Wednesday, December 6, 2017

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய எம்.ஜி.ஆர்!

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published on : 06th December 2017 01:56 PM 
00000_ayiraththil_oruvan

தமிழ்த் திரையுலகில் பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலு.
தேசப்பற்று மிக்கவர். “கப்பலோட்டிய தமிழன், “வீர பாண்டிய கட்டபொம்மன்” போன்ற படங்களை பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவர் தானே தயாரித்து வழங்கினார். கொடைக்கே கொடை வழங்குவதைப் போல “கர்ணன்” திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியவர்.
“ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்காக கதை எழுதப்பட்டு, கதாநாயகனாக நடிப்பதற்கு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்யவும் முடிவு செய்துவிட்டார் பி.ஆர்.பந்துலு.

இந்நிலையில்... பழுத்த அனுபவமிக்க தயாரிப்பாளரான வீனஸ் கிருஷ்ணமூர்த்தியும், பி.ஆர்.பந்துலுவும் சந்தித்தனர். தான் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தின் கதையை பந்துலு அவரிடம் கூறினார். நடிகரைக் கூட முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

“இது எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கதை. இந்த மாதிரி படத்தில் அவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும், படமும் அமோகமாக வெற்றி பெறும்’ எனப் பிரகாசமான முகத்துடன் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி உறுதியாகக் கூறினார்.

”அவரை வைத்து நான் படம் எடுக்க முடியுமா? அவர் சம்மதிப்பாரா? பி.ஆர்.பந்துலு தயங்கிக் கேட்டார்.
“ஏன் முடியாது? நானே அவரிடத்தில் இதைப்பற்றி பேசிவிட்டு, உங்களிடம் சொல்கிறேன்’ என நம்பிக்கை விதையை விதைத்து, புறப்பட்டுச் சென்றார்.

எம்.ஜி.ஆரைப் பார்த்து இது குறித்து பேசினார். எம்.ஜி.ஆர் சம்மதம் தெரிவித்தார்.
பி.ஆர்.பந்துலு உடனே எம்.ஜி.ஆரை சந்திக்க விரும்பினார். ராமாவரம் தோட்டத்திற்குப் போன் செய்தார். தான் புறப்பட்டு வருவதாக” எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.
எம்.ஜி.ஆரோ, “நீங்கள் பெரியவர் ..உங்களைப் பார்க்க நான் வருவது தான் முறை. நானே வந்து சந்திக்கிறேன்” என்று கனிவோடு கூறினார். 

  “இல்லை... இதோ நான் புறப்பட்டுவிட்டேன். நானே வந்து உங்களை சந்திக்கிறேன். அது தான் சரி!” என்று பி.ஆர்.பந்துலு பதில் கூறிவிட்டு உடனே ராமவரம் தோட்டத்திற்குச் சென்றார்.
அன்னை சத்யா இல்லத்தில் எம்.ஜி.ஆர் வாசலில் நின்று வரவேற்று, அவரை உள்ளே அழைத்துச் சென்றார். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

“ஆயிரத்தில் ஒருவன் “ படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர் ஒப்புதல் அளித்ததற்கு பி.ஆர்.பந்துலு  நன்றி தெரிவித்துக் கொண்டார். கலையுலகைப் பற்றி சிறிது நேரம் உரையாடினர்.
பி.ஆர்.பந்துலு தன்  படத்தில் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும், முன்பணம் எவ்வளவு தர வேண்டும் என தயங்கித் தயங்கி கேட்டார்.

எம்.ஜி.ஆர் ”கலகல” வென்று சிரித்தார். பந்துலு வியப்போடு இமையாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“சம்பளம்… முன்பணம்…! சரி ஒரு ரூபாய் கொடுங்கள்…” என அமைதியாகப் புன்னகை புரிந்தார்.
ஒரு லட்ச ரூபாய் முன் பணம் கேட்பதற்குத் தான்.... “ஒரு ரூபாய்” என்று மறைமுகமாக அவர் சொல்கிறார் என்று கருதி, நோட்டுகளை பையிலிருந்து எடுக்க முயன்றார்.

“ஏன் சிரமப்படுகிறீர்கள்? என்ன எடுக்கிறீர்கள். ஒரு ரூபாய்… ஒரே ஒரு ரூபாய்… சாதாரண நாணயம் இருந்தால் கொடுங்கள் போதும்” என எம்.ஜி.ஆர் தீர்மானமாகச் சொன்னார்.
அதிசயத்தை ஆச்சரியத்தோடு பார்ப்பது போல் பந்துலு பார்த்தார்.
“இல்லை…வந்து…” என மறுப்பதற்கு முயன்றார்.

