Wednesday, December 20, 2017

பல்கலை பதிவாளர் மரணத்தில் அரசியல் பின்னணி
முறைகேடுகளின் புகலிடமானது உயர்கல்வி


உயர்கல்வியில் நடந்த முறைகேடுகளின் உச்சமாக, சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தற்கொலை செய்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள், உயர்கல்வி அதிகாரிகளை விசாரித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.



சேலம் பெரியார் பல்கலை இணைப்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் என, 95 கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரிகளில் முதல்வர், பேராசிரியர், பணியாளர்கள் நியமனத்துக்கு, பல்கலையின் சிண்டிகேட் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.இந்நிலையில், பல்கலையின் உடற்கல்வி இயக்குனர், அங்கமுத்து, 2012 ஆக., முதல், 2015 வரை, பதிவாளராக இருந்த போது, பேராசிரியர்கள், பணியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.

அங்கமுத்து வீட்டில் சோதனை

இதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக, 2014ல் புகார் எழுந்தது. மேலும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கும், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் வழங்கி, தேர்ச்சி பெற வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கமுத்துவின் வீட்டில் நடத்திய சோதனையில், 'டம்மி' விடைத்தாள்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து, பதிவாளர் அங்கமுத்துவின் பதவி காலத்தில் நடந்த, பணி நியமனங்கள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து, பல்கலை நிர்வாகம், சிண்டிகேட் கமிட்டி உள்ளிட்டவை விசாரணையை துவக்கின. அப்போது, பணிநியமனம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகின.

அங்கமுத்துவிடம், பல்கலை நிர்வாகம் விசாரித்தபோது, 'ஆவணங்கள் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது' என, கூறிவிட்டார்.

அங்கமுத்துவிடம் விசாரணை

அதேநேரம், பெரியார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் துவங்கின. இந்த பதவிக்கு, அங்கமுத்துவும் விண்ணப்பித்தார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் தலைமையிலான தேடல் குழுவின் பரிசீலனை பட்டியலில், அங்கமுத்துவின் பெயர் இடம் பெற்றிருந்ததாக, கடந்த வாரம் தகவல் வெளியானது.

இதற்கிடையில், ஆவணங்கள் மாயமானதுதொடர்பாக, சேலம், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில், பல்கலை நிர்வாகம், அங்கமுத்து மீது புகார் அளித்தது. இதுகுறித்து, டிச., 16ல், அங்கமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீது, எந்த நேரத்திலும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

பணி நியமன முறைகேடு

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், வீட்டில் விஷம் குடித்து, அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம், உயர்கல்வித்துறையில் அதிர்ச்சியையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, அவரது பின்னணியில் இயங்கியவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே, பணி நியமன முறைகேடு பிரச்னைகளில், பின்னணியில் இருந்த பேராசிரியர்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையினர் யார், 2016 வரை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதவியில் இருந்த போது, அங்கமுத்துவுக்கு பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் யார் என்ற கேள்வி எழுகிறது.இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -
இன்று விடுதலையாகிறார் நீதிபதி கர்ணன்

Added : டிச 20, 2017 03:41




கோல்கட்டா: தண்டனை காலம் முடிவடைவதை அடுத்து, கோல்கட்டாவில் உள்ள சீர்திருத்த மையத்திலிருந்து நீதிபதி கர்ணன் இன்று(டிச.,20) அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கர்ணன், கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பணி இடமாற்றத்தை எதிர்த்து, தானாகவே வழக்கு தொடர்ந்த அவர், அந்த உத்தரவை ரத்து செய்தார். நீதிபதிகள் மீது புகார்கள் கூறினார். இதையடுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து, இந்தாண்டு மே, 9ல் தீர்ப்பு அளித்தது. தலைமறைவாக இருந்த கர்ணன், ஜூன், 20ல் கைது செய்யப்பட்டு, கோல்கட்டாவில் உள்ள சீர்திருத்த மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைவதை அடுத்து, இன்று அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

'சொத்து வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை'

