Wednesday, December 13, 2017

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு: 6 பேருக்கு தூக்கு தண்டனை



உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு திருப்பூர் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.

டிசம்பர் 13, 2017, 05:45 AM
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 22). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யா(20) என்பவர் 2-ம் ஆண்டு படித்தார்.
ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்றபோது சங்கருக்கும், கவுசல்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 12-7-2015 அன்று சங்கரும், கவுசல்யாவும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கவுசல்யா கல்லூரிக்கு செல்லாமல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி சங்கரும், கவுசல்யாவும் உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தின் முன்பு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கூலிப்படை கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் கவுசல்யா வீடு திரும்பினார். இந்த சாதி ஆணவக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி (45), தாய் அன்னலட்சுமி (40), தாய் மாமா பாண்டித்துரை(49), கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன்(31), மணிகண்டன்(25), செல்வக்குமார்(25), கலை தமிழ்வாணன்(24), தன்ராஜ்(23), மதன் என்கிற மைக்கேல்(25), கல்லூரி மாணவரான பிரசன்னகுமார்(19), மணிகண்டன் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

உடுமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
பின்னர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் டிசம்பர் மாதம் 12-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கோவை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கவுசல்யாவின் தாய் மாமா பாண்டித்துரையை திருச்சி சிறையில் இருந்து அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் மதியம் 12 மணிக்கு சங்கர் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக சங்கரநாராயணன் தலைமையில் மேலும் 3 அரசு வக்கீல்கள் ஆஜரானார்கள். குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து வழக்கு குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேரிடமும் கேட்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டனர்.

ஆனால் இந்த வழக்குக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படக்கூடாது என்று அரசு வக்கீல் சங்கரநாராயணன் தனது தரப்பு வாதத்தை வைத்தார்.
ஆனால் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மேலும் ஒரு மகன் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

மதியம் 12.30 மணி வரை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து தண்டனை விவரம் 1.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்து ஒத்திவைத்தார். மீண்டும் மதியம் 1.30 மணிக்கு மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் ஒவ்வொருவருக்குமான தண்டனைகள் குறித்து அவர் தீர்ப்பு கூறினார்.

அதன்படி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையாக செயல்பட்ட ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

தன்ராஜூக்கு சாகும் வரை வெளியே வர முடியாத வகையில் ஆயுள் தண்டனை விதித்தும், கூலிப்படையினருக்கு அடைக்கலம் கொடுத்த பட்டி வீரன்பட்டியை சேர்ந்த மணிகண்டனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

மேலும் சின்னசாமிக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.1 லட்சம் அரசுக்கும், மீதம் உள்ள ரூ.2 லட்சத்தில் ரூ.1 லட்சத்தை கவுசல்யாவுக்கும், ரூ.1 லட்சத்தை சங்கரின் தந்தை வேலுசாமிக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும். அதுபோல் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதில் தலா ரூ.5 ஆயிரம் அரசுக்கும், தலா ரூ.1½ லட்சத்தை கவுசல்யாவுக்கும், வேலுசாமிக்கும் சரிபாதியாக இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய் மாமா பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரின் குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பை தொடர்ந்து 8 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
ஆளில்லாத தீவுகளில் தேடவேண்டும்





‘ஒகி’ புயல்பாதிப்பால் கரைக்கு திரும்பாத மீனவர்களெல்லாம் ஆள்இல்லாத தீவுகளில் ஒதுங்கியிருக்கலாம்.

