Friday, December 15, 2017

புழல் சிறையில் பாம்பு, எலியெல்லாம் இருக்கு! லண்டன் நீதிமன்றத்தில் மல்லையாவுக்காக வாதம்

Published : 15 Dec 2017 10:54 IST

லண்டன்

லண்டன் நீதிமன்றத்தில், மல்லையாவை இந்தியா அழைத்து வருவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, சென்னை புழல் சிறையின் மோசமான நிலை குறித்து, வாதம் முன் வைக்கப்பட்டது.

பாம்புகள், எலிகள், கரப்பான்களுக்கு நடுவே மருத்துவம், உணவு வசதியின்றி அவதிப்படும் சூழலில், 2013ம் ஆண்டு சென்னை புழல் சிறையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 6 பேர் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசை கேட்டுக்கொண்டது. இந்தியா அளித்த புகாரின் பேரில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் மல்லையாவை கைது செய்தனர். பின்னர் 6,50,000 யூரோ பிணைத்தொகை செலுத்தியதன் அடிப்படையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் மனு மீதான விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி, இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலைமை குறித்தும், அங்கு கைதிகளை நடத்தும் விதம் குறித்தும் வாதங்களை எடுத்து வைத்தார்.

மேலும், ஐரோப்பிய யூனியனுக்கான கைதிகள் சித்திரவதைக்கு எதிரான அமைப்பின் உறுப்பினரான ஆலன் மிச்சேல் இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது, கடந்த 2013ம் ஆண்டு இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 6 இங்கிலாந்து நாட்டினர் மற்றும் 29 பிற நாட்டினர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவரை, தாம் சந்தித்து திரட்டிய விவரங்களை மிச்சேல் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து மிச்சேல் கூறுகையில், ‘‘புழல் சிறையில் எலிகள், கரப்பான் பூச்சிகள், பாம்புகளுடன் வாழ்ந்ததையும், மிகச்சிறிய அறையில் மிகமோசமான நிலையில் இருக்க நேர்ந்ததையும் அவர் என்னிடம் கூறினார். மேலும், உணவும், மருத்துவு சிகிச்சையும் கிடைக்காமல் அவதிப்பட்டதையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்து தரப்படாதது பற்றியும் தெரிவித்தார். இதுபோலவே மும்பை ஆர்தர் ரோடு சிறையிலும், அலிப்பூர் சிறையிலும் மோசமான நிலை இருப்பதையும் அறிய முடிகிறது’’ எனகூறினார்.

இதை தொடர்ந்து வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி கூறுகையில் ‘‘எனவே தான், இந்தியாவுக்குச் செல்வதற்கு விஜய் மல்லையா தயக்கம் காட்டுகிறார். சர்க்கரை நோயாளியான அவர் சிறையில் அடைக்கப்பட்டால் உரிய சிகிச்சையும், மருத்துவ உதவியும் கிடைக்காமல் போகக்கூடும் என்ற கவலை உள்ளது’’ என வாதங்களை வைத்தார்.
வங்கிக் கணக்கு, பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு; 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published : 15 Dec 2017 11:43 IST

பிடிஐ 

 புதுடெல்லி

 


வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் நேற்று (வியாழன்) கூறியது.

இந்நிலையில், ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கக்கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதை இன்று ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வங்கிக் கணக்கு, பான், உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க அனுமதி வழங்கினர்.

இதுபோலவே மொபைல் போனுடன் ஆதார் எண் இணைப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
  மாதப் பிறப்பு, அமாவாசையில் வம்சம் தழைக்க... தர்ப்பணம்! 

 

நாளை சனிக்கிழமை மாதம் பிறக்கிறது. தனுர் மாதம் என்று சொல்லப்படும் மார்கழி மாதம் பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் முன்னோருக்காக தர்ப்பணம் செய்வதும் அவர்களை ஆராதிப்பதும் மிக மிக முக்கியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாதப் பிறப்பில், தர்ப்பணம் செய்வது அவசியம். அதேபோல், சனிக்கிழமை அன்று முன்னோர்களை வழிபடுவதும் அவர்களை ஆராதிப்பதும் கூடுதல் பலன்களை வழங்கும் என்பது உறுதி.

