Tuesday, December 12, 2017

முகவரி தேடும் முகங்கள் 1

: நம்பிக்கைதான் பிசினஸ்...வாழ்க்கை...மனித குணம்... எல்லாமே!- நெகிழும் 'அனுஷ்கா' முருகன்

Published : 09 Dec 2017 20:16 IST
 

ஒட்டுநர் முருகன் | படம்: எல்.சீனிவாசன்

’எப்பவுமே நாம நாலுபேர்கிட்ட நல்லபேரெடுக்கணும். அது ரொம்ப முக்கியம். அப்படி நல்ல பேர் எடுக்கறதுக்கு, நம்ம வண்டிதான் முதல்ல நல்ல பேரைச் சம்பாதிச்சாகணும்’’என்று சிரித்துக் கொண்டே சொல்கிற டிரைவர் முருகன் இந்த வாரமும் தொடர்கிறார்.

‘’பாண்டிச்சேரில ஒரு சோப் விளம்பரம் ஷூட்டிங். அதுக்காக சென்னைக்கு மும்பைலேருந்து வந்திருந்தவங்களை பிக் அப் பண்றதுக்காகப் போய் நின்னேன். வண்டில ஏத்திட்டுப் போனேன். அவங்க எனக்குப் புரியணுங்கறதுக்காக ஒருவித இங்கிலீஷ்ல பேச... நான் புரிஞ்சுக்கிட்டு நம்ம பட்லர் இங்கிலீஷ்ல பேச... ஏனோ தெரியல... என்னை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அவங்களுக்கு!

பாண்டிச்சேரில இறங்கும்போது அங்கே பின்சீட்ல இருந்த பேக்ல 500 ரூபாயைச் சொருகி வைச்சிருந்தார். அப்புறம் ஷூட்லாம் முடிஞ்சு, பாண்டிச்சேரி ஹோட்டல்ல விடும்போதும் 500 ரூபாயைச் சொருகினார். அடுத்த நாள் சென்னைப் பயணம். அப்படி இப்படின்னு ரெண்டாயிரம் ரூபாயை தனியா கவர்ல வைச்சுக் கொடுத்தாங்க. என்ன நினைச்சாங்களோ... மொத்தப் பணத்தையும் எடுத்து, டேஷ்போர்டுல வைச்சு, ‘எடுத்துக்கோங்க’ன்னு சொன்னார். வேணாம்னேன். ‘உங்க அன்புக்கு சின்னப்பரிசு. வீட்ல எதுனா வாங்கிக் கொடுங்க’ன்னு சொன்னாங்க.

பணத்துக்கு ஆசைப்படவே கூடாதுங்க. நம்ம வேலையை சரியாச் செஞ்சா, அதுவே நமக்கு எல்லாத்தையும் கொடுக்கும்’’ என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் முருகன்.

’’நடிகர் முரளி சார் படம் அது. கேமிராலாம் ஏத்திக்கிட்டுப் போய் இதே பாண்டிச்சேரில இறக்கிட்டேன். நைட் ஷூட் முடிஞ்சதும் இன்னொரு கேமிரா வேணும்னாங்க. சட்டுன்னு வண்டி எடுத்துக்கிட்டு, சென்னைக்கு வந்து, கேமிராவை ஏத்திக்கிட்டு பாண்டிச்சேரி போயிட்டிருக்கேன். மரக்காணம் தாண்டும்போது, கண்ணு ரெண்டும் தூக்கத்துல அசந்துருச்சு. அப்படியே மயங்கிட்டேன் போல. எந்திரிச்சுப் பாத்தா... வயலுக்குள்ளே நிக்கிது காரு. ரேடியேட்டர், எஞ்சின்லாம் மொத்தமா கண்டமாயிருச்சு. வண்டில வந்த கேமிராமேன் அஸிஸ்டெண்ட், என்னை கண்டபடி திட்டிக்கிட்டே வர்றாரு. திட்டத்தானே செய்வாங்க. பாண்டிச்சேரிலேருந்து கார் வந்துச்சு. கேமிராவை ஏத்திட்டுப் போனாங்க. அதுல கொஞ்சம் காருக்கு செம செலவாகிப் போச்சு.