டிசம்பர் 13 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் இருந்தாலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற ஒருசில மாவட்ட மீனவர்களுக்குத்தான் இலங்கை கடற்படையால் பிரச்சினை ஏற்படுகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு இந்த பிரச்சினைகள் கிடையாது. ஏனெனில், அவர்கள் ஒரேநாளில் கடலுக்குச்சென்று பாக்ஜலசந்தியில் மீன்பிடித்து திரும்புவதில்லை. ஆயிரம் கடல்மைல் தூரத்துக்குமேல் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். ஏறத்தாழ 50 நாட்கள்வரை இவர்கள் கடலுக்குள் இருப்பது வழக்கம். கடந்த மாதம் 29, 30–ந்தேதி வீசிய ‘ஒகி’ புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்றிருந்தார்கள். இப்போது அவர்களில் பலர் திரும்பிவிட்டாலும், இன்னும் 472 பேர் கரைக்கு திரும்பவில்லை என்று அரசு கூறுகிறது. அவர்களை இன்னும் சிறப்பு முயற்சி எடுத்து மீட்கவேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பல இடங்களில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சாலைமறியல், ரெயில்மறியல் போராட்டத்தையொட்டி, 17 கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் உள்பட 13 ஆயிரத்து 815 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளையெல்லாம் வாபஸ் பெறவேண்டும். மாநில கடல் எல்லை 12 கடல்மைல் தூரம்தான். இந்திய கடல்எல்லை 200 கடல்மைல் தூரம். அதற்குமேல் ஆயிரம் கடல்மைல் தூரமுள்ள சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குச் சென்றுதான் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பார்கள். ஆனால், இப்போது காணாமல்போன மீனவர்களை தேடும்பணி இந்திய எல்லைக்குள்தான் நடக்கிறது. சிறப்பு பொருளாதார கடல்பகுதியிலும், அதற்கு அப்பால் சர்வதேச கடல்பகுதியிலும் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை தேடும்பணி நடைபெறவில்லை. அங்கு ‘ஒகி’ புயல்பாதிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது, இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அந்த மீனவர்களெல்லாம் ஆள்இல்லாத தீவுகளில் ஒதுங்கியிருக்கலாம். மொராக்கா, மாலத்தீவு போன்ற பகுதிகளில்கூட ஒதுங்கியிருக்கலாம் என்று மீனவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். எனவே கடலோர காவல்படை கப்பல்களும், நமது ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் ஆயிரம் கடல்மைல் தூரம்வரை சென்று அங்கும், ஆள்இல்லாத தீவுகளிலும் தேடவேண்டும்.

பல மீனவர்கள் 25–ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பு வந்தால்போதும் என்ற உணர்வுடன் இன்னமும் தொலைத்தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அவர்களை உடனே கரைக்கு திரும்ப வேண்டுகோள் விடுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் அடிகளார் பேச்சை, கடற்படை ஒலிநாடாவில் பதிவுசெய்து அதை கடற்படை கப்பல்களிலிருந்தும், ஹெலிகாப்டர்களிலிருந்தும் வயர்லெஸ் மூலம் ஒலிபரப்பு செய்ய எடுத்துச்சென்றிருக்கிறார்கள். மீனவர்களின் வேண்டுகோள்படி, இந்த கப்பல்களும், விமானங்களும் ஆயிரம் கடல்மைல் தூரம்வரை சென்று, இந்த உரையை அதிக சத்தத்துடன் ஒலிபரப்புச்செய்து மீனவர்களை கரைக்கு திரும்ப செய்யவேண்டும்.

Tuesday, December 12, 2017

முகவரி தேடும் முகங்கள் 1

: நம்பிக்கைதான் பிசினஸ்...வாழ்க்கை...மனித குணம்... எல்லாமே!- நெகிழும் 'அனுஷ்கா' முருகன்

Published : 09 Dec 2017 20:16 IST
 

ஒட்டுநர் முருகன் | படம்: எல்.சீனிவாசன்

’எப்பவுமே நாம நாலுபேர்கிட்ட நல்லபேரெடுக்கணும். அது ரொம்ப முக்கியம். அப்படி நல்ல பேர் எடுக்கறதுக்கு, நம்ம வண்டிதான் முதல்ல நல்ல பேரைச் சம்பாதிச்சாகணும்’’என்று சிரித்துக் கொண்டே சொல்கிற டிரைவர் முருகன் இந்த வாரமும் தொடர்கிறார்.

‘’பாண்டிச்சேரில ஒரு சோப் விளம்பரம் ஷூட்டிங். அதுக்காக சென்னைக்கு மும்பைலேருந்து வந்திருந்தவங்களை பிக் அப் பண்றதுக்காகப் போய் நின்னேன். வண்டில ஏத்திட்டுப் போனேன். அவங்க எனக்குப் புரியணுங்கறதுக்காக ஒருவித இங்கிலீஷ்ல பேச... நான் புரிஞ்சுக்கிட்டு நம்ம பட்லர் இங்கிலீஷ்ல பேச... ஏனோ தெரியல... என்னை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அவங்களுக்கு!

