Friday, December 15, 2017

குழந்தை மனசு புதிரல்ல

Published : 09 Dec 2017 12:20 IST

ப. கோலப்பன்


“சார் என் பையனை என்ன செய்யணும்னு தெரியலை. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். அடிக்கடி பொய் சொல்றான். மற்ற பசங்களை அடிக்கிறான்” என்று சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.

சிலருக்கு வேறு விதமான பிரச்சினை. “சார் ஒரு இடத்திலே இருக்க மாட்டேங்கிறான் சார். ஒரு வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக முடியலை. அங்க இருக்கிற சாமான்களையெல்லாம் எடுக்கிறான். உடைக்கிறான். ஓடுறான்” என்பார்கள்.

“விவரமாத்தான் இருக்கான். ஆனால் படிப்புல அதைக் காட்ட மாட்டேங்கிறான். மார்க் வாங்காம இருந்து என்ன புண்ணியம்?”. இது இன்னும் சில பெற்றோரின் புலம்பல்.

இன்று, கல்வி மற்றும் அதற்கான பணச் சுமை ஆகியவற்றால் குழந்தைகள், பெற்றோர்கள் இருவருக்குமே மன அழுத்தமும் நெருக்கடியும் உண்டாகின்றன. ஆனால் அறிவியல் யுகத்தில் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டால் எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் என்பதை உறுதிசெய்ய முடியும்.

இதைத்தான் ‘மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம்’ எனும் புத்தகத்தில் மனநல மருத்துவர் பி.பி. கண்ணன் தெரிவிக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

தமிழில் அறிவியல் நூல்கள் குறைவாகவே வருகின்றன. அதிலும் தான் சார்ந்த துறைகளில் மிகவும் அனுபவம் மிக்கவர்கள் அதைப் புத்தகங்களாகப் பதிவு செய்வதில்லை. குழந்தைகள் மனநலத் துறையில் இருக்கும் இந்தத் தேவையை மருத்துவர் கண்ணனின் புத்தகம் பூர்த்தி செய்கிறது.

படிப்பு சாராக் கல்வி

குழந்தைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள், கீழ்ப்படியாமை, நடத்தைக் குறைபாடு, நினைவுத்திறன், பாலியல் உணர்வுகள், பாலியல் துன்புறுத்தல்கள், தேர்வு தொடர்பான பயம் என எல்லாவற்றையும் விலாவாரியாக மனநல மருத்துவம் மற்றும் கள அனுபவத்தின் மூலம் விளக்கியிருக்கும் கண்ணன், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளையும் முன்வைக்கிறார்.

குறிப்பாக, அடிப்பதாலோ வேறு தண்டனைகளைக் கொடுப்பதாலோ பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதைத் தெளிவாக தெரிவிக்கிறார்.

கவனச்சிதைவு நிலை (அட்டென்ஷன் டிஃபிசிட் ஹைபர் ஆக்டிவ் டிஸார்டர்) குறித்துப் பேசும் கண்ணன், ‘இத்தகைய குழந்தைகளுக்கு விளையாட்டு, பரதநாட்டியம் போன்ற பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களிடமிருக்கும் திறன்களை வெளிப்படுத்த முடியும். தொடக்கக் கல்வி நிலையில் இருந்தே அவர்களுக்குப் படிப்பு சாராக் கல்வியும் (எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி) தகுந்த அளவில் கலந்து அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது பிரச்சினை உள்ள சிறுவர்கள், ஒரு குறிப்பிட்டத் துறையில் மற்றவர்களுக்கு வழிகாட்டும் நிலையில் சமுதாயத்தில் மிளிர்வார்கள்’ என்கிறார்.

தரம் பிரிக்கும் தேர்வு

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமாகப் பேசப்படும் தேர்வு முறை குறித்து அவர் சொல்வது கவனிக்கத்தக்கது. “தேர்வு என்பது பத்துப் பன்னிரண்டு லட்சம் பள்ளி மாணவர்களை அவர்களின் கற்கும் திறன் அடிப்படையில், நினைவாற்றலின் அடிப்படையில் தரம் பிரிக்கும் ஒரு செயல், அவ்வளவே” என்பது இவரது வாதம்.

அதேபோல, “பொதுவாக ஒரு மாணவனின் ஆர்வம், வேட்கை எந்தத் துறையில் உள்ளது, அவனால் அதைப் படிக்க இயலுமா என்பதை அறிந்து ஆலோசனை கூற வேண்டும். கணிதம் சுத்தமாக வராத மாணவனை பொறியியல் துறையில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.

