Saturday, December 30, 2017

கோவில் திறப்பு நள்ளிரவில் இல்லை

Added : டிச 30, 2017 02:52



சென்னை: 'ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நள்ளிரவில் நடை திறக்கப்படுவதில்லை' என, அறநிலையத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அரசு, புத்தாண்டு பிறப்பை ஒட்டி, கோவில்களில் நள்ளிரவு நடை திறக்க உத்தரவிட்டது. அதற்கு, பக்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஆகம விதிகளுக்கு புறம்பாக இருப்பதால், புத்தாண்டு நடை திறப்பு கைவிடப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, பகலி
ல் கூடுதல் நேரம் கோவில்கள் திறந்திருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...