பாண்டிச்சேரில இறங்கும்போது அங்கே பின்சீட்ல இருந்த பேக்ல 500 ரூபாயைச் சொருகி வைச்சிருந்தார். அப்புறம் ஷூட்லாம் முடிஞ்சு, பாண்டிச்சேரி ஹோட்டல்ல விடும்போதும் 500 ரூபாயைச் சொருகினார். அடுத்த நாள் சென்னைப் பயணம். அப்படி இப்படின்னு ரெண்டாயிரம் ரூபாயை தனியா கவர்ல வைச்சுக் கொடுத்தாங்க. என்ன நினைச்சாங்களோ... மொத்தப் பணத்தையும் எடுத்து, டேஷ்போர்டுல வைச்சு, ‘எடுத்துக்கோங்க’ன்னு சொன்னார். வேணாம்னேன். ‘உங்க அன்புக்கு சின்னப்பரிசு. வீட்ல எதுனா வாங்கிக் கொடுங்க’ன்னு சொன்னாங்க.

பணத்துக்கு ஆசைப்படவே கூடாதுங்க. நம்ம வேலையை சரியாச் செஞ்சா, அதுவே நமக்கு எல்லாத்தையும் கொடுக்கும்’’ என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் முருகன்.

’’நடிகர் முரளி சார் படம் அது. கேமிராலாம் ஏத்திக்கிட்டுப் போய் இதே பாண்டிச்சேரில இறக்கிட்டேன். நைட் ஷூட் முடிஞ்சதும் இன்னொரு கேமிரா வேணும்னாங்க. சட்டுன்னு வண்டி எடுத்துக்கிட்டு, சென்னைக்கு வந்து, கேமிராவை ஏத்திக்கிட்டு பாண்டிச்சேரி போயிட்டிருக்கேன். மரக்காணம் தாண்டும்போது, கண்ணு ரெண்டும் தூக்கத்துல அசந்துருச்சு. அப்படியே மயங்கிட்டேன் போல. எந்திரிச்சுப் பாத்தா... வயலுக்குள்ளே நிக்கிது காரு. ரேடியேட்டர், எஞ்சின்லாம் மொத்தமா கண்டமாயிருச்சு. வண்டில வந்த கேமிராமேன் அஸிஸ்டெண்ட், என்னை கண்டபடி திட்டிக்கிட்டே வர்றாரு. திட்டத்தானே செய்வாங்க. பாண்டிச்சேரிலேருந்து கார் வந்துச்சு. கேமிராவை ஏத்திட்டுப் போனாங்க. அதுல கொஞ்சம் காருக்கு செம செலவாகிப் போச்சு.

முன்னாடி ஒருநாள்... என் நண்பர் என்னைக் கூட்டிட்டுப் போய் ஒரு இடத்துல விட்டாரு. அது... சூப்பர்குட் பிலிம்ஸ் கம்பெனி ஆபீஸ். கிட்டத்தட்ட பல டைரக்டர்களுக்கும் , கேமிராமேன்களுக்கும் நடிகர்களுக்கும் அது கோயில் மாதிரி! ஜீவா சார்கிட்ட இருக்கிற 4300 நம்பர் கொண்ட ஹோண்டா சிட்டியோட முதல் டிரைவர் நான்தான்.

'சிவா மனசுல சக்தி', 'தெனாவட்டு', 'கற்றது தமிழ்', 'ராமேஸ்வரம்' உள்ளிட்ட 8 படங்களுக்கு ஜீவா சாரோடு பணிபுரிந்தேன். அப்போது தமிழ் திரையுலகில் அனைவருக்குமே 'ஜீவா' முருகன் என்றால் தான் தெரியும். சின்ன சின்ன மனஸ்தாபம். வெளியே வந்துட்டேன். ஆனா ஜீவா சார் அப்படியொரு நல்ல மனிதர்.


தனது இன்னொவா காருடன் முருகன் | படம்: எல்.சீனிவாசன்

அப்புறம், தயாரிப்பாளர் ராஜாராம் சாரிடம் வேலை பாத்தேன். அங்கேதான் பல தயாரிப்பாளர்களோட நட்பு கிடைச்சுச்சு. ஆனா குடும்பச் சூழல்... அங்கிருந்தும் வெளியே வந்தேன். அப்புறம் 'குருவி' படத்துக்காக சுமன் சாருக்கு வண்டி ஓட்டினேன். அப்பதான் இன்னோவா கார் எல்லாருக்குமே பிடிக்குதே. எப்படியாவது வாங்கிடணும்னு ஆசைப்பட்டேன். வாங்கினேன். இப்போ... காருக்கும் மரியாதை கூடியிருக்கு. கார் ஓட்ற நமக்கும் கவுரவமா இருக்கு’’ என்று ரைமிங் கலந்து பேசுகிறார் முருகன்.