முன்னாடி ஒருநாள்... என் நண்பர் என்னைக் கூட்டிட்டுப் போய் ஒரு இடத்துல விட்டாரு. அது... சூப்பர்குட் பிலிம்ஸ் கம்பெனி ஆபீஸ். கிட்டத்தட்ட பல டைரக்டர்களுக்கும் , கேமிராமேன்களுக்கும் நடிகர்களுக்கும் அது கோயில் மாதிரி! ஜீவா சார்கிட்ட இருக்கிற 4300 நம்பர் கொண்ட ஹோண்டா சிட்டியோட முதல் டிரைவர் நான்தான்.

'சிவா மனசுல சக்தி', 'தெனாவட்டு', 'கற்றது தமிழ்', 'ராமேஸ்வரம்' உள்ளிட்ட 8 படங்களுக்கு ஜீவா சாரோடு பணிபுரிந்தேன். அப்போது தமிழ் திரையுலகில் அனைவருக்குமே 'ஜீவா' முருகன் என்றால் தான் தெரியும். சின்ன சின்ன மனஸ்தாபம். வெளியே வந்துட்டேன். ஆனா ஜீவா சார் அப்படியொரு நல்ல மனிதர்.


தனது இன்னொவா காருடன் முருகன் | படம்: எல்.சீனிவாசன்

அப்புறம், தயாரிப்பாளர் ராஜாராம் சாரிடம் வேலை பாத்தேன். அங்கேதான் பல தயாரிப்பாளர்களோட நட்பு கிடைச்சுச்சு. ஆனா குடும்பச் சூழல்... அங்கிருந்தும் வெளியே வந்தேன். அப்புறம் 'குருவி' படத்துக்காக சுமன் சாருக்கு வண்டி ஓட்டினேன். அப்பதான் இன்னோவா கார் எல்லாருக்குமே பிடிக்குதே. எப்படியாவது வாங்கிடணும்னு ஆசைப்பட்டேன். வாங்கினேன். இப்போ... காருக்கும் மரியாதை கூடியிருக்கு. கார் ஓட்ற நமக்கும் கவுரவமா இருக்கு’’ என்று ரைமிங் கலந்து பேசுகிறார் முருகன்.

’’ 'சிங்கம் 1' மற்றும் 'சிங்கம் 2' இரண்டு படத்துக்கும் வண்டி ஓட்டும் போது சூர்யா சார் பழக்கம். நான் பெரிய ஹீரோன்னே நினைக்காதவர். பந்தாவே இல்லாதவர். அண்ணன் சூர்யா யதார்த்தம்னா, தம்பி கார்த்தி சார் அன்பாளர். எப்பப் பாத்தாலும் ‘என்னப்பா நல்லாருக்கியா. வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்கதானே...’ என்று விசாரிப்பார்.

சமீபத்துல கூட சூர்யா சாரை, 'தானா சேர்ந்த கூட்டம்' ஷூட்டிங்ல பாத்தேன். ‘என்ன சார் வேலை தந்து ரொம்ப நாளாச்சே’ன்னு சொன்னேன். ‘முருகனோட தேதி கிடைக்கறதுதான் கஷ்டமாம்ல’ன்னு சொல்லிக் கலாய்ச்சு சிரிச்சார் என்று சொல்லிவிட்டு, சிரிக்கிறார் முருகன்.

நடிகர் சங்கத் தேர்தல் சமயத்துல வண்டி கேட்டிருந்தாங்க. அடுத்த மாநிலங்கள்லேருந்து வர்ற நடிகர்களைக் கூட்டிட்டு வரணும். விஷால் சார் அணிக்காக ஓட்டினேன். ரொம்ப மரியாதையா நடத்தினாங்க நாசர் சாரும் விஷால் சாரும்!

வெளிமாநிலங்களிலிருந்து வரும் நடிகர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைத்து, மறுபடியும் கொண்டு போய்விட வேண்டும். அதே போல் விஷால் அணிக்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு ஓட்டினேன்.

