Monday, December 11, 2017

Award for diabetologist 

Special Correspondent 
 
Chennai, December 11, 2017 00:00 IST
 



Senior diabetologist V. Seshiah became first Indian to be honoured with the Lifetime Achievement Award at the International Diabetes Federation Congress in Abu Dhabi recently. The federation has members from 170 countries. Dr. Seshiah is the Pro-Chancellor of Maher University and founder of Dr. V. Seshiah and Dr.V. Balaji Diabetes Care Centre. He is a professor with Tamil Nadu Dr. MGR Medical University.
ஓய்வூதியர்களை அலைக்கழிக்காதீர்கள்... தமிழக அரசுக்கு வேண்டுகோள்

By தி. வேணுகோபால் | Published on : 11th December 2017 02:37 AM |



தமிழக அரசுப் பணிநிறைவுற்று ஓய்வூதியம் பெறுவோர், அவரவர் விருப்பப்படி, நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தோ அல்லது சென்னை நகரிலுள்ள ஓய்வூதிய அலுவலகம் (Pension Pay Office) அல்லது மாவட்டங்களிலுள்ள அரசுக் கருவூலம் வழியாகவோ தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். 

சென்னை ஓய்வூதிய அலுவலகம் அல்லது மாவட்டக் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியமும், அவரவர்களின் வங்கிக் கணக்கில் உஇந முறையில் செலுத்தப்பட்டு, தேவைப்படும்போது பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெறும்முறை கடந்த 1988-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பணிநிறைவு பெறும் அரசு ஊழியருள், நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிப்போரே அதிகமாகும். பொதுத்துறை வங்கிகளின் சேவையைப் பெறுவது எளிதானதாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஆண்டிற்கொருமுறை ஓய்வூதியர்கள் தாங்கள் உயிரோடிருப்பதற்கான சான்றிதழைத் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கருவூலம் அல்லது ஓய்வூதிய அலுவலகத்தில் இதனை ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களிலும், பொதுத்துறை வங்கியெனில் நவம்பர் மாதத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட வங்கிக் கிளையில் நேரடியாக ஓய்வூதியம் பெறும் ஒருவர் மிக எளிதாக இதனைச் சமர்ப்பித்துவிட முடியும். ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் அவர் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வங்கிக்கிளையில் ஓய்வூதியம் நேரடியாகப் பெறுவோர் மிகச் சிலரே. ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓய்வூதியரிடையே அவர் சிரமப்பட வேண்டும்.


ஓய்வூதியம் தொடர்பான குறைகளைச் சம்பந்தப்பட்ட வங்கிக்கிளை மேலாளரிடம் தெரிவித்துத் தீர்வு காண்பது எளிது. ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் இதனை எதிர்பார்க்கவே இயலாது. அங்கும் இங்கும் அவர் அலைக்கழிக்கப்படுவது உறுதி.


கடந்த 2017 ஜூன் மாதத்தில் ஓர் ஓய்வூதியர் தன் உயிர்த்திருக்கும் சான்றை சமர்ப்பித்தபோது அச்சான்றிதழின் நகலில் அதனைப் பெற்றுக் கொண்டதற்கான ஏற்பறிப்பைத் தர அங்கிருந்த அரசு ஊழியர் மறுத்துவிட்டார்.


நிலைமை இவ்வாறிருக்க தற்போது அரசு, பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நேரடியாக ஓய்வூதியம் பெறும் முறையை ரத்து செய்து அனைவருமே ஓய்வூதிய அலுவலகம் அல்லது கருவூலம் மூலமாகவே ஓய்வூதியம் பெற வேண்டுமெனவும், இம்முறை இவ்வாண்டு இறுதிக்குள் அதாவது 31.12.2017-க்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆணை வழங்கியுள்ளது. (அரசாணை எண்.268, நிதித் (ஓய்வூதியம்) துறை நாள் 18.09.2017).
இவ்வாணை ஓய்வூதியர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இம்மாற்றத்திற்கான காரணங்களாக மேற்குறித்த அரசாணையில் கூறப்பட்டுள்ள குறைகள் பின்வருமாறு:


1. வங்கி ஊழியர்கள் ஓய்வூதிய விதிகள் குறித்து அறிந்திராததால், அவ்வப்போது அவர்கள் ஓய்வூதிய அலுவலகம் (அ) கருவூலகங்களிடம் விளக்கங்கள் கோருகின்றனர். ஓய்வூதிய ஆவணங்கள் வங்கிகளிடம் உள்ளதால் அவற்றைப் பெற்று விளக்கங்கள் வழங்குவது சிக்கலான நடைமுறையாக உள்ளது. 


