Friday, December 8, 2017

MCI yet againraps pvt medical colleges again, directs pvt med colleges in Pondy to oust 161 students admitted flouting norms 

Bosco Dominique | TNN | Updated: Dec 7, 2017, 23:59 IST

Puducherry: The Medical Council of India (MCI) has directed three private medical colleges in the Union Territory of Puducherry to remove from the rolls of the institution 161 students who were admitted to the MBBS course for the academic year 2017-18 in violation of regulations.

The MCI directed Sri Manakula Vinayagar Medical College and Hospital to discharge 41 students, Sri Venkateswara Medical College, Hospital and Research Institute to discharge 94 students and Pondicherry Institute of Medical Sciences to discharge 26 students.

The council said the colleges admitted these students in violation of the Graduate Medical Education (GME) Regulations, 1997. The council added that the names of these students did not appear on the list provided to it by the centralised admission committee (Centac).

However, the Puducherry government maintained that the council has erroneously recommended the discharge of 56 students of Sri Venkateswara Institute.

"These 56 students were duly sponsored by Centac, Puducherry. We have taken up the matter with the council to withdraw the action against the 56 students," director (health and family welfare services) K V Raman said.

He added that the government has asked Sri Venkateswara Institute not to discharge the 56 until further orders or recommendations from the council.

Meanwhile, the Puducherry government has directed the three medical colleges to immediately discharge the remaining 105 students and submit compliance reports.

The government has also sent the communication to the registrars of Pondicherry University and Tamil Nadu State Medical Council for necessary action.

The MCI had on September 7 directed the Puducherry government to discharge 778 students admitted into the MBBS course for the academic year 2016-17 in four deemed universities and three private medical colleges for failing to adhere to the prescribed norms in the admission process.

The students, however, moved the Madras high court and sought an interim stay on the MCI's direction and thereafter, they were able to appear for their first year examinations.

Thursday, December 7, 2017

பலி கேட்கும் பணிச்சுமை!

“நமது இளைஞர்கள் நீண்ட நேரம் உழைக்கத் தயங்காதவர்கள். என் மகனும் அப்படித்தான். அதற்காக, அவர்கள் தங்கள் உயிரையே இழக்கும் அளவுக்குக் கடுமையாக, நீண்ட நேரம் வேலை பார்க்கும் அவலத்தை இனியும் தொடர விடாதீர்கள்” என்று ஜப்பான் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஒரு தாய். மிஷியோ நிஷிகாகி எனும் அந்தப் பெண்மணியின் மகன் நவோயாவுக்கு 27 வயது. இளம் வயதிலிருந்தே கணினி மீது காதலுடன் வளர்ந்தவன். கடும் போட்டிகள் நிறைந்த ஜப்பான் தொழில்நுட்பத் துறையில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளக் கடுமையாக உழைத்தான். தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. தனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டிய நவோயா இன்று உயிருடன் இல்லை. அவனது வேலையே அவனைக் கொன்றுவிட்டது.

‘கரோஷி’ மரணங்கள்

“எப்போது அழைத்தாலும் ‘வேலைப் பளு’, ‘வேலைப் பளு’ என்றே சொல்வான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், என் தந்தையின் இறுதிச் சடங்குக்காக வீட்டுக்கு வந்தவன், தொடர்ந்து தூங்கிக்கொண்டே இருந்தான். தொடர்ந்து 37 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழலில் அவனும் அவனது சக ஊழியர்களும் இருப்பது தெரியவந்தது” என்கிறார் மிஷியோ நிஷிகாகி.

தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட, அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு ஆண்டுகளில் மரணமடைந்தான் நவோயா. ஜப்பான் ஊழியர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் கடும் பணிச்சுமை காரணமாக இறக்கும் சூழல் இருப்பதாக அந்நாட்டு அரசே தெரிவித்திருக்கிறது. வலிப்பு, மாரடைப்பு, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை என்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் இறக்கிறார்கள் என்கிறது, கடும் பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் மரணமடைவது தொடர்பாக ஜப்பான் அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட வெள்ளை அறிக்கை. இப்படியான மரணங்களுக்கு ஜப்பானில் ‘கரோஷி’ என்று பெயர்.

