Thursday, December 7, 2017

'உங்களை யார் ரயிலில் வர சொன்னது?' : பயணியரை கடுப்படித்த டி.ஆர்.எம்.,

Added : டிச 07, 2017 01:17



தஞ்சாவூர்: 'ரயில் தினமும் காலதாமதமாக வருகிறது' என, புகார் கூறிய பயணியரிடம், 'உங்களை யார் ரயிலுக்கு வரச் சொன்னது' என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி, பொறுப்பற்ற முறையில் பேசினார்.

திருச்சியில் இருந்து காலை, 7:10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை பயணியர் ரயில், தஞ்சாவூருக்கு காலை, 8:20க்கும், கும்பகோணத்துக்கு, 9:30க்கும், மயிலாடுதுறைக்கு, 10:00 மணிக்கும் செல்ல வேண்டும்.

அவதி : பூதலுார் பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள், தினமும் இந்த ரயிலில் வருகின்றனர். சில மாதங்களாக இந்த ரயில், தஞ்சாவூருக்கு காலை, 9:00 மணிக்கு வருவதால், மாணவர்கள், குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு, உழவன் விரைவு ரயில், பராமரிப்புக்காக இந்த நேரத்தில் இயக்கப்படுவதால், மயிலாடுதுறை பயணியர் ரயிலை, சோழகம்பட்டியில் நிறுத்தி விடுகின்றனர். இதனால், கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் அனைத்து தரப்பினரும், இந்த ரயில் தினமும் தாமதம் ஆவதால், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு, திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி நேற்று காலை ஆய்வுக்கு வந்தார்.

அவரிடம், ரயில் பயணியர், 'மயிலாடுதுறை ரயில் தாமதமாக வருவதால் ஏற்படும் அவஸ்தைகளை குறிப்பிட்டு, அதை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும்' என்றனர்.

அலட்சியம் : இதைக்கேட்ட கோட்ட மேலாளர், 'ரயில் காலதாமதமாக வந்தால், பஸ்சில் போக வேண்டியது தானே, உங்களை யார் ரயிலுக்கு வரச்சொன்னது' என, அலட்சியமாக பதில் கூறினார். இதனால், புகார் கூறிய அனைத்து பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திருச்சி கோட்ட மேலாளரின் இந்த செயல் குறித்து, தெற்கு ரயில்வே மேலாளருக்கு பயணியர் புகார் அனுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...