2. ஓய்வூதியர் குடும்ப நலத் தொகைப் பிடித்தம் தொடர்பான விவரங்களை வங்கிகள் உரிய நேரத்தில் வழங்காததால், அவ்விவரங்களை ஓய்வூதிய இயக்குநருக்கு அனுப்புவதில் தாமதம் நேருகிறது. 


3. உயிரோடிருப்பதற்கான சான்று ஓய்வூதிய அலுவலகம் மற்றும் கருவூலகங்களால் ஏப்ரல் - ஜூன் மாதங்களிலும், பொதுத்துறை வங்கிகளால் நவம்பர் மாதத்திலும் பெறப்படுவதால் ஓய்வூதியரிடையே குழப்பம் ஏற்படுகிறது. 


4.மாதந்தோறும் ஓய்வூதியச் செலவினம் மற்றும் ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கல், கூடுதல் ஓய்வூதியச் செலவினம் ஆகியவற்றைப் பல்வேறு வங்கிகளிடமிருந்து பெறுவதில் சிரமம் நேருகிறது. அவ்வாறே ஓய்வூதிய மிகைப் பற்றுப் பிடித்தம் மற்றும் வழங்கப்படாத ஓய்வூதியம் குறித்த விவரங்களைப் பெறுவதில் சிரமங்கள் உள்ளன. 


5. ஓய்வூதியர் இறந்த பிறகும் அவருடைய கணக்கில் உள்ள வாங்கப்படாத ஓய்வூதியத் தொகை வங்கிக் கடனுக்குக் கழிக்கப்படுகிறது. இது தவறான நடைமுறையாகும். இறந்த பிறகு ஓய்வூதியரது கணக்கில் சேர்க்கப்படும் ஓய்வூதியத் தொகை அரசுக்குரியதாகும்.
மேற்கூறிய பிரச்னைகள் யாவும் நிர்வாகப் பிரச்னைகளாகும். அவை சில சிறு நடைமுறை மாற்றங்களின் மூலம் சரி செய்யப்படக் கூடியவையே. இனம் 5-இல் சொல்லப்பட்டுள்ள பிரச்னை ஓய்வூதிய அலுவலகம் அல்லது கருவூலம் மூலமாகப் பெறும் ஓய்வூதியர் இனத்திலும் நேரக்கூடியதே. ஓய்வூதியர் இறந்தது பற்றிய தகவல் கிடைக்குமுன் அவருடைய வங்கிக் கணக்கில் உஇந மூலமாகக் கருவூலம் செலுத்தும் தொகையும் வங்கியால் ஓய்வூதியரின் கடனுக்காக எடுத்துக் கொள்ளப்படுவது இயல்பான நடைமுறையே. எனவே அதற்காகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நேரடியாக ஓய்வூதியம் பெறும் முறையை மாற்றுவது தீர்வாகாது. 


முப்பதாண்டுக்கால நடைமுறையில் உள்ள இம்முறையை மாற்ற வேண்டுமென ஓய்வூதியர்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியர் சங்கங்களோ கோரிக்கை ஏதும் முன்வைக்கவில்லை. இம்முறை தங்களுக்குச் சிரமங்கள் தருவதாக ஓய்வூதியர்கள் யாரும் கூக்குரல் எழுப்பவில்லை. மாறாக ஆண்டுதோறும் பொதுத் துறை வங்கிகளிடம் நேரடியாக ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிப்போர் எண்ணிக்கையே அதிகரித்துச் செல்கிறது.
மேலும் தற்போது அரசு ஆணை வழங்கியுள்ள நடைமுறை மாற்றத்தால் எழும் நிர்வாகப் பிரச்சினைகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை.


மேற்கூறிய அரசாணையிலேயே, தற்போது சுமார் 79,114 ஓய்வூதியர்கள் நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெறுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணிச்சுமை முழுவதும் இப்போது ஓய்வூதிய அலுவலகத்திற்கும் கருவூலங்களுக்கும் மாற்றப்படுகிறது. இப்பணியை மேற்கொள்ள அங்குப் பணியாளர்கள் உள்ளனரா அல்லது கூடுதல் பணியாளர்கள் வழங்கப்படுமா என்பதை அரசு பரிசீலிக்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காத சூழ்நிலையில் அரசு ஏன் இப்பணிச் சுமையை ஏற்கத் துடிக்கிறது என்பது தெரியவில்லை.