சனிக்கிழமை நாளில் மாதப் பிறப்புக்கான தர்ப்பணத்தை தவறாமல் செய்துவிடுங்கள். மேலும் இந்த நாளில் முன்னோர் நினைவாக காகத்துக்குச் சாதமிடுவதும் குறிப்பாக எள்சாதம் வைப்பதும் இன்னும் புண்ணியங்களைத் தந்தருளும். தோஷங்களை நீக்கும். நம்மையும் நம் சந்ததியினரையும் நிம்மதியும் நிறைவுமாக வாழவைக்கும்.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை 17ம் தேதி அமாவாசை. முன்னோருக்கே உரிய நாள் என்று அமாவாசையைச் சொல்லுவார்கள். எனவே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையை தவறவிடாதீர்கள். மறக்காமல், மாதப்பிறப்பான சனிக்கிழமை அன்றும் அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (17ம் தேதி) அன்றும் என இரண்டு நாளும் முன்னோருக்கு தர்ப்பணங்கள் செய்யுங்கள்.

தர்ப்பண நாளில்... இயலாதோருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். மார்கழி குளிர்மாதம். எனவே கம்பளியோ போர்வையோ தானம் செய்யுங்கள். 

பித்ருக்கள் ஆசியும் இறைவனின் அருளும் கிடைத்து, வாழையடி வாழையென வம்சம் வளரும். வம்சம் தழைக்கும்!
அதிகாலையில் கோலம் போடுகிறீர்களா?' கூட்டம்போட்டுப் பெண்களை அலர்ட் செய்த போலீஸ்

ம.அரவிந்த் பாலஜோதி.ரா

 

 மார்கழி மாதம் என்றாலே வாசலை அடைத்துப் போடப்படும் பெரிய பெரிய வண்ணமயமான மாக்கோலங்கள்தான் அழகு. வீட்டுப் பெண்கள் ஆர்வமுடன் அதிகாலையிலேயே இதற்கென்று தயாராகிவிடுவார்கள். இப்போது அதற்கும் செயின் பறிப்பு திருடர்கள் மூலம் ஆபத்து வந்து விட்டது.
அதாவது, வைகறைப் பொழுதில் தங்கள் வீடுகளுக்கு முன்னால் கோலம்போடும் பெண்களைக் குறிவைத்து செயின் பறிப்புத் திருடர்கள் புறப்பட்டுவிட்டார்கள். அது குறித்த விளக்கம், விழிப்பு உணர்வுக் கூட்டம் இன்று புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மகால் ஒன்றில் நடந்தது. இதில் கலந்துகொண்ட புதுக்கோட்டை நகர காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், கலந்துகொண்ட பெண்களிடம் கோலம் போடும்போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசினார். தவிர, கலந்துகொண்ட பெண்களுக்கு குற்றத் தடுப்பு முறைமைகளை விவரிக்கும் கைப்பிரதிகளையும் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், "கோலம் சம்பந்தப்பட்ட கூட்டம்னு கூப்பிட்டதும் வண்ணக்கோலப்பொடி இலவசமாகத் தருவார்கள் என்று நினைத்து வந்தோம். இங்கு வந்த பிறகுதான் புரிந்தது, கோலம்போட வாசலுக்கு வருவதில் எவ்வளவு ஆபத்தான நிலைமை இன்றைக்கு நிலவுகிறது என்பது. நாம் முன்னெச்சரிக்கை முன்னேற்பாடுகள் இல்லாமல் அலட்சிய மனப்பான்மையுடன் கோலம் போடுவோமெனில், நமது கழுத்தில் உள்ள தாலிச் செயின் களவு போவதோடு, உயிருக்கும் ஆபத்தான நிலைமை ஏற்படும் என்ற உண்மையை இந்தக் கூட்டத்துக்கு வந்ததால் தெரிந்துகொண்டோம்" என்றார்கள்.


