Monday, December 18, 2017

பெரியாா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை

ஈரோடு: பணி நியமன முறைகேடு புகாரில் சிக்கிய பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த அங்குமுத்து அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அங்கமுத்து, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள்.

அந்த நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. முறைகேடு வழக்கு தொடர்பாக அவர் பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பெரியார் பல்கலையின் உடற்கல்வி துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். இன்று பெருந்துறையில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அங்கமுத்து பதிவாளராக இருந்தபோது பல்கலைக்கழக வரவு செலவு கணக்குகள் ஆவணங்கள் தொலைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக உயர்மட்டக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com
Dailyhunt
தினகரனுக்கே ஓட்டு போடுங்கள்.... பாஜக தலையில் குண்டை போடும் 
சு.சாமி

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரசாரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தங்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கை அறிந்து கொள்ள அதிமுகவும், ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று திமுகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தினகரனை தோற்கடிக்க அதிமுகவும், மதுசூதனனை தோற்கடிக்க தினகரன் அணியும் கடுமையாக போராடி வருகின்றனர். பணப்பட்டுவாடா என்று பாஜகவும், திமுகவும் புகார் அளித்து வருகின்றன.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து அங்குள்ள பாஜக நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அங்கு திமுகவுக்கும், தினகரனுக்கும் போட்டி நிலவுகிறதாம். எனவே தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று கருத்தை பதிவு செய்து பாஜகவின் தலையில் குண்டை போட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

source: oneindia.com
Dailyhunt
திருப்பதியில் டோக்கன் சிஸ்ட தரிசனத்துக்கு ரிகர்சல்! என்ன நடக்கிறது? 

#Tirupati

எஸ்.கதிரேசன்

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க தினமும் குறைந்தபட்சமாக 60 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். அரசு விடுமுறை நாள்கள் மற்றும் பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை திரள்கிறார்கள். சேவைகளில் பங்கேற்று தரிசனம், சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதையில் நடந்து வருபவர்களுக்கான தரிசனம்), சர்வ தரிசனம் (இலவச தரிசனம்) எனப் பல வகையான வழிகளில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.



இவர்களில் இலவச தரிசனம் செய்பவர்கள் மணிக்கணக்காக, அங்குள்ள காத்திருப்பு அறைகளில் பல மணி நேரங்கள் காத்திருக்கவேண்டி உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம், நேரம், நாள் குறிப்பிடப்பட்ட புதிய டோக்கன் தரிசன முறையை அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இன்று (18-ம் தேதி) திங்கள்கிழமை தொடங்கி, வருகிற 23 -ம்தேதி (சனிக்கிழமை) வரை இந்தப் புதிய டோக்கன் முறையை அறிமுகம் செய்துள்ளது.



இந்தப் புதிய தரிசன முறையின் வாயிலாக இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யமுடியும். இந்தப் புதிய அனுமதிச் சீட்டுகள் திருமலையில் 14 இடங்களில் 117 கவுன்டர்களில் வழங்கப்படுகின்றன. திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திட உத்தரவிட்டுள்ளார்.
திருமலையில் செய்யப்படும் தரிசன ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு பார்வையிட்ட பிறகு நிருபர்களிடம் தேவஸ்தானம் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி தெரிவித்தார்.



''வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான விரதமான 'வைகுண்ட ஏகாதசி விரதம்' டிசம்பர் 29-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வைணவக் கோயில்களில், 'சொர்க்கவாசல் திறப்பு' நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறும்.
திருமலை திருப்பதிக்கும் ஏராளமான பக்தர்கள் வரவிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டும் பிறப்பதால் டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் வி.ஐ.பி. தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.



வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் டிசம்பர் 28-ம் தேதி காலை 10 மணி முதல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் கம்பார்ட்மென்ட்டுகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டால், அவர்களுக்கு காபி, டீ, மோர், மற்றும் உணவு வகைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் காலை 8 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு, வைகுண்ட வாயில் வழியாக வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் வைகுண்ட ஏகாதசி வருவது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி முடிந்ததும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், அப்போதும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதனால், டிசம்பர், 29 தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை சிபாரிசுக் கடிதங்கள், நன்கொடையாளர்களுக்கு வழங்கும் தரிசனம், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், மூத்தக் குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள், மலைப்பாதையில் நடந்து வருபவர்கள் ஆகியோருக்கு வழங்கும் சிறப்புச் சலுகை முறையிலான தரிசனங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஆனால், பக்தர்களின் வசதிக்காக நடந்து மலை ஏறி வர விருப்பமுள்ளவர்களுக்காக இந்த நாள்களில் திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்'' என்றும் தெரிவித்தார்
மருத்துவ கவுன்சலிங்கில் அபராதம் வசூலிப்பது தீர்வாகுமா?