அரசாணையில் கூறப்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும், நடைமுறையை மாற்றுமுன் ஓய்வூதியர்களின் விருப்பத்தை அறிவதும் அரசின் கடமையாகும். ஓய்வூதியர்கள் விரும்பாத நிலையில் இந்நடைமுறை மாற்றம் அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதோடு அவர்களையும் மூத்த குடிமக்களையும் போராட வீதிக்கு அழைத்து வரும் என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

பணி ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர் (காவல்துறை).

No night shift for station masters at three suburban stations could pose security risk

By B Anbuselvan  |  Express News Service  |   Published: 11th December 2017 02:00 AM  |  

CHENNAI: If you were to visit suburban railway stations at Saidapet, Guindy or Meenambakkam at late night, chances are you will not find any railway personnel, certainly not the station master. For, the Chennai division of the Southern Railway has just withdrawn night shift for station masters for the three stations.

It means between 10 pm and 6 am, the three stations will have no station masters. They will work in two shifts alone: 6 am to 2 pm and 2 pm to 10 pm.

Trains ply between Chennai Beach and Tambaram from 3.55 am to 11.59 pm. As many as 34 train services pass through the intermediate stations between 10 pm to 6 am on both directions.
Blame it on the staff shortage. A few days ago, the transportation branch of Chennai division transferred station masters in the three stations and posted them in the existing vacancies of additional station master at Pallavaram suburban station.

However, suburban stations between Chennai Beach and Tambaram will still be manned by junior level station masters in three shifts each day.

People who got to know about the decision were shocked as it would pose a huge risk to trains and commuters. If the trains do not run as per schedule at night, commuters will not be informed about it in these three stations. This could increase the risk of commuters safety, especially women passengers, said a section of passengers.

N Masilamani, former member of Chennai divisional rail users consultative committee, said, “Guindy and Meenambakkam stations are well patronaged even during night hours. In the event of any emergency, there will be no one to guide them. It also increases the risk of accidents as passengers movements will not be monitored when the train leaves the station,” he said.
He added that many stations, including C and D grade stations in Southern Railway, function without night duty station masters due to the lack of train operations. “When there are train services, railway should deploy a person to monitor its operation,” he added.

Station masters oversee the arrival and departure of trains by monitoring work in the signal and section engineering department, clear trains for operations, alert the next station master in the event of emergencies and handle passenger complaints.

About five lakh passengers commute in 236 train services in the Chengalpattu - Tambaram - Chennai Beach section each day.
WhatsApp Beta gets Private replies, Picture in Picture mode and more 

DECCAN CHRONICLE.

Published Dec 10, 2017, 7:45 pm IST

The company has now rolled out some new features on the beta version which will soon make their way to the stable version of the app.



The PiP feature enables users to multitask while taking a video call. The app now has a new icon that will prompt when a user is taking a video call. After selecting the icon, a picture in picture mode will start in a new window. Users can also resize the video window.

Facebook-owned WhatsApp keeps updating its mobile app with new features regularly. The company has now rolled out some new features on the beta version which will soon make their way to the stable version of the app.

The new features are as follows:

Picture in Picture (PiP) mode

The PiP feature enables users to multitask while taking a video call. The app now has a new icon that will prompt when a user is taking a video call. After selecting the icon, a picture in picture mode will start in a new window. Users can also resize the video window.

Private replies in groups

This feature will allow a user to reply privately to a group message. Now, a person in a group will get an option to message a particular member which other members can’t see. This feature was spotted in the WhatsApp Web version.

New invite via link shortcut

The invite via link feature is already available for the iOS app but will now make its way to the Android platform. It enables group admins to send a link to other users so they can join the group directly.

Tap to unblock user

The new build will provide an option wherein users can unblock anyone by just tapping and holding any contact and send him/her a message.

Shake to report

This is an interesting feature that allows users to report problems just by shaking the device which opens the Contact Us section of the app. The feature is available in the WhatsApp beta version number 2.17.437.
காலத்தின் வாசனை: தெருவில் இருந்து மறைந்தவர்கள்

Published : 10 Dec 2017 09:31 IST

தஞ்சாவூர்க் கவிராயர்




வீட்டில் காணாமல் போனவர்களைத் தெருவில் தேடலாம். ஆனால் தெருவிலிருந்தே காணாமல் போனவர்களை எங்கே என்று தேடுவது?

