Friday, December 15, 2017

இளமை .நெட்: வேகத்தை அதிகரிக்கும் ஜிமெயில் ரகசியங்கள்!

Published : 24 Nov 2017 11:32 IST

சைபர்சிம்மன்




கூகுள் வழங்கும் ஜிமெயில் சேவை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜிமெயில் லேப்ஸ் தெரியுமா? அது வழங்கும் உப சேவைகளைப் பற்றி தெரியுமா? இந்த சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இமெயில் செயல்திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

‘சுவாரசியமான சோதனை விஷயங்கள்’ என்று ஜிமெயில் லேப்ஸ் பற்றி கூகுள் குறிப்பிடுகிறது. இது புதிய சேவைகளுக்கான சோதனைக்களம் எனப் புரிந்துகொள்ளலாம்.அனுப்பிய இமெயிலைத் திரும்பப் பெற வழி செய்யும், ‘அன்சென்ட்’ (Unsent) வசதி உள்ளிட்ட சேவைகள் இந்தச் சோதனைக்கூடத்தில் உதயமானவைதாம். எல்லா சேவைகளும் ஜிமெயில் வசதிகளாக அறிமுகமாவதில்லை என்றாலும், சோதனைக்கூட சேவைகளை முயன்று பார்ப்பது பயனுள்ளதாகவே இருக்கும்.

எப்படி அணுகுவது?

ஜிமெயில் லேப்ஸ் சோதனை வசதியை ஜிமெயிலின் ‘டெஸ்க்டாப்’ வடிவில் மட்டுமே அணுக முடியும். ஜிமெயில் லேப்ஸ் வசதியைப் பெற, ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து கியர் ஐகானை கிளிக் செய்து, செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் லேப்ஸ் பகுதியை கிளிக் செய்தால், அதற்கான தனிப் பக்கத்தை அடையலாம். அதில் வரிசையாகக் காணப்படும் சேவை அம்சங்களிலிருந்து தேர்வு செய்து, மாற்றத்தைச் சேமித்துக்கொண்டால் அந்த வசதியைப் பயன்படுத்தலாம். இந்த சேவை தேவையில்லையென்றால், அதை எளிதாக நீக்கிவிடலாம்.

இன்பாக்ஸ் பல

ஒரே ஒரு இன்பாக்ஸுக்குப் பதில் பல இன்பாக்ஸை உருவாக்கிக்கொள்ள முடிந்தால் வசதியாக இருக்கும் அல்லவா? ‘மல்பிட்பிள் இன்பாக்ஸ்’ அம்சம் மூலம் இதை ஜிமெயில் லேப்ஸ் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் இமெயில்களைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் தனித்தனி இன்பாக்சாகப் பிரித்துக்கொள்ளலாம். மெயிலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பல இன்பாக்ஸ்கள் இருப்பதுபோன்ற தோற்றம் கிடைத்தாலும், நடைமுறையில் இது பயனுள்ளதாகவே இருக்கும்.

இந்த வசதியைத் தேர்வு செய்த பிறகு மெயிலைப் பயன்படுத்தும்போது, செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று பல இன்பாக்ஸ் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு குறிச்சொல்லுக்கு ஏற்ப மெயில்களை வகைப்படுத்திக்கொள்ளலாம்.

கீபோர்ட் குறுக்குவழிகள்

இணைய பயன்பாட்டில் பிரவுசர் குறுக்கு வழிகள் மிகவும் பிரபலமானவை. ஒன்றுக்கும் மேற்பட்ட கிளிக் தேவைப்படக்கூடிய இடங்களில் அவற்றை உடனே அணுக குறுக்குவழிகள் கைகொடுக்கின்றன. ஜிமெயில் செயல்பாடுகளை விரைவுப்படுத்திப் பிரத்யேகக் குறுக்குவழிகளும் இருக்கின்றன. இவற்றோடு உங்களுக்கான குறுக்குவழிகளை அமைத்துக்கொள்ள கூகுள் வழி செய்கிறது. செட்டிங்ஸ் பகுதியில் ‘கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்’ எனும் பகுதிக்குச் சென்றால், தேவையான குறுக்குவழிகளை அமைத்துக்கொள்ளலாம்.


