Saturday, November 4, 2017

Chennai rain: People are unaffected thanks to Amma govt’s 2015 plan, TN chief minister claims

Julie Mariappan| TNN | Nov 3, 2017, 20:18 IST

A waterlogged area in Chennai (TOI photo by R Ramesh Shankar)


CHENNAI: After taking a road trip to the flood affected areas in Chennai and nearby areas, Tamil Nadu chief minister Edappadi K Palaniswami on Friday said the speedy efforts taken by his government - on a war-footing manner -- helped remove stagnant water from low-lying areas, despite the city receiving cumulative rainfall of 36cm in the last three days.

Palaniswami's comment comes in the face of allegations from the opposition on the poor preparedness of the state to combat the northeast monsoon.

In a show of unity and to express solidarity to the affected people, the chief minister along with deputy chief minister O Panneerselvam visited Mudichur and Perungulathur in Kancheepuram district in the evening, after paying a visit to Royapuram and R K Nagar of North Chennai. He reviewed evacuation of flood water by the civic body staff.

Palaniswami deputed a minister and a senior bureaucrat to take up flood relief work in each of the 15 zones.

"Bengaluru and Mumbai were inundated during rain. But due to the execution of the plan envisaged by Amma's government in 2015 as to how to remove flood water from low-lying areas, water is not stagnated today. People are unaffected," he said, patting the officials and ministers working together since night.

Recalling the announcement made by former chief minister J Jayalalithaa in assembly under Rule 110 that her government would construct 386km long drain network in Chennai at Rs 1,100 crore, Palaniswami said work in 300km had been completed.

With the financial support of JICA (Japan International Cooperation Agency), the remaining work would begin at Rs 1,800 crore. Drain network would be ensured in areas that were inundated in the last three days.

Refuting the allegations that his government was indifferent to encroachments on water bodies, especially on the Kosasthalaiyar river, the chief minister said the exercise was carried out on a continuous basis and based on directions from courts.

Housing is provided to affected families.

On the complaints of poor desilting in the Adyar and the Cooum rivers, the chief minister said the water bodies were desilted and banks were strengthened.

The Papankal canal near Perungulathur, that carries the surplus of 120 tanks in the downstream of the Chembarambakkam reservoir, had been widened. It ensured free flow of 2,000 cusecs (cubic feet per second) of water.

Palaniswami said the second phase of traditional Kudimaramathu scheme to desilt water bodies costing Rs 350 crore could not be taken up owing to onset of monsoon.

"The scheme was launched due to requests from farmers and elected representatives so that tanks deepened and nutrient-rich silt will help farmers. A sum of Rs 100 crore was allotted in the first phase and 1,250 tanks desilted. It has helped realise additional 30% storage in each tank now, besides benefiting farmers," he said.

DMK working president M K Stalin on Wednesday alleged irregularities in the Kudimaramathu scheme and demanded a white paper from government.
Don’t create panic on Aadhaar linking: SC to banks, telcos

Amit Anand Choudhary| TNN | Nov 4, 2017, 01:13 IST

HIGHLIGHTS

A bench of Justices A K Sikri and Ashok Bhushan said even judges are not spared from such messages.

It ordered telcos and banks not to create panic among people and asked them to specify that the deadline for Aadhaar-bank account linkage is Dec 31 and Feb 6 for mobile phones.


NEW DELHI: The Supreme Court eased on Friday the pressure mounted by banks and telecom companies on customers through frequent messages to link Aadhaar with bank accounts and mobile phone numbers and ordered that they intimate people about the deadline for doing so.

A bench of Justices A K Sikri and Ashok Bhushan said even judges are not spared from such messages, which the petitioners termed as part of coercion to link Aadhaar with bank accounts and mobile phones.

The bench ordered telcos and banks not to create panic among people and asked them to specify in the messages that the deadline for Aadhaar-bank account linkage is December 31 and February 6 for mobile phones.

Petitioners challenging the constitutional validity of Aadhaar have alleged that customers were being bombarded with messages threatening deactivation of bank accounts and mobile phone connections if they failed to link them with their UIDAI numbers. Senior advocate Shyam Divan and Arvind Datar, appearing for the petitioners, sought an interim stay on such mandatory linking of Aadhaar with bank accounts and mobile phones through pressure tactics.

When attorney general K K Venugopal opposed these arguments terming them as oral and off-the-cuff allegations, Justice Sikri said such messages should not be sent without mentioning the deadline. "I do not want to say in the presence of media but I am also receiving such messages," he said in a lighter vein.