அனுஷ்கா மேடம் சென்னைக்கு வர்றார்னா, இங்கே எல்லா ஏற்பாடுகளையும் பர்பெக்ட்டா பண்ணி வைச்சிருப்பேன்னு அவங்களுக்குத் தெரியும். இப்படித்தான் 'சிங்கம்' ஷூட்டிங், தூத்துக்குடில! ரிங் ரோடு வழியா மதுரைக்கு வர்றோம். அப்போ செம மழை. ரோடே தெரியல. பள்ளம் மேடு எதுன்னே புரியல. அப்போ கார்ல, அனுஷ்கா மேடமும் இன்னொரு நடிகரோட பேர் தெரியல. அவங்க ரெண்டுபேரையும் ஏத்திக்கிட்டு வரேன். அந்த நடிகர் கொஞ்சம் பயந்துதான் போயிட்டார் மழையப் பாத்து! ஆனா அனுஷ்கா மேடம்... ‘கவலையே படாதீங்க. முருகன் நம்மளை ஜாக்கிரதையாக் கொண்டு போய் விட்டுருவாரு’ன்னு சொன்னாங்க!

நம்பிக்கை வரணும் சார் நம்ம மேல! அந்த நம்பிக்கை வரும்படி, நாம நடந்துக்கணும். அதான் பிசினஸ்... அதான் வாழ்க்கை... அதான் மனித குணம்... அவ்ளோதான். இதெல்லாம் இருந்துட்டா, வண்டி ஸ்மூத்தாப் போயிட்டே இருக்கும். நான் வண்டின்னு சொன்னது வாழ்க்கையை பாஸூ’’ உற்சாகமும் உத்வேகமுமாகச் சிரிக்கிறார் டிரைவர் முருகன்.

தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in
முதலில் படிப்பை முடியுங்கள் பிறகு போராட்டத்தில் பங்கேற்கலாம்: மாணவர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை

Published : 11 Dec 2017 21:05 IST



சென்னை மாணவர்கள் முதலில் தங்கள் படிப்பை முடிக்க வேண்டும். தங்களது படிப்பை முடித்த பிறகு போராட்டங்களில் கலந்துகொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நெடுவாசல் போராட்டதை ஆதரித்து போராட அழைப்பு விடுத்தது மற்றும் துண்டு பிரசுரம் விநியோகித்தாக சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மாணவி வளர்மதி ஜூலை 13ல் கைதானார். பின்னர் அவரை ஜூலை 17-ல் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு சிறையில் அடைத்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து வளர்மதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து வளர்மதி விடுதலையானார்.

சிறையில் இருந்த காலத்தில் விடுப்பு காலமாக இருந்ததால், தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பின்னர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தேர்விற்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வருகைப் பதிவு குறைவாக இருந்ததால், தேர்வு முடிவுகளை வழங்க சேலம் பெரியார் பல்கலைக்கழக மறுத்ததை எதிர்த்து வளர்மதி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் வந்திருந்த வளர்மதியிடம் நீதிபதி கிருபாகரன் பல அறிவுரைகளை வழங்கினார்.வளர்மதி சில இயக்கங்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும், படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், படிப்பை முடித்த பிறகு இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்று அறிவுரை கூறினார். பின்னர் வளர்மதிக்கு தேர்வு முடிவுகளை வழங்க சாத்தியம் உள்ளதா என்பது குறித்து டிசம்பர் 13-ம் தேதி தெரிவிக்க வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி உத்தரவிடட்டார்
திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு! 

Posted By: Mayura Akilan Updated: Monday, December 11, 2017, 15:35 [IST] Subscribe to Oneindia Tamil

 திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!- வீடியோ

சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் வில்லியாக நடிக்கும் லேகாவிற்கு திருக்குறள் என்றால் என்ன என்று தெரியவில்லை. அதை விட அவர்... யு டெல் மீ... முதல்ல எனக்கு மீனிங் சொல்லுங்க என்று கேட்கிறார். அதற்கு தொகுப்பாளர் ஆதவன் கொடுத்த விளக்கம் அதை விட கொடுமை. பத்தாண்டுகளுக்கு முன் வெளியான ஒரு தமிழ் படத்தில் டிவி தொகுப்பாளினிகளை கிண்டல் செய்திருப்பார் நடிகர் விவேக். அதேபோலத்தான் இப்போது சீரியல் நடிகைகளின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துள்ளது

. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் சீரியல் நடிகைகளின் பேச்சும், செயல்பாடுகளும் தமிழ் மொழியையும், தமிழ் அறிஞர்களையும் கேவலப்படுத்துவது போலவே அமைந்துள்ளது. சன்டிவி சீரியல் குடும்பம் சன்டிவி சீரியல் குடும்பம் சன்டிவியில் ஞாயிறு தோறும் சவாலே சமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். கடந்த 3ஆம் தேதி ஒளிபரப்பான சவாலே சமாளி நிகழ்ச்சியில் சந்திரலேகா சீரியல் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

 வில்லி லேகா வில்லி லேகா சந்திரலேகாவில் வில்லியாக நடிக்கும் லேகாவின் செயல்பாடுகள் கொடூரமானவை. தமிழ் பேச வராத நடிகை... தமிழே தெரியாத நடிகை என்பதால் டப்பிங்கில் சமாளித்து விடுகின்றனர். ஆனால் ரியாலிட்டி ஷோக்களில் அவர்களின் பேச்சை கேட்கும் போது அடேய்... ஏன் இந்த கொலைவெறி என்றாகிவிடுகிறது. அதென்ன தண்டனை அதென்ன தண்டனை சவாலே சமாளி நிகழ்ச்சியில் வந்தா மலை என்ற பகுதியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால் பாயிண்ட். அதே நேரத்தில் தவறாகி விட்டால் அந்த டீம் காரர்களின் கால்களில் உள்ள ரோமத்தை பறிக்கிறார்கள். என்ன போட்டியோ? என்ன தண்டனையோ? திருக்குறள் மீனிங் சொல்லுங்க திருக்குறளில் நான்கு பால்கள் இருக்கின்றன... சரியா? தவறா? என்று கேட்டார் தொகுப்பாளர் ஆதவன். அதற்கு நடிகை லேகாவும், சந்திராவும் திரு திரு என்று விழித்தனர். அப்புறம் லேகா கேட்டாரே ஒரு கேள்வி....

அடங்கப்பா!...திருக்குறலில்ன்னா என்ன? எனக்கு மீனிங் சொல்லணும் ( சத்தியமா நம்புங்க உச்சரிப்பு அப்படித்தான்) தமிழ்ல மீனிங் சொல்லுங்க. திருக்குறள் விளக்கம் திருக்குறளில்னா என்னா என்று கேட்டதற்காக... திருவள்ளுவர், திருக்குறள்.. கன்னியாகுமரி சிலை என்று விளக்கம் சொல்ல... ஓ... கண்ணம்மா... கண்ணம்மா என்று கேட்கிறார் லேகா... இது தவறு சொல்ல... எத்தனை பால் என்று ஆதவன் கேட்க... பால் பால்,தேன் பால் என்று சொல்கிறார் லேகா. அமலா பால் என்று முடிக்கிறார் ஆதவன்.

திருவள்ளுவரை மறக்கக் கூடாது திருவள்ளுவரை மறக்கக் கூடாது திருவள்ளுவரை பற்றியும், திருக்குறளை பற்றியும் கேவலப்படுத்தியற்காக சபரிக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. அதெல்லாம் சரி.. இதெல்லாம் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே மாற்றி சொல்வதா? அல்லது டிவி நடிகைகள் நிஜமாகவே தத்திகள்தான் என்று சொல்லாமல் சொல்கிறார்களா?

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/what-is-tamil-meaning-tirukkural-suntv-serial-actress-asks-anchor/articlecontent-pf280596-304660.html
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி.. விமானங்கள் ரத்து!

Posted By: Kalai Mathi
Updated: Tuesday, December 12, 2017, 8:19 [IST]
Subscribe to Oneindia Tamil

சென்னை: புறநகர் பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சென்னை வரும் 12 விமானங்கள் பனி மூட்டத்தால் திருப்பிவிடப்பட்டுள்ளன.


தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் மழை பெய்தது.


பின்னர் வடகிழக்குப் பருவமழை ஓய்வு எடுத்து வருகிறது. இதனிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் குளிர் நிலவி வருகின்றது. இந்நிலையில் இன்று கடுமையான பனிமூட்டம் நீடிக்கிறது.

சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.


பனி மூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விடிந்த பின்னரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றனர்.


கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
Regulator show-causes Palghar college charging max fees in state 

Yogita Rao | TNN | Dec 5, 2017, 03:58 IST

MUMBAI: The state college fee regulator has issued a show cause notice to Vedantaa Institute of Medical Sciences in Palghar for charging Rs 14 lakh as fees for a year as opposed to the Rs 6 lakh it has recommended.