ஒரே பதில்

இமெயில்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றுக்கான பதில்கள் மாறும். சில மெயில்களுக்கு ஒரே விதமான பதில்களை அனுப்பும் நிலையும் இருக்கலாம். இதுபோன்ற சூழலில் ஒரே விதமான பதிலை மீண்டும் அடிப்பது அலுப்பூட்டும். இதைத் தவிர்க்க ‘கேண்ட் ரஸ்பான்ஸ்’ வசதியைப் பயன்படுத்தலாம். நிர்ணயிக்கப்பட்ட பதில்கள் தேவைப்படும் மெயில்களுக்கு, அவற்றை மீண்டும் டைப் செய்யாமல் இந்த வசதியை கிளிக் செய்து அதே பதிலை அனுப்பிவிடலாம். இந்த வசதியை உருவாக்கிகொண்ட பிறகு கம்போஸ் பகுதிக்கு அருகே இதற்கான பட்டனைக் காணலாம்.

ஸ்மார்ட் லேபில்கள்

மெயில்களைப் பிரிக்க அவற்றுக்கான ஸ்மார்ட்லேபிள்களை உருவாக்கிக்கொள்ளலாம். நிதி, சமூகம், பயணம், அலுவலகம் என லேபிள்களுக்கு ஏற்ப இன்பாக்ஸில் வரும் மெயில்கள் தானாக வகைப்படுத்தப்படும். எந்த வகையான மெயில் தேவையோ அதை மட்டும் கிளிக் செய்து பார்க்கலாம். ஸ்மார்ட் லேபிள் தலைப்பின் கீழ் இந்த வசதியைப் பெறலாம்.

பலரும் கூகுள் காலாண்டரைப் பயன்படுத்தலாம். நிகழ்ச்சிகளைத் திட்டமிட, சந்திப்புகளை ஏற்பாடு செய்ய எனப் பலவற்றுக்கும் நாட்காட்டி வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், நாட்காட்டி வசதியை ஒவ்வொரு முறையும் தனியே அணுகுவதைத் தவிர்க்க, ஜிமெயிலுக்குள்ளேயே அதைக் கொண்டுவரும் வசதியை லேப்ஸ் சேவையிலிருந்து அமைத்துக்கொள்ளலாம். ஜிமெயிலிலிருந்து வெளியேறாமலே நாட்காட்டியில் தகவல்களைச் சேர்க்க இது உதவுகிறது. இந்த வசதியை உருவாக்கிக்கொண்ட பிறகு, நாட்காட்டி சேவைக்கான வசதி இன்பாக்ஸ் இடப்பக்கத்தில் மூன்று புள்ளிகளாகத் தோன்றும்.

இமெயில்களில் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கும் மெயில்கள் எத்தனை என்பதை உடனடியாக அறியும் வசதியை அன்ரெட் மெசேஜ் சேவை மூலம் பெறலாம். மெயில்களை நட்சத்திரக் குறியிட்டு அடையாளப்படுத்துவது போலவே இன்னும் பலவற்றுக்கான ‘குவிக் லிங்க்ஸ்’ இணைப்புகளையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

ஜிமெயில் லேப்ஸ் பகுதிக்குச் சென்று கொஞ்சம் பொறுமையாக அலசி ஆராய்ந்தால், உங்கள் ஜிமெயில் பயன்பாட்டை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
வாய்ப்புண் வருவது ஏன்?

Published : 13 Dec 2014 15:32 IST

டாக்டர் கு. கணேசன்



வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

யாருக்கு வரும்?


குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் - மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.

வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

கிருமிகளின் தாக்குதல்!

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் வருவது வழக்கம்.‘கான்டிடா ஆல்பிகன்ஸ்' (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும். அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.

என்ன சிகிச்சை?

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்சினை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது. ‘சோடியம் லாரில் சல்பேட்’(Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

எந்த உணவு முக்கியம்?

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com
குழந்தை மனசு புதிரல்ல

Published : 09 Dec 2017 12:20 IST

ப. கோலப்பன்


“சார் என் பையனை என்ன செய்யணும்னு தெரியலை. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். அடிக்கடி பொய் சொல்றான். மற்ற பசங்களை அடிக்கிறான்” என்று சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.

சிலருக்கு வேறு விதமான பிரச்சினை. “சார் ஒரு இடத்திலே இருக்க மாட்டேங்கிறான் சார். ஒரு வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக முடியலை. அங்க இருக்கிற சாமான்களையெல்லாம் எடுக்கிறான். உடைக்கிறான். ஓடுறான்” என்பார்கள்.