இப்போதெல்லாம் உப்பு வண்டிக்காரரை தெருவில் பார்க்கவே முடியவில்லை. அவர் காணாமலே போய்விட்டார். கவனித்தீர்களா? கடைகளில்தான் அழகான பாக்கெட்டுகளில் உப்பு கிடைக்கிறதே. இனிமேல் அவரெல்லாம் எதற்கு?

ஆனால் உப்பு வண்டிக்காரர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்று சொல்லிக்கொள்ளவே ஆசை. உப்பு வண்டியை ஒற்றை ஆளாக இழுத்து வருவார் அவர். ஏதோ அவரே கடலுக்குள் மூழ்கி அள்ளிக்கொண்டு வருவது மாதிரி!

தயிர், மோர் விற்கிற பெண்மணியும் காணோம். அவள் விற்கிற மோருக்கென்று தனிவாசனை. சுவரில் அவள் தீற்றிப்போகும் கோடுகள் - மோர்க்கணக்கு!

காலை 11 மணிக்கு வெறிச்சோடி கிடக்கும், தெருவின் மோனத்தைக் கலைத்தபடி ஒலிக்கும் ‘கிளி ஜோ...ஸீயம்’ என்ற குரல் இப்போதெல்லாம் கேட்பதில்லை. சமீபத்தில் எங்கள் தெருவில் அத்திப்பூத்தாற்போல் வந்த கிளிஜோசியக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்

“தோ இந்தக் கூண்டில் இருக்கிற ராகினியும், பத்மினியும் சீட்டு எடுத்துக் குடுத்தே பழக்கப்பட்டது. தொறந்து வெளியே பறக்கவிட்டாலும் என்கிட்டேயே வந்துரும்! அதுங்கமாதிரிதான் நானும். எனக்கு வேற வேலை தெரியாது! அப்பாவுக்கு குடுத்த சத்தியத்தை மீற முடியாதுங்க ஐயா... வேற வேலைக்கு போவப்புடாது. இது பரம்பரைத் தொழில் ஸாமி. விட்ற முடியுமா?!”

ஆமோதிப்பது மாதிரி கிளிகள் கீ...கீ...என்று கத்தின!

பல வருஷங்களுக்கு முன்னால் கவிஞர் நா. விச்வநாதன் எனக்காகவே எழுதிய ஜோசியக்கிளி கவிதை நினைவுக்கு வருகிறது.

‘நடைபாதைக் கிளிகளிடம்/ சேதி கேட்டு நிற்கும் சோகத்தில்/ முனகல் வாய்ப்பாடு/ மறந்து போகாது கோபாலா!/ திறந்து விடு கூண்டை/ அவை பறந்து போகும் உனக்கான/ சேதிகளைச் சொல்லிவிட்டு!’

“இதற்கு அர்த்தமென்ன?” என்று கேட்டேன். “அட போடா, ஆபீஸ் குமாஸ்தா!” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி போய்விட்டான். தெருவில் தான் கண்ட சாதாரண மனித ஜீவன்களைப் பார்த்து வசன கவிதைச் சித்திரத்தை தீட்டுவான் பாரதி.

‘பாம்புப்பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா? இது சக்தியின் லீலை பொருந்தாத பொருள்களை பொருந்தவைத்து அதிலே இசை உண்டாக்குதல்! தொம்பைப்பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றன. ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான். இவை எல்லா உயிரிலும் சக்தி விளையாடுகிறது.’

குடுகுடுப்பைக்காரர் பாடிக்கொண்டு போவதை புதிய கோணாங்கி என்ற பாடலாக வடித்துவிடுவான் பாரதி.

தெருவில்தான் எத்தனைவிதமான பிச்சைக்காரர்கள்! அன்னக்காவடி, ராப்பிச்சைக்காரர்! ஒருநாள் பாரதி தன் வீட்டு மொட்டை மாடியிலே உலாவுகிறான். இரவு வேளை தெருவிலே ராப்பிச்சை எடுக்கும் பெண்ணொருத்தி பாடிக்கொண்டு போகிறாள். ‘மாயக்காரன் அம்மா - கண்ணன்/ மோசக்காரன் அம்மா.’ மனசுக்குள் பாஞ்சாலி சபதம் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்த பாரதிக்கு ராப்பிச்சைக்காரியிடம் ராகம் கிடைத்து விடுகிறது. பாடல் வரியொன்று பீறிட்டுக் கிளம்புகிறது.