 டி.எஸ்.பி. ஆறுமுகத்திடம் பேசினோம். "மார்கழி மாதத்தில் இருட்டோடு எழுந்து கோலம் போடுவது நமது பெண்கள் பின்பற்றி வரும் பாரம்பரிய பழக்கமாக இருக்கிறது. ஆள் அரவமற்றத் தெருக்களில் வெளிச்சம் இல்லாத அந்த அதிகாலையில் கோலம் போடும் பெண்களைக் குறிவைத்து சங்கிலி பறிப்புத் திருடர்கள் நடமாடி வருகிறார்கள். அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைமைகள் பற்றி பெண்களுக்கு விவரித்தோம். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானே தவிர, பெண்களை கோலம்போட வெளியே வரக்கூடாது என்று தடுப்பதற்காக அல்ல" என்றார்.

இந்தக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்திருந்தாலும் காவல்துறை கொடுத்திருக்கும் அறிவுரைகள் கோலம் போடுவதில் ஆர்வமுடைய அத்தனை தமிழ்நாட்டுப் பெண்களுக்குமானது. எனவே, ஒட்டுமொத்த பெண்களின் பொதுநலன் கருதி, அந்த அறிவுரைகளை இங்கே தருகிறோம். இருள் சூழ்ந்திருக்கும் அதிகாலையில் கோலம் போடுவதைத் தவிர்த்துவிட்டு, நன்றாக விடிந்தபிறகே கோலமிடுங்கள். கூடுமானால் சூரிய வெளிச்சம் வந்த பிறகு கோலம்போடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இல்லை, நாங்கள் அதிகாலையில்தான் கோலமிடுவோம் என்பீர்கள் எனில், துணைக்கு வீட்டு ஆண்களை உடன் வைத்துக்கொள்ளவும். உங்கள் கழுத்தை சேலைத் தலைப்பு, துப்பட்டா, டர்க்கி டவல் போன்றவற்றில் ஒன்றைச் சுற்றிக்கொள்ளும். உங்கள் வீட்டு வாசலில் போதிய வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு சக்கர வாகனத்திலோ நடந்தோ உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தாலோ குடிக்கக் தண்ணீரோ அல்லது முகவரியோ கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும். முகத்தை மறைத்து பனிக்குல்லா, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் யாரேனும் உங்களை நெருங்கினால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் வீட்டின் முகப்பில் cctv கேமரா, ஆபத்துக்கால அலாரம் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்'' என்று அறிவுரை வழங்கினார்.

உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி ரிப்பேர் ஆகிறதா? அதற்கான 5 காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

By உமா பார்வதி  |   Published on : 15th December 2017 04:47 PM
girl

கணவன் மனைவி தகறாரில் முன்பெல்லாம் சட்டி பானைகள்தான் உடைந்து கொண்டிருந்தன. நவீன வாழ்வியலில் இப்பிரச்னைக்கு இலக்காவது மொபைல் ஃபோன்தான். கோபத்தில் ஃபோனை தூக்கி எறிவதும், அதை ஆயுதமாகவும் பயன்படுத்துவதும் வீட்டில் சாதாரணமாக நடக்கும் விஷயமாகிவிட்டது.


சண்டை முடிந்த நிலையில் கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு  புதிய மொபைல் வாங்கித் தந்து சமரசம் ஆவதும் அழகுதான். 
வேடிக்கையோ உண்மையோ, இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி இவ்விதமாக இருக்கிறது. மொபைல் ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதைப் பயனாளிகள் மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது
சிலருக்கு சார்ஜ் நீடித்து வராது, ஃபோன் மிகவும் சூடாகும், பேட்டரி விரைவில் பழுதாகிவிடும், அல்லது ஃபோனை அடிக்கடி கீழே போட்டு டிஸ்ப்ளேயை உடைத்துக் கொள்வார்கள். இது போன்ற செயல்களால் அந்த ஃபோனில் உள்ள அதன் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேரை பாதிப்படையும்.
நம் மீது பிரச்னையை வைத்துக் கொண்டு என்ன ஃபோன் இது, ஒரு வருஷம் கூட உருப்படியா வேலை செய்ய மாட்டேங்குது என்று நிறுவனத்தை குறை சொல்பவர்கள்தான் அதிகம். இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்று பார்க்கலாமா?
ஃபேன்ஸி கவர் வேண்டாம்!