இன்று பல்வேறு பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. சி.பி.எஸ்.இ. படித்த மாணவன், மாநிலப் படத்திட்டத்தில் படித்தவனைவிடப் புத்திசாலி என்கிறார்கள். ஆனால் கண்ணனோ, “நம்முடைய பாடத்திட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே அனைத்துப் பாடத்திட்டங்களும் அடிப்படைக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் மனப்பாடம் செய்யவைத்து அவற்றை ஒப்பித்தலையோ அல்லது வாந்தி எடுத்தாற்போல எழுதுவதையோ மட்டுமே மையமாகக்கொண்டு அமைந்துள்ளன. அளவில் வேண்டுமானால் மாறுபடலாம். அடிப்படை ஒன்றுதான்” என்கிறார்.

பிரத்யேகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, தங்கள் குழந்தைகளிடமிருக்கும் பிரச்சினைகளின் தன்மைகளை பெற்றோர்கள் புரிந்துகொள்வதற்கு இப்புத்தகம் பெரிதும் உதவும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிஜிட்டல் போதை 12: வராத தூக்கம்... வராத கவனம்!

Published : 09 Dec 2017 12:19 IST

வினோத் ஆறுமுகம்



மனிதனுக்குத் தொழில்நுட்பம் அறிமுகமானதும் முதலில் களவாடப்பட்டது நம் தூக்கத்தைத்தான். இரவானவுடன் ஓய்வைத் தொடங்கிய ஆதிகால மனிதன், தூக்கத்தை இழந்தது நெருப்பைக் கண்டுபிடித்த பிறகுதான்.

தொலைக்காட்சி வருவதற்கு முன், தினமும் ஒருவர் 8 மணி நேரம்வரை கண்டிப்பாகத் தூங்க வேண்டும் என்று சொல்லி வந்த டாக்டர்களின் வாயை மூடிவிட்டன பெருநிறுவனங்கள். இன்று 6 மணி நேரம் தூங்கினாலே போதும் என்கிறார்கள். ஆனால் அதையும் நம் குழந்தைகளிடமிருந்து பிரித்துவிட்டது ஸ்மார்ட்போன்.

சிதையும் தகவல்கள்

உடலுக்கும் மூளைக்கும் தூக்கம் அவசியமானது. தூங்கும் நேரத்தில்தான் நம் உடல் உறுப்புகள் தம்மைச் சீர்செய்துகொள்கின்றன. மூளை, தான் பெற்ற அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைக்கிறது. போதுமான தூக்கம் இல்லை என்றால், உடலுக்கும் ஓய்வில்லை, தகவல்களும் கலைந்துவிடுகின்றன. போதுமான தூக்கமின்மை பல துணைநோய்களை உடலுக்குப் பரிசளிக்கிறது.

அதிக எடையுடன் இருப்பவர்கள், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். தங்கள் கலோரிகளை எரிப்பார்கள். ஆனால் 6 மணி நேரம் தொந்தரவில்லாமல் தூங்கினால் உடலே சுமார் 1,000 கலோரிகளை எரித்துவிடுகிறது. சரியான தூக்கமே உடல் எடை அதிகரிப்பை நிறுத்துகிறது.

ஒழுங்கற்ற தூக்கம்

ஆனால் போதுமான தூக்கம் இல்லை என்றால், உங்கள் உடல் சோர்வடைகிறது. மனச் சோர்வு ஏற்படுகிறது. எரிச்சல், கவனமின்மை, அதீத கோபம், பொறுமையின்மை எனப் பல துணைப் பிரச்சினைகளைத் தூக்கமின்மை கொண்டுவருகிறது.

உண்மையில் வீடியோ கேம் விளையாடுவதால் ஒருவர் தூங்குவதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. மூளை அப்படி வேலை செய்ய முடியாது. முதலாவதாக தூக்கம் ஒழுங்கற்றுப் போகும். முதல் 24 மணி நேரம்வரை ஓய்வு கொடுக்காமல், அடுத்த நாளின் நேரத்தைக் கடன் வாங்கி அதிகமாகத் தூங்குவார்கள். படுக்கைக்குச் செல்லும் நேரமும் ஒழுங்காக இருக்காது. இரவில் தூங்குவதற்குப் பதில் பகலில் தூங்குவார்கள். கால் நீட்டி வசதியாகப் படுக்காமல், கணினி முன் இருக்கும் இருக்கையில் அமர்ந்தபடி தூங்குவார்கள்.