"We make it clear that in the messages sent by banks and telecom service providers, the date of December 31, 2017 and February 6, 2018 shall also be indicated as the last date of linking Aadhaar with bank accounts and mobile numbers [respectively]," the bench ordered while refusing to stay the rules under the Prevention of Money Laundering Act mandating Aadhaar-bank account linkage and a telecom department circular making Aadhaar the new e-KYC for mobile phones.

TOP COMMENTwhat about NRIs.. did you forget about us? how are we supposed to obtain and link aadhar cards.. your systems doesnt even have a facility to enter country code.. what a shametp shd grv

The petitioners insisted that Centre's decision to frame rules to prosecute people for not linking their account number with Aadhaar was illegal and requested the court to stay the government's notification.

The bench however said, "Since the final hearing would start in November-end and the time for linking Aadhaar has already been extended, there is no need to pass an interim order."

கழிப்பறையில் ரூ.9.6 கோடி!அன்னூர் ஒன்றியத்தில் 'கொட்டியது' அரசு: 'அக்கடா' வழக்கத்தால் அத்தனையும் 'வேஸ்ட்!'

அன்னுார்:'என்னதான் சொல்லுங்க...வெட்டவெளியில அப்படியே காத்தாட 'போற' சுகம் வருமாங்க...? 'இயற்கை உபாதை கழிக்க, ஏன் வீட்டு கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை?' என்ற கேள்விக்கு, அன்னுாரில் ஆறுமுகம் என்பவர் அளித்த பதில்தான் இது!அன்னுார் மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் இதுதான் நிலைமை. திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதை தடுக்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, அரசு கழிப்பறை கட்டிக்கொடுத்தும், தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைக்கத்தான், அந்த கழிப்பறையை பயன்படுத்துகின்றனர் நம் மக்கள். அந்தளவுக்கு இருக்கிறது விழிப்புணர்வு!
அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளில், 189 கிராமங்களில் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊராட்சிகளில் கழிப்பிடம் இல்லாத வீடுகள் குறித்து, 2015ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி, 8,500 வீடுகளில், கழிப்பிடம் இல்லாதது தெரிய வந்தது.முதல் கட்டமாக, ஏழு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 100 சதவீத வீடுகளில் கழிப்பிடம் கட்டப்பட்டது. இரண்டாம் கட்டத்தில், கழிப்பிடம் கட்ட நான்கு ஊராட்சிகள் என மொத்தம், 21 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
கழிப்பிடம் கட்ட நிபந்தனை
அரசின் முழு சுகாதார திட்டத்தில், பயனாளியே கழிப்பிடம் கட்டிக் கொள்ள, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மூன்று அடிக்கு, நான்கு அடி நீள அகலத்துடன், ஏழு அடி உயரத்துடன் கழிப்பிடம் கட்ட வேண்டும். மூன்று அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட மூன்று வளையங்கள், இரு இடங்களில் அமைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின்படி, கழிப்பிடம் கட்டி முடித்தவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.800 வீடுகளில் கழிப்பறைகடந்த ஜூலையில், 100 சதவீத வீடுகளிலும், அரசின் மானியமான ஒன்பது கோடியே 60 லட்சம் ரூபாயில், 8,000 வீடுகளில், கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வளவு கோடி ரூபாய்கள் செலவிட்டு என்ன பயன்? 'காத்தாட போய்' பழக்கப்பட்டவர்களால், நான்கு சுவர்களுக்குள் 'அக்கடா' என கழிக்க முடியவில்லை. இதற்கு கழிப்பறைகளில் தண்ணீர் வசதி செய்து தராததையும், முக்கிய காரணமாக சொல்கின்றனர் பயனாளிகள்.
'ஆஸ்தான'இடங்கள்!
அன்னுார் ஒன்றியத்தில் மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், காட்டம்பட்டி, ஆம்போதி உள்ளிட்ட பல ஊராட்சிகளில், இன்னும் குளக்கரை மற்றும் மயான பாதை ஓரங்கள்தான், இங்குள்ள மக்களின் 'ஆஸ்தான' கழிப்பிடங்கள். இதனால் ஏற்படும் சுகாதார கேடு குறித்தெல்லாம், எவருக்கும் கவலை கிடையாது. அந்த பாதையை பயன்படுத்துவோர், மூக்கை பொத்தியபடிதான் செல்ல வேண்டி உள்ளது.அரசு மானியம் அளித்தும், கழிப்பிடங்களை பயன்படுத்தாமல், திறந்தவெளியை பயன்படுத்துவோரிடம், அதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் குறித்து அரசும், தொண்டு நிறுவனங்களும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே, சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை.
'திறந்தவெளியில் மலம்கழிப்பதால் நோய் பரவும்'''திறந்தவெளியில் மலம் கழிப்பதால், வயிற்றுப்போக்கு ஏற்படும். அங்கு அமரும் ஈக்கள், பின்னர் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் மீது அமரும். இதனால் நோய் தொற்று ஏற்படும். அருகிலுள்ள நீர் நிலைகளில் இவை கலப்பதால், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து திறந்தவெளியில் மலம் கழிப்பதால், கழிவுகள் மூலம் கிருமிகள் பரவும். ரத்த சோகை ஏற்படும். ரத்த சோகையால் வேறு நோய்களும் ஏற்படும். ஆகவே, திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் ரவிச்சந்திரன், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, அன்னுார்.ப்ரீயா போயேபழகி போச்சுங்க!''45 வருஷமா காத்தாட, அப்படி ப்ரீயா போயே பழகிட்டோமுங்க. நாலு சுவத்துக்குள்ளே உக்காந்தா, அவ்வளவு சீக்கிரமா வரும்னு தோணலீங்க. ஆனாலும், யாருக்கும் பாதிப்பு இல்லாத ஒதுக்குப்புறத்தைதான் அதுக்கு பயன்படுத்துறோம்,''
- ரங்கநாதன், கரியாம்பாளையம்.கழிப்பறை தரமில்லைஇதுதான் காரணமாம்''அதிகாரிகள், மூன்று அடி விட்டத்தில், இரண்டு இடங்களில் மூன்று வளையங்கள் அமைக்க வேண்டும்; மூன்று அடிக்கு நான்கு அடி நீள அகலத்தில், ஏழு அடி உயரத்தில், கழிப்பிடம் கட்ட வேண்டும் என்று கூறினர். அதிகாரிகள் கூறும் அளவுக்கு கழிப்பிடம் கட்ட குறைந்தது, 20 ஆயிரம் ரூபாய் தேவை. ஆனால் 12 ஆயிரம் ரூபாய் மட்டும் தருவதாக கூறினர். எனவே கட்ட மறுத்து விட்டோம். அதிகாரிகளே ஒப்பந்ததாரர் வைத்து அஸ்திவாரம் இல்லாமல் கட்டித்தந்தனர். எனவே கழிப்பிடத்தை பயன்படுத்துவதில்லை.
- மகேஷ் குமார், கரியாம்பாளையம்.'மணல் பாக்கெட்'விழிப்புணர்வு!''வீட்டு கழிப்பிடத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்; திறந்தவெளியை பயன்படுத்தக்கூடாது என, கிராமங்களில் கூறி வருகிறோம். இதற்காக அதிகாலை நேரத்தில், சில ஊராட்சிகளுக்கு கையில் மணல் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றோம். திறந்தவெளியை பயன்படுத்துவோரிடம், அந்த மணல் பாக்கெட்டை கொடுத்து, 'மலம் கழித்த பின், அதன்மீது போட்டு மூடவும்' என்று கூறினோம். கூச்சப்பட்டு சிலர், 'இனி கழிப்பிடத்தை பயன்படுத்துகிறோம்' என்று உறுதியளித்தனர். ஆனாலும் மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதுள்ளது,''
- இளவரசு, பி.டி.ஓ., அன்னுார் ஊராட்சி ஒன்றியம்.