“இந்த விசயத்தில் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், தயவு செய்து ஒரு ரூபாய் கொடுங்கள் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.

பெரிய தயாரிப்பாளர், பிரமாண்டப் படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலு இப்படி ஒருவரை சந்தித்ததில்லை.

அவர் எழுந்து வெளியில் சென்று, தன் உதவியாளர்களிடம் கேட்டு, தேடிப் பிடித்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

பந்துலு வருவதைக் கண்ட எம்.ஜி.ஆர் எழுந்து நின்றார் புன்னகை மாறாமல்…
ஒரு ரூபாய் நாணயத்தை “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடிப்பதற்கு முன் பணமாக எம்.ஜி.ஆரிடம் பந்துலு வழங்கினார்.

“ஆயிரத்தில் ஒருவன் “ படத்திற்காக கோவாவில் 35 நாட்கள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.

இந்தப்படத்தில் தான் ஜெயலலிதா அவருடன் இணைந்து முதன்முதலில் நடித்தார். பாய்மரக் கப்பலிலும், இயற்கை எழில் சூழ்ந்த கோவா பகுதி கார்வார் கடற்கரையிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.

பத்மினி பிக்சர்ஸ் கதை இலாக்காவில் அப்போது இருந்தவர்கள் தான் ஆர்.கே.சண்முகமும், ஓம்சக்தி ஜெகதீசனும். ஆயிரத்தில் ஒருவன், படத்திற்கு முதன் முதலாக உரையாடல்களை எழுதிய ஆர்.கே.சண்முகம், பின்பு அவரது பல படங்களுக்கு  எழுதினார். இயக்குனராகவும் உயர்ந்தார்.

படம் வெளிவந்து, அமோக வெற்றி பெற்று, வெற்றிச் செய்தியோடு பந்துலு ஒருநாள் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றார். திடீரென்று தாமாகவே உரிய சம்பளத்தை எம்.ஜி.ஆரிடம் அளித்தார்.
எம்.ஜி.ஆர் எவ்வளவோ மறுத்தும், அவருக்கு சேர வேண்டியதை வற்புறுத்தி வழங்கினார்.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர், சூரஜ்ஓவியங்கள்: நெடுமாறன், பிரேம் டாவின்ஸி

ஜெயலலிதா மரணமடைந்து ஓர் ஆண்டு நிறைவடைகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன. ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள்தாம், எடப்பாடியின் ஆட்சியிலும் அமைச்சர்களாகத் தொடர்கின்றனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, எந்த இலாகாவுக்கு, யார் அமைச்சராக இருந்தார் என்பதே பொதுமக்களுக்குத் தெரியாமல் இருந்தது. எடப்பாடி ஆட்சியில், இவர்கள் எப்படி அமைச்சர்கள் ஆனார்கள் என்பதே மக்களுக்குப் புரியாமல் இருக்கிறது! அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீதான விமர்சனங்களும், அமைச்சர்கள் கொடுக்கும் பேட்டிகளும், அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் விவாதத்துக்குள்ளாகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிரடியாக வெளிச்சத்துக்கு வந்த அமைச்சர்களும்... துறை சார்ந்து அவர்களுடைய செயல்பாடுகளும் எப்படி இருக்கின்றன?
ஓ.பன்னீர் செல்வம்
துணை முதல் அமைச்சர்
தர்ம யுத்தத்திற்கு `பெப்பே’ காட்டிவிட்டு , டெல்லி தூதர்களின் ஆணைக்கிணங்க எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் ஆன ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல் அமைச்சர் என்ற அந்தஸ்து கிடைத்ததோடு,  நிதி, சட்டம், சட்டமன்றம், வீட்டுவசதி, குடிசைமாற்றுவாரியம், சி.எம்.டி.ஏ துறைகள் அவரது ஆளுகையின் கீழ் வந்தன. ஆனால், இவற்றில் பன்னீரின் செயல்பாடுகள் மணக்கவில்லை. பன்னீர் கையில் இருக்கும் எந்தத் துறையிலும் அவரால் ஸ்கோர் பண்ண முடியவில்லை. இத்தனைக்கும் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்ததால், அரசாங்க நிர்வாகம் பன்னீருக்கு அத்துப்படிதான். ஆனால், இப்போது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை எதுவும் செய்யவிடுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள்.