இவை எதுவுமே சரியான தூங்கும் முறை கிடையாது. போதுமான தூக்கம் இல்லாமல் பள்ளியில் கற்க முடியாது. உடலை வளைத்து விளையாடவும் முடியாது. புதிதாக எதையும் சாதிக்கவும் முடியாது.

தூண்டுதலுக்கு மட்டுமே கவனம்

வீடியோ கேம் ஆடுவதால் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது என்று நான் பொய் சொல்லப் போவதில்லை ஆனால் மிக முக்கியமான சில பாதிப்புகள் இருக்கின்றன.

வீடியோ கேம் விளையாடும்போது, அது விளையாடுபவர்களின் கவனத்தை நன்றாகக் குவிக்க உதவுகிறது. அப்போதுதான் அவர்களால் பாயிண்ட் எடுக்க முடியும். என்றாலும் இதில் பிரச்சினை இல்லாமல் இல்லை.

அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவர்களால் குறிப்பிட்ட சில தூண்டுதல்களுக்கு மட்டும்தான் கவனம் குவிக்க முடிகிறது. சுற்றுப்புறத்தில் எந்த சுவாரசியமோ, கண்னை வசீகரிக்கும் வண்ணங்களோ இல்லை என்றால் அவர்களின் கவனம் குவிவது கடினமாகிவிடுகிறது.

விளையாட்டில் மட்டுமே கவனம்

வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளை ஆய்வுசெய்து பார்த்ததில் மிகவும் கலவையான முடிவுகளே கிடைத்தன. சாதாரணமாக வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் சில செயல்களில் கவனத்தை குவிப்பது கடினமாக இருந்தது. அதேநேரம், அதீதமாக வீடியோ கேம் விளையாடும் சிறுவர்கள், அந்தக் குறிப்பிட்ட செயலில், அதாவது வீடியோ கேம் விளையாட்டில் மட்டுமே கவனத்தைக் குவிக்க முடிந்தது.

மற்றொருபுறம், குறைவான நேரம் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளால் பல சாதாரணச் செயல்களில் எளிதாகக் கவனத்தைக் குவிக்க முடிந்தது. ஆனால், அதீதமாக விளையாடுபவர்களால் அவற்றில் கவனத்தை நிலைநிறுத்த முடியவில்லை.

(அடுத்த வாரம்:

மூளைக்கும் குப்பை உணவு!)

கட்டுரையாளர்,

டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு:

write2vinod11@gmail.com
தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!! 

pri_63022031
Published on : 14th December 2017 03:10 PM |

ஷேன் டிரென்ச் என்னும் இந்த நபர் தினமும் 40 கேன் அதாவது 13 லிட்டர் கோகோ-கோலா-வை குடித்து வந்துள்ளார். 21-வயதே ஆன இவர் இதன் சுவைக்கு அடிமையாகி நாள் ஒன்றிற்கு இவ்வளவு சர்க்கரை கலவையைக் குடித்த காரணத்தால் இவரது உடல் எடை 203 கிலோவைத் தொட்டது.

மீன் சாப்பிடுவதாக இருந்தால் கூட அந்த மீனை கோகோ-கோலாவை ஊற்றித் தான் இவர் கழுவி சமைப்பாராம். காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக இதைத் தான் குடிப்பாராம். இவருடைய இந்த கோகோ-கோலா வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது. இதனால் இவரது உடல் அதிக பருமனடைந்ததோடு, கோக்கில் இருக்கும் அதிக சர்க்கரை இவருக்குப் பல ஆரோக்கிய சீர்கேட்டையும் தந்தது.

இந்த அதீத உடல் எடையால் நடக்க, நீண்ட நேரம் நிற்க, படிக்கட்டுகள் ஏறி, இறங்க என அனைத்து வேலைகளும் இவருக்குக் கடினமானது. சில சமயங்களில் தன்னுடைய வேலைகளைக் கூட இவரால் செய்து கொள்ள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை ஆலோசித்த போது தான் இவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது.



இவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இந்தப் பழக்கத்தை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் இவர் இறந்து விடுவார் என்று தெரிவித்துள்ளனர். உயிர் மீது வந்த பயத்தால் எப்படியாவது இந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்று முடிவெடுத்த ஷேனுக்கு அப்போது தான் உண்மையான சவால் ஒன்று வந்தது. இதன் சுவைக்கு அடிமையாகிப் போனதால் இவரால் இந்தப் பழக்கத்தை கை விட முடியாமல் தவித்தார்.