“விவரமாத்தான் இருக்கான். ஆனால் படிப்புல அதைக் காட்ட மாட்டேங்கிறான். மார்க் வாங்காம இருந்து என்ன புண்ணியம்?”. இது இன்னும் சில பெற்றோரின் புலம்பல்.

இன்று, கல்வி மற்றும் அதற்கான பணச் சுமை ஆகியவற்றால் குழந்தைகள், பெற்றோர்கள் இருவருக்குமே மன அழுத்தமும் நெருக்கடியும் உண்டாகின்றன. ஆனால் அறிவியல் யுகத்தில் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டால் எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் என்பதை உறுதிசெய்ய முடியும்.

இதைத்தான் ‘மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம்’ எனும் புத்தகத்தில் மனநல மருத்துவர் பி.பி. கண்ணன் தெரிவிக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

தமிழில் அறிவியல் நூல்கள் குறைவாகவே வருகின்றன. அதிலும் தான் சார்ந்த துறைகளில் மிகவும் அனுபவம் மிக்கவர்கள் அதைப் புத்தகங்களாகப் பதிவு செய்வதில்லை. குழந்தைகள் மனநலத் துறையில் இருக்கும் இந்தத் தேவையை மருத்துவர் கண்ணனின் புத்தகம் பூர்த்தி செய்கிறது.

படிப்பு சாராக் கல்வி

குழந்தைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள், கீழ்ப்படியாமை, நடத்தைக் குறைபாடு, நினைவுத்திறன், பாலியல் உணர்வுகள், பாலியல் துன்புறுத்தல்கள், தேர்வு தொடர்பான பயம் என எல்லாவற்றையும் விலாவாரியாக மனநல மருத்துவம் மற்றும் கள அனுபவத்தின் மூலம் விளக்கியிருக்கும் கண்ணன், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளையும் முன்வைக்கிறார்.

குறிப்பாக, அடிப்பதாலோ வேறு தண்டனைகளைக் கொடுப்பதாலோ பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதைத் தெளிவாக தெரிவிக்கிறார்.

கவனச்சிதைவு நிலை (அட்டென்ஷன் டிஃபிசிட் ஹைபர் ஆக்டிவ் டிஸார்டர்) குறித்துப் பேசும் கண்ணன், ‘இத்தகைய குழந்தைகளுக்கு விளையாட்டு, பரதநாட்டியம் போன்ற பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களிடமிருக்கும் திறன்களை வெளிப்படுத்த முடியும். தொடக்கக் கல்வி நிலையில் இருந்தே அவர்களுக்குப் படிப்பு சாராக் கல்வியும் (எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி) தகுந்த அளவில் கலந்து அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது பிரச்சினை உள்ள சிறுவர்கள், ஒரு குறிப்பிட்டத் துறையில் மற்றவர்களுக்கு வழிகாட்டும் நிலையில் சமுதாயத்தில் மிளிர்வார்கள்’ என்கிறார்.

தரம் பிரிக்கும் தேர்வு

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமாகப் பேசப்படும் தேர்வு முறை குறித்து அவர் சொல்வது கவனிக்கத்தக்கது. “தேர்வு என்பது பத்துப் பன்னிரண்டு லட்சம் பள்ளி மாணவர்களை அவர்களின் கற்கும் திறன் அடிப்படையில், நினைவாற்றலின் அடிப்படையில் தரம் பிரிக்கும் ஒரு செயல், அவ்வளவே” என்பது இவரது வாதம்.

அதேபோல, “பொதுவாக ஒரு மாணவனின் ஆர்வம், வேட்கை எந்தத் துறையில் உள்ளது, அவனால் அதைப் படிக்க இயலுமா என்பதை அறிந்து ஆலோசனை கூற வேண்டும். கணிதம் சுத்தமாக வராத மாணவனை பொறியியல் துறையில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.

இன்று பல்வேறு பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. சி.பி.எஸ்.இ. படித்த மாணவன், மாநிலப் படத்திட்டத்தில் படித்தவனைவிடப் புத்திசாலி என்கிறார்கள். ஆனால் கண்ணனோ, “நம்முடைய பாடத்திட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே அனைத்துப் பாடத்திட்டங்களும் அடிப்படைக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் மனப்பாடம் செய்யவைத்து அவற்றை ஒப்பித்தலையோ அல்லது வாந்தி எடுத்தாற்போல எழுதுவதையோ மட்டுமே மையமாகக்கொண்டு அமைந்துள்ளன. அளவில் வேண்டுமானால் மாறுபடலாம். அடிப்படை ஒன்றுதான்” என்கிறார்.