சென்னையில் இருக்கும் நாள்களில் `கடமையைச் செய்ய’  கோட்டைக்கு வருகிறார் பன்னீர். முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், முதல்வரைப் போய்ச் சந்திக்கிறார். தமிழகத்தின் நிதி நிலை தள்ளாட்டத்தில் இருப்பது உறுத்துவதால் அவ்வப்போது அதிகாரிகளுடன் சில ஆலோசனைகள் நடத்துகிறார். ஆனால், அந்த ஆலோசனைகள் நடவடிக்கைகளாக மாறுவதில்லை.
கடந்த இரண்டு மாதங்களில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஏகப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. சென்னையில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான மனைகள், முறைகேடான ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்யப் பட்டுள்ளதாகப் புகார்கள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. ஆனால், ஒன்றிலும் உருப்படியான நடவடிக்கை இல்லை. `தனக்குத் தேவையான செயலாளர்களைக்கூடக் கேட்டு வாங்க முடியவில்லை; கட்சியில் உரிய மரியாதை இல்லை; ஆட்சியிலும் தேவையான அதிகாரம் இல்லை என்ற அதிருப்தியில் இருக்கும் பன்னீர் செல்வத்தால், அவர் துறையில் மட்டும் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும் என்கிறார்கள் பன்னீரின் விசுவாசிகள்.

தங்கமணி
மின்சாரத்துறை அமைச்சர்
“உங்களால்தான் எங்களுக்கும் ஆட்சிக்கும் பிரச்னை; அதனால், நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள்” என்று தினகரனுக்கு  அதிர்ச்சி கொடுத்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கிறார் தங்கமணி. சமீபகாலமாக தமிழகத்தை மின்வெட்டு பெரிதாக பாதிக்கவில்லை என்பதால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார் தங்கமணி. ஆனால், மின்சாரத்துறை கடனில் தத்தளிக்கிறது.

 தனியாரிடமிருந்து ஒரு யூனிட் சுமார் நான்கு ரூபாய் வீதம் மின்சாரத்தை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தனியாரிடம் போடப்பட்ட  ஒப்பந்தங்களுக்காகவும், அதிக விலைகொடுத்து வாங்கியதற்காகவும் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு 96 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.  இதில் 22 ஆயிரம் கோடியைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. எஞ்சியுள்ள கடனை எப்படித் தமிழ்நாடு மின்சார வாரியம் அடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

மின்சாரத்தோடு டாஸ்மாக்கும் இவர் வசம்தான் இருக்கிறது. இந்த நிலையில், மதுபானங்களின் விலையை திடீரென தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியது. இந்த விலை உயர்வினால் வரும் தொகையில் கணிசமான தொகையை மதுபானம் சப்ளை செய்கிறவர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், இந்தமுறை ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே  வழங்கினார்கள். இடையில் என்ன `பேச்சுவார்த்தை’ நடந்ததோ?!
தமிழகத்தில் மொத்தமுள்ள 11 மதுபான உற்பத்தி நிறுவனங்களில் இரண்டு நொண்டி அடிக்கின்றன. நிர்வாகப் பிரச்னைகளில் அவை சமாளிக்கமுடியாத அளவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன. அதேபோல், கொங்கு மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு மதுபான நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவரச் செயல்படவில்லை. அது சமீபத்தில் ஆளுங்கட்சி வட்டாரத்துக்குக் கைமாறியிருக்கிறது என்கிற பேச்சு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பலமாகக் கேட்கிறது. மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்த கால கட்டத்தில், சில இடங்களில் டாஸ்மாக் கடைகளின் மூலம் வங்கியில் செலுத்தப்பட்ட தொகையில் செல்லாத நோட்டுகளும் இருந்திருக்கின்றன. அப்படிச் செலுத்தப்பட்ட செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 800 கோடி ரூபாய் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ``65 கோடிக்கும் குறைவு’’ என்கிறார் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஸ் குமார். அதாவது, ஆளுங்கட்சி பிரமுகர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க டாஸ்மாக் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் விசாரணையும் தற்போது நிலுவையில் இருக்கிறது.

வேலுமணி
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்

எடப்பாடி பழனிசாமியின் இருகரங்களில் ஒருவர் அமைச்சர் வேலுமணி. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  இரண்டும் இவருடைய துறைகளில் பிரதானமானவை.  இந்த நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் இன்னும் தொங்கலில் இருக்கிறது. அதனால், நகராட்சி நிர்வாகம் அதிகாரிகளை வைத்து நடத்தப்படுகிறது. ஆய்வுக்கூட்டங்களை மட்டும் சரிவர நடத்திக்கொண்டிருக்கிறார் அமைச்சர் வேலுமணி.

முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒருமுறை அதிகாரிகள் மத்தியில் `தமிழக உள்ளாட்சித்துறை நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது’ என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சித்துறைக்கு வந்த தொகை பல ஊராட்சிகளுக்கு முழுமையாக இன்னும் போய்ச்சேரவில்லை. கொங்கு மண்டல பிரமுகர்கள் சிலர் இந்தத் தொகையை ஏப்பம் விட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் புகார்கள் எதையும் அமைச்சர் கண்டுகொள்வதாக இல்லை.
செங்கோட்டையன்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, இன்றைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் என அனைவருக்கும் அரசியலில் சீனியர் செங்கோட்டையன்.
செங்கோட்டையனுக்கும் மற்ற மூத்த அமைச்சர்களுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், அவர்களைப்போல் இவர் காமெடி பேட்டிகளைத் தட்டுவதில்லை. பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக உதயச்சந்திரன் இருந்தபோது, சில வேலைகள் வேகவேகமாக நடைபெற்றன. அதில் உதயச்சந்திரனுக்குத்தான் பெயர் கிடைத்தது. செங்கோட்டையனுக்குப் பெயரும் கிடைக்கவில்லை; வேறு பிரயோஜனமும் இருக்கவில்லை. அதனால், உதயச்சந்திரனை அந்தத் துறையில் டம்மியாக்குவதற்காக, முதன்மைச் செயலாளர் என்றொரு புதிய பதவியை உருவாக்கி, அந்த இடத்துக்கு பிரதீப் யாதவைக் கொண்டுவந்தார் அமைச்சர். உதயச்சந்திரனுக்குப் பிறகும், பள்ளிக் கல்வித்துறையில் வேலைகள் வேகமாக நடக்கின்றன; அதில் எந்தக் குறையும் இல்லை என்று காட்டத்துடிக்கிறார் செங்கோட்டையன். அதற்காக, ஆய்வுக்கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறார் செங்கோட்டையன்.

அதுவும் ‘நீ்ட்’ பிரச்னைக்குப் பிறகு, கல்வித்துறை அதிகாரிகளுடன் வாரம் ஒருமுறை கூட்டம் போடுகிறார் அமைச்சர். ஆனால், அவரைச் சுற்றி உள்ள டீம் செங்கோட்டையனுக்குச் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் கும்பல் ஆசிரியர்கள் பணியிடமாற்றம் முதல் பணி நியமனம் வரை, வாரிச்சுருட்டுகிறது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். தன் பெயரைப் பயன்படுத்திப் பணம்பார்க்கும் டீமின் ஆதிக்கத்தை அமைச்சர் தடுக்கவும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. காரணம், அமைச்சரின் நெருங்கிய உறவே இந்த டீமில் இருப்பதுதான் என்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரும் முயற்சியில் கல்வித்துறை இறங்கியுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்குவதற்கு முன்பே, கமிஷன் வசூல் வேகம் பிடித்துவிட்டது என்கிறார்கள். அதே நேரம், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், பள்ளிக்கல்வித்துறையை நவீனப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் அமைச்சருக்கு இருப்பதே பாராட்டுதலுக்குரிய விஷயம்தான் என்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறையினர்.     
விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
ஜெயலலிதா காலத்திலிருந்து இப்போதுவரை மக்கள் நல்வாழ்வுத்துறையை அப்படியே கையில் வைத்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

குட்கா விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, தமிழகம் முழுவதும் குட்கா பொருள்கள் விற்பனை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது வழக்கம்போல் மீண்டும் குட்கா விற்பனை சக்கைப்போடு போடுகிறது.

டெங்கு ஒழிப்பிற்காக சுகாதாரத்துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அரசு மருத்துவனைகள், டி.எம்.எஸ் வளாகம் ஆகியவற்றின் சுகாதாரத்தைப் பார்த்தால், அதற்கெல்லாம் ‘ஃபைன்’ தொகையை நிர்ணயமே செய்ய முடியாது. அந்த லட்சணத்தில் இருக்கிறது அவற்றின் சுகாதாரம். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்த நேரத்திலேயே, டெங்கு மரணங்கள் தமிழகத்தில் தொடங்கிவிட்டன. ஆனால், அந்த மரணங்களுக்கான காரணங்களை வேறு பெயர்களில் மாற்றி எழுதி, வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது மக்கள் நல்வாழ்வுத்துறை.
அதேசமயம் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங் களை முழுமையாகச் செயல்படுத்திய மாநிலம் என்ற பெருமையைத் தமிழகம் பெற்றுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவனை தமிழகத்திற்குக் கொண்டுவரப்படும் என்று அறிவித்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. 