1969-ல் ஜப்பான் நாளிதழ் ஒன்றின் சிப்பம் கட்டும் பிரிவில் வேலை செய்த 29 வயதான ஒரு ஊழியர் அதிகப்படியான வேலை காரணமாக உயிரிழந்தது தான் அதிகாரபூர்வமாக ‘கரோஷி’யின் முதல் கணக்கு. 1970-களில் இதுபோன்ற மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியதும், இந்த வார்த்தை ஜப்பானியர்கள் மத்தியில் பரவலாகப் புழங்கத் தொடங்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானின் பிரபல விளம்பர நிறுவனமான ‘டென்ஷு’வில் 100 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொடர்ந்து வேலை செய்த இளம் பெண் மஸ்துரி தகாஹஷி மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட பிறகு ‘கரோஷி’ தொடர்பாக சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்தன. அந்நிறுவனத்தின் இணையதளப் பிரிவில் வேலை செய்த மஸ்தூரி, தொடர்ந்து பல மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல் குறித்து, அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவுசெய்தார்.


உழைப்பின் வரலாறு

ஜப்பானியர்கள் உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள். அங்குள்ள பணிச் சூழல் மிகவும் கண்டிப்பானது. அவர்களே வகுத்துக்கொண்ட நியதி அது. கூடுதல் நேரம் ஒதுக்கி, கடுமையாக உழைத்தால்தான் முதலாளிகளின் அபிமானத்தைப் பெற முடியும். அதை வைத்துதான் பணி நிரந்தரம், சம்பள உயர்வு எல்லாம். முதலாளிகள், மேலதிகாரிகள் மீது பெரும் மரியாதை யும் நன்றியும் கொண்டவர்களாகவே ஜப்பானியர்கள் இருக்கிறார்கள். ‘எனக்கு வேலை கொடுத்ததற்குக் காலம் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்’ என்பதுதான் ஜப்பானியர்களின் இயல்பான மனநிலை. முதலாளியோ மேலதிகாரியோ அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு முன்னர் ஊழியர்கள் கிளம்புவது என்பது அவர்களைப் பொறுத்தவரை அவமதிப்புக்குரிய விஷயம்.

1920-களில் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக ஜப்பானிய நிறுவனங்கள் கடும் முயற்சியில் ஈடுபட்ட சமயத்தில், அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரித்தன. இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஜப்பான் பொருளாதாரம் அரசு மற்றும் பெருநிறுவனங்களின் கடும் முயற்சியால் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டது. 1950-களில் அப்போதைய பிரதமர் ஷிகேரு யோஷிடா ஜப்பான் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது லட்சியம் என்று அறிவித்தவர்.

பெருநிறுவனங்களை அழைத்துப் பேசிய அவர், இரண்டு விஷயங்களை முன்வைத்தார். அதன்படி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். பதிலுக்குத் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு முழு விசுவாசம் காட்ட வேண்டும். ஜப்பானில் தொழிற்சங்கங்கள் வீரியத்துடன் இயங்கிவந்த காலகட்டம் அது. தொழிலாளர்களின் உரிமை தொடர்பாக சற்று உறுதியாகவே நின்றன தொழிற்சங்கங்கள்.

அரசும் பெருநிறுவனங்களும் சற்று இறங்கிவந்து அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அதன்படி, தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும்; ஆனால், குறைந்த சம்பளம்தான் வழங்க முடியும் என்று இரு தரப்பும் பேசி முடித்துக்கொண்டன. சிறிய நிறுவனங்களில் பணிப் பாதுகாப்புச் சூழலும் இல்லை. போதிய சம்பளமும் இல்லை.

இந்தச் சூழலே 1970 வரை நீடித்தது. 1980-களில் ஜப்பான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட துரித வளர்ச்சிக் குப் பின்னர், சம்பளம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், வேலை நேரம் சராசரி யாக ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் எனும் நிலையில் பெரிய மாற்றம் வரவில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல, அரசு அலுவலகங்களிலும் இந்தப் பிரச்சினை உண்டு.

