Thursday, December 7, 2017

MCI debates holding NEET twice a year

TNN | Updated: Dec 6, 2017, 23:38 IST

Chennai: Is it possible to have two National Eligibility cum Entrace Test (NEET) sessions a year? The Medical Council of India is discussing the possibility of having two exams a year so that it can ensure it doesn't deny aspirants a chance after just one exam, MCI vice-president Dr C V Bhirmanandam said here on Wednesday.

In 2016, the Supreme Court made mandatory a common entrance examination for all medical admissions — undergraduate and postgraduate — across the country. Only central government institutions such as the All India Institute of Medical Sciences (AIIMS) and PGI Chandigarh were exempted from taking the common entrance.

In 2017, all students in the open category who were admitted to medical college across the country had cleared NEET with a score of at least 131 marks out of 720. Those admitted under the reserved category scored at least 107 marks. "Some say that it is unfair to give students only one chance. Even board exams conducted by centres and states have supplementary tests. They have to wait for another year before they can attempt it the second time," he said.

In 2017, only 32,570 of the 83,859 candidates who wrote the exam in Tamil Nadu qualified, giving the state an overall pass percentage of 38.84%. While experts say the scores are likely to improve in the coming years as the syllabus improves and schools prepare students better, they wantr students to be given at least two tests a year. "More than students, it is the universities who push for this," said a vice-chancellor of a private university, who did not wish to be named. "We lost at least 15 BDS students this year, and the situation was worse in government colleges where the fee is low. Several dental and engineering seats are vacant because students in the second and third year of their courses quit after they cleared NEET," he said.

MCI officials say they may not be able to guarantee that students won't leave another course because NEET allows students up to the age of 25 to appear for it for students in the open category and up to 30 years for those in the reserved category. "As of now, we don't know if we should have it before the September 30 deadline for admission or after six months. If we do it after six months, colleges will have to apply for additional intake. This may require additional staff and infrastructure," he said.
நிதி சொல்லும் நீதி

By எஸ். ராஜசேகரன் | Published on : 07th December 2017 01:17 AM |

| நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை.

பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும். நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்?


ஒரு திரையரங்கில் செலவு செய்கின்ற பணத்தையோ அல்லது ஒரு வணிக வளாகத்தில் குடும்பத்துடன் சென்று செலவழிக்கின்ற தொகையோ அதை நாம் ஈட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை உணர்கிறார்களா? அல்லது அந்த வருமானத்தை ஈட்டுவதற்குரிய தகுதியைப் பெறுவதற்கு எவ்வளவு முயற்சிகள் செய்தோம் என்பதை நினைத்துப் பார்க்கிறார்களா?


உஙஐ என்ற முறையை வணிக உலகில் அறிமுகப்படுத்திய பின்புதான் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உஙஐ என்பது எளிய மாதத்தவணை என்று பொருள்படும். அதாவது எவ்வளவு விலை உயர்ந்த பொருள்களாக இருந்தாலும் அதற்கு ஒரு குறைந்த முன்பணம் மட்டும் செலுத்திவிட்டு அந்தப் பொருளை நாம் உடமையாக்கிக் கொள்ள முடியும். பின்பு மீதம் உள்ள தொகையை வட்டி கணக்கிட்டு அதை அசலுடன் கூட்டிய பின் அதை சம மாதத் தவணைகளாகப் பிரிக்கும் பொழுது செலுத்த வேண்டிய தொகை மிகவும் எளிதாகத் தெரியும்.
அதிலும் பணம் செலுத்த வேண்டிய மாதங்களின் எண்ணிக்கையின் கால அளவை அதிகரித்தால், செலுத்த வேண்டிய பணம் இன்னும் குறைவாகத் தெரியும். ஆனால், அதற்கான வட்டி பல மடங்கு கூடிவிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.