நீங்கள் பார்த்து தேர்ந்தெடுத்து, மனத்துக்குப் பிடித்த பின்னர் வாங்கிய பொருள் அல்லவா உங்கள் மொபைல் ஃபோன்? அதற்கு நிச்சயம் உரிய பாதுகாப்பு தேவைதான்.
அதற்குரிய பாதுகாப்பு கவசத்தை உடனடியாக அதே சைஸில் வாங்குவீர்கள் அல்லவா? அதுவும் கூட சரிதான். ஆனால் அப்படி வாங்கிய கவர்கள் மிகவும் ஃபேன்ஸியாகவோ, ப்ளாஸ்டிக் அல்லது மெட்டலில் மலிவு விலையில் வாங்கிப் போடும் போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யும்போது, அதிகப்படியாக வெப்பத்தை அவை உள்வாங்கிவிடும். இது உங்கள் அலைபேசிகளுக்கு தீங்கு விளைவிக்கும். சிறிது சிறிதாக உங்கள் மொபைல் ஃபோனை செயல் இழக்கவைத்துவிடும்.




எப்போதும் தரமான செல் ஃபோன் கவர்களைப் பயன்படுத்துவது நல்லது. அதிக கனமானதையும் தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு சில சமயம் இது குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை கடைக்காரர் அல்லது நண்பரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. மாறாக விளம்பரங்களைப் பார்த்து கவரும்விதமாக இருக்கிறது என்று வாங்கி பயன்படுத்தி, கடைசியில் முதலுக்கே மோசம் எனும் நிலைக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டாம்.
மாதம் ஒரு முறையாவது இவ்வாறு சார்ஜ் செய்யுங்கள்

நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. ஃபோனில் சார்ஜ் முழுவதும் தீருவதற்குள் உடனே ப்ளக்கை மாட்டி ரீசார்ஜ் செய்து கொள்வோம். அல்லது நமக்கு நேரம் இருக்கும் போது, கொஞ்ச நேரம் சும்மாவே போனை சார்ஜில் போட்டுவோம். பயணத்துக்கு கிளம்பும் போதும் சார்ஜ் 80 சதவிகிதம் இருந்தாலும் மீதி இருபதையும் ஏற்றுக் கொள்ள நினைத்து சார்ஜை போடுவோம்.
ஆனால் இந்தப் பழக்கம் மொபைல் ஃபோனின் ஆயுளுக்கு ஒத்து வராத ஒன்று என்பதை மட்டும் தெரிந்து கொள்ள மாட்டோம். காரணம் ஒவ்வொரு தடவை நீங்கள் சார்ஜ் செய்யும் போதும் உங்கள் மொபைல் சூடாகும். அடிக்கடி சார்ஜ் செய்தால் ஒருகட்டத்தில் பேட்டரி வீக்காகி பழுதடைந்துவிடும். மொபைலில் 50 சதவிகிதம் வருவதற்குள் நீங்கள் மூன்று அல்லது நான்கு தடவை சார்ஜ் செய்துவிடுவீர்கள். 20 சதவிகிதம் வந்தபிறகு சார்ஜ் செய்வது கூட பரவாயில்லை. ஃபோனில் முழுவதும் சார்ஜ் தீர்ந்தவுடன்தான் அதில் மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும். ரீ சார்ஜ் என்பதன் அர்த்தமும் அதுதான்.