கண்டுகொள்ளாத உலகம்

உண்மையில், கடும் பணிச்சுமையால் உயிரிழப்பு கள் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் அரசுத் தரப்பிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு 40 மணி நேரத்துக்கு மேல் ஊழியர்களிடம் வேலை வாங்குவதை ஜப்பான் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. அதேசமயம், வேலை நேரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வாய்ப்பையும் ஜப்பான் சட்டங்கள் வழங்குகின்றன. அதன்படி, ஊழியர்களின் பணி நேரத்தை நீட்டிக்க விரும்பினால், ஒரு நிறுவனம் அதற்கான அனுமதியை அரசிடம் பெற வேண்டும். நிறுவன முதலாளிகள், ஊழியர்கள், தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசி சிறப்பு ஒப்பந்தங்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.

ஊழியர்களிடம் அதிகம் வேலை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று உள்ளூர நினைத்தாலும், வேலை நேரம் போக யாரும் அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்று வேண்டா வெறுப்பாகப் பல நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அலுவலக நேரம் முடிந்தும் கிளம்பாமல் இருப்பவர்களை அன்புடன் பேசி வெளியேற்றும்படி மேலதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றன. சில அலுவலகங்களில் வேலை நேரம் முடிந்ததும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டுவிடுகின்றன.

சில நிறுவனங்களில், காலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, முந்தைய நாள் மாலையே நேரத்தோடு வீட்டுக்குச் சென்றுவிடுங்கள் என்று மறைமுகமாக உணர்த்தும் விதமாக! ஆனால், இதெல்லாம் உண்மையில் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதுதான் துயரம்.

இதற்கெல்லாம் முக்கியக் காரணம், பல நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லை என்பதுதான். ஒரு காலத்தில் சொற்ப சம்பளத்துக்காக நீண்ட நேரம் உழைத்தாலும் நிரந்தர வேலை எனும் நம்பிக்கை இருந்தது. இன்றைக்கு அந்தச் சூழலும் இல்லை. குறிப்பாக, புதிதாக வேலைக்குச் சேருகின்றவர்கள் தங்களை நிரூபிக்கவும், வேலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் தங்கள் உயிரையே பணயம் வைக்க நேர்கிறது என்பதுதான் இன்றைய நிலை.

ஜப்பான் அளவுக்கு மோசம் இல்லையென்றாலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்தப் பிரச்சினை உண்டு. தன் மகனைப் பறிகொடுத்த மிஷியோ நிஷிகாகியைப் போல் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். காது கொடுக்க நேரமோ மனமோ இன்றி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது உலகம்!

- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?

Published : 01 Dec 2017 10:45 IST

ஜி.ராமானுஜம்


 பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு சமூக விலங்குகள். மனிதர்களின் அகமும் சமூகம் என்னும் புறமும் கொண்டுள்ள உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் கைமீறும் நிலையில், மனது தற்கொலைக்கு முடிவெடுக்கிறது.

சில தற்கொலைகளில் அகக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். தீவிர மனநோய்கள், குறிப்பாக மூளையில் ஏற்படும் ரசாயனக் குறைபாடுகளால் வரும் மனநோய்களால் நிகழலாம். உதாரணமாக, மனச்சிதைவு நோயில் சிலருக்குக் காதினில் யாரோ இறந்துபோகக் கட்டளையிடுவதுபோல் தோன்றும். சில தற்கொலைகளில் புறக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக, விவசாயம் பொய்த்துப் போவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது.

பதின்மவயதுப் பிரச்சினைகள்

சமீபகாலத்தில் அதிகரிக்கும் பதின்மவயது மாணவத் தற்கொலைகளில் அக மற்றும் புறக் காரணி கள் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிகிறது. மாணவர்களின் மனநிலையைத் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், கல்வி முறை, ஊடகங்கள் எனப் பல பரிமாணங்களும் கோணங்களும் உள்ள பிரச்சினை இது.

தற்போதைய இளம் தலைமுறையினரிடம் சில ஆளுமைக் கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, ஈகோ எனப்படும் தன்னைப் பற்றிய முனைப்பு அதிகமாகவே காணப்படுகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் வேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளைப் பொறுத்தவரை பகிர்ந்துகொள்ளல் இருந்தது. பொருட்களை மட்டுமல்ல உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள கூட்டுக் கும்பத்தில் வழியிருந்தது.