Added : டிச 19, 2017 22:03 





புதுடில்லி, 'சொத்துக்கள் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் இது தொடர்பான கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக விவகாரத் துறை இணையமைச்சர், ஹர்தகீப் சிங் புரி, எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:சொத்துக்களை பதிவு செய்யும் போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை. அதே நேரத்தில், சொத்துக்கள் பதிவு செய்யும்போது, விருப்பத்தின் அடிப்படையில், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது குறித்து பரிசீலிக்கும்படி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏர்டெல் நிறுவனம் மீதான புகார் காரணமாக, சமையல் எரிவாயு மானியம் வரவு வைக்கும் வங்கிகள், வாடிக்கையாளரின் ஒப்புதலை பெற்ற பிறகே, வேறு வங்கிக்கு மானியத்தை மாற்ற வேண்டும் என்று ஆதார் வழங்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
புதுடெல்லி,
அனைத்து வங்கி கணக்குகளுடனும், அனைத்து மொபைல் போன் எண்களுடனும் ‘ஆதார்’ எண் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட மத்திய அரசின் மானியங்கள், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு வாயிலாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு நபர், தனது வங்கிக்கணக்கு ஒன்றில் மானியம் பெற்று வந்தபோதிலும், அவர் தனது மற்றொரு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது, அவரது சம்மதம் பெறாமலேயே, அவர் புதிதாக இணைத்த வங்கிக்கணக்குக்கு மானியம் மாற்றப்பட்டு விடுகிறது.

இதே பாணியில், பார்தி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை பெற்றபோது, அவர்களுக்கு தெரியாமலேயே தனது ஏர்டெல் பேமண்ட் வங்கியில் அவர்களது பெயரில் கணக்கு தொடங்கியதாகவும், அந்த கணக்குகளில் மானியத்தை வரவு வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மொத்தம் ரூ.190 கோடியை வரவு வைத்துள்ளது. இதை அறிந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அந்த மானிய தொகையை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மானியம் பெற்று வந்த வங்கிக்கணக்குக்கு மாற்றுமாறு உத்தரவிட்டன. ஏர்டெல் நிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாதிருக்க ஆதார் எண் வழங்கும் ‘இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம்’ நேற்று புதிய ஆணை ஒன்றை அரசிதழில் வெளியிட்டது.

அதில், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மானியம் பெற்று வரும் வங்கிக்கணக்கில் இருந்து வேறு வங்கிக்கணக்குக்கு மானிய வரவை மாற்றுவதாக இருந்தால், வாடிக்கையாளர்களின் வெளிப்படையான ஒப்புதலை பெற்ற பிறகே அப்படிச் செய்யவேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் இதுபோன்ற மாற்றத்தை செய்வதற்கு முன்பு, 24 மணி நேரத்துக்குள், வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது இ–மெயில் அனுப்பி, அவர்களது ஒப்புதலை பெற வேண்டும். இந்த வசதி இல்லாத வாடிக்கையாளர்களிடம், ஒரு படிவத்தை நிரப்பச்செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

தணிக்கையின்போது காண்பிப்பதற்காக, இந்த ஆவணங்களை வங்கிகள் 7 ஆண்டுகளுக்கு தங்கள் கைவசம் பத்திரமாக பராமரித்து வரவேண்டும். இந்த ஒப்புதல் இருந்தால்தான், தேசிய பணப்பட்டுவாடா கழகம், வேறு வங்கிக்கணக்குக்கு மானியத்தை மாற்ற வேண்டும். மானியம் வரவு வைக்க வேண்டிய வங்கிக்கணக்கை வாடிக்கையாளர்களே மாற்ற விரும்பினால், அதற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘‘‘வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், மானியம் வரவு வைக்க வேண்டிய வங்கிக்கணக்கை மாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த பாதுகாப்பான நடைமுறை கொண்டுவரப்படுகிறது’’ என்று இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணைய தலைமை செயல் அதிகாரி அஜய் பூ‌ஷண் பாண்டே தெரிவித்தார்.
வங்கி டெபாசிட்டுகளுக்கு பாதுகாப்பு




மக்கள் எப்போதும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வங்கி டெபாசிட்டுகள்தான் பாதுகாப்பானது, வங்கி டெபாசிட் என்றால் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