மாதம் ஒருமுறையாவது உங்கள் ஃபோனில் சார்ஜ் முற்றிலும் குறைந்து பூஜ்ஜியத்துக்கு வந்த பின்னர், அதை சார்ஜ் செய்யுங்கள். இதனால் பேட்டரி நீடித்து வரும். அடிக்கடி ஃபோனில் சார்ஜ் வடிந்து போகாமல் மொபைலில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும்.

நீண்ட நேரம் சார்ஜரை மின்சார இணைப்பில் வைத்திருக்காதீர்கள்

சிலர் இரவில் மொபைல் ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கி விடுவார்கள். காலையில்தான் அதன் ஸ்விட்சை அணைப்பார்கள். உங்கள் மொபைல் போனில் பேட்டரி பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதன் காரணம் தேவைக்கும் அதிகமான நேரம் மொபைல் சார்ஜில் இருப்பதால்தான்.


சில ஃபோன்களின் மாடல்களில் பேட்டரியை வெளியில் எடுக்க முடியாது. அது போன்ற மொபைல் ஃபோன்களை அதிக நேரம் சார்ஜில் வைத்திருக்கையில் நிச்சயம் ஃபோன் சூடாகி உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அடுப்பில் பாலை காய்ச்சும் போது கவனமாக அதன் அருகிலேயே இருப்போம். பால் பொங்கி வழியாமல் தடுக்க உரிய நேரத்தில் அடுப்பை அணைத்துவிடுவோம் அல்லவா? போலவே சார்ஜ் போடும்போதும், அந்த அளவுக்கு இல்லையென்றாலும் 100 சதவிகிதம் சார்ஜ் ஏறியதும் உடனடியாக ஃபோனை சார்ஜிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். அது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும்.

தரமான இணைச் சாதனங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்

பெரும்பாலான மக்கள் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் மலிவான மொபைலுக்குத் தேவையான இணை சாதனங்களையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு நிறுவன ஸ்மார்ட் போன்களும் வெவ்வேறு மின்னழுத்தத்தை வழங்கக் கூடியதாக இருக்கும். மொபைல் ஃபோனுடன் சேர்த்து வாங்கும் சார்ஜர் தொலைந்துவிட்டால், சில சமயம் சந்தையில் கிடைக்கும் மலிவான சார்ஜர்களை அவசரமாக வாங்கிவிடுவோம்.

ஆனால் அவை உங்கள் ஃபோனுக்கு பொருத்தமில்லாத வேறு தர மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். அவை ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனிற்காக உருவாக்கப்படவில்லை, எல்லா சாதனங்களுக்கும் பொருந்தும்படியாக பொத்தாம்பொதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே அவை எந்த சாதனத்திற்கும்  குறிப்பாக பொருத்தமானதாக இருக்க முடியாது. 

அந்தந்த ஃபோனுக்குரிய சார்ஜரையே அதற்குப் பயன்படுத்த வேண்டும். சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கிறது என தரமற்ற சார்ஜர்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு ஃபோனுக்கும் மின்சார சப்ளை இந்தளவுக்கு இருக்க வேண்டும் என்ற குறிப்பு இருக்கும். ஆனால் அதை விடுத்து வேறு அளவில் இருந்தால் நாளாவட்டத்தில் அது பிரச்னை தர ஆரம்பித்துவிடும். 