‘காய் உருட்டலானார் - சூது/ களி தொடங்கலானார்/ மாயமுள்ள சகுனி - பின்னும்/ வார்த்தை சொல்லுகின்றான்…’

பாடி முடித்த பாரதி செல்லம்மாளைக் கூப்பிட்டு ராப்பிச்சைக்காரப் பெண்ணின் வயிறு நிறைய சாப்பாடுபோட்டு அனுப்பிவைக் கிறான்!

அம்மி கொத்துகிறவர், ஈயம் பூசுகிறவர், குடை ரிப்பேர்காரர், சாணை பிடிக்கிறவர் - இவர்களுக்கெல்லாம் தொழிலுக்கேற்ற பிரத்யேக குரல் தொனிகள் இருக்கின்றன. குச்சி ஐஸ் விற்கிறவர், பலூன்விற்கிறவர், ஜவ்வுமிட்டாய்க்காரர் (மீந்த ஜவ்வில் வாட்சும் மோதிரமுமாய் கட்டிவிடுவதை மறக்க முடியுமா?).

கூடை நிறைய வெள்ளை முறுக்கு விற்றுக்கொண்டு வரும் பாட்டி... அதன் பாம்படம் தொங்கும் பெரிய காதுகள்...முறுக்குத்தான் என்ன ருசி! ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க தெருவில் உடம்பில் சாட்டையால் சுளீர் சுளீர் என்று அடித்துக்கொண்டு கையிலும் வயிற்றிலும் வரிவரியாய் ரத்தக் கோடுகளுடன் வந்து காசு கேட்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? நம் கண்களில் ரத்தம் வரும்! ஒரு நாள் தாங்க முடியாமல் கேட்டேவிட்டேன்.

“ஏய்! நிறுத்துப்பா! காசு கொடுத்துவிடுகிறேன்! வயிற்றில் இப்படி ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக்கொள்கிறாயே ஏன்?” புகையிலை காவி ஏறிய தொங்கு மீசை துடிக்க அந்த மனிதர் சொன்னார்:

“வயித்துக்குத்தான் ஸாமி!”

தஞ்சாவூர்க்கவிராயர். தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
'உங்கள் மகன், மகளிடம் மனம் விட்டு எப்போது பேசினீர்கள்?'- மாணவர்களின் தற்கொலையை சாகடிப்போம்

Published : 09 Dec 2017 14:26 IST

வி.ராம்ஜி
 


ஒரு வீடு, குழந்தைகளைக் கொண்டுதான் இயங்குகிறது. குழந்தைகளே நம் உலகமாகிப் போகிறார்கள். குழந்தைகளின் சந்தோஷமே, நம் குதூகலம் என்றாகிவிடுகிறது. குழந்தைகள்தான் நம் சொத்துகள். சொத்துகளைச் சேர்க்க வேண்டும் என்பதும் குழந்தைகளுக்காகத்தான்!

ஆனால் கண்களை விற்று ஓவியம் வாங்கிக் கொண்டிருக்கிறோம். கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு மிகப்பெரிய விபத்துக்குப் பிறகு, கொட்டாவி விட்டு, விழித்துக்கொள்ளும் அரசாங்கத்தைப் போல், நாமும் மெத்தனம் காட்டுகிறோம்.

சமீபகாலங்களில், மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதை வெறும் சம்பவங்களாகக் கடந்துபோக முடிவதில்லை. இது ஒட்டுமொத்த மாணவர்களின் மனோநிலை. இந்த மனசை நிலைப்படுத்துகிற வித்தையை, திடப்படுத்துகிற மென்சொல்லை, எந்த மென்பொருள்களும் கொடுத்துவிடாது. அது நம்மில் இருந்துதான் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். இங்கே நாம் என்பது... பெற்றோரைச் சொல்கிறேன். மற்றோரையும் துணைக்கு வைத்துக் கொள்வோம். ஆனால் பெற்றோரில் இருந்துதான் மாணவர்களாகிய பிள்ளைகளைக் காக்கும் பொறுப்பைத் தொடங்கவேண்டும்.