’’ 'சிங்கம் 1' மற்றும் 'சிங்கம் 2' இரண்டு படத்துக்கும் வண்டி ஓட்டும் போது சூர்யா சார் பழக்கம். நான் பெரிய ஹீரோன்னே நினைக்காதவர். பந்தாவே இல்லாதவர். அண்ணன் சூர்யா யதார்த்தம்னா, தம்பி கார்த்தி சார் அன்பாளர். எப்பப் பாத்தாலும் ‘என்னப்பா நல்லாருக்கியா. வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்கதானே...’ என்று விசாரிப்பார்.

சமீபத்துல கூட சூர்யா சாரை, 'தானா சேர்ந்த கூட்டம்' ஷூட்டிங்ல பாத்தேன். ‘என்ன சார் வேலை தந்து ரொம்ப நாளாச்சே’ன்னு சொன்னேன். ‘முருகனோட தேதி கிடைக்கறதுதான் கஷ்டமாம்ல’ன்னு சொல்லிக் கலாய்ச்சு சிரிச்சார் என்று சொல்லிவிட்டு, சிரிக்கிறார் முருகன்.

நடிகர் சங்கத் தேர்தல் சமயத்துல வண்டி கேட்டிருந்தாங்க. அடுத்த மாநிலங்கள்லேருந்து வர்ற நடிகர்களைக் கூட்டிட்டு வரணும். விஷால் சார் அணிக்காக ஓட்டினேன். ரொம்ப மரியாதையா நடத்தினாங்க நாசர் சாரும் விஷால் சாரும்!

வெளிமாநிலங்களிலிருந்து வரும் நடிகர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைத்து, மறுபடியும் கொண்டு போய்விட வேண்டும். அதே போல் விஷால் அணிக்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு ஓட்டினேன்.

அனுஷ்கா மேடம் சென்னைக்கு வர்றார்னா, இங்கே எல்லா ஏற்பாடுகளையும் பர்பெக்ட்டா பண்ணி வைச்சிருப்பேன்னு அவங்களுக்குத் தெரியும். இப்படித்தான் 'சிங்கம்' ஷூட்டிங், தூத்துக்குடில! ரிங் ரோடு வழியா மதுரைக்கு வர்றோம். அப்போ செம மழை. ரோடே தெரியல. பள்ளம் மேடு எதுன்னே புரியல. அப்போ கார்ல, அனுஷ்கா மேடமும் இன்னொரு நடிகரோட பேர் தெரியல. அவங்க ரெண்டுபேரையும் ஏத்திக்கிட்டு வரேன். அந்த நடிகர் கொஞ்சம் பயந்துதான் போயிட்டார் மழையப் பாத்து! ஆனா அனுஷ்கா மேடம்... ‘கவலையே படாதீங்க. முருகன் நம்மளை ஜாக்கிரதையாக் கொண்டு போய் விட்டுருவாரு’ன்னு சொன்னாங்க!

நம்பிக்கை வரணும் சார் நம்ம மேல! அந்த நம்பிக்கை வரும்படி, நாம நடந்துக்கணும். அதான் பிசினஸ்... அதான் வாழ்க்கை... அதான் மனித குணம்... அவ்ளோதான். இதெல்லாம் இருந்துட்டா, வண்டி ஸ்மூத்தாப் போயிட்டே இருக்கும். நான் வண்டின்னு சொன்னது வாழ்க்கையை பாஸூ’’ உற்சாகமும் உத்வேகமுமாகச் சிரிக்கிறார் டிரைவர் முருகன்.

தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in
முதலில் படிப்பை முடியுங்கள் பிறகு போராட்டத்தில் பங்கேற்கலாம்: மாணவர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை

Published : 11 Dec 2017 21:05 IST



சென்னை மாணவர்கள் முதலில் தங்கள் படிப்பை முடிக்க வேண்டும். தங்களது படிப்பை முடித்த பிறகு போராட்டங்களில் கலந்துகொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நெடுவாசல் போராட்டதை ஆதரித்து போராட அழைப்பு விடுத்தது மற்றும் துண்டு பிரசுரம் விநியோகித்தாக சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மாணவி வளர்மதி ஜூலை 13ல் கைதானார். பின்னர் அவரை ஜூலை 17-ல் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு சிறையில் அடைத்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து வளர்மதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து வளர்மதி விடுதலையானார்.