நாம் வாங்கும் பொருள் நமக்கு அவசியம்தானா? என்று யாரும் சிந்திப்பதில்லை. தேவையற்ற பொருளை வாங்குவதற்காக தனது எதிர்காலத்தை அடகு வைத்துவிட்டு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்கின்றனர். சிற்சில சூழ்நிலைகளில் அவசியமற்ற பொருளை வாங்க நினைத்து, அதற்காக அவசியமான பொருளைக் கூட விற்க நேரிடுகிறது.


மிகப் பெரிய செலவு செய்து உங்கள் பிள்ளைகளைப் படிப்பதற்கு அனுப்புகிறீர்களே, அந்த நிறுவனத்தின் தரத்தை என்றாவது தெரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா? அல்லது இந்தப் படிப்பை உங்கள் பிள்ளைகள் படித்தால்தான் உங்களை இந்தச் சமுதாயம் மதிக்கும் என்பதற்காகக் குறிப்பட்ட பாடப் பிரிவில் சேர்த்தீர்களே, அந்தப் பாடப் பிரிவுக்குரிய வேலை வாய்ப்பு குறித்து என்றுமே சிந்துத்துப் பார்த்து இருக்க மாட்டீர்கள்.
குழந்தைகளுக்குக் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்தச் செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் தகுதியைப் பெரிதாகக் காட்டிக் கொள்வதற்காக வீண்செலவு செய்யாதீர்கள். பிள்ளைகளும் அதையே பின்பற்றுவார்கள்.


உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனைக் கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.


அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அநாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும்.


பொருளை ஈட்டுவது முக்கியமல்ல, ஈட்டிய பொருளை திறமையாகக் கையாள்வது குறித்த விழிப்புணர்வையும் நம் குழந்தைகளுக்கு நாம் வழங்கினால், நம் நாடும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துவிடும்.
டிசம்பர் 8 மின் தடை

By DIN | Published on : 07th December 2017 04:42 AM

நாளைய மின்தடை: அம்பத்தூர், அயனம்பாக்கம்
பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (டிச. 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பத்தூர், அயனம்பாக்கம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. 


அம்பத்தூர் பகுதிக்குட்பட்ட அலையன்ஸ் திட்டம், அன்னை நகர், வாகை நகர், சிவகாமி நகர், டி.வி.எஸ் நகர், கண்டிகை, லேக் வியூ தோட்டம், பெருமாள் கோயில் தெரு, பல்லா தெரு, வச்சலா நகர், மேட்டு தெரு, காவியா நகர், சாரதா நகர், எல்லையம்மன் நகர், கோபாலகிருஷ்ணன் நகர், என்.ஏ.எஸ் தோட்டம், சிவலிங்கபுரம், சக்தி நகர், சீதா அம்மன் நகர், புத்தகரம், செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இராது.


அயனம்பாக்கம் பகுதிக்குட்பட்ட சென்னை புது நகர், புதுசெஞ்சுரி நகர், செட்டி தெரு, கோலடி பிரதான சாலை, கொன்ராஜ் குப்பம், பி.கே.எம். தெரு, ஏட்டீஸ்வரன் தெரு, பாடசாலை, விஜயா நகர், ஈடென் அவென்யூ, சிவபாதம் தெரு ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் றுத்தப்படும்.


வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

By DIN | Published on : 07th December 2017 01:23 AM |

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) , வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) ஆகியவற்றில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதேபோல, நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


அதன்படி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 6 சதவீதமாக நீடிக்கிறது. இதேபோல, வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதமும் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 5.75 சதவீதமாக நீடிக்கிறது. நிகழாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாகவும் பணவீக்கம் 4.7 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.


இதுதொடர்பாக உர்ஜித் படேல் கூறுகையில், 'நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான அனைத்து அம்சங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. எதிர்வரும் நாள்களில் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி விகிதத்தை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனிக்கும்' என்றார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி வகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற கூட்டங்களில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


இதேபோல, வர்த்தகர்களுக்கு, டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்கான கட்டணங்களை குறைக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வர்த்தகர்கள், டெபிட்- கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வாட்ஸ்-அப் குரூப் அட்மினாக இருந்தால் இந்த சித்து வேலைகள் தெரிந்திருக்க வேண்டுமே?

