் என்று வலப்புறம் திருப்பியதால் என் கண்ட்ரோலை இழந்து ரவுண்டானா மீது மோதப்போக அதை தவிர்க்க இடது புறம் திருப்பும் போது என் கண்ட்ரோலை மீறி கார் சிக்னல் கம்பம் மீது மோதியது. இது தான் நடந்தது.

நீங்கள் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதவில்லையா?

கண்டிப்பாக இல்லை. அவர் மீது மோதாமல் இருக்கத்தானே வலது புறம் திருப்பினேன்.

நீங்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதாக போலீஸ் அறிக்கை சொல்கிறதே?

நான் மது அருந்தி வாகனம் ஓட்டவில்லை.

உங்களுக்கு மது அருந்தியதற்கான சோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் அறிக்கையில் போட்டிருக்கிறார்களே?

எனக்கு எந்த சோதனையும் நடத்தவில்லை.

கைது செய்யப்பட்டது உண்மையா?

நான் கைது செய்யப்படவில்லை. இரவே நான் வீட்டுக்குச் சென்று விட்டேன். மதியம் ஒரு ஆபரேஷன் கூட செய்தேன். இவை எல்லாம் போலீஸார் ஏன் சொல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை.

இவ்வாறு டாக்டர் குமரன் தெரிவித்தார்.
சிவாஜியின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது: கவிஞர் வைரமுத்து

Published : 01 Oct 2017 18:29 IST




சிவாஜியின் பெயரோடு கலைஞர் கருணாநிதியின் பெயர் கலந்திருப்பது கலை உண்மை எனவே அவரது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


சிவாஜியின் பெயரோடு கலைஞரின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி சிலையைக் கலைஞர்தான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதைத் தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிவாஜி பீடத்தில் இடம்பெற்றிருந்த கலைஞரின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும். ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்?

சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி சிவாஜிதான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கன்னியாகுமரியில் கலைஞர் ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயனப் பூச்சுப் பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும்.

சிலையைச் சிலையாகப் பார்க்க வேண்டும்; அரசியலாகப் பார்க்கக் கூடாது. சிவாஜி சிலையைக் கடற்கரை காமராசர் சாலையில் கலைஞர் நிறுவியபோது அந்தச் சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன்.

சிலை மறுநிலைநாட்டம் செய்யப்பட்டாலும் அந்தச் சிலையோடு கலைஞரின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கலைஞரின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கலைஞரின் திருப்பெயரைத் தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாகத் தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.
டி.ஆர் - தன்ஷிகா சர்ச்சை: மன்னிப்புக் கோரிய விதார்த்

Published : 01 Oct 2017 18:24 IST

ESAKKI MUTHU_50090



‘குரங்கு பொம்மை’ பத்திரிகையாளர் சந்திப்பில் விதார்த் பேசிய போது... | கோப்புப் படம்

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சைத் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார் விதார்த்

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு மேடையிலிருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, கிருஷ்ணா, விதார்த் உள்ளிட்ட படக்குழுவினரையும் சமூக வலைதளத்தில் கடுமையாக சாடத் தொடங்கினார்கள்.

இது குறித்து விதார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

'விழித்திரு' நிகழ்ச்சியில் நடந்தது பற்றி என் தரப்பு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். டி.ராஜேந்தர் சார் போன்றவர்களின் நடிப்பைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். டி.ராஜேந்தர் சார் ஒருவரை இவ்வாறு புண்படுத்திப் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை. தன்ஷிகாவுக்கு அன்று நடந்தது நம் அனைவரையுமே உலுக்கி விட்டது.

இவையெல்லாம் ஜோக் போலத்தான் தொடங்கியது. டிஆர் எப்போதும் அவரது அடுக்கு மொழிக்கும் பளிச்சென உதிர்க்கும் வார்த்தைகளுக்கும் புகழ்பெற்றவர், அவர் மேடையில் சிலரை கேலியும் செய்துள்ளார். நாம் அனைவரும் இதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டோம். ஆனால் இது ஒருநேரத்தில் சீரியசாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று நாங்கள் உணர்ந்த போது அனைத்தும் கையை மீறி விட்டது.

நானும் மற்ற முக்கியஸ்தர்களுடன் மேடையில்தான் இருந்தேன். ஆனால் சரியான நேரத்தில் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இதனால் தன்ஷிகாவையோ அல்லது எந்த ஒருவரையோ புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.

எனக்கு தன்ஷிகாவை கடந்த 3 ஆண்டுகளாக நன்றாகத் தெரியும். அவரைப் போன்ற ஒரு தங்கமான நபரைப் பார்க்க முடியாது. பொதுவாக பிரஸ் மீட்கள், ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிகளில் சிறிது கூடுதல் நேரம் இருந்து விட்டு வருவது வழக்கம். ஆனால் அன்றைய தினம் நடந்தது எனக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்த நான் உடனடியாக கிளம்பி விட்டேன். நான் அங்கேயே இதற்காக எதிர்வினை புரிந்திருக்க வேண்டும், அதற்காக தன்ஷிகாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் அனைவரும் ஒரு குடும்பம், எங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்கள், பத்திரிகை தரப்பு ஆதரவு தேவை. உங்களது ஆதரவுக்காக நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் எப்போதும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

NEWS TODAY 31.01.2026