காருடன் உரிமையாளர் கடத்தல்: போலீஸ் விசாரணை


தஞ்சாவூர்: கும்பகோணத்திலிருந்து, உரிமையாளருடன் காரை கடத்திய கும்பலை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஸ்டாண்டில் வாடகைக்கு கார் ஓட்டி வருபவர், செந்தில்குமார், 53. கடந்த, 30ம் தேதி இரவு, 25 வயது மதிக்கத்தக்க இருவர், கடலுார் மாவட்டம், வடலுார் வரை, காரில் சென்று திரும்பி வர வேண்டும் என, கூறினர்.
இருவரையும், காரில் அழைத்துச் சென்ற செந்தில்குமார், அதன் பின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை; அவரது மொபைல் போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
செந்தில்குமார் மனைவி சந்திரா கொடுத்த புகார்படி, கும்பகோணம் மேற்கு போலீசார், மூன்று தனிப்படை அமைத்து, செந்தில்குமாரையும், காரையும் தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், கும்பகோணத்தில் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்துச் செல்வது போல் நடித்து, டிரைவரை கட்டி போட்டு, ஆறு வாகனத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
தற்போது, காருடன் கடத்தப்பட்ட செந்தில்குமாரின் மொபைல்போன் டவர், விருத்தாசலம் வரை காட்டுகிறது. அதன் பின், அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சின்ன சேலம், வடலுார் வரை உள்ள பெட்ரோல் பங்க்குகளில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மெரினா கடல் நீர் கறுப்பு நிறமானது ஏன்?