டிசம்பர் 20 2017, 03:00 AM 


மக்கள் எப்போதும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வங்கி டெபாசிட்டுகள்தான் பாதுகாப்பானது, வங்கி டெபாசிட் என்றால் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதிலும், நிரந்தர டெபாசிட் என்றால் வங்கியில் வட்டி குறைவாக கிடைக்கும் என்றாலும், போட்ட பணத்திற்கு ஆபத்து இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருப்பதால்தான், வங்கிகளின் நிரந்தர டெபாசிட்டுகளில் மட்டும் ரூ.1 கோடியே 6 லட்சம் கோடியை மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

இப்போது மக்கள் வங்கிகளில் நிரந்தர டெபாசிட்டுகளாக போட்டுவைத்திருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா? என்றபயம் வந்துவிட்டதால், நிறையபேர் நிரந்தர டெபாசிட்டுகளை திரும்ப வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம், மத்திய அரசாங்கம் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடைசிநாளில் தாக்கல் செய்த நிதித்தீர்வு மற்றும் வைப்புநிதி மசோதாதான். இந்த மசோதாவில் ‘பெயில்இன்’ என்று ஒரு விதி இருக்கிறது. அதாவது, ஏதாவது ஒரு வங்கி நிதி நெருக்கடிநிலையில் தவிக்கும்நேரத்தில், வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணத்தை வாடிக்கையாளர் ஒப்புதல் இன்றி, மூலதனமாக வைத்து வங்கியை தொடர்ந்து நடத்தலாம் என்று இருக்கிறது. அதாவது, ஒருவர் எவ்வளவு பணம் முதலீடு செய்திருந்தாலும், அந்த வங்கிக்கு நிதி நெருக்கடி வரும்நேரத்தில் டெபாசிட் செய்த தொகையில் காப்பீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம்தான் கிடைக்கும். அதற்குமேல் உள்ள தொகையை வங்கிகள் பங்கு மூலதனமாகவோ அல்லது பத்திரங்களாகவோ மாற்றிக்கொள்ளமுடியும். இதற்காக ‘‘தீர்வு வாரியம்’’ என்ற ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்த சட்டம் இப்போது புதிதாக திட்டமிடப்பட்டது அல்ல. ஏற்கனவே 1961–ல் இதுபோல டெபாசிட் காப்பீட்டுச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலில் இருக்கிறது. அந்தச்சட்டத்தின்கீழ் அதிகபட்சம் ரூ.1 லட்சம் என்று இருக்கிறது. ஆனால், இந்தச்சட்டத்தில் குறைந்தபட்சம்தான் ரூ.1 லட்சம் என்றும் ஒருசாரார் கூறுகிறார்கள். மேலும் எல்லா வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கும் பாதிப்பு வராது. ஏதாவது ஒரு வங்கி திவாலாகும் சூழ்நிலை வரும்போதுதான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

எந்த வங்கி திவாலாகும் என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில், வங்கிகளில் வராக்கடன்கள் மட்டும் ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்த மசோதா இப்போது அமலுக்கு வந்துவிடவில்லை. பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் உள்ளது. இந்தக்குழு தன் அறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாள்வரை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து பிரதமர் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் நலன்களை அரசு பாதுகாக்கும்’ என்று கூறி இருக்கிறார். நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறியிருப்பது போதாது. வங்கியில் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதத்தை பிரதமரும், மத்திய அரசாங்கமும் தரவேண்டும். கூட்டுக்குழுவிலுள்ள தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வங்கியில் நிரந்தர டெபாசிட் செய்தவர்களின் பணத்துக்கு நிச்சயம் பாதிப்பு வராது என்றவிதியை இந்த மசோதாவில் சேர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Tuesday, December 19, 2017

6 Bangladeshis get Aadhaar through tout, govt doc

DH new Service, Bengaluru, Dec 19 2017, 0:19 IST


Officials of Unique Identification Authority of India ( Aadhaar) with the help of bellandur police busted a racket and arrested seven persons including six Bangaldeshi nationals who have obtained Aadhaar ID forging the documents to secure jobs in It firms in and around Whitefield .DH Photo

Six Bangladeshis are among eight people arrested on Sunday for securing Aadhaar cards by forging papers.