சாஃப்ட்வேர் அப்டேஷன்

சாஃப்ட்வேர் அப்டேஷன் செய்து கொள்கிறீர்களா என்று அடிக்கடி உங்கள் ஃபோனில் ஒரு மெசேஜ் வருகிறதா? ஓசியில் கிடைக்கிறதே என்று எந்த அப்டேட்ஸ் வந்தாலும் அதற்கு ஓகே கொடுத்துவிடக் கூடாது. அப்டேஷன் சில சமயம் நல்லதுதான். ஆனால் 17 அப்டேஷன்கள் கிடைத்தால் ஒட்டுமொத்தமாக அதை செய்யும் போது உங்கள் ஃபோன் ஓவர் ஹீட்டாகிவிடும்.
தவிர லேட்டஸ்ட் வெர்ஷன் என்று சில அப்டேட்டுக்கள் தரவிறக்கமாகும் ஆனால் உங்கள் போனில் அதற்கான வசதி இல்லாமல் போனால் பிரச்னைதான். மேலும் வைரஸ், பக்ஸ் போன்ற அழையா விருந்தாளிகள் உங்கள் மொபைல் ஃபோன்களில் தஞ்சம் அடைந்தால் விரைவில் அது மென்பொருளை அழித்து உங்கள் ஃபோனை குட்டிச்சுவராக்கிவிடும். தேவையில்லாத ஆப்களை டவுன் லோட் செய்யாமல் இருப்பதும் உங்கள் மொபைல் ஃபோனின் ஆயுள் நீடித்திருக்கச் செய்யும் ஒரு வழியாகும்.




நீரின்றி அமையாது உலகு, போலவே ஃபோனின்றி இயங்காது அன்றாட வாழ்வு என்று இயந்திரம் சூழ் வாழ்நிலையில், நாம் பாடுபட்டு வாங்கிய மொபைல் ஃபோன்களை பத்திரமாக பாதுகாப்பது நமக்கும் நல்லது, நம் பர்ஸுக்கும் நல்லது.

MCI approves shifting of Chintpurni students BFUHS invites them for counselling on Dec 18

Tribune News Service

Faridkot, December 13

After over a week’s protest by 249 MBBS students of now-defunct Chintpurni Medical College and Hospital, the Oversight Committee (OC) of the Medical Council of India (MCI) and the Union Health Ministry today gave their nod to the shifting of these students to other medical colleges in the state.

The Baba Farid University of Health Sciences (BFUHS) invited all 249 students of 2014 and 2016 batches at Guru Gobind Singh Medical College, Faridkot, on December 18 for counselling. “The counselling process has been started as per the directions of the Department of Medical Education and Research (DMER),” said Dr SP Singh, Registrar, BFUHS.

 Dr Sushil Garg, president of the Chintpurni Medical College Parents’ Association, said after approval by the OC, the Union Health Ministry also gave its nod to the shifting as per the orders of the Punjab and Haryana High Court. Demanding expeditious approval of their shifting, after it was ordered by the High Court on September 8 and approved by the executive committee of the MCI on November 22, 249 students decided to camp in New Delhi last week till the OC and the Union Health Ministry gave their approval to shifting

. While 101 students of the 2014 batch will be shifted only to three government colleges in the state, 148 students of the 2016 batch will be shifted to government and private colleges as per their allotment on quota seats in Chintpurni college.
ஆங்கிலம் அறிவோமே 190: இந்த வலையில் சிக்கிடாதீங்க!

Published : 12 Dec 2017 15:22 IST


ஜி.எஸ்.எஸ்.



கேட்டாரே ஒரு கேள்வி

“தாய் மொழியில் நிறுத்தக் குறிகளே கிடையாதாமே!”.

உங்கள் தாய்மொழி தமிழ் என்றால் அதில் நிச்சயம் நிறுத்தக் குறிகள் (Punctuation marks) உண்டு. ஆனால், நீங்கள் தாய்லாந்தின் முக்கிய மொழியான தாய் மொழியைக் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த மொழியில்கூட நிறுத்தக் குறிகள் உண்டு, ஆனால், மிகக் குறைவாம். வார்த்தைகளுக்கிடையே இடைவெளிகூட அவசியமில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளிகூட இல்லாமல் வாக்கியங்களை அவர்கள் எப்படி அமைக்கிறார்கள் என்பதை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

“என் கணினியில் ஏதோ பிரச்சினை என்று அதைச் சரிசெய்யச் சொன்னால் என் மகன் ‘பிக்னிக்’ என்று நமட்டுச் சிரிப்போடு சொல்கிறான். பிக்னிக் என்றால் சுற்றுலா என்றுத் தெரியும். அதற்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா? அகராதியைத் தேடியும் பயனில்லை” என்கிறார் ஒருவர்.