செல்போனே தாத்தா, சேனல்களே பாட்டி என்று வளருகின்றனர் நம் குழந்தைகள். அவர்களிடம் பேச நமக்கு நேரமில்லை என்கிறோம். அவர்கள் பேசுவதையும் கேட்பதில்லை நாம். என்ன செய்வது... டி.வி. பார்ப்பதற்கு, முகநூலில் நுழைந்து தன்னையே மறப்பதற்கு, இணையதளத்தில் மூழ்கிக் காணாமல் போவதற்கு ஒதுக்குவது போல், நேரத்தை நம் குழந்தைகளுடன் ஒதுக்குவோம். அதற்கென நேரம் ஒதுக்குவோம். இங்கே... காலம் பொன் போன்றது என்பதையும் குழந்தைகள் பொன்னைவிட உயர்ந்தவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

’ஒருமணி நேரம் டி.வி.யை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால். நல்லது. கைகொடுங்கள். உலகின் அதிசயக்கத்தக்க மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

வீட்டில், உங்களுக்கும் உங்கள் செல்போனுக்கும் இடையே பத்துஇருபது மீட்டர் இடைவெளியாவது இருக்குமா. ரொம்ப ரொம்ப நல்லது. இன்னும் வியக்கத்தக்க மனிதர் நீங்கள். உங்கள் மகனிடம் அல்லது மகளிடம் பேசக் கிடைக்கிற இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். அவர்கள் முகத்தில் ஒளி படர்வதையும் மனதில் அழுந்திக் கிடந்த ஏதோவொன்று எங்கோ போய்விட்டதையும் அவர்கள் மட்டும் அல்ல... நாமே கூட உணரமுடியும்.

இனிய பெற்றோர்களே... அன்பு நண்பர்களே... உங்கள் குழந்தைகளை, அதாவது டீன் பருவத்துப் பிள்ளைகளை பக்குவமாய் பழகி, நாலாவிதங்களையும் நாட்டுநடப்புகளையும் சொல்லிப் புரியவைத்தலே தந்தையின் லட்சணம் என்பதை முதலில் உணருங்கள். கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பதோ, கேட்காத ஆனால் விரும்பிய பொருளை வாங்கித் தருவதோ பிள்ளை வளர்ப்பின் பாசநேச, பிரிய அன்புக்கானவை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இங்கேதான் நாமும் சறுக்கி, நம் குழந்தைகளையும் சறுக்கச் செய்கிறோம்.

மனநல ஆலோசகர்கள் பலரிடம் பேசினேன்.

சின்னச் சின்ன டிப்ஸ்... உங்களுக்காக!

1. வெற்றி பெற்றவர்களின் கதைகளைச் சொல்லுங்கள். தப்பே இல்லை. அதுதான் தன்முனைப்புடன் அவர்களை வெற்றிச் சிந்தனைக்குக் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

2. அதேசமயம், தோல்வி அடைந்தவர்களைச் சொல்லுங்கள். ஏனென்றால், தோற்றுப்போனவர்களின் வலிகளும் வேதனைகளும்தான் இன்னும் இன்னுமான பாடங்கள்; வாழ்க்கைக்கான வேதங்கள்!

3. ‘கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு’ என்றொரு பழமொழி உண்டு. ஆகவே, கஷ்டப்பட்டுப் படித்தால்தான், கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான், கஷ்டப்பட்டு திறமையுடன் இருந்தால்தான், கஷ்டப்பட்டு வளர்ந்தால்தான், கஷ்டப்படாமல் பின்னாளில் வாழமுடியும் என்பதை உணர்த்துங்கள்.

4. ‘மனம்விட்டுப் பேசினேன்’ என்பதே இப்போது இல்லை. எவரிடமும் நாம் மனம்விட்டுப் பேசுவதே இல்லை. இது தருகிற இறுக்கம், மிகக்கொடியது. மனதை நொய்மைப்படுத்திவிடும். மகனிடமும் மகளிடமும் உள்ள இறுக்கம் தளர்த்துங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். ஒருகட்டத்தில்... காது மட்டும் கொடுங்கள். அவர்கள் பேசுவார்கள். கேளுங்கள்.

5. வீட்டில் விஷமம் செய்யும் குழந்தைகளிடம் ‘இரு இரு... உங்க மிஸ்கிட்ட வந்து சொல்றேன்’ என்கிறோம். பள்ளியில் ஏதேனும் குறும்பு செய்தால், ‘இரு இரு... உங்க அப்பாஅம்மாவை வரச்சொல்லி, ஒருநாள் சொல்றேன் பாரு’ என்கிறார்கள் ஆசிரியர்கள். ‘விசையுறு பந்தினைப் போல்’ உடலையும் மனதையும் வளர்க்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். பந்து மாதிரி உதைத்துக் கொண்டே இருந்தால் என்னாவார்கள்?