By DIN | Published on : 05th December 2017 05:46 PM




பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூகத் தளமான வாட்ஸ்-அப் பல புதிய வசதிகளைக் கொண்டு வரும் வகையில் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.

வாட்ஸ்-அப் கொண்டு வரவிருக்கும் புதிய வசதிகள் மூலம், வாட்ஸ்-அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கப் போகிறது.

அதாவது, ஒரு குரூப்பில் இருக்கும் ஒரு அல்லது ஒரு சில நபர்கள், அந்த குரூப்பில் எந்த தகவலையோ, புகைப்படத்தையோ, விடியோ அல்லது ஜிஃப் பைல்களையோ பகிர்ந்து கொள்ள முடியாத வகையில் தடை செய்ய இயலும். அப்படி ஒருவர் அல்லது பலர் தடை செய்யப்பட்டால், அவர்கள் அந்த குரூப்பில் வரும் தகவல்களைப் படிக்க மட்டும் முடியும். எந்த விஷயத்தையும் பதிவு செய்யவோ பதிலளிக்கவோ முடியாது.

இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், பல குரூப் அட்மின்கள் நிம்மதியாக உறங்கலாம்.

இது வரப்போகும் விஷயம். குரூப் அட்மின்களுக்காக ஏற்கனவே இருக்கும் சில யுக்திகள் என்னவென்று பார்க்கலாம்:
நீங்கள் அனுப்பிய செய்தியை குரூப்பில் யாரெல்லாம் படிக்கிறார்கள், யாரெல்லாம் படிக்காமல் புறந்தள்ளுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா?

வழி இருக்கிறது. அதாவது ஒரு குரூப்பில் நீங்கள் பதிவிட்ட செய்தியை தேர்வு செய்து தொடர்ந்து பிடித்திருங்கள். அப்போது மேலே 'i' என்ற ஆங்கில வார்த்தையுடன் வருவதுதான் இன்போ என்பதன் சுருக்கம்.. அதனை செலக்ட் செய்து பார்த்தால், அதில் நீங்கள் அனுப்பிய தகவலை படித்தவர்கள் யார், இதுவரை படிக்காதவர்கள் யார் என்று தனித்தனியாக பட்டியல் வரும்.

உங்களால் அட்மினாக இருக்க முடியவில்லை பதவி மாற்றம் செய்யலாம்
அதாவது, நீங்கள் உருவாக்கிய குரூப்பின் அட்மினாக தொடர்ந்து இருக்க விரும்பவில்லை, குரூப்பை டெலிட் செய்யவும் முடியாது. எனவே, உங்கள் குரூப்பில் இருக்கும் மறறொருவரை அட்மினாக மாற்றிவிடலாம்.

உங்கள் குரூப்பில் இருக்கும் நபர்களின் லிஸ்ட் பகுதிக்குச் சென்று, அதில் நீங்கள் யாரை அட்மினாக நியமிக்க விரும்புகிறீர்களோ, அவரது பெயரை தேர்வு செய்து, 'மேக் குரூப் அட்மின்' என்பதை க்ளிக் செய்தால் குரூப் அட்மினாக மாற்றிவிடலாம்.

குரூப்பில் பதிவிடும் தகவலை டெலீட் செய்ய
தனிப்பட்ட வாட்ஸ்-அப் சாட்டிலும் சரி குரூப் சாட்டிலும் சரி, நீங்கள் பதிவிடும் தகவல்களை நீங்கள் விரும்பாவிட்டால் அதனை டெலீட் செய்து விடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்களைக் கூட ஒரே நேரத்தில் டெலீட் செய்யலாம். அதற்கு அந்த தகவலை தேர்வு செய்து மேலே இருக்கும் டெலீட் ஐகானை அழுத்தினால் போதும், அது அனைவரது வாட்ஸ்-அப் சாட்டில் இருந்தும் அழிந்து போகும்.