ஆர்.பி.உதயகுமார்
வருவாய்த்துறை அமைச்சர்
யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களின் விசுவாசியாக கணநேரத்தில் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரசியல் அறிந்தவர் ஆர்.பி.உதயகுமார்.

பேரிடர் மேலாண்மைத்துறையும், வருவாய்த்துறையும் ஆர்.பி.உதயகுமாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. தமிழகத்தை நூற்றாண்டு காணாத பஞ்சம் தாக்கியுள்ளது. ஆனால், அதைச் சமாளிக்க வேண்டிய பேரிடர் மேலாண்மை என்ற ஒன்று செயல்படவே இல்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதே இல்லை. மாலிக் என்பவர்தான் ஆர்.பி.உதயகுமாரின் பி.ஏ. ஆனால், இவர்தான் அந்தத் துறையின் அமைச்சரைப்போல் செயல்படுகிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். விளைநிலங்களில் கட்டடம் கட்ட பட்டா வேண்டுமா... பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிதி வேண்டுமா... எல்லாவற்றுக்கும் மாலிக்கைத்தான் சந்திக்க வேண்டும்.

கடந்த வருடம் பருவமழை பொய்த்துவிட்டது. அதனால், மழையால் எந்தப் பேரிடரும் நிகழவில்லை. ஆனால், இந்தமுறை பருவ மழை கொஞ்சம் தீவிரம் காட்டிய நேரத்தில், தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைத்து ஆர்.பி.உதயகுமார் முனைப்பாகச் செயல்பட்டார். ஆனால், மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்துக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை தாரைவார்க்கச்சொல்லி அமைச்சர் தரப்பினர் அழுத்தம் கொடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் புலம்புகிறார்கள்.
ஜெயக்குமார்
மீன் வளத் அமைச்சர்
ஆர்.கே.நகர்த் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்காக ஓட்டு கேட்டவர். அதன்பிறகு, தினகரனைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தொலைக்காட்சிகளுக்கு முதன்முதலாகப் பேட்டியும் கொடுத்தவர் அமைச்சர் ஜெயக்குமார். இவர் அமைச்சராகச் செயல்படுவதைவிட ஆளும் கட்சிப் புள்ளியாகத்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். தன்னிடமிருந்து நிதித்துறையைப் பறித்து, பன்னீருக்குத் தாரைவார்த்துவிட்டதால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஜெயக்குமார், பரபரப்பில்லாத மீன்வளத்துறையைக் கையில் வைத்துள்ளார். உலகத்தின் மீன்சுரங்கம் என்று சொல்லப்படக்கூடிய  ‘வெட்ஜ் பேங்க்’ தமிழகக் கடற்கரைப் பகுதியில்தான் இருக்கிறது. அங்கு நம் மீனவர்கள் போக முடிவதில்லை. மாறாக, இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதியைச் சூறையாடுகின்றனர். ஆனால், அதற்காகப் பெரிதாக எதுவும் ஜெயக்குமார் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.

பிடிக்கப்பட்ட மீன்களை வைப்பதற்கான மீன் பதனக் கிடங்குகள் தமிழகக் கடற்கரை ஓரங்களில் கிடையாது. ராமேஸ்வரத்தில் இருக்கும் ஒரு கிடங்கில் ஒரு வேன் லோடு மீனைக்கூட வைக்க முடியாது. எல்லாக் கடற்கரை கிராமங்களிலும் மீன் வைக்க பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜெயக்குமாரின் மேஜையில் நீண்டகாலமாக இருக்கிறது.

மத்திய அரசின் நிதி உதவியில் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்கக் கற்கள் கொட்டுவதற்கான பணிகள் மீன்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் ஜெயக்குமாருக்கு வேண்டியவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் ஜெயக்குமாரின் எதிர் அணியினர்.
சீன இன்ஜின்கள் பொருத்தப்பட்ட போட் விவகாரம் சமீபத்தில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. அது தடைசெய்யப்பட்ட இன்ஜின் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால், அந்த இன்ஜின்களைப் பொருத்தி காசிமேட்டில் ஓடிய எட்டு போட்களும் அமைச்சரின் நெருக்கமானவருக்குச் சொந்தமானவை என அந்தப் பகுதியின் மீனவர்கள் குற்றம்சாட்டி, காவல்நிலையத்தில் புகாரே அளித்தனர். ஆனால், புகார் கொடுத்தவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்ய, மீனவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் என்று தெருவில் இறங்கிவிட்டார்கள். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் தலை உருண்டதால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் `சூப்பர் முதல்வர் ஜெயக்குமார்’ என்று கமென்ட் அடித்தார்.