சக்தி தமிழ்ச்செல்வன்

இன்றைய சூழலில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுவருகின்றன. இதற்கிடையே அரசும் கல்வியாளர்களும், எளிய மக்களுக்கும் அந்தப் படிப்புகள் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள். மருத்துவக் கல்வி போன்ற உயர்கல்வியைப் படிக்க, நுழைவுத்தேர்வு, கவுன்சலிங் முறை எனப் பல நிலைகளைக் கடந்தபிறகுதான் சீட் வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ கவுன்சலிங் முறையில் சில பிரச்னைகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.



‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கவுன்சலிங், மாநில அரசு நடத்தும் கவுன்சலிங், மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் கவுன்சலிங் எனப் பல்வேறு கவுன்சலிங்களுக்குப் பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சில மாணவர்கள், தகுதியிருக்கும்பட்சத்தில் நிகர்நிலைக் கல்லூரிகளுக்கான கவுன்சலிங் மற்றும் அரசு நடத்தும் கவுன்சலிங் என இரண்டிலும் கலந்துகொள்கிறார்கள். இப்படித் தனித்தனியாகச் சேர்க்கை முறை பின்பற்றப்படுவதால், தரவரிசைப் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிகர்நிலைக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களைத் தேர்வுசெய்து முடக்கிவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு பின்வரிசையில் உள்ள மாணவர்களுக்கு அந்த இடங்கள் கிடைக்காமல்போகின்றன. பிறகு சிறந்த அரசுக் கல்லூரியில் கிடைத்த இடத்தை வைத்துக்கொண்டு, மற்ற நிகர்நிலைக் கல்லூரி இடங்களை விட்டுவிடுகிறார்கள். இதனால், அந்த இடங்கள் காலி இடங்களாகிவிடுகின்றன. பல சுற்றுகளுக்குப் பிறகே அவை நிரப்பப்படுகின்றன. இதனால் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்டுகிறது' என, பல்கலைக்கழகங்களின் தரப்பில் கூறப்படுகிறது.

இதையொட்டி, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘மத்திய அரசு சேர்க்கை நடத்தும் மருத்துவ, பல் மருத்துவ இடங்களுக்குப் பதிவுக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சலின் ஒப்புதலுடன் மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. தனியார் மற்றும் நிகர்நிலைக் கல்லூரி இடங்களுக்கு இந்தப் பதிவுக் கட்டணம் இரண்டு லட்சம் ரூபாயாகவும், அரசு இடங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும்.

தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக்கொள்ளும் மாணவருக்கு, கல்விக் கட்டணத்தில் அந்தப் பதிவுக் கட்டணம் கழித்துக்கொள்ளப்படும். ஒருவேளை, அவர் வேறு கல்லூரிகளில் தேர்வுசெய்த இடத்தை ஏற்றுக்கொண்டு இந்த இடத்தை நிராகரித்துவிட்டால், அவருக்கு அபராதமாக. பதிவுக் கட்டணம் திருப்பித்தர மாட்டாது.

அத்தகைய மாணவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழக்கவேண்டியிருக்கும். மேலும், மேற்கொண்டு அவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்க தடை விதிக்கப்படும். இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டிலிருந்து இது அமல்படுத்தப்படும். எல்லாக் கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த கவுன்சலிங் நடத்தினால்தான், மருத்துவ இடங்களை முடக்கும் பிரச்னையைத் தீர்க்க முடியும்' என்று தகவல் வெளியாகியுள்ளது.



சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம். “இதுபோன்ற காலி இடங்கள் ஏற்படுவதற்குக் காரணம் அரசின் கவுன்சலிங் முறைதான். அரசுக் கல்லூரிகளுக்கான கவுன்சலிங்கை முதலில் நடத்திவிட்டு, பிறகு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கவுன்சலிங்கை நடத்தும்போதுதான் இதை சரிசெய்ய முடியும். அதேபோல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கடைசி நேரத்தில் தங்களுக்கான காலி இடங்களை தாங்களே நிரப்பிக்கொள்ள அரசு அனுமதித்துவிடுகிறது. அவ்வாறு இல்லாமல், அரசே முழுமையாக கவுன்சலிங்கை நடத்த வேண்டும். இதற்கேற்ப சட்டம் கொண்டுவரும்பட்சத்தில் காலி இடங்கள் இருக்காது.