தன்னுடைய சுவை அரும்புகளை ஏமாற்ற இவர் ஷான் ஒரு முடிவெடுத்து, சாதாரண கோகோ-கோலாவுக்கு பதிலாக சர்க்கரை சேர்க்கப்பட்டாக கோகோ-கோலா ஸீரோ-வை குடிக்கத் துவங்கினார். இதனால் இவர் உடலின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்ததால் மிகவும் சோர்வடைந்து செயலிழந்து போனார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போராடி 69 கிலோ எடையைக் குறைத்தார்.

பின்னர் மெல்ல மெல்ல மொத்தமாக கோக் குடிப்பதையே நிறுத்தினார். முன்னர் இருந்த உடல் எடையைச் சரி பாதியாகக் குறைத்ததால் இவருடைய ஆரோக்கியம் சற்று தேரியது. 2016-ம் ஆண்டு இரைப்பையில் பைப்பாஸ் அறுவை சிகிச்சையை இவர் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர், ஆனால் இந்தத் தீய பழக்கத்தை விடுத்து சில உடற் பயிற்சிகளின் மூலமே எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யாமல் இவர் குணம் அடைந்ததைக் கண்டு மருத்துவர்களே வியந்து போனார்கள்.



இவருடைய இப்போதைய உடல் எடை 127 கிலோ, இதையும் குறைத்து 100 கிலோவிற்கு வரவே தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார். கட்டுக்கோப்பே இல்லாத உணவு பழக்கம் நமக்கு எமனாய் வந்து அமையும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்.
குற்றம் கடிதல்!

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 15th December 2017 02:32 AM |


ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்களும், மாணவர்களுக்கு எதிராக ஆசிரியர்களும் குறைகள் கூறுவது அதிகமாகிக் கொண்டிருப்பதுடன், இரு சாராருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவை ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிப்பதாலோ அல்லது மாணவர்களின் ஒழுங்கின்மை காரணமாகவோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படுகின்றன.


"என் பிள்ளை உருப்படுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டாலும் சரி, அல்லது தோலை உரித்தாலும் சரி' என்று பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் சொன்ன காலம் போய், மாணவர்களின் நடத்தையில் மாற்றம் கொண்டு வருவதற்கோ அல்லது படிப்பில் முன்னேற்றம் ஏற்படுவதற்கோ ஆசிரியர்கள் எடுக்கும் சிறு நடவடிக்கைகள் கூட மிகைப்படுத்தப்  படுகிறது. 


சில நேரங்களில் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம், தவறு
செய்த அல்லது படிக்காத தங்களது குழந்தைகளை கண்டித்த அல்லது தண்டித்த ஆசிரியர் மீது "நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்களா அல்லது நாங்கள் காவல் துறை
யிடம் புகார் தரட்டுமா?' என்று மிரட்டுகின்றனர்.


சமீபத்தில் ஓர் ஆசிரியர், மாணவியின் தோளில் குச்சியால் இலேசாக ஒரு தட்டு தட்டியதற்காக, அன்று மாலையே அந்த மாணவியின் உறவினர் மாணவியிடம் "அடித்த டீச்சர் யார் என்று காட்டு, கையை வெட்டி விடுகிறோம்' என்று பள்ளியின் முன் நின்று கொண்டு தகராறு செய்துள்ளனர். 


மாணவர்களின் மீது உண்மையான அக்கறை எடுத்து, அவர்கள் எதிர்காலத்தில் நன்றாக வர வேண்டும் என்று செயல்படும் பெரும்பாலான ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.


மாணவர்கள் மீது தேவையற்ற, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மாட்டிக் கொள்வதில்லை. இவர்கள் செய்யும் தவறுகள் பத்திரிகைகளில் அல்லது சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிந்தால்தான் உண்டு. 


இதில் பெரிய வேதனை என்னவென்றால், இந்த மாதிரியான ஆசிரியர்களால் உளரீதியாகப் பாதிக்கப்படும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் எதுவும் சொல்வதில்லை.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சில குழந்தைகள் பள்ளியில் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்து பெற்றோரிடம் பேசினால் அதனால் எதிர் விளைவுகள் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றனர். 


தனியார் பள்ளியாக இருந்தால், பெற்றோரும் மிகுந்த யோசனைக்குள்ளாகின்றனர். புகார் செய்வதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர்களால் சில நேரங்களில், குழந்தைகள் மறைமுகமான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.


ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தெரியாமல் ஓர் ஆசிரியை மீது மோதி விட்டான். தவறு தெரிந்து, பதறிப் போய் உடனே மன்னிப்புக் கேட்டும் அந்த ஆசிரியை இடைவிடாமல் மாணவரை அடித்துள்ளார்.
அந்த மாணவரின் பெற்றோர் இருவரும் வேறு ஒரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறவர்கள். பையனின் முகம் சரியில்லாததை உணர்ந்து தாய் விசாரித்தபோதுதான் அவன் தயங்கித் தயங்கி பள்ளியில் நடந்ததை விவரித்துள்ளான்.


மறுநாள் அவனின் தந்தை பள்ளிக்குச் சென்று முதல்வரைப் பார்த்துப் புகார் கொடுத்தும், அந்த ஆசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆனால், ஒரு வருடம் ஆகியும் இன்று வரை அந்த மாணவரை சம்பந்தப்பட்ட ஆசிரியை சாடை, மாடையாகப் பேசுவது மட்டுமல்லாது மற்ற மாணவர்களிடம் இவனுடன் யாரும் பேசாதீர்கள் என்றும் கூறுகிறாராம்.
இதனைவிட மோசமாக மாணவர்களை நடத்தும் பள்ளிகளையும் நாம் பார்க்கிறோம். மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுகிறோம் என்று கூறி, பள்ளியில் கொடுக்கப்பட்ட நேரத்தைத் தவிர மாணவருக்கு அவசரம் என்றால்கூட கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்காத பள்ளிகளைப் பற்றியும், தண்டிக்கிறோம் என்ற பெயரில் பெண் குழந்தையை மாணவர் பயன்படுத்தும் கழிவறையில் நிற்க வைத்த பள்ளியைப் பற்றியும், சவரம் செய்யாமல் வரும் வளரிளம் பருவ மாணவர்களுக்கு ஆசிரியர் அல்லது சக மாணவரிடம் சொல்லிச் சவரம் செய்ய வைக்கும் பள்ளிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.


மாணவர்கள் மீது இது மாதிரியான கொடூரமான தாக்குதல்களும், இன்னும் பாலியல் கொடுமைகள் போன்ற அவலங்களும் இந்தியப் பள்ளிகளில் மட்டுமே சாத்தியம். இதில் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. 


அதே நேரத்தில் நியாயமான காரணங்களுக்காக மாணவர்கள் மீது ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கும்பொழுது பெற்றோர் அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது. அத்துடன், அவர்களின் நலனுக்காகவே ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள் என்பதை தங்கள் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.


ஆசிரியரின் நடவடிக்கை என்பது அடிப்பதோ அல்லது மாணவர்களின் மனத்தைக் காயப்படுத்துவதாகவோ கண்டிப்பாக இருக்கக்கூடாது. எதிர்வினை தற்கொலை வரை போகலாம் என்பதை ஆசிரியர்கள் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தில் மாறவேண்டும் என்றால் பெற்றோரும், ஆசிரியர்களும்தான் மாற வேண்டும். மாறிவிட்ட சமூகச் சூழலில் குழந்தைகளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து, தாங்கள் மாற வேண்டும்.
ஒரு தாய்க்குத் தன் குழந்தையிடம் காட்டும் அன்பு மற்றும் கண்டிப்பின் அளவும், எல்லையும் தெரிந்திருக்க வேண்டும். பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் தாயன்புடன் பழக வேண்டும். 


வீட்டிலும் பெற்றோர்கள் அன்பையும், கண்டிப்பையும் சம விகிதத்தில் கலந்து வெளிப்படுத்துவதால், பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிக்கும் நேரங்களில் மாணவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்துவதுடன், மோசமான எதிர்வினையும் ஆற்ற மாட்டார்கள்.

Aadhaar hearing

First published on 14-Dec-2017
New Delhi: A five-judge constitution bench headed by Chief Justice Dipak Misra will on Thursday decide on a batch of applications seeking a stay on the Centre's alleged coercive measures to force people to link Aadhaar cards with services like cell phones and bank accounts. "Aadhaar... the matters are being taken up tomorrow," Justice Misra said, on a day the Centre extended the deadline for linking Aadhaar.

Bank customers have been granted three more months for compliance till March 31. This will apply to mutual funds, credit and debit cards, and other regulated entities facilitating financial transactions.