வாட்ஸ் - அப் குரூப்பை நிரந்தரமாக டெலீட் செய்வது சற்று டிரிக்ஸான காரியம்தான்.

நீங்கள் அட்மினாக இருக்கும் வாட்ஸ்-அப் குரூப்பை நிரந்தரமாக டெலீட் செய்ய வேண்டும் என்றால், அந்த குரூப்பின் அட்மினான நீங்கள் எக்ஸிட்டிங் எ குரூப் என்பதை தேர்வு செய்தால் போதும் அது டெலிட் ஆகிவிடும் என்று நினைத்திருந்தீர்களானால் அது தவறு. அதற்கு பதிலாக, இதுபோன்ற குரூப்களில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் வெளியேற்றிவிட்டு பிறகுதான் நீங்கள் அந்த குரூப்பில் இருந்து எக்ஸிட் ஆக வேண்டும்.

வாட்ஸ்-அப் குரூப்பை மியூட்டில் போட முடியுமா?
நீங்கள் அட்மினாக இருக்கும் வாட்ஸ்-அப் குரூப்பை 8 மணி நேரம் அல்லது 1 வாரம் அல்லது 1 ஆண்டுகள் கூட சைலெண்டில் போட முடியும். குரூப் சைலென்ஸிங் செய்வது என்பது, இந்த குரூப்பில் தகவல்கள் வரும் போது உங்களுக்கு அதற்கான அறிவிப்புகள் வருவதைத் தவிர்க்கும். அதே சமயம், அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவாகும் தகவல்களை நீங்கள் வேண்டும் போது படித்தும் கொள்ளலாம்.

வாட்ஸ்-அப் சாட் தகவல்களை நட்சத்திரக் குறியிட்டு பாதுகாக்கலாம். எப்போது அந்த தகவல்கள் தேவைப்படுமோ அப்போது அதனை எளிதாக தேடி எடுக்க இது வசதியாக இருக்கும்.

இதனைச் செய்ய, ஒரு தகவலை தேர்வு செய்துவிட்டு, மேலே தான்றும் ஸ்டார் ஐகானைத் தேர்வு செய்தால், அந்த தகவல் ஸ்டான் ஸ்டார் தகவலாக சேமிக்கப்படும்.

காலண்டரில் இருந்து தேதிகளை இணைக்கலாம்
அலுவலக குரூப்பிலோ அல்லது நண்பர்கள் குரூப்பிலோ முக்கியமான சந்திப்பு அல்லது கூட்டம் பற்றி விவாதித்திருக்கலாம். இந்த கூட்டங்கள் பற்றிய தேதிகளை எப்போதும் நினைவில் வைத்திருக்க முடியாது. எனவே, வாட்ஸ் அப் குரூப்பிலேயே அவ்வப்போது காலண்டரில் இருந்து தேதிகளை சேர்க்கும் வாய்ப்பும் உள்ளது.

தேடும் வாய்ப்பு உண்டு
அதாவது, உங்களது சாட் மெசேஜ்களில் இருக்கும் தகவல்களை தேடும் வசதி உள்ளது. உங்களுக்குத் தேவையான தகவலைப் பெற நீங்கள் சாட் மெசேஜ் முழுவைதையும் மேலே கீழே இறக்க வேண்டியதில்லை. சாட்டில் இருக்கும் ஒரு வார்த்தையை சர்ச் செய்து அந்த தகவலைப் பெறலாம்.

உங்களால் மட்டுமே முடியும் என்று நினைக்க வேண்டாம்
குரூப்பின் ஐகான் மற்றும் சப்ஜெக்டை அட்மின் மட்டுமல்ல, மற்ற உறுப்பினர்களும் மாற்ற முடியும்.