ராஜேந்திர பாலாஜி
பால்வளத்துறை
ஏடாகூடமாகவும், பரபரப்பாகவும் பேசி ‘நெட்டிசன்’களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் ஓரிரு அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். ராஜேந்திர பாலாஜியின் மாவட்டம் விருதுநகர். பட்டாசுத் தொழிற்சாலை அதிகம் உள்ள மாவட்டமும் அதுதான். இந்த வகையில், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன தொடர்பு என திடீர் சந்தேகத்தைக் கிளப்பினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். தீபாவளியை முன்னிட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு தலா 150 ரூபாய் மதிப்புடைய வெடி, ஸ்வீட் கட்டாயமாக வழங்கப்பட்டன. இதற்கான தொகையை 3 தவணைகளில்  பிடித்தம் செய்வோம் என்றது பால்வளத்துறை. ``இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜிக்கும் பட்டாசு ஆலை அதிபர்களுக்கும் என்ன தொடர்பு எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”என்றார் முத்தரசன். இதற்கு ராஜேந்திர பாலாஜி தரப்பில் மௌனம்தான் பதில்.  தமிழகத்தில் விற்கப்படும் தனியார் பாக்கெட் பாலில் கலப்படம் இருப்பதாகத் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில்  பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் பெரிய அளவில் நவீனத் தொழிற்சாலைகளைக் கொண்டுவர உரிய முயற்சியை ராஜேந்திர பாலாஜி  இதுவரை எடுக்கவில்லை.
செல்லூர் ராஜூ
கூட்டுறவுத்துறை அமைச்சர்
40 வருடங்களாக அ.தி.மு.க-வில் இருக்கிறார். 2011-தேர்தலில் வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த அமைச்சரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சராக ஆனார். 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று, அதே கூட்டுறவுத்துறைக்கு அமைச்சர் ஆனார். ஆனால், மதுரையைத் தாண்டி செல்லூர் ராஜூவை யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அமைச்சர்கள் ஆளுக்கு ஆள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், செல்லூர் ராஜூ தன்னுடைய அரிய திட்டம் ஒன்றின் மூலம் உலகப்புகழ் பெற்றார். வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மாகோல்களைப் போட்டு மூடி வைப்பதுதான் அந்தத் திட்டம். தெர்மாகோலைப் போட்ட நேரத்திலேயே, அவை காற்றில் கரை ஒதுங்கின.

கூட்டுறவுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காக வைத்தியநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியை, முறைப்படுத்தி வழங்கவில்லை. அந்தத் துறையின் ஒட்டுமொத்த அவமானம் என்று சொல்லவேண்டுமானால், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்க வழியில்லாமல், கடந்த பல வருடங்களாக ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டி, பொருள் விநியோகம் செய்துகொண்டிருந்ததைக் குறிப்பிடலாம். ஆனால், ஒவ்வொருமுறை சட்டமன்றத்தில் பேசும்போதும், `கூட்டுறவுத்துறையை நவீனப்படுத்துவோம்’ என்று அறிவிப்பு மட்டும் வெளியாகும்.  பொதுவிநியோகத் திட்டத்திற்கு மாநில அரசு வழங்கும் மானியத்தைக்கூட முறைப்படி  வழங்காமல் இருப்பதால், பொதுவிநியோகத் திட்டத்தில் தேக்க நிலை அதிகரித்துவருகிறது. பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட்டுறவு வங்கிகள் முதல் தொடக்க  வேளாண்மைச் சங்கங்கள் வரை அனைத்தையும் கணினிமயமாக்கிவிட்டார்கள். வேளாண்மைச் சங்கங்கள், நியாய விலைக்கடைகளை விடுங்கள்... தமிழகக் கூட்டுறவு வங்கிகளைக்கூட இன்னும் கணினிமயப்படுத்தவில்லை. நபார்டு வங்கிதான் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி வழங்கும் கேந்திரம். ஆனால், நபார்டு வங்கி கூட்டுறவு வங்கிகளை நவீனப்படுத்துங்கள் என்று வலியுறுத்தினாலும், அதை அமைச்சர் கண்டுகொள்வதே இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது,  கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் முறைகேடான பணப் பரிவர்த்தனை நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அமைச்சரிடமிருந்து இன்னும் முறையான பதில் இல்லை.
இந்த ஆட்சிக்கே மூலவரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் புகழைத் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதில் பிஸியாக இருப்பதால், துறைரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அவருக்குப் போதுமான நேரம் இல்லை என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். முதலமைச்சர்னாலே பிஸிதானே!