சிறையில் இருந்த காலத்தில் விடுப்பு காலமாக இருந்ததால், தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பின்னர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தேர்விற்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வருகைப் பதிவு குறைவாக இருந்ததால், தேர்வு முடிவுகளை வழங்க சேலம் பெரியார் பல்கலைக்கழக மறுத்ததை எதிர்த்து வளர்மதி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் வந்திருந்த வளர்மதியிடம் நீதிபதி கிருபாகரன் பல அறிவுரைகளை வழங்கினார்.வளர்மதி சில இயக்கங்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும், படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், படிப்பை முடித்த பிறகு இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்று அறிவுரை கூறினார். பின்னர் வளர்மதிக்கு தேர்வு முடிவுகளை வழங்க சாத்தியம் உள்ளதா என்பது குறித்து டிசம்பர் 13-ம் தேதி தெரிவிக்க வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி உத்தரவிடட்டார்
திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு! 

Posted By: Mayura Akilan Updated: Monday, December 11, 2017, 15:35 [IST] Subscribe to Oneindia Tamil

 திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!- வீடியோ

சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் வில்லியாக நடிக்கும் லேகாவிற்கு திருக்குறள் என்றால் என்ன என்று தெரியவில்லை. அதை விட அவர்... யு டெல் மீ... முதல்ல எனக்கு மீனிங் சொல்லுங்க என்று கேட்கிறார். அதற்கு தொகுப்பாளர் ஆதவன் கொடுத்த விளக்கம் அதை விட கொடுமை. பத்தாண்டுகளுக்கு முன் வெளியான ஒரு தமிழ் படத்தில் டிவி தொகுப்பாளினிகளை கிண்டல் செய்திருப்பார் நடிகர் விவேக். அதேபோலத்தான் இப்போது சீரியல் நடிகைகளின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துள்ளது

. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் சீரியல் நடிகைகளின் பேச்சும், செயல்பாடுகளும் தமிழ் மொழியையும், தமிழ் அறிஞர்களையும் கேவலப்படுத்துவது போலவே அமைந்துள்ளது. சன்டிவி சீரியல் குடும்பம் சன்டிவி சீரியல் குடும்பம் சன்டிவியில் ஞாயிறு தோறும் சவாலே சமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். கடந்த 3ஆம் தேதி ஒளிபரப்பான சவாலே சமாளி நிகழ்ச்சியில் சந்திரலேகா சீரியல் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

 வில்லி லேகா வில்லி லேகா சந்திரலேகாவில் வில்லியாக நடிக்கும் லேகாவின் செயல்பாடுகள் கொடூரமானவை. தமிழ் பேச வராத நடிகை... தமிழே தெரியாத நடிகை என்பதால் டப்பிங்கில் சமாளித்து விடுகின்றனர். ஆனால் ரியாலிட்டி ஷோக்களில் அவர்களின் பேச்சை கேட்கும் போது அடேய்... ஏன் இந்த கொலைவெறி என்றாகிவிடுகிறது. அதென்ன தண்டனை அதென்ன தண்டனை சவாலே சமாளி நிகழ்ச்சியில் வந்தா மலை என்ற பகுதியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால் பாயிண்ட். அதே நேரத்தில் தவறாகி விட்டால் அந்த டீம் காரர்களின் கால்களில் உள்ள ரோமத்தை பறிக்கிறார்கள். என்ன போட்டியோ? என்ன தண்டனையோ? திருக்குறள் மீனிங் சொல்லுங்க திருக்குறளில் நான்கு பால்கள் இருக்கின்றன... சரியா? தவறா? என்று கேட்டார் தொகுப்பாளர் ஆதவன். அதற்கு நடிகை லேகாவும், சந்திராவும் திரு திரு என்று விழித்தனர். அப்புறம் லேகா கேட்டாரே ஒரு கேள்வி....