இப்போது பலரும் ஒரு குழந்தையுடன் நிறுத்திவிடுவதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கவனம் அதிகமாகி ஈகோ பெரிதாக வளர்கிறது. தன்னையும் தனது தேவைகளையும் பூர்த்திசெய்யவே எல்லோரும் உள்ளனர் என்ற குறுகிய பார்வை தோன்றுகிறது. அதனால், தன்னை யாரும் ஒன்றுமே சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் வளர்கிறது. முகம்திரிந்து நோக்கினால்கூட வாடிவிடும் அனிச்சமலர் போல் ஒரு சுடு சொல்கூட அவர்களை வாடச்செய்துவிடுகிறது.

மேலும், கல்வி முறையால் ஏற்பட்டிருக்கும் சுமையை இறக்குவதற்கும் இறுக்கத்தைக் குறைப்பதற்கும் எந்தவித ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளும் குறைவு. மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவை அறவே இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, பெண் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். வெளியே சென்று விளையாடுவதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை என்பது மிக முக்கியமான பிரச்சினை. சமீபத்தில் மாணவியரே அதிகம் தற்கொலை செய்துகொண்டதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’, ‘கேண்டி கிரஷ்’ போன்ற செல்பேசி விளையாட்டுகள்தான்.


பெற்றோர்களின் கடமை

தனியார்மயம், உலகமயமாக்கலால் போட்டிமய மான சூழலில் பெற்றோர்கள் மிகையான எதிர்பார்ப்பு களை வைத்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதுடன், குழந்தைகளிடமும் அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறார்கள். பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும் அதிகம் நடக்கிறது. குழந்தைகள் தனித்தன்மை கொண்ட ஆளுமைகள் என்று பார்ப்பதில்லை.

குழந்தைகளின் தனித்தன்மை மிளிரும் வகையில் நேர்மை, துணிச்சல், பொறுமை, பொறுப்புணர்வு, விடாமுயற்சி போன்ற ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பது பெற்றோரின் கடமை. இந்தப் பண்புகள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பெரிய அளவில் உதவும். உங்கள் குழந்தைகளுக்குச் சில விஷயங்களில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமும் திறமையும் உழைப்பும் சேர்ந்தாலே முழுமையானதாக இருக்கும். உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்வுகள் நடக்கும்போது நாள் முழுவதும் படித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது.

முன்பெல்லாம் ‘கண்ணை மட்டும் விட்டுவிட்டு எல்லா இடத்திலேயும் அடிங்க சார்!’ எனப் பெற்றோர் கள் ஆசிரியர்களிடம் கூறுவார்கள். அது போன்ற உடல்ரீதியான துன்புறுத்தலை அறிவுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதேசமயம், கொஞ்சம் கடுமையான சொற்களைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் போகும் அளவுக்குக் குழந்தைகளை உருவாக்காதீர்கள்.

சுடுசொற்களை, ஏமாற்றத்தை, வலிகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை. வெற்றி அடையக் கற்றுக் கொடுப்பது முக்கியம்தான் என்றாலும், தோல்விகளை எதிர்கொண்டு முன்னேறி வரவும் கற்றுத்தர வேண்டும். தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் உணர்ச்சிவசப்படாமல் ஒப்புக்கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். யாரேனும் சீண்டினால் பயந்துபோகாமல் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.


ஆசிரியர்களின் பொறுப்பு

குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. பள்ளிக்கூடம் என்பது மதிப்பெண்கள் எடுக்கக்கூடியவர்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல. விளையாட்டுப் பாட வகுப்புகளில் பிற பாடங்களை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான திறமையும் வேகமும் இருக்கும். ஒரே வயது என்ற ஒரே அடிப்படை யில் வகுப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கருதுவது தவறு.

மூளை வளர்ச்சிக் குறைபாடு, அதீத துறுதுறுப்பு (ஹைப்பர் ஆக்டிவிட்டி) , கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), ஆட்டிசம் என்று குழந்தைகளிடம் காணப்படும் பாதிப்புகளைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் அறிந்திருப்பதில்லை. இந்தக் குழந்தைகளையும் மற்ற குழந்தைகள்போல் மதிப்பெண் இயந்திரமாக மாற்ற நினைப்பது தவறு. மேலும், இக்காலப் பதின்வயதினர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதால், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது மிகுந்த கவனம் தேவை. புண்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். தவறான செயலை மட்டும் கண்டிக்க வேண்டும்.