Docs, medical students protest against DME 

DECCAN CHRONICLE. | SHWETA TRIPATHI

Published Dec 6, 2017, 6:07 am IST

The protest intensified as doctors strike work and demanded to discuss the issue with the health secretary.



Doctors want the recruitment board to re-consider the recruitment made based on walk-in interviews, which is done only in case of emergency and not on a regular basis.

Chennai: More than 700 service doctors, postgraduate students and non-service postgraduate doctors from all over the state gathered to protest on Directororate of Medical Education campus in Kilpauk on Tuesday. Service doctors demanding recruitment through regular counselling alleged of non-transparency in the counselling of the doctors done owing to the emergency need of service doctors due to a surge in dengue cases in the state.

Doctors claim that around 465 vacancies were allotted to private college students through the emergency counselling even though a large number of government postgraduate students and non-service postgraduate doctors were available.

"Walk-in interview for recruitment is only on a temporary basis, in case of emergency. The Medical Recruitment Board takes the ranking and merit into consideration, but it was ignored in the recent counselling. Authorities had conducted recruitment violating the GO number 131 that lays down the regulations for emergency counselling and have allotted seats in Chennai, Madurai and other areas," said Dr D. Silambarasan, service doctor from a government medical college.

The protest intensified as doctors strike work and demanded to discuss the issue with the health secretary. Doctors want the recruitment board to re-consider the recruitment made based on walk-in interviews, which is done only in case of emergency and not on a regular basis.

"The allotment made for a group of private doctors leaving behind the righteous group of assistant professors, non-service doctors with two years of service bond to the government has affected the doctors who have already served the service. We expect the health secretary to look into the issue and resolve it as soon as possible," said Dr G.R. Rabindranath, Doctors' Association for Social Equality.

However, the senior officials of state health department have said that a notification regarding the recruitment was already issued to the doctors and there was no violation of regulations. Further discussion and clarifications will be made at a meeting to be held on Thursday along with the director of medical education and health secretary.
HC: Why can’t Goondas Act be slapped on corrupt babus?Suresh Kumar

 | TNN | Dec 6, 2017, 06:36 IST


CHENNAI: How about Goondas Act detention for corrupt bureaucrats, the Madras HC asked on Tuesday, and said that till a special law on preventive detention was brought out, government could invoke Goondas Act to detain corrupt officers. Justice N Kirubakaran said corruption too resulted in public order disturbance — the legal goad for invoking the Goondas Act — and pointed to a Transparency International survey that said: " India is the most corrupt nation in Asia, followed by Vietnam, Thailand and Pakistan."

'Corruption rampant in all govt departments'

The judge said, "When it comes to bribery, an article published by Forbes has rated India as the highest on the list with 69% bribery rate. Corruption has become rampant in all government departments, in spite of enactment of the Prevention of Corruption Act, 1988. It is being said that corruption has become the order of the day and most of the official functions are done only on payment of illegal gratification."

The judge made the observations on a plea moved by T Boopathy seeking a direction to sub-registrar of Pammal to release property documents presented for registration. The petitioner said his documents had been withheld by the authorities for more than a year, as he had refused to pay bribe demanded by them. Noting that the case was only the tip of the iceberg and almost all the government offices were said to have become bedrocks of corruption, the judge said some urgent preventive measures should be taken in the interest of the administration and people.

The judge then posed 15 queries to be answered by the state government and the vigilance commissioner. The queries include details of raids conducted by the DVAC in the past 10 years, criminal cases registered and rate of conviction. The authorities were directed to file their replies by December 11.

Justice Kirubakaran underlined the pressing need to bring out a special law (Preventive Detention Act) to detain corrupt public officials, and added, "Till such an act is enacted, why should the government not invoke the Goondas Act to detain corrupt officials on the ground that their corrupt acts affect or are likely to affect the maintenance of public order adversely."

Tuesday, December 5, 2017

ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எளிய வழி உங்களுக்காக

*சிறப்புத்தகவல்கள் ஆதார்கார்டில் பிழைகளை திருத்தம் செய்தல்
இந்தியாவில் உள்ள அனை வருக்கும். ஆதார் கார்டு மிக முக்கியமான ஒன்றாக தற்போது இந்திய அரசால் வழங்கப்பட்டிருக் கிறது,இருப்பினும் ஒரு சிலருக்கு
பெயர், வயது, மொபைல் எண், முகவரி அல்லது மற்ற குறிப்பு களில்ஏதாவது பிழைகள் ஏற்பட்டிருக்கலாம்* இதையடுத்து, ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு குறிப்புகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும்அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்

ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை மாற்றம் செய்வது எப்படி?