Rubiulla (23), Riyad Khan (25), Mohammed Khokon (20), Ohidulla (29), Mohammed Kalam (34), Robin Althar (23) and Zakir Hussain (28) - all from Murel Ganj Thana, Bangladesh - are said to have illegally entered India by crossing rivers a few years ago. They travelled from Kolkata to Bengaluru by train and settled in labour colonies in Iblur and Marathahalli. They landed housekeeping jobs in IT firms near Whitefield, a senior police officer.

They took the help of Saifullah, a tout from NS Palya, BTM Layout, to get Aadhaar cards. Saifullah got Dr Lokesh, who works at a primary health centre in Bommasandra, to attest documents for the Bangladeshis. He managed to secure Aadhaar cards for all the six men and charged them Rs 500 apiece.

The eight men were arrested in a joint operation by officials of the Unique Identification Authority of India and the Bellandur police. Officials found that the residential addresses submitted by the suspects were fake. Saifullah is said to have procured around 50 Aadhaar cards by forging documents. Police are looking into all the cases.

The suspects, including Dr Lokesh, were booked under various sections of the IPC, the IT Act, the Aadhaar Act and under section 149a) (b) of the Foreigners' Act.

Tamil Nadu: TRB to probe other teacher recruitments

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN
PublishedDec 19, 2017, 3:27 am IST

Possible involvement of TRB staff suspected.



CHENNAI: Following the expose of large-scale scam in the recruitment of lecturers for Government Polytechnic Colleges, the Teachers’ Recruitment Board (TRB) is likely to conduct probe into other teacher recruitments made in recent times.

“The Teachers’ Recruitment Board will conduct a detailed inquiry with the candidates who found to be involved in recruitment racket of polytechnic lecturers. If we come across any information on other scams in the previous recruitments, the government will probe those recruitments as well,” a source said.

There is a suspicion that one or two staff from the TRB might have involved in the scam. “As of now, we do not have any evidence against the TRB staff or officials. The inquiry might throw light on those who involved in the racket,” the source added.

After the internal inquiry, the government may hand over the case to the police for further investigation. As all the answer sheets were made available in the public domain, the state government is unlikely to cancel the written test.

In an exclusive report on December 13, Deccan Chronicle highlighted the major scam unearthed by Teachers Recruitment Board in which 220 candidates found to be qualified in written test with fake marks. The report has created shock waves among the academics, administrators and the aspiring candidates.

After the scam report, the state government has conducted a top-level meeting on the actions to be taken against the corrupt elements.

“The board has given time to the candidates to submit their objections and representations on the new mark list which has had mark changes for around 200 candidates. So far, 120 representations were received by the board and majority of them were about the answer keys and other issues,” the source said.

Of 2,000 candidates who were called for certificate verification on November 7 on the basis of written test marks, around 220 candidates had qualified with fake marks in the test. Their original marks were inflated from 50 to 100 marks to make them eligible for certificate verification. Each candidate allegedly has paid Rs 25 lakhs to Rs 30 lakh to the touts.

Teachers Recruitment Board which has found out about the scam reduced marks for these 220 candidates after verifying their answer sheets.

It has withdrawn the results released on November 7 and published new results with OMR answer scripts on December 11. Totally, 1.33 lakh candidates appeared for polytechnic lecturers’ written test on September 16.

Recruitment scam

TRB has conducted written test for 1,058 lecturer posts in Government Polytechnic Colleges on September 16. Around 1.33 lakh students appeared for written test. Among 2000 candidates who were called for certificate verification over 220 candidates had fake marks. Their original marks were inflated from 50 to 100 marks to make them eligible for certificate verification. Each candidate allegedly paid Rs 25-30 lakh to the touts and around Rs 50 crore was collected from these candidates. After finding out the scam, the Teachers Recruitment Board has reduced marks for 220 candidates following the verification of OMR answer sheets

Recent recruitments

The Teachers Recruitment Board has conducted written tests for various posts including postgraduate assistants, assistant professors in government engineering colleges, lecturers in SCERT and special teachers recently. The court has stayed the 1,188 special teachers' recruitment process

NEWS TODAY 28.01.2026