இதில் நாம் மற்றொரு முக்கியமான விஷயத்தைப் பார்க்க வேண்டும். இந்தக் காரணத்தால் மட்டுமே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சீட் காலியாவதில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கான எல்லா வசதிகளும் உள்ளன. ஆனால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இந்த வசதிகள் இருக்குமா என்ற அச்சம் மாணவர்களிடையே உள்ளது. அதைத் தாண்டி அங்கு வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம், அரசால் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை என்பதும் மிக முக்கியக் காரணம்" என்றார்.

மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்து அவரிடம் கேட்டபோது, “பாண்டிச்சேரியில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அதுபோல மத்திய அரசு செய்வது ஏழை மாணவர்களுக்குப் பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்தப் பல்கலைக்கழகக் காலி இடங்களை நிரப்பும் வழி அரசிடம் உள்ளது. அதைவிடுத்து மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பது முறையானதாக இருக்காது" என்றார்.

மருத்துவம் படிப்பது என்பது, இன்றும் பலருக்கும் மாபெரும் கனவாகவே இருந்துவருகிறது. அதுவும் தனியார் கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை, போதிய வசதியின்மை போன்ற பிரச்னைகளும் இருப்பதால், மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் வெகுவாகவே உள்ளது. அதைப் போக்க, அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். கல்வியை மட்டுமே தன் செல்வமாக நம்பி இருக்கும் கடைக்கோடி மாணவனுக்கு, அரசு சரியான திசையைக் காட்டவேண்டுமே தவிர, அபராதம் வசூலிப்பது மட்டுமே தீர்வாகாது.
கவலைக்கிடமாகும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்..!

By எஸ். வைத்யசுப்பிரமணியம் | Published on : 18th December 2017 02:34 AM |

எனது மாணவர்களிடமிருந்தும் நலம் விரும்பிகளிடமிருந்தும் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளால் எனது அலைபேசி இறுதியில் செயலிழந்துவிட்டது. அவர்கள் அனைவரது கேள்வியும் ஒன்றுதான்.

""நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகம் என்று தங்களை அறிவித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டதே, இனி என்ன ஆகும்? நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இதுவரை வழங்கிய பட்டங்கள் செல்லாமல் போய்விடுமா? இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?''

இதுவே அனைவரது கேள்விகளின் அடிநாதம். இதுவரை வழங்கப்பட்ட பட்டங்கள் மட்டுமல்ல, வழங்கப்படுகிற பட்டங்களும், இனிமேல் வழங்கப்போகும் பட்டங்களும், 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தின் பிரிவு 22-இன் படி செல்லுபடியாகும் என்பதே எனது பதில். இதைப் புரிந்துகொள்ள இதன் கடந்த கால வரலாற்றை நாம் அறிந்தாக வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்த முதல் கல்வி ஆணைய அறிக்கையில் (1948-49) நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைத் தோற்றுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஓர் அத்தியாயமே இருந்தது. அதில், பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நெறிமுறைகளை வடிவமைக்குமாறு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதிலும், பிற நாடுகளில் எவ்வாறு பல்கலைக்கழகங்கள் சட்டரீதியான செயல்பாடாக அல்லாமல், அரசுத் தலைமையின் அனுமதியுடன் நிறுவப்படுகின்றன என்பதைப் பரிசீலிக்குமாறும் கூறப்பட்டது.
அதுவே, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற கருத்து பிறக்கக் காரணமானது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் பெயர் சூட்டுவதைத் தீர்மானிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுமாறும் கல்வி ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாது போய்விட்டது. 

அதேசமயம், உலக அளவிலான கல்வி நிறுவனங்களிலிருந்து எழுந்த நிர்பந்தம் காரணமாக, நமது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எப்போது பல்கலைக்கழகங்களாக மாறும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது. ஏதாவது ஒரு வகையில் இதை சரிப்படுத்தியாக வேண்டியிருந்தது. 

1984 -இல் பிரேம் சந்த் ஜெயின் (எதிர்) ஆர்.கே.சாப்ரா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் குறித்த பிரச்னையை விவாதித்தது. அப்போது, யுஜிசி சட்டத்தின் பிரிவு-23ஐ திருத்தம் செய்ய வேண்டுமா, அல்லது மறுவிளக்கம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

அதையடுத்து, மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், யுஜிசி தலைவர், அனைத்திந்திய தொழிற்கல்விக் கூட்டமைப்பின் (ஏஐசிடிஇ) தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்குமாறு யுஜிசிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அந்தக் குழு, "பிரத்யேக விதிகளின்கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பொது பல்கலைக்கழகங்களாக உருவாக்கப்பட்டிருப்பதால், அவை தங்களை பல்கலைக்கழகம் என்று அழைத்துக் கொள்ளலாம்' என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், 2006 செப்டம்பரில் யுஜிசி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பெயரில் பல்கலைக்கழகம் என்று பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. 