பிரத்யேகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, தங்கள் குழந்தைகளிடமிருக்கும் பிரச்சினைகளின் தன்மைகளை பெற்றோர்கள் புரிந்துகொள்வதற்கு இப்புத்தகம் பெரிதும் உதவும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிஜிட்டல் போதை 12: வராத தூக்கம்... வராத கவனம்!

Published : 09 Dec 2017 12:19 IST

வினோத் ஆறுமுகம்



மனிதனுக்குத் தொழில்நுட்பம் அறிமுகமானதும் முதலில் களவாடப்பட்டது நம் தூக்கத்தைத்தான். இரவானவுடன் ஓய்வைத் தொடங்கிய ஆதிகால மனிதன், தூக்கத்தை இழந்தது நெருப்பைக் கண்டுபிடித்த பிறகுதான்.

தொலைக்காட்சி வருவதற்கு முன், தினமும் ஒருவர் 8 மணி நேரம்வரை கண்டிப்பாகத் தூங்க வேண்டும் என்று சொல்லி வந்த டாக்டர்களின் வாயை மூடிவிட்டன பெருநிறுவனங்கள். இன்று 6 மணி நேரம் தூங்கினாலே போதும் என்கிறார்கள். ஆனால் அதையும் நம் குழந்தைகளிடமிருந்து பிரித்துவிட்டது ஸ்மார்ட்போன்.

சிதையும் தகவல்கள்

உடலுக்கும் மூளைக்கும் தூக்கம் அவசியமானது. தூங்கும் நேரத்தில்தான் நம் உடல் உறுப்புகள் தம்மைச் சீர்செய்துகொள்கின்றன. மூளை, தான் பெற்ற அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைக்கிறது. போதுமான தூக்கம் இல்லை என்றால், உடலுக்கும் ஓய்வில்லை, தகவல்களும் கலைந்துவிடுகின்றன. போதுமான தூக்கமின்மை பல துணைநோய்களை உடலுக்குப் பரிசளிக்கிறது.

அதிக எடையுடன் இருப்பவர்கள், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். தங்கள் கலோரிகளை எரிப்பார்கள். ஆனால் 6 மணி நேரம் தொந்தரவில்லாமல் தூங்கினால் உடலே சுமார் 1,000 கலோரிகளை எரித்துவிடுகிறது. சரியான தூக்கமே உடல் எடை அதிகரிப்பை நிறுத்துகிறது.

ஒழுங்கற்ற தூக்கம்

ஆனால் போதுமான தூக்கம் இல்லை என்றால், உங்கள் உடல் சோர்வடைகிறது. மனச் சோர்வு ஏற்படுகிறது. எரிச்சல், கவனமின்மை, அதீத கோபம், பொறுமையின்மை எனப் பல துணைப் பிரச்சினைகளைத் தூக்கமின்மை கொண்டுவருகிறது.

உண்மையில் வீடியோ கேம் விளையாடுவதால் ஒருவர் தூங்குவதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. மூளை அப்படி வேலை செய்ய முடியாது. முதலாவதாக தூக்கம் ஒழுங்கற்றுப் போகும். முதல் 24 மணி நேரம்வரை ஓய்வு கொடுக்காமல், அடுத்த நாளின் நேரத்தைக் கடன் வாங்கி அதிகமாகத் தூங்குவார்கள். படுக்கைக்குச் செல்லும் நேரமும் ஒழுங்காக இருக்காது. இரவில் தூங்குவதற்குப் பதில் பகலில் தூங்குவார்கள். கால் நீட்டி வசதியாகப் படுக்காமல், கணினி முன் இருக்கும் இருக்கையில் அமர்ந்தபடி தூங்குவார்கள்.

இவை எதுவுமே சரியான தூங்கும் முறை கிடையாது. போதுமான தூக்கம் இல்லாமல் பள்ளியில் கற்க முடியாது. உடலை வளைத்து விளையாடவும் முடியாது. புதிதாக எதையும் சாதிக்கவும் முடியாது.