கிண்டல் சிரிப்புக்குப் பின்னணி இதுதான். PICNIC என்பதன் விரிவாக்கம் Problem In Chair, Not In Computer. அதாவது கணினியில் அல்ல, உங்களிடம்தான் பிரச்சினை!

“ஒரு வார்த்தைக்குப் பதிலாக அதே அர்த்தம் கொண்ட வேறு வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத்தானே thesaurus என்பது உதவுகிறது?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Thesaurus என்பது ஒரு வார்த்தையின் சம அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் எதிர் அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் அளிக்கும் நூல். ஆனால், அவற்றிலுள்ள சமவார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, Vision என்றாலும் sight என்றாலும் ஒரே பொருள்தான் – பார்வை. ஒன்றின் சம வார்த்தையாக இன்னொன்று thesaurus-ல் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஒருவரை “He is a visionary” எனும்போது அது அவருக்கான பெரிய பாராட்டு. தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று இதற்குப் பொருள். Vision என்றாலும் Sight என்றாலும் ஒன்றுதானே என்ற எண்ணத்தில் He is a sight என்று நீங்கள் கூறிவிட்டால் சம்பந்தப்பட்டவர் உங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்காமல் போகலாம். அது அவரை அவமானப்படுத்துவதுபோல. பேச்சு வழக்கில் ‘அவர் ஒரு ஜந்து’ என்று கிண்டலாகக் குறிப்பிடுவதைப் போன்றது அது.

அதேபோல see என்பதற்கான சம வார்த்தை look. ஆனால், oversee என்றால் surpervise செய் என்று அர்த்தம். Overlook என்றால் அலட்சியம் செய்துவிடு என்று அர்த்தம்.

“He was high” என்பது ஒருவரைக் கேலி செய்யும் வாக்கியம்தானே?

மதுவின் ஆதிக்கத்தில் ஒருவர் இருப்பதை “He was high” என்று குறிப்பிடுவதை மட்டுமே கவனித்துவிட்டு இப்படிக் கேள்வி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.

He was high என்பது மனநிலையைக் குறிக்கிறது. அவர் அப்போது ஒருவிதப் பரவச நிலையில் இருக்கிறார் என்று மட்டுமே பொருள். அவருக்கு மிகவும் பிடித்த அரிய வகைப் பாட்டு ஒன்றைக் கேட்டிருக்கலாம். அவரது கடிதம் ஒன்று நாளிதழில் பிரசுரமாகி இருக்கலாம். அவருடைய சகோதரர் வெளிநாட்டிலிருந்து அடுத்த வாரம் வீடு திரும்புவதாகத் தகவல் கூறி இருக்கலாம் (இந்தப் பட்டியலில் “அவர் மது அருந்தி இருக்கலாம்’’ என்பதற்கும் இடம் உண்டுதான்). எனவே, when somebody is high அவர் குடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

Fishing என்றால் மீன் பிடித்தல். Phishing என்றால்?

இதுவும் ஒருவிதத்தில் ‘வலை வீசுவதுதான்’. வலைத்தளத்தில் வலை வீசப்படுகிறது.

உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்து சேரும். நம்பகமான ஒருவரிடமிருந்து வந்ததுபோல அது தோற்றம் அளிக்கும். இதைப் படித்துவிட்டு நீங்கள் உங்கள் அந்தரங்கமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள் அல்லது நீங்கள் பலவிதங்களில் செய்திருக்கும் முதலீடுகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வீர்கள். இவற்றால் உங்களுக்கு வருங்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும். சில நேரம் இந்த மோசடி மின்னஞ்சல்களில் குறிக்கப்பட்டிருக்கும் வலைத்தளத்தை கிளிக் செய்துவிட்டாலே நம் கணினிகளின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய malware அதில் புகுந்துவிடும்.

