Tuesday, November 14, 2017


சென்னைக்கு மித மழையா? கனமழையா?- தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

Published : 13 Nov 2017 20:31 IST

சென்னை

 மேகக்கூட்டங்கள் போக்கு காட்டுவதால் காற்றின் திசையை வைத்து தான் சென்னைக்கு மித மழையா? கனமழையா? என்பதை அறிய முடியும். இது குறித்து தற்போதைய நிலவரத்தை தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது முக நூல் பதிவு:
“வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு
கனமழையா? அல்லது நின்று ‘விளையாடும்’ மழையா?
சென்னை நகர்புறப்பகுதி முழுவதையும் மேகக்கூட்டங்கள் பரவி நிதானமான மழையை பெய்ய இருக்கிறது. மிகவும் அடர்த்தியான, பெரிய மேகக்கூட்டம் சென்னைக்கு அருகே வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்பது அவசியம். ஒருவேளை வராவிட்டால், இந்த மிதமான மழை மட்டும் நமக்கு கிடைக்கும்.
சென்னைக்கு அருகே மிகவும் அடர்த்தியான, தீவிரமான மேகக்கூட்டங்கள் வந்துவிட்டன. காற்று இல்லாத, மிதமாகப் பெய்யும் மழை பெய்யும். இதற்கிடையே மழைக்கு சாதகமான வெப்பநிலை சென்னைக்கு அருகே உருவானால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிக்குள் சுழன்று கொண்டு இருந்த மேகக்கூட்டங்கள் சென்னைக்கு மேலே பரவி கனமழையை கொடுக்கும்.
ஒருவேளை அந்த மேகக்கூட்டம் சென்னையைவிட்டு விலகினால், நமக்கு மிதமான, மிதமான மழை மட்டுமே கிடைக்கும். என்னுடைய அடுத்த பதிவு என்பது மழை எப்படி பெய்யும்? என்பதைக் குறிப்பிட்டு இருக்கும்.
அதாவது, நமக்கு மிதமான மழை கிடைக்குமா?அல்லது, கனமழை இருக்குமா? என்பதை அடுத்த பதிவில் உறுதியாகக் கூறிவிடுவேன்”.
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சற்றுமுன் பதிவிட்டுள்ளார்.

மானாமதுரையில் குப்பையில் தீ வைப்பதால்அபாயம்: தொடரும் சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிப்பு

 நவ 14, 2017 02:00

மானாமதுரை;சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை வளர்ந்து வரும் நகரமாகும்.மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைதாயமங்கலம் ரோட்டில் மாங்குளம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.அதற்கு முன்பு மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பை கிடங்கிலும்,அரசுகுளி மயானம் அருகே வைகை ஆற்றிலும் கொட்டப்பட்டன.இந்நிலையில் மாங்குளத்தில் குப்பைக்கிடங்கு செயல்பட துவங்கியதிலிருந்து மேற்கண்ட இடங்களில் குப்பையைகொட்டக்கூடாது என செயல் அலுவலர் ஜான்முகமது துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் ஒரு சில ஊழியர்கள் டிராக்டர்களில் அள்ளப்படும் குப்பையை மாங்குளத்திற்குகொண்டு செல்லாமல் மதுரை ரோட்டிலும்,வைகை ஆற்றிலும் கொட்டி விடுகின்றனர்.குப்பையில் கிடக்கும் பொருட்களை சேகரிப்பவர்கள் அதில் கிடக்கும் ஒயர்கள்,டயர்களில் இருக்கும் கம்பிகளைஎடுப்பதற்காக குப்பையில் அடிக்கடி தீ வைத்து விடுவதால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டுதுர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் அந்த வழியாகச் செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இது குறித்து பா.ஜ., நகர பொறுப்பாளர் சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது:மானாமதுரை பேரூராட்சிபகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் சிலர் மாங்குளத்தில் உள்ள குப்பைக்கிடங்கிற்குகொண்டு செல்லாமல் மதுரை ரோட்டிலும்,வைகை ஆற்றிலும் கொட்டி விடுகின்றனர்,இதில்குப்பையை பொறுக்குபவர்கள் அடிக்டி தீ வைத்து விடுவதால் அந்த பகுதி முழுவதும் புகை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது,மேலும் மழை காலங்களில் துர்நாற்றமும் ஏற்படுகிறது,என்றார்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரியிடம் கேட்ட போது:மேற்கண்ட இடங்களில்குப்பையை கொட்டக்கூடாது என பணியாளர்களுக்கு எச்சாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இனிமேலும் கொட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.