The institute, which began classes this year, is the first in the state to register as a private limited company under the Companies Act, 2013, meaning it is for-profit. It is charging the highest fee among all the private colleges in the state.

In a meeting on December 2, the Fee Regulating Authority (FRA) resolved that the institution is unaided, private and is running a professional course and, therefore, is subject to its jurisdiction as per the provisions of the Maharashtra Private and Unaided Professional Educational Institutions (Regulation of Admission and Fees) Act, 2015. The minutes of the meeting mentioned that "the institution in blatant disregard for the ad hoc fees fixed by FRA, which is Rs 6 lakh per student, has been collecting Rs 14 lakh". Further, it mentions that the institution has declared the fees for NRI/institution quota at Rs 30 lakh, which is not permissible. The FRA has issued notice, asking why action should not be taken against the institution.

The FRA prescribes fees of private, professional colleges based on their balance sheets from the previous year. If a college proposes a higher fee that it believes is not justified, the authority has the powers to reduce it.

For new institutes, a blanket ad hoc fee of Rs 6 lakh was permitted this year. "As per the Act, only deemed colleges are exempted by the FRA," said an FRA official, adding that they would wait for the institute's reply before action.

Latest Commentkeep updated us about these as u get latest news.....Krushna Kawale

Vedantaa has admitted around 147 students this year, of which 23 are in the NRI quota. The institute's dean Ganesh Kesari refused to speak to TOI on the matter.

TOI had reported that the institute wrote to the government this June saying its fees do not require the FRA's nod as it is registered as a company. The state decided the fees of students admitted to the college under reserved categories will not be reimbursed by the government, as it does in case of other private colleges. It did not initiate any action, but the FRA has. A government official said FRA is a quasi-judicial body and can make independent decisions. "It is headed by a retired judge and is aware of its jurisdiction," said the official.
MCI asked not to act against 56 students 

Staff Reporter 
 
PUDUCHERRY, December 07, 2017 23:45 IST

Erroneously identified as students to be discharged: officials

The health department has requested the Medical Council of India to withdraw action initiated against 56 students admitted to Sri Venkateshwara Medical College Hospital and Research Centre.

In a release, the department said the MCI erroneously recommended discharging of 55 students under government quota and one admitted under management quota in the college.

“The department has taken up the matter with the MCI to withdraw the action in respect of 56 Centac-sponsored students and the college has been advised not to discharge these candidates until further order/communication from the MCI. It has appealed to these 56 students and their parents not to panic.

“They should not fall prey to any rumours that may be spread in this regard,” the release said.

In the case of the other 105 students admitted to Sri Manakula Vinayagar Medical College and Hospital, Sri Venkateshwara Medical College Hospital and Research Centre and Pondicherry Institute of Medical Sciences, the department directed the colleges to discharge the candidates as per the MCI direction.

The MCI had issued the direction after it found that the admissions had been done in violation of the Graduate Medical Education Regulations, 1997.

The council’s directive was based on its assessment that the names of 105 students furnished by the college did not match with the list submitted by the Centac to MCI.

The department had asked the colleges to remove the students from admission roll for 2017-18 and submit a compliance report.

The MCI recommendation had been communicated to the Registrar of Pondicherry University and the Registrar of Tamil Nadu State Medical Council for necessary action, the release added.
Read more at Education Medical Dialogues: GSVM Medical College suspends 6 MBBS students on ragging https://education.medicaldialogues.in/gsvm-medical-college-suspends-6-mbbs-students-on-ragging/

Doctors Approach SC For Declaring Practice Of PG Admission On ‘Permitted Seats’ As Unconstitutional | Live Law

Doctors Approach SC For Declaring Practice Of PG Admission On ‘Permitted Seats’ As Unconstitutional | Live Law: A group of doctors have petitioned the Supreme Court under Article 32 of the Constitution seeking to declare the classification of admission on ‘Recognized Seat’ and ‘MCI Permitted Seat’ in PG admissions as manifestly arbitrary and to declare the practice of admission on such a permitted seat as unconstitutional for being violative of Articles 14, …

NEWS TODAY 27.01.2026