முடிந்துபோன விஷயம் என்று கருதப்பட்ட இந்த விஷயம், ஒரிஸா லிஃப்ட் இரிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (எதிர்) ஸ்ரீ ரபிசங்கர் பாட்ரோ வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவம்பர் 3-இல் தீர்ப்பளித்தபோது புதிய பரிமாணம் பெற்றுவிட்டது. அதனால் புதிய சர்ச்சையும் தோன்றிவிட்டது.

அந்த வழக்கு சேவை விவகாரம் தொடர்பானது மட்டுமே. குறிப்பாக தொலைநிலைக் கல்வி வாயிலாக பொறியியல் பட்டங்களைப் பெற முடியுமா என்பது குறித்த வழக்கு அது. இந்தியாவிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நான்கில் மட்டுமே இருந்த பிரச்னை அது. மீதமுள்ள 120-க்கு மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறித்த வழக்கு அல்ல அது. அதாவது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பானதல்ல அந்த வழக்கு. அதேசமயம், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பாக மேலும் சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்பதையும் கூறியாக வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது, பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்று யுஜிசி ஏற்கெனவே அளித்த அனுமதியையும், அதற்கு வித்திட்ட பிரேம் சந்த் ஜெயின் வழக்கு விவரத்தையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக அறிந்திருந்ததா என்பது ஐயமாக உள்ளது. பிரேம் சந்த் ஜெயின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த சுதந்திரம்தான், யுஜிசியின் பல்கலைக்கழகப் பெயரிடல் குறித்த இணக்கமான உத்தரவுக்கு காரணமானது. அதுமட்டுமல்ல, பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கை (2001) தற்போதைய வழக்கிலிருந்து வேறுபடுத்திக் காணுமாறும் உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வு கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்த விரும்பிய சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கங்களும் சங்கங்களும் உச்ச நீதிம ன்றத்தை அணுகின. சட்டத்தை உருவாக்கியவர்கள் அதற்குப் புதிய விளக்கம் அளிக்க வாய்ப்பளித்தாலும், அது அடிப்படை அம்சத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கக் கூடாது என்ற அம்சத்தின் அடிப்படையில் அவர்களது மனு அமைந்தது. 

சட்டத்தின் காரண விளக்கம் (2007) பற்றி இஸ்ரேலிய சட்ட மேதை அஹாரன் பராக் கூறிய காரணத்துடன் கூடிய சட்ட நிறுவுதலை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (எதிர்) நுஸ்லி நெவிலி வாடியா வழக்கில் (2008) உச்ச நீதிமன்றம் பாராட்டியது. அதேபோல, யுகோ வங்கி (எதிர்) ராஜீந்தர் லால் கபூர் வழக்கில் (2008), "காசஸ் ஆமிசஸ்' (சட்டப்படி ஏற்கத் தேவையில்லாத) கொள்கைகளையும் உச்ச நீதிமன்றம் பாராட்டியது. அதற்கு, ம.பி. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.பி.சிங்கின் விளக்கம் மேற்கோளாகக் கொள்ளப்பட்டது. இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்  பட்டன. 

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் பயனிழந்தன; அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. எனவே, நவம்பர் 3-இல் அளிக்கப்பட்ட தீர்ப்பு, எந்தத் திருத்தமுமின்றி நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்படி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் புதிய கண்காணிப்புத் திட்டத்தையும் கட்டுப்பாட்டு விதிகளையும் உருவாக்க குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும். 

இதுவரை நடந்த கதை இதுதான். தற்போதைய சூழலில், இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விதிமுறைகளை உருவாக்க வேண்டிய மத்திய அரசு மற்றும் சட்டரீதியான அமைப்புகளான யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவை முன்பு கீழ்க்கண்ட வாய்ப்புகள் உள்ளன:

செயல் 1: உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட "ஆபிட்டர் டிக்டா'வை (வழக்கிற்குத் தொடர்பின்றி, போகிறபோக்கில் கூறும் கருத்து) பரிசீலிக்கும்போது, 1956-ஆம் வருடத்திய யு.ஜி.சி. சட்டத்தின் 23-ஆம் பிரிவில் திருத்தம் செய்வதும், யு.ஜி.சி. சட்டத்தின் 3-வது பிரிவைப் பயன்படுத்தி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் "பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பதும் அவசியமாகி உள்ளன.