இதுபோன்ற மோசடியை முகம் தெரியாத பலரும் நடத்துகிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரையோ நிறுவனத்தையோ குறிவைத்து இந்த மோசடி நடைபெற்றால் அதை Spear Phishing என்று குறிப்பிடுகிறார்கள்.


போட்டியில் கேட்டுவிட்டால்?

It has now been _________ that 120 people died in the air crash.

(a) Assured

(b) Confirmed

(c) Ensured

(d) Accepted

(e) Afraid

விமான விபத்தில் 120 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் இந்த வாக்கியத்தின் அர்த்தம்.

Afraid என்ற வார்த்தை இங்குப் பொருந்தவில்லை. காரணம், it is என்று வாக்கியம் தொடங்கவில்லை. It has now been என்று தொடங்குகிறது.

Assured, ensured போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அதன் அர்த்தம் விபரீதமாக இருக்கிறது. ஏதோ அந்த விமான விபத்தில் 120 பேர் இறந்தாக வேண்டுமென்று உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதுபோல் தொனிக்கிறது.




மீதமிருக்கும் வார்த்தைகளான confirmed, accepted ஆகியவற்றைப் பார்ப்போம். ஏதோ ஒரு அமைப்பு ‘120 பேர் இறந்ததாக’ கூறியிருந்து அதைப் பிறர் (அல்லது யாரோ) ஏற்பதாக இருந்தால் accepted பொருந்தலாம். அப்படி இங்கு எதுவுமில்லை.

விமான விபத்து நடந்து அதில் எவ்வளவு பேர் இறந்தனர் என்று தெரியாத நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, confirmed என்ற வார்த்தை இங்கே பொருந்துகிறது.

It has now been confirmed that 120 people died in the air crash.

“Else என்ற வார்த்தைக்கு என்னதான் பொருள்?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார் ஒரு வாசக நண்பர்.

I spoke to Karthick but I did not talk to anyone. இந்த வாக்கியம் தவறானது. அதன் முதல் பகுதி “நான் கார்த்திக்கிடம் பேசினேன்” என்று உள்ளது. அந்த வாக்கியத்தின் இரண்டாவது பகுதி “நான் யாரிடமும் பேசவில்லை” என்கிறது. இரண்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

நான் கார்த்திக்கைத் தவிர வேறு யாரிடமும் பேசவில்லை - இதுதான் கூறவந்த தகவல். இதை ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால் ‘else’ என்ற வார்த்தை தேவைப்படுகிறது.

I spoke to Karthick but I did not talk to anyone else.

விஜயகுமார் கல்லூரிக்குக் கிளம்புகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு “He is not at college. He must have gone somewhere” என்று சொல்லக் கூடாது. ஏனென்றால் ‘somewhere’ என்பதில் கல்லூரியும் அடக்கம்தானே? எனவே “He is not at college. He must have gone somewhere else” என்றுதான் சொல்ல வேண்டும்.

Label என்பது பள்ளிப் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகங்களின் அட்டையில் ஒட்டப்படுவதுதானே?

அதுமட்டுமல்ல நண்பரே. பல பொருள்களை வாங்கும்போது அவற்றின்மீது ஒட்டப்பட்டிருக்கும் தாளில் அந்தப் பொருள் தொடர்பான பல தகவல்களை எழுதி இருப்பார்கள். இந்தச் சீட்டின் பெயர்கூட labelதான்.

Tittle என்றால் என்ன?

ஆங்கில எழுத்துக்களான ‘i’, ‘j’ ஆகியவற்றின் மேலே உள்ள புள்ளியைத்தான் அப்படிக் கூறுவார்கள். மிகக் குறைந்த தொகையையும் அப்படிக் குறிப்பிடுவதுண்டு.

You should not be enviable of others’ progress. சரிதானே?

மற்றவரின் முன்னேற்றத்தைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், enviable என்ற வார்த்தைக்குப் பதிலாக envious என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

NEWS TODAY 27.01.2026