கவர்னர் மாளிகை தோட்ட அதிகாரி இடமாற்றம் : 'தினமலர்' செய்தியால் நடவடிக்கை

நவ 13, 2017 21:54

கவர்னர் மாளிகையில் நடைபெறும், முறைகேடுகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக, அங்கு பணியிலிருந்த, தோட்டக்கலை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக கவர்னர் மாளிகையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, புகார்கள் எழுந்தன.

போலி 'பில்' : பூந்தொட்டிகள் வாங்காமலே, வாங்கியதாக போலி, 'பில்' கொடுத்து, பணம் பெறப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு வாங்கியதாகக் கூறி, செம்மண் உட்பட, தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு, அங்குள்ள அதிகாரிகள் வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகின்றன என, ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து, சமீபத்தில், நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், கவர்னர் விசாரணை மேற்கொண்டுள்ளார். புகாரை தொடர்ந்து, தோட்டக்கலை அதிகாரியை இடமாற்றம் செய்தால், உயர் அதிகாரிகளும் சிக்க வேண்டும் என்பதால், தோட்டக்கலை அதிகாரி, பாலசுப்ரமணியம், இடமாறுதல் கேட்டு தோட்டக்கலைத் துறை இயக்குனருக்கு விண்ணப்பித்தார்.
அதன் அடிப்படையில், சிட்லபாக்கம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனராக, அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

பெண் நியமனம் : எனினும், அவர் கவர்னர் மாளிகையிலேயே தங்க, அதிகாரிகள் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தோட்டக்கலை அதிகாரியாக, யோகநாதன் நியமிக்கப்பட்டுஉள்ளார். அதேபோல, ராஜ்பவன் உதவி கணக்கு அலுவலர் சிவக்குமாரை இடமாற்றம் செய்து, பெண் ஒருவரை அப்பதவிக்கு நியமித்து, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்குனர் உத்தரவிட்டார். ஆனால், கவர்னர் மாளிகை உயர் அதிகாரிகளின் சிபாரிசால், அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இது, ராஜ்பவன் ஊழியர்களிடம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இங்கு நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, பல ஆண்டுகளாக, தொடர்ந்து கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, கவர்னர் மாளிகை ஊழியர்கள், கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

80 லட்சம் பேருக்கு அரசு வேலை வேணுமாம்!

 நவ 13, 2017 22:05

சென்னை: தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 57 வயதுக்கு மேலான, 5,685 பேர் உட்பட, 79.69 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

இந்தாண்டு, அக்., 31 வரையிலான, பதிவு விபரங்களை அரசு, வெளியிட்டுள்ளது. இவர்களில், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 22.35 லட்சம்; கல்லுாரி மாணவர்கள், 30.60 லட்சம் பேரும் உள்ளனர். 35 முதல், 56 வயதிற்கு உட்பட்டோர், 11.57 லட்சம்; 57 வயதிற்கு மேற்பட்ட, 5,685 பேரும் உள்ளனர். கலைப் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றவர்கள், 4.56 லட்சம்; அறிவியலில் பட்டம் பெற்றவர்கள், 6.06 லட்சம்; வணிகவியலில் பட்டம் பெற்றவர்கள், 3.27 லட்சம்; இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், 3.90 லட்சம்; பொறியியல் பட்டம் பெற்றவர்கள், 2.44 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். மருத்துவம் படித்தோர், 3,680 பேர்; முதுகலை பட்டதாரிகள், 798; வேளாண்மை இளங்கலை பட்டதாரிகள், 5,683; முதுகலை பட்டதாரிகள், 595; இளங்கலை சட்டம் படித்தவர்கள், 1,287; முதுகலை சட்டம் படித்தவர்கள், 219; இளங்கலை கால்நடை மருத்துவம் படித்தோர், 1,287; முதுகலை முடித்தோர், 181 பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

'மொபைல்' செயலிழக்க கல்லூரிகளில் 'ஜாமர்'

 நவ 13, 2017 21:52

மதுரை: 'கல்லுாரி வளாகத்திற்குள், மொபைல் போனை செயலிழக்கச் செய்ய, 'ஜாமர்' கருவியை பொருத்தலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, ஒரு மாணவர் தாக்கல் செய்த மனு: கரூர் கருடம்பாளையம், வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரியில், 2016ல், பி.இ., - மெக்கானிக்கல் சேர்ந்தேன். விடுதியில் மொபைல் போன் பயன்படுத்தியதாகக் கூறி, என் மீது, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
என் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழை, கல்லுாரி நிர்வாகம் வழங்கவில்லை. சான்றிதழ்களை வழங்க, அண்ணா பல்கலை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர், மகேஸ்வரன் தாக்கல் செய்த பதில் மனு: மனுதாரர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். மொபைல் போனை, விடுதி வார்டன் கைப்பற்றினார். அதில், ஆபாச படங்கள் இருந்தன. கல்லுாரியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை, 'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பினார். மனுதாரர், கல்விச் சான்றிதழ்களை கோரவில்லை; நாங்கள் தர மறுக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பின், நீதிபதி ஆர்.மகாதேவன் கூறியதாவது: கல்லுாரிகளில், மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதிப்பதால், பல்வேறு தவறுகள் நடக்கின்றன. கல்லுாரி வளாகத்திற்குள் மொபைல் போனை செயலிழக்க, ஜாமர் கருவியை பொருத்தலாம்.
இது போன்ற விவகாரங்களில், மாணவர்கள், கல்லுாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பற்றி, ஏதேனும் அரசாணைகள் உள்ளவனா என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நவ., 20ல், தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