செயல் 2: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பொறியியல் பட்டங்கள் விஷயத்தில், அவை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன் துவக்கப்படாது இருந்தால் மட்டுமே, ஏ.ஐ.சி.டி.இ. ஒப்புதலுக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

தற்போதைய வழக்கில் இது உச்ச நீதிமன்றத்தால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. தற்போதுவரை, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை உறுப்புக் கல்லூரியாகச் சேர்க்க ஏ.ஐ.சி.டி.இ. சட்டத்தில் இடமில்லை. இதனை பாரதிதாசன் பல்கலைக்கழக வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. 

செயல் 3: யு.ஜி.சி.யால் உத்தேசிக்கப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக சுயஆட்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் புதிய குழு செயல்பட வேண்டும். அது, நல்ல முறையில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், தவறிழைப்போரை மட்டும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது உச்ச நீதிமன்றம் யு.ஜி.சி.க்கு இட்ட உத்தரவுடனும் ஒத்துப்போகும். 

இறுதிப் பரிந்துரை: சட்டத் திருத்தங்கள் ஆசுவாசம் அளிக்க வேண்டுமே தவிர, கழுத்தை நெரிப்பதாக இருந்துவிடக் கூடாது.

கட்டுரையாளர்: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் அபிவிருத்தித் துறை டீன்.
Alliance Air plane’s wing hits step ladder at Chennai airport

V Ayyappan| TNN | Updated: Dec 17, 2017, 11:21 IST



CHENNAI: A Chennai-Trichy Alliance Air flight was delayed by three hours after the wing of the aircraft hit a step ladder belonging to IndiGo airlines at Chennai airport on Sunday morning. There were no passengers inside the plane.

The plane that was scheduled to depart at 7.05am was being brought from the hangar to Bay 51 to commence boarding of passengers when the incident happened. It happened around 6.30am.

The aircraft had been grounded for inspection and the Directorate General of Civil Aviation (DGCA) had been informed, said an official.

The inspection revealed that there was no serious damage to the plane, and it was certified fit to fly.

The flight departed to Trichy at 10.10am.
1.4 lakh TN students deniedhall ticket over unpaid fees

Ram Sundaram| TNN | Updated: Dec 17, 2017, 23:46 IST

Chennai: The son of a daily wage worker and widow, 17-year-old Babu K is the first individual from the tribal hamlet of of Malaiyarasan Kuppam near Gingee panchayat in Villupuram to clear the state Class XII board exams.
He desperately wanted to study further, but could not enroll in a college because of the family's poverty. His father died when he was a child and Babu's mother K Vijaya had to set aside a large part of her meagre earnings to allow him to complete his schooling. So the youngster decided to give up his dreams and work in a nearby cottage industry.

But a day before Babu was to start work, a local dalit and tribal rights activist organised an awareness camp at which he learned that he could pursue his dream and continue his studies with a government scholarship. He applied for the state adi dravida and tribal welfare department's post-matriculation scholarship. The Tamil Nadu government through the scheme funds an eligible candidate's entire tuition fees, accommodation and food expenses.

Babu overcame opposition from his family and villagers, applied to an engineering college in June and gained admission. But four months down the line, the government issued orders slashing the scholarships in the scheme by more than a third.

The college has now refused to give Babu a hall ticket for his coming semester examinations; his classmates had no such trouble and are preparing for the exams. Not knowing what to do, he approached his mother for help. All she could do was sell some of her belongings and gather Rs 5,000. Alternating between a sense of helplessness and frantic distraction, Babu is on the verge of dropping out.

Babu is one of more than 1.4 lakh students, in courses as varied as medicine, engineering, law and arts, who the government's withdrawal from its commitment to funding the education of dalit and tribal students has left in the lurch.

Many of these students in October filed petitions with adi dravida welfare minister V M Rajalakshmi, the department's officials and the chief minister's special grievance cell. They are yet to receive a response, said M Bharathan, of Ambedkar-Kalvi Centenary Movement, which works for students from economically weaker sections.

"The scheme was launched by late chief minister J Jayalalithaa in 2012 to reduce the dropout rates among SC and ST students," he said. "Within less than a year of her demise, the scholarship has been cut without consensus or the approval of the assembly."

An official said the adi dravida welfare department cut the funds for the scholarship scheme on an expert committee decision. "We will soon release application forms for the scholarship but the cut will remain," he said.

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in 5 yrs

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in  5 yrs  Ethics Board Says Non-Med Practitioners Can’t File Appeals  Rema.Nagarajan@tim...