சென்னை:சென்னை, மெரினா கடற்கரை பகுதியில், கடல் நீர் கறுப்பு நிறமாக மாறி உள்ளது. இது, சென்னை மக்களிடம், சுனாமி பீதியை ஏற்படுத்தி உள்ளது.



இது குறித்து, அண்ணா பல்கலை, பருவநிலை மாற்றம் மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர், ராமச்சந்திரன் கூறியதாவது:

சென்னையில், ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. மழை நீர், கூவம், ஓட்டேரி நல்லா, கொற்றலை, அடையாறு வழியாக, கடலை அடைகிறது. அதில், கழிவுநீரும் குப்பையும்

கலந்தே வருகிறது. அதன் கறுப்பு நிற படிவுகள், அலையின் வழியே, கரையோரத்தில் படிகின்றன. அது, நீரின் வழியே பிரதிபலிக்கிறது.

தொடர்ந்து அலைகள் அடிப்பதாலும், மழை நீரில் கழிவுகள்குறைவதாலும், நீல நிறத்திற்கு மாறி விடும். இது, இயல்பானது தான். மக்கள் அச்சப்பட தேவை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை அதிகாரி கூறியதாவது:

மெரினா முதல் பட்டினபாக்கம் வரையில், கரையை ஒட்டிய பகுதியில், கடல் நீர் கறுப்பு நிறமாக மாறி உள்ளது. ஆழத்தில் உள்ள நீர், வழக்கமான நீல நிறத் தில் உள்ளது.இதனால்,அச்சம் தேவையில்லை. மழையால், கூவம்,அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றில் தேங்கியிருந்த கழிவுநீர் முழுவதும், கடலுக்கு சென்றுள்ளது தான், இதற்கு காரணம்.

இதுவரை, 5 டி.எம்.சி., அளவிற்கு, மழைநீருடன்,கழிவுநீரும் கடலுக்கு சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. கடல் நீரின் அடர்த்தியை விட, மழை நீரின் அடர்த்தி குறைவு. இதனால், சேறு, சகதி யுடன் கலந்த மழை நீர், கரைகளில் ஒதுங்கி உள்ளது.அலைகளின் வேகத்தில், நாளடை வில் காணாமல் போய்விடும்.கடலுக்கு சென்று உள்ள, 5 டி.எம்.சி., நீரை சேமித்திருந்தால், சென்னையின் ஐந்து மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

துணைவேந்தருக்கு எதிரான வழக்கு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக, தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கை வாபஸ் பெற்றதால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் (ஓய்வு) சீனிவாசன். பல்கலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாகக்கூறி போராடினார். 2014 மே 16 காலை 6:30 மணிக்கு நடைப்பயிற்சி சென்றபோது, 
சீனிவாசன் தாக்கப்பட்டார்.
அப்போதைய துணைவேந்தர் கல்யாணி, பதிவாளர் முத்துமாணிக்கம், இளைஞர் நலத்துறை தலைவர் செல்லத்துரை (தற்போது துணைவேந்தர்), பி.ஆர்.ஓ., அறிவழகன், ஓய்வு பெற்ற ஊழியர் செல்வராஜ் உட்பட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சீனிவாசன், 'எனக்கும், சாட்சிகளுக்கும் மிரட்டல் வருகிறது. போலீசார் பாதுகாப்பு அளிக்க 
வேண்டும். 
நடுநிலையான விசாரணை நடத்தி, வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அதில் தற்போது கோரும் நிவாரணம் தொடர்பாக கூடுதல் மனு செய்யலாம். புதிதாக தனி மனு தாக்கல் செய்து, நிவாரணம் கோருவது ஏற்புடையதல்ல. இம்மனு நிலைநிற்கத்தக்கதல்ல,'' என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றதால், நீதிபதி தள்ளுபடி செய்தார்.

குரூப் - 1 தேர்வு பட்டியல் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு


சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 1 தேர்வில், தேர்வானவர்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கையான சுவப்னா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், '2015ல், 68 பணிகளுக்கான, குரூப் -1 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. தேர்வுக்கான விடைத்தாள் ெவளியானதால், அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இதுகுறித்து விசாரணை நடத்த, போலீசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'தேர்வாணையம் தரப்பில், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை' என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும், தனியார், 'டிவி'யில் ெவளியான விடைத்தாளும், தேர்வாணையம் அளித்த விடைத்தாளும், ஒரே மாதிரியாக உள்ளதாகவும், ஒரே இயந்திரத்தில் அச்சிடப்பட்டதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, குரூப் -1 தேர்வில், தேர்வானவர்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளிவைத்தார்.

NEWS TO DAY 29.04.2026