Wednesday, December 27, 2017

ஜன்னலோர இருக்கைக்கு ரயிலில் கூடுதல் கட்டணம்?

Added : டிச 27, 2017 01:57 






புதுடில்லி : ரயில்களில், ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த, 2016 செப்டம்பரில், ரயில்களில், 'பிளக்சி பேர்' எனப்படும், பண்டிகை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையில், பயணியரின் கூட்டத்திற்கேற்ப கட்டணங்களை உயர்த்தும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த திட்டத்தில், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற ரயில்களில், முதல், 30 சதவீத இருக்கைகளுக்கு, வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.அதன்பின், ஒவ்வொரு, 10 சதவீத இருக்கைகளுக்கும், 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். பயண நாள் வரையில், 50 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும்.

இந்நிலையில், அடுத்தபடியாக, ஜன்னலோர இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும், 'சைடு பெர்த்' எனப்படும், பக்கவாட்டு படுக்கைக்கான கட்டணத்தை குறைக்கவும், ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.01.2026