சென்னை பல்கலை தேர்வுகளில் முறைகேடு?

நவ 13, 2017 23:53

சென்னை: தொலைநிலை கல்வியில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது.

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், சில தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பியடித்தல் போன்ற முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த, துணைவேந்தர், துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில், கடந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மையங்களில், பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்களை பார்த்தால், அவர்கள் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது.
தமிழக மாணவர்கள், வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்றது குறித்து, பல்கலையின் தேர்வுத் துறை விசாரித்ததில், சிலர் ஏஜன்டுகளாகசெயல்பட்டு, ஆள் மாறாட்டம் மற்றும் காப்பியடித்தல் முறைகேட்டில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து, விசாரணை முடிந்த பின், முழு விபரத்தை சிண்டிகேட் கூட்டத்தில் வைக்க, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது. அதேபோல், பல்கலையின் தேர்வுகள் மற்றும் தொலை நிலை கல்வி தேர்வுகளில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து, துறை ரீதியாகவும் விசாரணை துவங்கியுள்ளது. இதில், தொலைநிலை கல்வி மையத்தில் உள்ள சிலர் மீதும், பல்கலை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில் போலீஸ் வழியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 துவங்கியது!  சசி கும்பல் விசாரணை...


வருமான வரி சோதனையில் சிக்கிய சசி கும்பலிடம், கிடுக்கிப்பிடி விசாரணை, நேற்று துவங்கியது. ஜெ., உதவியாளர், பூங்குன்றன், பெங்களூரு புகழேந்தி, 'மிடாஸ்' மதுபான ஆலை இயக்குனர், சிவக்குமார் மற்றும், 'ஜாஸ் சினிமாஸ்' தலைமை அதிகாரி, விவேக் ஆகியோர் அடுத்தடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.

ஐந்து நாட்கள் விடாமல் நடந்த தேடுதலில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், மூட்டை மூட்டையாக சிக்கிய, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை ஆவணங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், கல்லுாரி மாணவர்கள், வேலையாட்கள் பெயர்களில், கோடிக்கணக்கில் பணம், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.


போலி நிறுவனங்கள் துவங்கி, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தை பதுக்கி, பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். அதற்கான ஆதாரங்களை சேகரித்த, வருமான வரித்துறையினர், நவ., 9 காலையில், சென்னை, மன்னார்குடி, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, பெங்களூரு, புதுச்சேரி, ஐதராபாத் என, 187 இடங்களில், 'ஆபரேஷன் கிளீன் மணி' என்ற, அதிரடி சோதனையை துவக்கினர்.

ஆயிரம் ஊழியர்கள்:

அதில், வரலாறு காணாத வகையில், ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள், ஒரே நேரத்தில் களமிறக்கப்பட்டனர்.சென்னையில், ஜெயா, 'டிவி' மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள ஜாஸ் திரையரங்கங்கள் மற்றும் அவற்றின் தலைமை அதிகாரி விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அவரது சகோதரியும், இளவரசியின் மகளுமான கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, நமது எம்.ஜி.ஆர்., அலுவலகம், தினகரன் வீடு என, 111 இடங்களில் சோதனை நடந்தது.


அதேபோல, மன்னார்குடியில் திவாகரன் வீடு, தஞ்சையில் நடராஜன் வீடு, நாமக்கலில் வக்கீல் செந்தில் வீடு மற்றும் நீலகிரி மாவட்டம், கர்சன் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.இதில், சில இடங்களில் நடந்த சோதனை, நான்கு நாள் நீடித்தது.