தூண்டுதலுக்கு மட்டுமே கவனம்

வீடியோ கேம் ஆடுவதால் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது என்று நான் பொய் சொல்லப் போவதில்லை ஆனால் மிக முக்கியமான சில பாதிப்புகள் இருக்கின்றன.

வீடியோ கேம் விளையாடும்போது, அது விளையாடுபவர்களின் கவனத்தை நன்றாகக் குவிக்க உதவுகிறது. அப்போதுதான் அவர்களால் பாயிண்ட் எடுக்க முடியும். என்றாலும் இதில் பிரச்சினை இல்லாமல் இல்லை.

அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவர்களால் குறிப்பிட்ட சில தூண்டுதல்களுக்கு மட்டும்தான் கவனம் குவிக்க முடிகிறது. சுற்றுப்புறத்தில் எந்த சுவாரசியமோ, கண்னை வசீகரிக்கும் வண்ணங்களோ இல்லை என்றால் அவர்களின் கவனம் குவிவது கடினமாகிவிடுகிறது.

விளையாட்டில் மட்டுமே கவனம்

வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளை ஆய்வுசெய்து பார்த்ததில் மிகவும் கலவையான முடிவுகளே கிடைத்தன. சாதாரணமாக வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் சில செயல்களில் கவனத்தை குவிப்பது கடினமாக இருந்தது. அதேநேரம், அதீதமாக வீடியோ கேம் விளையாடும் சிறுவர்கள், அந்தக் குறிப்பிட்ட செயலில், அதாவது வீடியோ கேம் விளையாட்டில் மட்டுமே கவனத்தைக் குவிக்க முடிந்தது.

மற்றொருபுறம், குறைவான நேரம் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளால் பல சாதாரணச் செயல்களில் எளிதாகக் கவனத்தைக் குவிக்க முடிந்தது. ஆனால், அதீதமாக விளையாடுபவர்களால் அவற்றில் கவனத்தை நிலைநிறுத்த முடியவில்லை.

(அடுத்த வாரம்:

மூளைக்கும் குப்பை உணவு!)

கட்டுரையாளர்,

டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு:

write2vinod11@gmail.com
தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!! 

pri_63022031
Published on : 14th December 2017 03:10 PM |

ஷேன் டிரென்ச் என்னும் இந்த நபர் தினமும் 40 கேன் அதாவது 13 லிட்டர் கோகோ-கோலா-வை குடித்து வந்துள்ளார். 21-வயதே ஆன இவர் இதன் சுவைக்கு அடிமையாகி நாள் ஒன்றிற்கு இவ்வளவு சர்க்கரை கலவையைக் குடித்த காரணத்தால் இவரது உடல் எடை 203 கிலோவைத் தொட்டது.

மீன் சாப்பிடுவதாக இருந்தால் கூட அந்த மீனை கோகோ-கோலாவை ஊற்றித் தான் இவர் கழுவி சமைப்பாராம். காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக இதைத் தான் குடிப்பாராம். இவருடைய இந்த கோகோ-கோலா வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது. இதனால் இவரது உடல் அதிக பருமனடைந்ததோடு, கோக்கில் இருக்கும் அதிக சர்க்கரை இவருக்குப் பல ஆரோக்கிய சீர்கேட்டையும் தந்தது.

இந்த அதீத உடல் எடையால் நடக்க, நீண்ட நேரம் நிற்க, படிக்கட்டுகள் ஏறி, இறங்க என அனைத்து வேலைகளும் இவருக்குக் கடினமானது. சில சமயங்களில் தன்னுடைய வேலைகளைக் கூட இவரால் செய்து கொள்ள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை ஆலோசித்த போது தான் இவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது.



இவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இந்தப் பழக்கத்தை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் இவர் இறந்து விடுவார் என்று தெரிவித்துள்ளனர். உயிர் மீது வந்த பயத்தால் எப்படியாவது இந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்று முடிவெடுத்த ஷேனுக்கு அப்போது தான் உண்மையான சவால் ஒன்று வந்தது. இதன் சுவைக்கு அடிமையாகிப் போனதால் இவரால் இந்தப் பழக்கத்தை கை விட முடியாமல் தவித்தார்.