✅ஆதார் அடையாள அட்டைக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் ஆக வேண்டும்.

✅மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

✅ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

✅ இந்திய குடிமக்கள் தங்களு டைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்

*ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்*

✅ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக மொபைல் எண் மிக முக்கியம்.

✅ஆதார் கார்டு வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) அனுப்பி வைக்கப்படும்.

✅ஒரு வேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஓடிபி பெற முடியும். ஒரு வேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

✅ ஓடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

✅ எந்தெந்த குறிப்புகளை அப்டேட் செய்ய வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

✅தேர்ந்தெடுத்த குறிப்புகளை, தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் அப்டேட் செய்யவும். அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

✅ பெயர் திருத்தம் அல்லது முகவரி திருத்தம் செய்ய பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவண நகல்களை பயன்படுத்தலாம்.

✅பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், குரூப்-ஏ நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

✅ தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

✅இதன் மூலம் உங்களுக்கு தேவையான குறிப்புகளை எளிதில் மாற்றம் செய்து சரியான ஆதார் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்
V-C aspirants list raises questions

DECEMBER 04, 2017 00:00 IST

Candidates’ credentials should be provided: academicians

The Bharathidasan University, which released the list of applicants for the post of vice-chancellor last Monday, has received as many as 241 applications for the post.

On its website, the university has also listed out the aspirants whose applications were rejected along with the reason for doing so.

While only one person had applied to the convenor of the V-C search committee in violation of the rules, the other applications were received via e-mail after the deadline. Though teachers’ associations have welcomed the change, they have certain reservations. One senior professor felt the committees should also list the applicant’s credentials to enable people to better judge his or her calibre.

Teachers are surprised that the university has received more applications than the Thiruvalluvar University.

But a source in the higher education department said the search committee of the Bharathidasan University had written to many institutions abroad inviting applications.

The Association of University Teachers wants the V-C search committees to recommend persons with “academic credibility and administrative ability”.

The V-C should not be bureaucrats but academicians who are not facing any corruption charges currently, the association has urged.
Recharge hubs are a big draw in blacked-out Kanniyakumari

B. Kolappan

NAGERCOIL, DECEMBER 04, 2017 00:00 IST



Powering up:Residents charging their electronic devices in Kanniyakumari .Special Arrangement
Residents of cyclone-hit district throng well-to-do households with UPS facility for help ranging from water supply to charging phones

The saying o or k oodi t her i zhuthal (when the village comes together to pull the temple car) in Tamil aptly describes unity. In Ockhi-hit Kanniyakumari district, people have come together to recharge their devices. As most of the district is still reeling from a power cut and UPS (Uninterrupted Power Supply) back-ups have drained out, people throng houses that can afford a generator to lift water to overhead tanks — the generator also serves as a mode to recharge mobile phones, emergency lamps and torches.

Meanwhile, in Vallankumaravilai near Nagercoil, T. Vaikundamani, a wholesale mango vendor, has set up a hub for recharging mobile batteries . “I have a generator and I have decided to use it for the benefit of the public,” said Mr. Vaikundamani, whose fruit shop has become a stopover of a couple of hours for commuters charging their mobiles. A crowd throngs the shop continuously.

“The shop will remain open between 7 a.m. and 1 p.m., and again between 2 p.m. and 9 p.m.,” he says, telling the waiting people that priority should be given to phones with completely drained-out batteries.

Hotels in most of the district are selling wheat-based food like chappathi, puri and parotta, since flour for making idli, dosai and idiyappam cannot be ground without electricity. Big restaurants that have generators draw huge crowds by selling varieties of food.

“The power cut has also raised the demand for generators. By the time I visited the local dealer for a Honda generator, I was told it would take a couple of days to get a new machine as all stock has been sold,” said H. Rajesh, a local electrician.

Some owners make a killing out of renting out generators. “In the beginning, they charged Rs. 400 per hour, but they increased the rate to Rs. 500 per hour after there was heavy demand. You also have to keep a bottle of kerosene handy as modern generators require kerosene for ignition,” said actor and film director Alagamperumal, who is visiting his village for a family wedding.

The availability of phone recharge facilities spreads word-by-mouth, and people rush to homes having generators, or Mr. Vaikundamani’s shop.

In a nearby residence, Mr. Ravi, who owns a generator, supplies drinking water to people in the morning and evening. Even though there's plenty of water, people depend on tankers in many places, since water cannot be pumped without power.

NEWS TODAY 26.01.2026