வைரம் சிக்கியது

ஆனால், விவேக் வீடு, கிருஷ்ணபிரியா வீடு, ஜெயா, 'டிவி', காஞ்சி மாவட்டம், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும், ஐந்தாவது நாளாக நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
இந்த சோதனையில், சில இடங்களில், தங்கம், வைரம் நகைகள் சிக்கின. எனினும், வருமான வரித்துறையினர், 'நாங்கள், போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்த பணம், அதன் வாயிலாக, சசி கும்பல், பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்த சொத்துகள் மற்றும்முறைகேடான பணப் பரிவர்த்தனையை தான் முக்கியமாக விசாரிக்கிறோம்' என்றனர்.
அவர்கள் குறிவைத்த படியே, ஐந்து நாள் சோதனையில், ஏராளமான, போலி நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் வாங்கி குவித்த சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றினர். அவை அனைத்தும், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மதிப்பிடும் பணிகளில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவேக் உள்பட நால்வரிடம்...

இந்நிலையில், சோதனைக்கு உள்ளான, 20 முக்கிய நபர்களுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதில், முதல் கட்டமாக, நேற்று மிடாஸ் ஆலை சிவகுமார், பெங்களூரு புகழேந்தி, ஜெ., உதவியாளர், பூங்குன்றன் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி விசாரணைக்கு, அடுத்தடுத்து ஆஜராகினர்.
அவர்களை தொடர்ந்து, மாலை, 6:00 மணி அளவில், இளவரசி மகன் விவேக், வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.அப்போது, மீண்டும் சிவகுமார், பூங்குன்றன் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்களையும், விவேக்குடன் சேர்த்து வைத்து, ஒரே அறையில், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Advertisement


அதில், எந்தெந்த போலி நிறுவனங்கள் பெயரில், எங்கெங்கு யார் பெயரில் முதலீடுகள்
செய்யப்பட்டுள்ளன; போயஸ் இல்லத்தில் மிரட்டி எழுதி வாங்கப்பட்ட சொத்துகள் போன்றவற்றை விசாரித்தனர். இந்த சோதனை, இரவு, 10:00 மணி வரைநீடித்தது.

மாணவர்கள் கணக்கில்...

தற்கிடையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மன்னார்குடியில், செங்கமலத்தாயார் கல்லுாரியில் படித்த மாணவர்கள் கணக்கில், பல கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்தும், திவாகரனிடம் விசாரிக்க உள்ளனர். இதேபோல், உதவியாளர்கள், வேலையாட்கள், டிரைவர்கள் பெயரில், கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது குறித்தும், விசாரணை துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, கிருஷ்ணபிரியா, கலியபெருமாள், பாஸ்கரன், பிரபா, அனுராதா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடம், இன்று விசாரணை நடக்கவுள்ளது. அதன்பின், முழு விபரங்கள் வெளியாகும்.

மிடாஸில் தொடரும் சோதனை

தமிழகம் முழுவதும் நடந்த வரித்துறை சோதனை முடிந்தாலும், மிடாஸ் மதுபான ஆலையில், நேற்று இரவுக்குப் பிறகும் சோதனை தொடர்ந்தது. ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், நேற்றிரவு வரை சோதனை நீடித்தது. அங்கு, முக்கிய ஆவணங்கள் இருக்கக்கூடும் என்பதால், தொடர் விசாரணை நடைபெறுகிறது.

வாக்குமூலம் சரிபார்ப்பு

சென்னை, அலுவலகத்தில் ஆஜரான விவேக் உள்ளிட்ட நான்கு பேர், அவரவர் வீடுகளில் வாக்குமூலம் அளித்திருந்தனர். அதை, உயர் அதிகாரிகள், நேற்று சரிபார்த்தனர். வரி ஏய்ப்பு மற்றும் மோசடியின் மதிப்பை உறுதிப்படுத்தவே, இந்த குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வடிவேலு போல போஸ்


சென்னை, வரித்துறை அலுவலகத்தில், நேற்று ஆஜரான பூங்குன்றன், சிவகுமார் போன்றோர், முகம் காட்டாமல் வந்து சென்றனர். ஆனால், கர்நாடக சிறையில், ஜெ., மற்றும் சசிக்கு உதவி செய்த, பெங்களூரு புகழேந்தி, வடிவேலு பாணியில் போஸ் கொடுத்தார். சிரித்த முகத்துடன், 'என்னிடம் ஒன்றும் இல்லை' என, பேட்டி அளித்தார். மற்றவர்களிடம், அதிகமாக இருப்பதை சூசகமாக உணர்த்தி சென்றார்.

ஒரு நிறுவனம்: 10 வங்கி கணக்கு

வரித்துறையினர், சசி கும்பலின், 50 நிறுவனங்களில் நடந்த பரிவர்த்தனைகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில், சில நிறுவனங்களில் நடந்த பணப்புழக்கம், பெரும் புதிராக உள்ளது. ஒரு சில நிறுவனங்கள், 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வாயிலாக, பரிவர்த்தனை மேற்கொண்டி ருந்ததும் தெரிய வந்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...