தன்னுடைய சுவை அரும்புகளை ஏமாற்ற இவர் ஷான் ஒரு முடிவெடுத்து, சாதாரண கோகோ-கோலாவுக்கு பதிலாக சர்க்கரை சேர்க்கப்பட்டாக கோகோ-கோலா ஸீரோ-வை குடிக்கத் துவங்கினார். இதனால் இவர் உடலின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்ததால் மிகவும் சோர்வடைந்து செயலிழந்து போனார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போராடி 69 கிலோ எடையைக் குறைத்தார்.

பின்னர் மெல்ல மெல்ல மொத்தமாக கோக் குடிப்பதையே நிறுத்தினார். முன்னர் இருந்த உடல் எடையைச் சரி பாதியாகக் குறைத்ததால் இவருடைய ஆரோக்கியம் சற்று தேரியது. 2016-ம் ஆண்டு இரைப்பையில் பைப்பாஸ் அறுவை சிகிச்சையை இவர் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர், ஆனால் இந்தத் தீய பழக்கத்தை விடுத்து சில உடற் பயிற்சிகளின் மூலமே எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யாமல் இவர் குணம் அடைந்ததைக் கண்டு மருத்துவர்களே வியந்து போனார்கள்.



இவருடைய இப்போதைய உடல் எடை 127 கிலோ, இதையும் குறைத்து 100 கிலோவிற்கு வரவே தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார். கட்டுக்கோப்பே இல்லாத உணவு பழக்கம் நமக்கு எமனாய் வந்து அமையும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்.
குற்றம் கடிதல்!

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 15th December 2017 02:32 AM |


ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்களும், மாணவர்களுக்கு எதிராக ஆசிரியர்களும் குறைகள் கூறுவது அதிகமாகிக் கொண்டிருப்பதுடன், இரு சாராருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவை ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிப்பதாலோ அல்லது மாணவர்களின் ஒழுங்கின்மை காரணமாகவோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படுகின்றன.


"என் பிள்ளை உருப்படுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டாலும் சரி, அல்லது தோலை உரித்தாலும் சரி' என்று பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் சொன்ன காலம் போய், மாணவர்களின் நடத்தையில் மாற்றம் கொண்டு வருவதற்கோ அல்லது படிப்பில் முன்னேற்றம் ஏற்படுவதற்கோ ஆசிரியர்கள் எடுக்கும் சிறு நடவடிக்கைகள் கூட மிகைப்படுத்தப்  படுகிறது. 


சில நேரங்களில் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம், தவறு
செய்த அல்லது படிக்காத தங்களது குழந்தைகளை கண்டித்த அல்லது தண்டித்த ஆசிரியர் மீது "நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்களா அல்லது நாங்கள் காவல் துறை
யிடம் புகார் தரட்டுமா?' என்று மிரட்டுகின்றனர்.


சமீபத்தில் ஓர் ஆசிரியர், மாணவியின் தோளில் குச்சியால் இலேசாக ஒரு தட்டு தட்டியதற்காக, அன்று மாலையே அந்த மாணவியின் உறவினர் மாணவியிடம் "அடித்த டீச்சர் யார் என்று காட்டு, கையை வெட்டி விடுகிறோம்' என்று பள்ளியின் முன் நின்று கொண்டு தகராறு செய்துள்ளனர். 


மாணவர்களின் மீது உண்மையான அக்கறை எடுத்து, அவர்கள் எதிர்காலத்தில் நன்றாக வர வேண்டும் என்று செயல்படும் பெரும்பாலான ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.


மாணவர்கள் மீது தேவையற்ற, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மாட்டிக் கொள்வதில்லை. இவர்கள் செய்யும் தவறுகள் பத்திரிகைகளில் அல்லது சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிந்தால்தான் உண்டு. 


இதில் பெரிய வேதனை என்னவென்றால், இந்த மாதிரியான ஆசிரியர்களால் உளரீதியாகப் பாதிக்கப்படும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் எதுவும் சொல்வதில்லை.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சில குழந்தைகள் பள்ளியில் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்து பெற்றோரிடம் பேசினால் அதனால் எதிர் விளைவுகள் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றனர். 


தனியார் பள்ளியாக இருந்தால், பெற்றோரும் மிகுந்த யோசனைக்குள்ளாகின்றனர். புகார் செய்வதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர்களால் சில நேரங்களில், குழந்தைகள் மறைமுகமான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.


ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தெரியாமல் ஓர் ஆசிரியை மீது மோதி விட்டான். தவறு தெரிந்து, பதறிப் போய் உடனே மன்னிப்புக் கேட்டும் அந்த ஆசிரியை இடைவிடாமல் மாணவரை அடித்துள்ளார்.
அந்த மாணவரின் பெற்றோர் இருவரும் வேறு ஒரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறவர்கள். பையனின் முகம் சரியில்லாததை உணர்ந்து தாய் விசாரித்தபோதுதான் அவன் தயங்கித் தயங்கி பள்ளியில் நடந்ததை விவரித்துள்ளான்.


மறுநாள் அவனின் தந்தை பள்ளிக்குச் சென்று முதல்வரைப் பார்த்துப் புகார் கொடுத்தும், அந்த ஆசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆனால், ஒரு வருடம் ஆகியும் இன்று வரை அந்த மாணவரை சம்பந்தப்பட்ட ஆசிரியை சாடை, மாடையாகப் பேசுவது மட்டுமல்லாது மற்ற மாணவர்களிடம் இவனுடன் யாரும் பேசாதீர்கள் என்றும் கூறுகிறாராம்.
இதனைவிட மோசமாக மாணவர்களை நடத்தும் பள்ளிகளையும் நாம் பார்க்கிறோம். மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுகிறோம் என்று கூறி, பள்ளியில் கொடுக்கப்பட்ட நேரத்தைத் தவிர மாணவருக்கு அவசரம் என்றால்கூட கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்காத பள்ளிகளைப் பற்றியும், தண்டிக்கிறோம் என்ற பெயரில் பெண் குழந்தையை மாணவர் பயன்படுத்தும் கழிவறையில் நிற்க வைத்த பள்ளியைப் பற்றியும், சவரம் செய்யாமல் வரும் வளரிளம் பருவ மாணவர்களுக்கு ஆசிரியர் அல்லது சக மாணவரிடம் சொல்லிச் சவரம் செய்ய வைக்கும் பள்ளிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.


மாணவர்கள் மீது இது மாதிரியான கொடூரமான தாக்குதல்களும், இன்னும் பாலியல் கொடுமைகள் போன்ற அவலங்களும் இந்தியப் பள்ளிகளில் மட்டுமே சாத்தியம். இதில் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. 


அதே நேரத்தில் நியாயமான காரணங்களுக்காக மாணவர்கள் மீது ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கும்பொழுது பெற்றோர் அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது. அத்துடன், அவர்களின் நலனுக்காகவே ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள் என்பதை தங்கள் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.


ஆசிரியரின் நடவடிக்கை என்பது அடிப்பதோ அல்லது மாணவர்களின் மனத்தைக் காயப்படுத்துவதாகவோ கண்டிப்பாக இருக்கக்கூடாது. எதிர்வினை தற்கொலை வரை போகலாம் என்பதை ஆசிரியர்கள் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தில் மாறவேண்டும் என்றால் பெற்றோரும், ஆசிரியர்களும்தான் மாற வேண்டும். மாறிவிட்ட சமூகச் சூழலில் குழந்தைகளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து, தாங்கள் மாற வேண்டும்.
ஒரு தாய்க்குத் தன் குழந்தையிடம் காட்டும் அன்பு மற்றும் கண்டிப்பின் அளவும், எல்லையும் தெரிந்திருக்க வேண்டும். பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் தாயன்புடன் பழக வேண்டும். 


வீட்டிலும் பெற்றோர்கள் அன்பையும், கண்டிப்பையும் சம விகிதத்தில் கலந்து வெளிப்படுத்துவதால், பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிக்கும் நேரங்களில் மாணவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்துவதுடன், மோசமான எதிர்வினையும் ஆற்ற மாட்டார்கள்.

Aadhaar hearing

First published on 14-Dec-2017
New Delhi: A five-judge constitution bench headed by Chief Justice Dipak Misra will on Thursday decide on a batch of applications seeking a stay on the Centre's alleged coercive measures to force people to link Aadhaar cards with services like cell phones and bank accounts. "Aadhaar... the matters are being taken up tomorrow," Justice Misra said, on a day the Centre extended the deadline for linking Aadhaar.

Bank customers have been granted three more months for compliance till March 31. This will apply to mutual funds, credit and debit cards, and other regulated entities facilitating financial transactions.

NEWS TODAY 27.01.2026