அடங்கப்பா!...திருக்குறலில்ன்னா என்ன? எனக்கு மீனிங் சொல்லணும் ( சத்தியமா நம்புங்க உச்சரிப்பு அப்படித்தான்) தமிழ்ல மீனிங் சொல்லுங்க. திருக்குறள் விளக்கம் திருக்குறளில்னா என்னா என்று கேட்டதற்காக... திருவள்ளுவர், திருக்குறள்.. கன்னியாகுமரி சிலை என்று விளக்கம் சொல்ல... ஓ... கண்ணம்மா... கண்ணம்மா என்று கேட்கிறார் லேகா... இது தவறு சொல்ல... எத்தனை பால் என்று ஆதவன் கேட்க... பால் பால்,தேன் பால் என்று சொல்கிறார் லேகா. அமலா பால் என்று முடிக்கிறார் ஆதவன்.

திருவள்ளுவரை மறக்கக் கூடாது திருவள்ளுவரை மறக்கக் கூடாது திருவள்ளுவரை பற்றியும், திருக்குறளை பற்றியும் கேவலப்படுத்தியற்காக சபரிக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. அதெல்லாம் சரி.. இதெல்லாம் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே மாற்றி சொல்வதா? அல்லது டிவி நடிகைகள் நிஜமாகவே தத்திகள்தான் என்று சொல்லாமல் சொல்கிறார்களா?

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/what-is-tamil-meaning-tirukkural-suntv-serial-actress-asks-anchor/articlecontent-pf280596-304660.html
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி.. விமானங்கள் ரத்து!

Posted By: Kalai Mathi
Updated: Tuesday, December 12, 2017, 8:19 [IST]
Subscribe to Oneindia Tamil

சென்னை: புறநகர் பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சென்னை வரும் 12 விமானங்கள் பனி மூட்டத்தால் திருப்பிவிடப்பட்டுள்ளன.


தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் தொடக்கத்தில் சில நாட்கள் மழை பெய்தது.


பின்னர் வடகிழக்குப் பருவமழை ஓய்வு எடுத்து வருகிறது. இதனிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் குளிர் நிலவி வருகின்றது. இந்நிலையில் இன்று கடுமையான பனிமூட்டம் நீடிக்கிறது.

சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.


பனி மூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விடிந்த பின்னரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றனர்.


கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
Regulator show-causes Palghar college charging max fees in state 

Yogita Rao | TNN | Dec 5, 2017, 03:58 IST

MUMBAI: The state college fee regulator has issued a show cause notice to Vedantaa Institute of Medical Sciences in Palghar for charging Rs 14 lakh as fees for a year as opposed to the Rs 6 lakh it has recommended.

The institute, which began classes this year, is the first in the state to register as a private limited company under the Companies Act, 2013, meaning it is for-profit. It is charging the highest fee among all the private colleges in the state.

In a meeting on December 2, the Fee Regulating Authority (FRA) resolved that the institution is unaided, private and is running a professional course and, therefore, is subject to its jurisdiction as per the provisions of the Maharashtra Private and Unaided Professional Educational Institutions (Regulation of Admission and Fees) Act, 2015. The minutes of the meeting mentioned that "the institution in blatant disregard for the ad hoc fees fixed by FRA, which is Rs 6 lakh per student, has been collecting Rs 14 lakh". Further, it mentions that the institution has declared the fees for NRI/institution quota at Rs 30 lakh, which is not permissible. The FRA has issued notice, asking why action should not be taken against the institution.

The FRA prescribes fees of private, professional colleges based on their balance sheets from the previous year. If a college proposes a higher fee that it believes is not justified, the authority has the powers to reduce it.

For new institutes, a blanket ad hoc fee of Rs 6 lakh was permitted this year. "As per the Act, only deemed colleges are exempted by the FRA," said an FRA official, adding that they would wait for the institute's reply before action.

Latest Commentkeep updated us about these as u get latest news.....Krushna Kawale

Vedantaa has admitted around 147 students this year, of which 23 are in the NRI quota. The institute's dean Ganesh Kesari refused to speak to TOI on the matter.

TOI had reported that the institute wrote to the government this June saying its fees do not require the FRA's nod as it is registered as a company. The state decided the fees of students admitted to the college under reserved categories will not be reimbursed by the government, as it does in case of other private colleges. It did not initiate any action, but the FRA has. A government official said FRA is a quasi-judicial body and can make independent decisions. "It is headed by a retired judge and is aware of its jurisdiction," said the official.

NEWS TODAY 26.01.2026