தற்கொலைகள் தொடர்பான செய்திகளைக் கையாள்வதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குள்ளது. ஒரு நிகழ்வின் பின்புலம், நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களின் நம்பகத்தன்மை, நாம் கொடுக்கும் காட்சி, செய்திகளின் தாக்கங்கள் என்னவென்னவாக இருக்கும் என்றெல்லாம் பொறுப்புணர்வோடு ஊடகங் கள் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். பரபரப்புக்காக மிகைப்படுத்தப்படும் செய்திகள் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதைக் கணக்கில்கொள்ள வேண்டும். குழந்தைகள்தான் எதிர்காலத்தில் உலகின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கலாம்!

- ஜி.ராமானுஜம், மனநலத் துறைப் பேராசிரியர்,
தொடர்புக்கு: ramsych2@gmail.com

Karnataka’s nursing students worried about job prospects 
 Tanu Kulkarni 
 
Bengaluru, December 07, 2017 00:00 IST


‘Hospitals will not hire us if we don’t have Council’s backing’

With the Indian Nursing Council (INC) removing the list of State nursing colleges from its website, fear has resurfaced among students who are once again anxious about job prospects outside Karnataka.

“Most of us studying in Karnataka are from other States. We want to go back to our home town for work. Many of us will also look for jobs abroad. Hospitals will not hire us if we do not have the backing of INC,” a nursing student told The Hindu .

On November 15, 2017, the Indian Nursing Council published a list of nursing colleges operational in States across the country.

However, it failed to include even a single college in Karnataka. This is the second time that the INC has removed its list of colleges from Karnataka from its website.

The first time this was done was in May 2017, following which nursing colleges approached the court.

The controversy began after the State government in December 2016 issued orders that the approval of INC was not required for nursing colleges in Karnataka. The order stated that approvals by the Karnataka Nursing College and the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) would suffice for colleges to run. It was following this that the INC removed a list of 257 colleges from its website.

A management member of the nursing college said that the differences between the State government and INC had led to the situation. “Both of them should amicably settle the issue in order to protect the interests of lakhs of students,” he said.

Another college principal pointed out that the INC was restrained from the publishing list of nursing institutes recognised by the Supreme Court. “Why are only colleges from Karnataka removed and not others,” she asked.

When contacted, INC authorities said that they had removed the list of colleges from Karnataka as the jurisdiction of these colleges is under the purview of the State government.
Gitam University student jumps off building, dies 

DECCAN CHRONICLE.

Published Dec 7, 2017, 7:39 am IST

The boy was caught drinking by the warden.



A first-year B. Pharmacy student of GITAM University committed suicide by jumping to death from the building of the university on Wednesday.

Visakhapatnam: Leaving his family in a state of shock, a first-year B. Pharmacy student of GITAM University committed suicide by jumping to death from the building of the university on Wednesday. The deceased was identified as Rishi Varma, a native of Hyderabad. Sources said that Rishi was caught by the warden for consumption of liquor and the warden.

Rishi consumed alcohol as he entered the hostel. However, he was caught by the warden who informed this to his parents over phone. The college informed the parents and they are yet to reach Vizag. Arilova police registered a case and an investigation is on.
MCI debates holding NEET twice a year

TNN | Updated: Dec 6, 2017, 23:38 IST

Chennai: Is it possible to have two National Eligibility cum Entrace Test (NEET) sessions a year? The Medical Council of India is discussing the possibility of having two exams a year so that it can ensure it doesn't deny aspirants a chance after just one exam, MCI vice-president Dr C V Bhirmanandam said here on Wednesday.

In 2016, the Supreme Court made mandatory a common entrance examination for all medical admissions — undergraduate and postgraduate — across the country. Only central government institutions such as the All India Institute of Medical Sciences (AIIMS) and PGI Chandigarh were exempted from taking the common entrance.

In 2017, all students in the open category who were admitted to medical college across the country had cleared NEET with a score of at least 131 marks out of 720. Those admitted under the reserved category scored at least 107 marks. "Some say that it is unfair to give students only one chance. Even board exams conducted by centres and states have supplementary tests. They have to wait for another year before they can attempt it the second time," he said.

In 2017, only 32,570 of the 83,859 candidates who wrote the exam in Tamil Nadu qualified, giving the state an overall pass percentage of 38.84%. While experts say the scores are likely to improve in the coming years as the syllabus improves and schools prepare students better, they wantr students to be given at least two tests a year. "More than students, it is the universities who push for this," said a vice-chancellor of a private university, who did not wish to be named. "We lost at least 15 BDS students this year, and the situation was worse in government colleges where the fee is low. Several dental and engineering seats are vacant because students in the second and third year of their courses quit after they cleared NEET," he said.