6. நாம் நடப்பதிலும் பேசுவதிலும்தான் நம் குழந்தைகளின் தெளிவு இருக்கிறது. நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள். முக்கியமாக, ஆசிரியர்கள் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசினால், அவர்களுக்குள் ஆசிரியர் குறித்த மரியாதை மட்டும் அல்ல... உங்களைப் பற்றிய மரியாதையும் கூட போய்விடும். ஜாக்கிரதை.

7. அதிக மார்க் என்பதே இலக்காகிப் போனதுதான், இந்தக் கல்வித் தொழிலின் மூலதனம். மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். அவ்வளவு ஏன்... படிப்புக்கும் வாழ்க்கைக்கும் கூட சம்பந்தமில்லாமல், ஜெயித்தவர்கள் பலர் உண்டு என எடுத்துச் சொல்லுங்கள்.

8. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன், ஆறாம் வகுப்பு படிக்கிறான். மாதாந்திரப் பரிட்சையில், நூத்துக்கு 94 மார்க் எடுத்திருந்தான். ஆனால் அவனை வீட்டு வாசலிலேயே இரண்டுமணி நேரம் நிற்கவைத்துவிட்டார் அவனுடைய அம்மா. ‘என்னங்க இது... தொந்நூத்தி நாலு மார்க் எடுத்திருக்கான். அவனைப் போய் இப்படி பண்றீங்களே..’ என்று கேட்டேன். ‘இப்ப படிப்புல நாட்டம் குறைஞ்சிருச்சு சார். போன தடவை தொந்நூத்தி ஆறு எடுத்திருந்தான். இப்ப 98 எடுக்கறதா ப்ராமிஸ் பண்ணிருந்தான். அதான் இவனுக்கு இந்தத் தண்டனை’ என்றார் சற்றும் குற்ற உணர்ச்சியே இல்லாமல்! இதுபோன்ற தவறை தயவுசெய்து செய்துவிடாதீர்கள்.

நாம் எடுத்த மதிப்பெண்களையும் நாம் செய்த குறும்புகளையும் மனசாட்சியைத் தொட்டு நினைவுப்படுத்திக் கொண்டால், ‘இதெல்லாம் சப்பை மேட்டர் நமக்கு’ என்பது நமக்கே புரியும்.

9. பள்ளியின் சூழல் அறிந்துவைத்திருக்கிறோமா. ஆசிரியர்களின் மனோநிலையைத் தெரிந்து கொண்டிருக்கிறோமா. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன், பஸ் டிரைவர்களின் பெயரோ, அவரின் வீடோ, அவரின் குடும்பச் சூழலோ தெரியுமா நமக்கு. தெரிந்து கொள்ளுங்கள். அதை குழந்தைகளிடம் பேசப் பேச தெளிவு கிடைக்கும். முக்கியமாக... உங்களுக்கும்!

10. முன்பெல்லாம் நம்மை அடி வெளுத்தெடுப்பார்கள் அப்பாவோ அம்மாவோ! விசிறி மட்டையால் விளாசித் தள்ளிவிடுவார்கள். பெற்றோரிடம் அடிவாங்கியதைச் சொல்ல, ஐம்பது கதைகள், அழகிய திரைக்கதையுடன் ஜோராக இருக்கும். ஆனால் அத்தனை அடியையும் திட்டுகளையும் வாங்கி வளர்ந்து இன்றைக்கு ஜெயித்திருக்கிறவர்கள்தான் நாம். ஆனால் நம் குழந்தைகளிடம் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக, கொஞ்சம் சுள்ளென்று ஒரேயொரு வார்த்தை சொன்னாலே நொறுங்கிப் போய்விடுகிறார்களே... உணர்ந்திருக்கிறீர்களா? அடித்துவிட்டது போல், அடித்து உதைத்து வெளுத்தெடுத்தது போல், கரகரவென கண்ணீர்விட்டு, அரைமணி நேர சீரியலைக் கடந்தும் அழுதுகொண்டே இருப்பதை என்றைக்காவது யோசித்தது உண்டா?

இதற்கு முக்கியக் காரணம்... நாம் அவர்களிடம் எப்போதாவது பேசுகிறோம். அப்படி எப்போதாவது பேசுகிறது திட்டுவதை, அந்த ஒரெயொரு சொல்லை, அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஆக, தவறு அந்த ஒரேயொரு சொல்லில் அல்ல. ஒரேயொரு சொல்லை மட்டுமே அவர்களுடன் எப்போதாவது பேசுவதுதான் இங்கே சிக்கல்!