அதற்கு செய்ய வேண்டியது என்னவென்றால், அந்த குரூப்புக்குச் சென்று, சப்ஜெக்ட்டை தேர்வு செய்து - பிறகு தற்போதிருக்கும் ஐகானை தேர்வு செய்து, அதனை எடிட் செய்ய வேண்டும். அப்போது அங்கே புகைப்படத்தை எங்கிருந்து தேர்வு செய்து எடுக்கப் போகிறீர்கள் என்பது கேட்கும். அங்கிருந்த புகைப்படத்தை எடுத்து வைக்கலாம்.
அரசு மருத்துவமனையில் வேலை இல்லை : நர்சிங் உதவியாளர்கள் புலம்பல்

Added : டிச 07, 2017 04:03

மதுரை: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட 16 கல்லுாரிகளில் நர்சிங் உதவியாளர் பட்டய படிப்புக்கான வகுப்புகள் நடக்கிறது. ஆண்டுதோறும் 1000 பேர் டிப்ளமோ முடித்து செல்கின்றனர். இவர்கள் ஒரு ஆண்டு படிப்பின் போதே, அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்களுக்கு உதவியாளராக கூடுதல் பயிற்சியும் எடுக்கின்றனர்.

இப்படிப்பு முடித்தவுடன் அரசு மருத்துவமனையில் வேலைஉறுதி என கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதை நம்பி டிப்ளமோ நர்சிங் உதவியாளர் படிப்பு முடித்தவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


முதல்வராக இருந்த கருணாநிதி, 350 பேருக்கு அரசு மருத்துவமனையில் நர்சிங் உதவியாளர் பணி வழங்கினார். அதற்கு பின் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. இந்த பணி கிடைத்தால் மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். தமிழக அளவில் 4 ஆயிரம் பேர் வரை பாதித்துள்ளோம் என நர்சிங் டிப்ளமோ முடித்தவர்கள் புலம்புகின்றனர்.
'உங்களை யார் ரயிலில் வர சொன்னது?' : பயணியரை கடுப்படித்த டி.ஆர்.எம்.,

Added : டிச 07, 2017 01:17



தஞ்சாவூர்: 'ரயில் தினமும் காலதாமதமாக வருகிறது' என, புகார் கூறிய பயணியரிடம், 'உங்களை யார் ரயிலுக்கு வரச் சொன்னது' என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி, பொறுப்பற்ற முறையில் பேசினார்.

திருச்சியில் இருந்து காலை, 7:10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை பயணியர் ரயில், தஞ்சாவூருக்கு காலை, 8:20க்கும், கும்பகோணத்துக்கு, 9:30க்கும், மயிலாடுதுறைக்கு, 10:00 மணிக்கும் செல்ல வேண்டும்.

அவதி : பூதலுார் பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள், தினமும் இந்த ரயிலில் வருகின்றனர். சில மாதங்களாக இந்த ரயில், தஞ்சாவூருக்கு காலை, 9:00 மணிக்கு வருவதால், மாணவர்கள், குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு, உழவன் விரைவு ரயில், பராமரிப்புக்காக இந்த நேரத்தில் இயக்கப்படுவதால், மயிலாடுதுறை பயணியர் ரயிலை, சோழகம்பட்டியில் நிறுத்தி விடுகின்றனர். இதனால், கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் அனைத்து தரப்பினரும், இந்த ரயில் தினமும் தாமதம் ஆவதால், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு, திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி நேற்று காலை ஆய்வுக்கு வந்தார்.

அவரிடம், ரயில் பயணியர், 'மயிலாடுதுறை ரயில் தாமதமாக வருவதால் ஏற்படும் அவஸ்தைகளை குறிப்பிட்டு, அதை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும்' என்றனர்.

அலட்சியம் : இதைக்கேட்ட கோட்ட மேலாளர், 'ரயில் காலதாமதமாக வந்தால், பஸ்சில் போக வேண்டியது தானே, உங்களை யார் ரயிலுக்கு வரச்சொன்னது' என, அலட்சியமாக பதில் கூறினார். இதனால், புகார் கூறிய அனைத்து பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திருச்சி கோட்ட மேலாளரின் இந்த செயல் குறித்து, தெற்கு ரயில்வே மேலாளருக்கு பயணியர் புகார் அனுப்பி உள்ளனர்.

NEWS TODAY 26.01.2026