Thursday, December 7, 2017

அரசு மருத்துவமனையில் வேலை இல்லை : நர்சிங் உதவியாளர்கள் புலம்பல்

Added : டிச 07, 2017 04:03

மதுரை: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட 16 கல்லுாரிகளில் நர்சிங் உதவியாளர் பட்டய படிப்புக்கான வகுப்புகள் நடக்கிறது. ஆண்டுதோறும் 1000 பேர் டிப்ளமோ முடித்து செல்கின்றனர். இவர்கள் ஒரு ஆண்டு படிப்பின் போதே, அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்களுக்கு உதவியாளராக கூடுதல் பயிற்சியும் எடுக்கின்றனர்.

இப்படிப்பு முடித்தவுடன் அரசு மருத்துவமனையில் வேலைஉறுதி என கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதை நம்பி டிப்ளமோ நர்சிங் உதவியாளர் படிப்பு முடித்தவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


முதல்வராக இருந்த கருணாநிதி, 350 பேருக்கு அரசு மருத்துவமனையில் நர்சிங் உதவியாளர் பணி வழங்கினார். அதற்கு பின் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. இந்த பணி கிடைத்தால் மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். தமிழக அளவில் 4 ஆயிரம் பேர் வரை பாதித்துள்ளோம் என நர்சிங் டிப்ளமோ முடித்தவர்கள் புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...