11. அதனால்தான், ஆசிரியர்கள் திட்டினால் தாங்கமுடியவில்லை. வீட்டில் திட்டினால் ஏற்கமுடியவில்லை. பொசுக்கென உடைந்துவிடுகிறார்கள். வீட்டைவிட்டு, பள்ளியைப் புறக்கணித்து, எங்கோ செல்கிறார்கள். காணாது போகிறார்கள். சிலர், இன்னும் நொந்துபோய், தற்கொலை முடிவுக்கும் ஆளாகிறார்கள்.

முதலில் நம் வீட்டில் இருந்துதான் சிக்கல்களையும் சிடுக்குகளையும் களைந்தெடுக்க வேண்டும். ‘டீச்சர் சரியில்லை சார். எப்பப் பாத்தாலும் சிடுசிடுன்னு இருக்காங்க’ என்று சொல்வதெல்லாம் எஸ்கேபிஸம். தப்பிக்க வேண்டாம். பழியைப் பிறர் மீது போட வேண்டிய அவசியமில்லை. இவற்றையும் குழந்தைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘இந்த உலகமே நம்மள எதிர்த்தாலும், நமக்கு அப்பாவும் அம்மாவும் மிகப்பெரிய துணை’ என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களே செய்த தவறை, அவர்களே சொல்லும் அளவுக்கு, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான தொடர்பு இருக்கட்டும். தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவதுதான் இங்கே பிரச்னை வேர்பிடிக்கக் காரணம்!

வேர் விட்டு வளர வேண்டிய விதைகள் நம் குழந்தைகள். கண்ணீர் விட்டு வளர்த்து, ஆளாக்குகிற முனைப்பெல்லாம் சரிதான். அந்த விதைக்கு உரமிடுங்கள். உரமூட்டுங்கள். வலிமையுள்ளதே எஞ்சும்! வலிமைமிக்கவர்களாக குழந்தைகளை உருவாக்குவதும் ஒருவகையில்... அறம் என உணருங்கள்; உணர்வோம்.
சரக்கு ரயிலுக்கு முக்கியத்துவம் : பயணியர் கடும் அதிருப்தி

Added : டிச 11, 2017 00:37

சரக்கு ரயிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், காரைக்கால் - திருச்சி பயணியர் ரயில், தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் குறை கூறுகின்றனர்.

காரைக்கால், நாகூர், நாகை, திருவாரூர் ஆகிய நகரங்களில் இருந்து, கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் கோவைக்கு, தொழில் ரீதியாகவும், வேலைக்காகவும், தினமும் அதிகம் பேர் செல்கின்றனர். இவர்கள், காரைக்காலில் இருந்து, திருச்சிக்கு இயக்கப்படும் பயணியர் ரயிலில், தஞ்சாவூர் சென்று, அங்கிருந்து, கோவை செல்லும், ஜன சதாப்தி ரயிலில் பயணம் செய்வது வழக்கம். காரைக்கால் - தஞ்சாவூர் பாசஞ்சர் ரயில், காரைக்காலில், நண்பகல், 12:30 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு, மாலை, 3:35 மணிக்கு சென்றடைகிறது. 


மயிலாடுதுறையில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், தஞ்சையில், இருந்து, 3:45 மணிக்கு புறப்படுகிறது. பயணியர் ரயில், 10 நிமிடம் முன்னதாக, தஞ்சாவூர் நிலையம் செல்வதால், இப்பயணியர், கோவை ரயிலை பிடித்து, பயணம் செய்ய வசதியாக உள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, தஞ்சாவூருக்கு வழியாக, சரக்கு ரயில் போக்குவரத்து அதிகம் உள்ளது. வருவாய்கருதி, சரக்கு ரயில்களை தாமதமின்றி இயக்கு ரயில்வே நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறது. இதனால், காரைக்கால் - திருச்சி பயணியர் ரயில், நாகை ரயில் நிலையத்தில், பல நாட்களில், 30 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. தஞ்சாவூருக்கு தாமதமாக செல்வதால், ஜன சதாப்தி ரயிலை பிடிக்க முடியாமல், பயணியர் தவிக்கும் நிலை தொடர்கிறது. 'பயணியர் ரயிலை தாமதமின்றி இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், ரயில் மறியல் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்' என, பயணியர் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -

NEWS TODAY 26.01.2026