Fake-varsity probe

First published on 15-Dec-2017
Patna: The CBI is all set to initiate probe into a fake university in Bhojpur district, just 60km from Patna, which used to grant affiliation to institutions running ayurveda, homoeopathy and allopathic courses in Bihar as well as outside the state.

Initial investigations by a high-level committee indicate that over 800 persons given degrees and diplomas from these institutions were engaged in practice across the country.
The Patna High Court ordered the CBI probe on Wednesday, and sources in the central investigating agency said they were awaiting the high court order to formally lodge an FIR and start investigations into the medical fraud.

Justice Ahsanuddin Amanullah directed the CBI on Wednesday to ascertain how the institution in Ara, Council for Patent Medicine, granted affiliation to medical colleges in Muzaffarpur district in Bihar, Faridabad in Haryana, Bangalore and Calcutta.
The CBI probe was ordered after additional solicitor general S.D. Sanjay told the court that the Council for Patent Medicine located at Jagdeo Nagar in Ara had "illegally" granted permission to several medical colleges to impart education in all three systems of medicine: Allopathic, homoeopathic and Unani/ayurvedic.

The court order came during hearing of a writ petition filed by Umesh Chand and others from Faridabad, who had been practising for decades together on the basis of degrees awarded by the Haryana-based medical college that the Council for Patent Medicine had recognised.
The Haryana government had stopped them from practising as doctors, and they had moved the high court.

The colleges used to run medical courses such as Bachelor of Allopathic Patent Medical Specialties, Bachelor of Allopathic Patent Medicine and Surgery and Bachelor of Medicine in Biochemical System. Even MD (one-year course) degrees were issued to the students.
Additional solicitor general Sanjay presented a 100-page report submitted by a high-level committee set up by the state government on the directive of the high court. The committee, in its report, stated that the medical colleges were running in contravention of existing law, rules and procedure and were violating laws regulating medical education and practice in the country.
Sanjay pointed out in the court that around 800 students, who were awarded degrees from the colleges affiliated to the fake institution, were practising in different parts of the country. He pleaded for a CBI probe as the matter had "pan-India ramifications".
The two-member enquiry committee set up by the state government in February last year had found that the fake institution was not only committing fraud with the government of India but also doing immense harm to the society by issuing "illegal degrees" without any actual study or proper training.

The report, jointly prepared by then inspector-general of the anti-terrorism squad (ATS) Sunil Kumar Jha and then director of health services, had cited several previous judgments of the Supreme Court and high courts. The investigation was so extensive that even the petitioners' legal counsel Prem Shankar Jha agreed with the report.

Sunil, at present posted as IG, Darbhanga, was assigned to investigate as he had earlier served with the CBI. Jha visited the Ara office of the Council of Patent Medicine and a medical college affiliated to it in Muzaffarpur.

Authoritative sources said that the Council for Patent Medicine used to claim and even write on the degrees of the students that it was recognised by the government and approved by the judiciary. The practice of affiliation was going on since 1990, but flourished after 1996.
Sources said that the "medical fraud" was first detected when Amir Subhani (at present principal secretary, home) was the district magistrate of Bhojpur. A police complaint was lodged against the Council for Patent Medicine by an official on Subhani's orders. However, the then superintendent of police of Bhojpur, R.K. Mallick, gave a clean chit to the institute.

The judicial magistrate posted in Bhojpur had also agreed with the police investigation. The high court has listed the case for next hearing on April 11, 2018

பேஸ்புக், டுவிட்டரில்' காஸ் சிலிண்டர் பதிவு!!!

வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்'போன்ற, சமூக வலைதளங்கள் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, இந்தியன் ஆயின் நிறுவனம் அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும்ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு மற்றும் வணிக பயன்பாடு என, இரண்டு வகை, சமையல் காஸ்சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. தற்போது, வீட்டு வாடிக்கையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களின், கட்டணமில்லா தொலைபேசி, இணையதளம் வாயிலாக, சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளம் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, அதிகாரபூர்வமாக துவக்கியுள்ளது.
தற்போது, இந்த சேவை, டில்லி உட்பட, வட மாநிலங்களில் மட்டுமே உள்ள நிலையில், ஓரிரு தினங்களில், தமிழகத்திலும் செயல்பாட்டுக்குவருகிறது.இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமூக வலைதளத்தில், சிலிண்டர் பதிவு செய்வது எப்படி என்ற விபரம், நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

NEWS TODAY 27.01.2026