MCI officials say they may not be able to guarantee that students won't leave another course because NEET allows students up to the age of 25 to appear for it for students in the open category and up to 30 years for those in the reserved category. "As of now, we don't know if we should have it before the September 30 deadline for admission or after six months. If we do it after six months, colleges will have to apply for additional intake. This may require additional staff and infrastructure," he said.
நிதி சொல்லும் நீதி

By எஸ். ராஜசேகரன் | Published on : 07th December 2017 01:17 AM |

| நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை.

பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும். நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்?


ஒரு திரையரங்கில் செலவு செய்கின்ற பணத்தையோ அல்லது ஒரு வணிக வளாகத்தில் குடும்பத்துடன் சென்று செலவழிக்கின்ற தொகையோ அதை நாம் ஈட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை உணர்கிறார்களா? அல்லது அந்த வருமானத்தை ஈட்டுவதற்குரிய தகுதியைப் பெறுவதற்கு எவ்வளவு முயற்சிகள் செய்தோம் என்பதை நினைத்துப் பார்க்கிறார்களா?


உஙஐ என்ற முறையை வணிக உலகில் அறிமுகப்படுத்திய பின்புதான் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உஙஐ என்பது எளிய மாதத்தவணை என்று பொருள்படும். அதாவது எவ்வளவு விலை உயர்ந்த பொருள்களாக இருந்தாலும் அதற்கு ஒரு குறைந்த முன்பணம் மட்டும் செலுத்திவிட்டு அந்தப் பொருளை நாம் உடமையாக்கிக் கொள்ள முடியும். பின்பு மீதம் உள்ள தொகையை வட்டி கணக்கிட்டு அதை அசலுடன் கூட்டிய பின் அதை சம மாதத் தவணைகளாகப் பிரிக்கும் பொழுது செலுத்த வேண்டிய தொகை மிகவும் எளிதாகத் தெரியும்.
அதிலும் பணம் செலுத்த வேண்டிய மாதங்களின் எண்ணிக்கையின் கால அளவை அதிகரித்தால், செலுத்த வேண்டிய பணம் இன்னும் குறைவாகத் தெரியும். ஆனால், அதற்கான வட்டி பல மடங்கு கூடிவிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.


நாம் வாங்கும் பொருள் நமக்கு அவசியம்தானா? என்று யாரும் சிந்திப்பதில்லை. தேவையற்ற பொருளை வாங்குவதற்காக தனது எதிர்காலத்தை அடகு வைத்துவிட்டு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்கின்றனர். சிற்சில சூழ்நிலைகளில் அவசியமற்ற பொருளை வாங்க நினைத்து, அதற்காக அவசியமான பொருளைக் கூட விற்க நேரிடுகிறது.


மிகப் பெரிய செலவு செய்து உங்கள் பிள்ளைகளைப் படிப்பதற்கு அனுப்புகிறீர்களே, அந்த நிறுவனத்தின் தரத்தை என்றாவது தெரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா? அல்லது இந்தப் படிப்பை உங்கள் பிள்ளைகள் படித்தால்தான் உங்களை இந்தச் சமுதாயம் மதிக்கும் என்பதற்காகக் குறிப்பட்ட பாடப் பிரிவில் சேர்த்தீர்களே, அந்தப் பாடப் பிரிவுக்குரிய வேலை வாய்ப்பு குறித்து என்றுமே சிந்துத்துப் பார்த்து இருக்க மாட்டீர்கள்.
குழந்தைகளுக்குக் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்தச் செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் தகுதியைப் பெரிதாகக் காட்டிக் கொள்வதற்காக வீண்செலவு செய்யாதீர்கள். பிள்ளைகளும் அதையே பின்பற்றுவார்கள்.


உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனைக் கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.


அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அநாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும்.


பொருளை ஈட்டுவது முக்கியமல்ல, ஈட்டிய பொருளை திறமையாகக் கையாள்வது குறித்த விழிப்புணர்வையும் நம் குழந்தைகளுக்கு நாம் வழங்கினால், நம் நாடும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துவிடும்.

NEWS TODAY 26.01.2026